ஒருவன் உருகும் ஓசை.. ஒருத்தி அறிய மட்டும்

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">உன்னை தேடுகிறேன் என் உயிரின் ஓசையிலே.. <br /> கண்ணே கலையாதே இரவின் கனவினிலே.. <br /> பளிங்கு அழகு முகத்தில், கலை பழிக்கும் நெற்றி சுழிப்பில், <br /> சரிந்து விழுகிறேன் கனியே.. <br /> உன் கார் கூந்தலில் என் இதயம் வசமாக, <br /> மருளும் மான் விழியின் மயக்கம் எனைத் தாக்க.. <br /> மரணம் எய்துகிறேன் உன் வில் வளை புருவத்தினிலே.. <br /> மறுபடியும் ஜனனம் <br /> காணுகிறேன் <br /> உன் தாமரை இதழ்களிலே.. <br /> <br /> எனை மிரட்டும் கூர் நாசியில் ஒட்டிக் கொண்ட வைர மூக்குத்தி நான் ஆக.. வரமொன்று தருவாயா? <br /> என் வன மோகினி நீயே.. <br /> வெண் சங்கினை கழுத்தில் கண்டேன்.. அதில் வியர்வை துளிகளாய் நானும் கரைந்தேன்.. <br /> சொக்கி போகுது சுந்தரன் மனசு.. <br /> உன் மூங்கில் தோள்களில் அலையுது வயசு..<br /> காதில் சிணுங்குவது கன்னி என் பரிசு..<br /> பற்றி கொள்வாயா? <br /> எனை பற்றி கொள்வாயா? <br /> இரு மலை நடுவினில் இயற்கையின் துடிப்பு.. <br /> அறிந்தட வந்த ஆண் மகன் தவிப்பு.. <br /> அறிந்திட முயல்வாயா ? அன்பே நீ அறிந்திட முயல்வாயா? <br /> செதுக்கிய இடையினில் சிதறிடும் எம் அறிவும் .. <br /> மலர்ந்த நாபியில் குளறும் <br /> எம் மொழியும் .. <br /> சகியே உன்னை கண்டேன்.. <br /> காதல் சொல்ல வந்தேன்.. <br /> வாழை தண்டு கால்களில் <br /> ஜதிக்கும் உன்தன் கொலுசினில் <br /> குண்டு மணிகள் குலுங்கும் ஓசையில் ஒரு நூதன தாளம் கேட்டேன்.. நீ நடப்பதே கீதம் என்பேன்.. <br /> அணைப்பினில் என்னை அலற செய்திடு.. <br /> அடங்க மறுத்தால் மிரட்டி கொன்றிடு .. <br /> உணர்ந்திடுவேன் எந்தன் ஆண்மையை.. <br /> எந்தன் அணுக்களில் உலவுது உந்தன் பெண்மையே.. <br /> சகலமும் உன்னில் அடங்க கண்டேன்.. <br /> என் சலன பூக்களை கொய்திடு.. <br /> என் மயக்கம் தெளிய வந்திடு.. <br /> அத்தனை மொழிகளில் உன்னை ஆராதிக்க நினைக்கிறேன் பெண்ணே .. <br /> ஆதி மொழியை இரவல் வாங்கி என் ஆசையில் உன்னை இணைக்கிறேன்.. <br /> மையலுடைத்து வருவாயா என் பௌர்ணமியே? <br /> <br /> கனி</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN