my interview - வாங்க பேசலாம் தோழமைகளே

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சக எழுத்தாளர் சகோதரி... ஒருவர்... என்னிடம் எடுத்த குட்டி இன்டர்வியூ... இதோ உங்கள் முன்.... வாங்களேன் தோழமைகளே... நீங்களும் என்னிடம் கேட்க ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள்... என்னால் ஆனா பதில்களை தருகிறேன்....



பெயர் : 💖ஜெ. நிஷாந்தி (யுவனிகா என் புனை பெயர்)💖

சொந்த ஊர் : 💖பாண்டிச்சேரி💖

படிப்பு : 💖DFD💖

பணி : 💖Fashion designer cum Novelist💖

தளம் : 💖http://nigarilaavanavil.com💖

தளம் உருவாக்கப் பெற்ற ஆண்டு :
💖2020💖

அமேசான் பெயர் : 💖யுவனிகா💖

உங்களைப் பற்றி சொல்வதாக இருந்தால் :
💖Governor of "Nigarilaa vanavil" site. சாதாரண பெண்மணி.. அப்பாவுக்கு செல்ல மகள்.. என் மகனுக்கு (அதாவது தந்தைக்கு) நல்லதோர் அன்பான தாய்.. அவ்வளவு தான்💖

உங்களது விருப்பமான எழுத்தாளர்:
💖பட்டியல் மிகவும் பெரியது. அதனால் மனதை கவரும் படி எழுதுபவர்கள் அனைவருமே எனக்கு விருப்பமான எழுத்தாளர் தான்💖


நீங்கள் எழுதிய முதல் நாவல்:
💖உன்னுள் என்னைக் காண்கிறேன்💖

உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
💖நிச்சயம் என்னுடைய முதல் கதை தான்.. முதல் பந்திலேயே என்னை சதம் அடிக்க வைத்தவர்கள் வாசகர்கள். யுவனிகாவின் ever green story அதுதான்💖

நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
💖ஆறு 💖

எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
💖மூன்றரை வருடம் (இடையில் ஒன்றரை வருடம் எழுத முடியாமல் போய் விட்டது)💖


நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்: 💖தொடர்கதை...
தலைப்பு : எந்தன் முகவரி நீயடி..💖

உங்கள் நாவல் சிலவற்றின் பெயர்: 💖"உன்னுள் என்னைக் காண்கிறேன்"💖
💖"உன் காதலில் வெண்பனியாய் நான் உருக"💖
💖"நீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே"💖
💖"என்னைத் துரத்தும் உன் நினைவுகள்"💖
💖"உறவாக வேண்டுமடி நீயே"💖
💖"சாதி மல்லிப் பூச்சரமே"💖


ஒரு வாசகனுக்கு நாவலை கையில் எடுத்த போதும் சரி முடிக்கும் போதும் சரி என்ன மாதிரி உணர்வு வர வேண்டும் என்று நினைக்கிறீங்க. 💖கதைக்குள் நம்மை இழுத்து... அந்த கதை மாந்தர்களோடு பயணிக்க வைத்து சுபமோ.. துக்கமோ.. முடிவு மனதை விட்டு நீங்காமல் இருக்க வேண்டும்💖


நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
💖எழுதியது கொஞ்சம் தான் என்றாலும்... நான் படைத்த அனைத்து படைப்புகளும் பிடிக்கும்💖
💖The one and one only hero தேவ் In my stories "the lifetime achievement award" goes to devi only🌹தேவேந்திர பூபதி🌹 அவனை மட்டும் தான் எப்போதும் பிடிக்கும்💖

உங்களது கதை அழுத்தமான படைப்பாக இருக்குமா அல்லது ரசனை சுவாரஸ்யம் விறுவிறுப்பு கலந்த படைப்பாக இருக்குமா?
💖இவை அனைத்துமே என் கதைகளில் இடம் பெற்றிருக்கும். முக்கியமாக என் படைப்புகள் அனைத்து தரப்பினர்க்கும் முக்கியமாக தாய்மார்களுக்கு பிடித்ததாக இருக்கும்... அப்படியென்றால் நீங்களே கணித்துக் கொள்ளுங்களேன்💖


உங்கள் நாவலில் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் எதிர்பார்பாக சென்ற நாவலாக நினைக்கிறிங்க :
💖என் அனைத்து நாவல்களுமே... வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது என்பதை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியே.. இதில் வாசகர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்💖

உங்களது படைப்புகள் குடும்ப நாவலாக தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்குமா அல்லது சமூக அக்கறை நிறைந்த நாவலாக இருக்குமா:
💖சமூக சிந்தனைகள் சார்ந்த குடும்ப நாவல்களாக இருக்கும்💖

உங்களை கவர்ந்த எழுத்தாளர்:
💖All time favourite ரமணியம்மா தான்💖

நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
💖என் ரசனைக்கு ஏற்ப.. சுவாரசியத்தைத் தூண்டும் விதமாக தமிழ்.. ஆங்கிலம்.. என்று இரு மொழிகளிலும் இருக்கும் அனைத்து வகை படைப்புகளையும் வாசிப்பேன்💖

உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?
💖நான் ஒரு silent reader மற்றும் அதை விட silent novelist.. ஒரு சில காரணம் மற்றும் கசப்பான அனுபவங்களால் fb தோழமைகள் உடனான தொடர்பு வெகுவாக குறைந்து விட்டது. மேலும் எழுதுவதற்கு ஒன்றரை வருடம் இடைவெளியுயும் விழுந்து விட்டது. அப்படியிருந்தும் என்னுடைய கதைகளை வரவேற்றுப் படித்துப் பாராட்டும் வாசகர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி மட்டும் சொல்வது போதாது. ஆனால் நன்றி🙏நன்றி 🤗நன்றி 💖

காதல் படைப்பிற்கும் குடும்ப நாவலிற்கும் உள்ள வித்தியாசம்:
💖காதல் இல்லாமல் குடும்பம் இல்லை... பிறகு ஏன் கதையில் மட்டும் வித்தியாசத்தைக் காண வேண்டும்💖


உங்களது தளத்தில் தொடர்கதை, நாவல் எழுதுபவர்கள் அனைவருக்கும் புத்தகம் போட்டு கொடுத்து விடுவீர்களா :
💖இன்னும் அந்த அளவுக்கு நான் வளரல மா... பிற்காலத்தில் நடக்க வாய்ப்பு வரும் என்றே நம்புகிறேன்💖

உங்களது பதிப்பகத்தின் பெயர்:
💖அப்படி ஒன்று இன்னும் தொடங்கப்பட வில்லை... அப்படி தொடங்கினால் "நிகரிலா வானவில் பதிப்பகம்" என்ற பெயர் இருக்கும்💖


உங்களது தளத்தில் மொத்தம் எத்தனை எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிடுகின்றனர்.
💖மிகவும் சொற்பமானவர்களே எழுதிக் கொண்டுள்ளனர்💖

உங்கள் தளத்தில் எழுதுபவர்களுக்கு ஏதாவது விதிமுறை உண்டா:
💖காதல் என்ற பெயரில் முக சுளிப்பில்லாத வகையில் படைப்புகள் இருக்க வேண்டும்💖

முன்பு ஒரு சில தளங்கள் இருந்தது . தற்சமயம் எழுத்தாளர்களைப் போல தளங்களும் பெருகி விட்டன அதைப் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீங்க: 💖இதுவும் நல்ல வளர்ச்சி தான்💖

இந்த எழுத்தாளர் அறிமுகப் படலம் பற்றிய உங்களது கருத்து:
💖மிகவும் நல்ல முயற்சி💖

ஒரு தலைப்பை கொடுத்து ஒரு நாவல் எழுதச் சொன்னால் 50,000 or 40,000 வார்த்தைகளில் அறிமுக எழுத்தாளர் இரண்டு மாதங்களுக்குள் எழுதி முடித்து விடுவார்களா :
💖முடியும்... Peace of mind.. சாதகமான சூழ்நிலை... திறமை.... concentration... Dedication... இவைகள் இருந்தால் நிச்சயமாக முடியும்💖

தளம் தோறும் நடக்கும் போட்டி பற்றி உங்களது கருத்து:
💖வாய்ப்புகள் ஒரு வழியில் தவறினால்... மறுவழியில் கிடைக்கப் பெறுகிறோம்.. பயன்படுத்திக் கொள்ளலாமே..💖

உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்லுங்க

heart beatஅனுபவம் எல்லாம் பெரியதாக எதுவும் இல்லை சகோதரி. என் முதல் கதையை எழுதும் வரை... நான் சின்னதாய் ஒரு கட்டுரைப் போட்டியில் கூட கலந்து கொண்டதும் இல்லை... heart beat வேறு எதிலும் என்னுடைய எழுத்துகளைக் கிறுக்கி வைத்ததும் இல்லை... என் தோழியின் வாழ்வில் நடந்ததை எழுதத் தான் வந்தேன்... என் முதல் கதை தான் எனக்கு 1st attempt... பிறகு வாசகர்கள் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்தவும்... ஏதோ தொடர்ந்து எழுதிட்டு இருக்கேங்க.heart beat
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN