❤️உயிர் 16❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="font-size: 22px"><span style="font-family: 'courier new'">&quot;நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டா அஞ்சலி? ரொம்ப நேரமா தனியா சமைச்சிட்டு இருக்கியே &quot;</span></span></b><br /> <span style="font-size: 22px"><span style="font-family: 'courier new'"><b><br /> மெலிதாய் காதோடு மோதிய கணவனின் குரலில் அஞ்சலி திடுக்கிட்டுப் போனாள்.<br /> அப்பொழுதான் அவன் அங்கு இருப்பதையே அஞ்சலி உணர்ந்தாள்.<br /> <br /> &quot;அட மவனே இப்படித்தான் ஷாக் கொடுக்கறதா?, பயந்துட்டேன் போங்க &quot;<br /> <br /> &quot;ஹ்ம்ம்ம்ம்,நான் மட்டும் ஹால்ல எவ்வளவு நேரம் உக்காந்திட்டு இருக்க முடியும் ?போர் அடிக்குது அஞ்சலி &quot;<br /> &quot;அதான் அம்மையாருக்கு சேவகம் பண்ணலாம்னு கிச்சனுக்கு ஓடோடி வந்தேன்&quot; என கூறியவாறு கிச்சன் மேடையில் இலாவகமாய் ஏறி அமர்ந்தவனை அஞ்சலி போலியாய் முறைத்தாள்.<br /> <br /> &quot;எப்படி இந்த வீங்கிப் போனா கைகளை வெச்சுகிட்டா உதவி பண்ணுவீங்க ? &quot;<br /> &quot; இதுல யாரோ பெறாத பிள்ளை மேல் எல்லாம் சத்தியம் பண்ணாங்க மொத,<br /> &quot;இப்போ அம்போனு காத்துல பறக்க விட்டுட்டாங்க&quot;அஞ்சலி யுகேனை கிண்டலடிக்க ஆரம்பித்தாள்.<br /> <br /> அசடு வழியும் யுகேனின் முகத்தை பார்த்ததும் அஞ்சலி கல கல வென சிரித்தாள்.<br /> சற்றே கலைந்திருந்த அவன் தலை முடியை கைகளால் கோதி சரி செய்தவள்,அவன் குடிப்பதற்கு பழ ரசமும் தந்தாள்.<br /> <br /> &quot;அய்யா ஒன்னும் செய்ய வேண்டாம், பேசாம இருந்தாலே போதும் &quot; சொல்லிக் கொண்டே <br /> மெல்ல அவன் வாயருகே பழ ரச குவளையை இலாவகமாய் வைத்து அவனை குடிக்க செய்தாள்.<br /> <br /> அவனோ கைகளால் செய்ய முடியாத சில்மிஷத்தை கண்களால் செய்து கொண்டிருந்தான். அவன் பார்வையின் வீச்சம் தாங்க முடியாத அஞ்சலி,பொய்யாய் கோபம் கொண்டவள் போல்<br /> <br /> &#039;&#039;இப்படியே இந்த முட்டை கண்களை உருட்டிட்டே இருடி மவனே,ஒரு நாள் நோண்டி எடுத்தர்ரேன்&quot;<br /> <br /> &quot;அம்மா தாயே,இதான் நம்ம ப்ளஸ் பாய்ண்ட்.அதுல கைய வெச்சுடாதே,அப்புறம் கண்ணு களுவ முடியாது&quot; கேலிக்கையும் கிண்டலுமாய் சமையலை ஒருவாறு முடித்தனர்.<br /> <br /> நீண்ட நாட்களுக்கு பிறகு அஞ்சலியுடன் கலாய்க்க உதவிய சார்டின் சம்பலுக்கு தன் நன்றிகளை மானசீகமாய் யுகேன் உரிதாக்கினான்.மதிய உணவிற்கு பருப்பு சாம்பார்,புதினா துவையல்,அப்பளம் தொட்டுக்க ஊறுகாய் என அவனுக்கு பிடித்த விதத்தில் சமைத்திருந்தாள்.<br /> அழகாய் பிசைந்து அவனுக்கு ஊட்டி விடவும் செய்தாள்.<br /> <br /> தாய் போல் தன்னை சிறு குழந்தையாக்கி அஞ்சலி ஊட்டிய விதம் யுகேந்திரனை உருக்கியது.<br /> அவன் அன்னை அவனுக்கு பாசமாய் சோறு ஊட்டியதாய் அவனுக்கு நினைவு இல்லை.வளர்ந்தது தெரிந்தது எல்லாமே சீத்தம்மாவிடம் தானே. சிறு பிள்ளை போல் அப்படியே அவள் மடியில் கண் உறங்கினால் என்ன என்று கூட தோன்றியது அவனுக்கு.<br /> ஒப்பந்தத்தில் உயிரூட்டிய உறவு இது ,காதல் இல்லை, நட்பே பிரதானம் என இருவருமே நம்பி கல்யாணம் செய்து கொண்ட வேளையில், இவளுக்கும் தன்னைப் போல் எப்பொழுது இப்படி இருக்க தோன்றுமோ? இல்லை தோன்றாமலே போய் விடுமோ? ஏக்கமாய் இருந்தது அவனுக்கு.<br /> <br /> அவளை அணு அணுவாய் தான் காதலிப்பதை உணர்ந்தவன், அதை அவளுக்கு உணர்த்தவும் விரும்பினான். எடுத்து கூறினால் எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற தயக்கம் வேறு அவனிடத்தில். பொறியில் அகப்பட்ட எலி போல் ஆனது அவன் நிலை. <br /> <br /> கடந்து விட்ட வலிகளை சிறு சுவடு கூட இல்லாமல் போக செய்ய வேண்டியது அவன் கடமை என்பதையும் உணர்ந்தான்.தன்னிலையை நினைத்தால் அவனுக்கே சிரிப்பு வந்தது. <br /> அப்போ பாந்தாவா சொன்னது, இப்போ இப்படி தலைகுப்புற அஞ்சலியிடம் விழுந்ததை நினைத்தால், அவன் மைண்ட் வாய்ஸ் கேட்கவே அவனுக்கு ஒரு மாதிரி வெட்கமாய் இருந்தது. <br /> <br /> விரைவில் அஞ்சலி யுகேனை உணரும் வேளையும் வந்தது.குணாவுடைய பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு அவன் அழைத்ததின் பேரில் இருவரும் கோலாலம்பூர் செல்ல வேண்டியிருந்தது.</b></span></span><b><span style="font-size: 22px"><span style="font-family: 'courier new'">தன் வாழ்வை புரட்டிப் போட போகும் நிகழ்வுகள் அங்கே நடக்க விருப்பதையும் அறியாத அஞ்சலி மிகவும் சந்தோசமாக பயண ஏற்பாடுகளை கவனித்தாள். நீண்ட நாட்களுக்கு பிறகு K. ள் பயணம். அஞ்சலி மனம் குதூகலித்தது. </span></span></b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN