<div class="bbWrapper"><b><span style="font-size: 22px">அத்தியாயம் - 1</span></b><br />
<span style="font-size: 22px"><b><br />
புதைக் குழியில் சிக்கிக் கொண்டால், அது சிறுகச் சிறுக உள்ளே இழுத்துக் கொண்டு இறுதியில் மரணத்தைக் கொடுக்குமாம். <br />
<br />
அதைப் போன்றே மன உளைச்சல் எனும் புதைக் குழியில் இன்று தான் இருப்பதாகப் பட்டது தேவேந்திரனுக்கு.<br />
<br />
தொழிலில் பல சிக்கல்களைச் சமாளித்து, வெற்றிக் கண்டு இன்று<br />
<br />
இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களில் அவனும் <br />
<br />
ஒருவன். <br />
<br />
தொழில் சாம்ராஜ்யத்தில் அவன் எதிரிகள் அவனுக்கு வைத்த பெயர் "திகிங்". அப்படிப் பெயர் வாங்கிய அவனுக்குத், தன் வாழ்க்கையில் நடப்பதை மட்டும், ஜெயித்து வெற்றிக் காண முடியவில்லை. <br />
<br />
அவன் முயலாமல் இல்லை, முயன்றும் வெற்றி என்பது கிட்டவில்லை. அதனால் அவன்வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கவும், அவன் மனம் ஆறுதல்தேடி ஓடுவது இயற்கை அன்னையான, கடல் தாயின் மடியைத் தான். <br />
<br />
இது இன்று நடப்பது அல்ல!<br />
<br />
அவன் வாழ்வில் துன்ப காலம் என்று ஆரம்பித்ததோ... எப்பொழுது அவன் தந்தையின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்ததோ, என்று பவித்ரா மனைவியாக அவன் வாழ்க்கையில் நுழைந்தாளோ... அன்று ஆரம்பித்தது இந்த வழக்கம் <br />
<br />
இன்று வரை தொடர்கிறது, இறுதி வரை தொடருமோ?!... <br />
<br />
அதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. ஆனால் அவன் செல்ல மகள் ருத்திராஸ்ரீயின் எதிர் காலத்தை நினைத்தால் தான் அவனுக்குப் பயம், கவலை அனைத்தும்.எப்படிக் கன்றுக் குட்டிகள் தன் உடலில் உள்ள காயங்களால் உண்டாகும் வலிகளுக்குத் தன் நாவால் தடவித் தன் உமிழ்நீரால் அத்துன்பத்தை போக்கிக் கொள்கிறதோ அதைப் போல், இவன் தன்னுள் புதையுண்ட வலிகளுக்குத், தானே மருந்திட்டுக்கொள்வான். இல்லை இல்லை அப்படிச் சொல்ல முடியாது.வேறொரு வலியைத் தனக்குக் கொடுத்துக் கொள்வான். ஆம், காலநேரம் பாராமல், தன் உடல் சோர்வு ஆகும் வரை, கடல் மணலில் பாதங்கள் புதைய, நடப்பான். இப்படி நடப்பதால் அவனுக்குத் தன் தாய்மடி வந்து சேர்ந்துள்ளதாக எண்ணம். அப்படி அவன் நடந்ததில், அந்தத் தாய் அவனை அணைக்கும் வரை, அவன்தன் சிந்தனையில் இருந்து வெளிவரவில்லை. அணைத்தப் பிறகே தன் சிந்தனையில் இருந்து விடுபட்டான். ஆமாம், மணலில் நடந்தவன் கால் போக்கில் கடலில் தன் கால்களை நனைத்து விட்ட. அவள்தன்அலைகளால் அவன் பாதங்களைத் தொட்ட பிறகே தெளிந்தான். அப்படி வெளி வந்தவன் முதலில் பார்த்தது அவன் கைக்கடிகாரத்தைத் தான். அதில் ஐந்து நாற்பத்தைந்து என்றுகாட்ட.<br />
<br />
தன்னையும், தன் செல்ல மகள்ருத்ராஸ்ரீயை மறந்து, சுற்றுப் புறத்தை மறந்து எவ்வளவு தூரம் வந்து விட்டமோ.ஆனால், ருத்ராஸ்ரீயைப் பார்த்துக் கொள்ள வள்ளி இருக்கிறாள், என்ற மனதின் சமாதானத்திற்குப் பிறகே அவன் பார்வை சுற்றுப்புறத்தில் சென்றது. <br />
<br />
அப்போது அவன் கருத்தில் பதிந்தது, சூரியன் தன் கதிர்களைக் குறைத்துக்கொண்டு மெல்ல, மெல்லத் தாழ்ந்து ஆழ்கடல் நோக்கிச் சென்று கொண்டு இருப்பது தான்.இந்த நேரத்திலும் அவனுள் இருக்கும் ரசிகன் வெளி வராமல் இல்லை.அதை பார்த்தவனின் எண்ண ஓட்டத்தில் தோன்றியது, இவன் (சூரியன்) என்னதான் கோபம் கொண்டு இவ்வுலகில் இருப்பவர்களைச் சுட்டு எரித்தாலும், காதல் என்று வந்து விட்டால், தன்கோபங்களை விடுத்து, தன் மனைவியிடத்தில் சமத்தாக அடங்கி அவளுள் புதைந்து போகிறான்.<br />
<br />
“இதற்குப் பெயர் தான் காதலோ”.... <br />
<br />
தன் ரசனையில் மூழ்கி இருந்தவனை "அண்ணா சுண்டல் வேண்டுமா "என்ற குரல் கலைக்க. திரும்பி அச்சிறுவனைப் பார்த்தவன் வேண்டாம் என்று தலையாட்ட, அவனோ“அண்ணாபிளீஸ் ஓர் பொட்டலம் மட்டும் வாங்கிக்கோங்க, எனக்கு இன்னும் போணி கூட ஆகல" என்றுகெஞ்ச தன் வேலட்டில்இருந்து நூறு ரூபாய் தாளைஎடுத்துநீட்டியவன், நான்கு பொட்டலம் மட்டும் போதும் மீதி சில்லறையை நீயே வைச்சிகோ என்று சொல்ல,சிறுவனோ இந்த உலகத்தையே வென்று விட்டதாக நினைத்து மகிழ்ச்சியில்அவனுக்கு "தாங்க்ஸ் அண்ணா" என்றவன் அவன்கேட்டதைகொடுத்து விட்டுச் சிட்டாகப் பறந்து விட்டான். <br />
<br />
அவன் சென்ற பிறகு இவன் பார்வை வட்டத்திற்குள் பட்டவர்கள் தன் திறமையை வெளிக்காட்ட அங்கு நடக்கும் சிறு சிறு கேம்களில் விளையாடிக் கொண்டிருந்தஇளைஞர்கள், பூ , ஐஸ்கிரீம், தண்ணீர் பாக்கெட், சுண்டல் என்று இன்னும் பல வகைகளைவிற்று தன் அன்றாட வாழ்வின் செலவுக்காக உழைத்து கொண்டிருந்தவர்கள், இனிமேல் தங்கள் வாழ்வில் தனிமை மட்டும் தான் துணை என்பதை அறிந்ததால், அந்தத் தனிமையைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து இருக்கும் முதியோர்கள், நாள் முழுக்க உழைத்தாலும்தன் மனைவிபிள்ளைகளுடன் நேரத்தைச்செலவு செய்ய விரும்பி இங்கு இருக்கும் குடும்பஸ்தர்கள், இவ்வுலகில் தாங்கள் மட்டும் தான் என்று நினைத்துசுற்றுப்புறத்தை அறிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் தங்களை மறந்த நிலையில்இருக்கும் காதலர்கள், கள்ள, கபடமும் இல்லாமல் மண்ணில் புரண்டு, நீரில் குதித்து ஆடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகள். அப்படிப் பார்த்ததில், அவனுக்கு அவள் செல்ல மகள் ருத்திராஸ்ரீயின் ஞாபகம்மறுபடியும்வர, ‘என் செல்ல குட்டிமா என்னைத் தேடி இருப்பாளோ…’ என்ற நினைவில் அவன் தன் பண்ணை வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். <br />
<br />
அவன் பண்ணை வீடு நீலாங்கரைக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையில்இருந்தது. தன் கையிலிருந்த சுண்டல் பொட்டலத்தை எதிர்ப்பட்ட மீனவர் சிறுவர்களிடம் கொடுத்தவன் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான்.அப்படி அவன் நடந்ததில், அவன் பார்வையில் பட்டது கரையின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த ஓர் உடல். இரவோ எட்டு நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.<br />
<br />
“அந்த இரவு நேரத்தில் கரை ஓரத்தில் ஓரு பெண் உடல் “</b></span><br /></div>
Last edited:
Author: yuvanika Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 1 Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.