நினைவு 2

Zeeraf

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 2

"உன் அண்ணனை பழி வாங்க தான் நான் உன்னை கடத்தி வைத்திருக்கேன், உன் அண்ணன விட அயோக்கியன் எவனும் இருக்க மாட்டான், பொறுக்கி ராஸ்கல், அவன் என்ன வேலை செஞ்சிருக்கான் என தெரியுமா"என சீரியவனின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து நின்றவள் " என் அண்ணனை பற்றி என் கிட்ட தப்பா பேசுரதை இதோட நிறுத்திக்கோ, அவரை பற்றி உனக்கு என்னடா தெரியும்" என்றால் பதிலுக்கு இவளும் சீரியபடி "உனக்கு தெரிந்ததை விட எனக்கு உன் அயோக்கிய அண்ணனை பற்றி நன்றாகவே தெரியும்" என்றவனை ஒரு நொடி கூட யோசிக்காமல் அவனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தால் அவள் "என்னடா.. பேசுற நீ, என் அண்ணனை பற்றி உனக்கு என்ன தெரியும், அவரை பற்றி இனி ஒரு வார்த்தை தப்பா பேசுன உன்னை கொன்னு போட்டுடுவேன் ஜாக்கிரதை" என அவள் கை நீட்டி எச்சரிக்க அவள் அறைந்ததிழும் மிரட்டியத்திலும் சிறிதும் வருத்தப்படாமல் அவளின் வார்த்தைகளை கேட்டு"அப்படியா" என்றான் நமட்டு புன்னகையோடு "என்ன கிண்டல் பண்ணுரியா, இப்போ என்னை போகவிடுற இல்ல.." என அவள் மிரட்டிடப்படி கூற அவனோ"போ..." என்றான் ஒரே வார்த்தையில் அவன் கூறியது விலங்காதது போல"என்ன.." என்று விழித்தவளிடம் "போ என்று சொன்னேன்.." என்று அழுத்தமாய் கூறிவிட்டு "அப்றம் உன்னால் முடிந்தால் இங்கிருந்து வெளியே சென்றுவிடு," என்றான் அவளை நோக்கி... "ஏன் என்னால் போக முடியாதா.." "ம்ஹும் போக முடியாது, எப்படி போக முடியும் இந்த ஷாப்பிங் மாலை சுற்றி கர்ரன்ட் சப்லைமெண்ட் கொடுத்திர்கேண், யாராலும் இதன் உள்ளே வரவும் முடியாது, வெளியே செல்லவும் முடியாது, அப்டியே வெளியேற முயற்சி செய்தால் அந்த கரண்ட் பாஸ் ஆஹி அந்த நபரின் உயிர் பிரிந்து விடும்,.." என்றான் "என்ன பொய் சொல்லி பயமுறுத்துரியா" "ச்சே ச்சே.. நீ நம்பலையா ஓகே உனக்கு நிரூபித்தே காட்டிடுறேன்"என ஒரு பொருளை எடுத்து வெளியே செல்லும் வழியில் தூக்கி வீச அவன் சொன்னது போலவே கரண்ட் பாஸ் ஆஹி அது வீசி சென்று விழுந்தது.. அதனை கண்டவன் வாயடைத்து நிற்க"என்ன பேச்சையே காணோம், பயந்துட்டியா.." "நான் எதற்காக பயபடனும், அப்றம் என்னை மீட்க நிச்சயம் என் அண்ணா வருவார்,..." "எப்படி வருவான், வந்தாண்ணா அவ்ளோ தான் அநியாயதுக்கு உன் அன்னாவின் உயிர் தான் பரலோகம் சென்றுவிடும்" என்றான் கூலாக.. "என் அண்ணாவை பற்றி இப்படி பேசுரதை முதல்ல நிறுத்து,.". "ஓகே,.. சரி நான் சொன்னதை பற்றி முடிவெடுத்துடியா.." "என்ன.." "எனக்கு உதவி செய்கின்றதை பற்றி சொன்னனே" "டேய்.. என்னால் உனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாது" "செய்து தான் ஆகணும், நான் சொல்கின்றதை நீ கட்டாயம் செய்தாகனும்" "முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ" "அதான் சொல்லிவிட்டனே, ஓகே நேரடியாகவே சொல்லிவிடுறேன், நீ நான் சொல்ரதுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் உன்னை ரேப் பண்ணி போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்" "உன்னால் என் சுண்டு விரலை கூட தொட முடியாது டா, அப்டி தொட நினைத்தால் அது என் உயிரற்ற உடலை தான் உன்னால் தொட முடியும், என்னை எந்த நோக்கத்துல நீ கடத்தி வச்சிருக்கணு நான் புரிந்து கொண்டேன், என்னை மீறி ஏதாவது செய்யனுண்டு நினைச்சா, அப்ரம் நான் சொன்னது போல என் உயிர் இல்லாத பிணத்தை தான் நீ உனக்கு சொந்தமாக்கிக முடியும்.." "ஏய்,.. ச்சீ, நிறுத்துடி, என்னை என்ன அந்த அளவுக்கு கேவளமானவன் னு நினைத்தியா, பெண்ணின் சுகத்துக்காக நான் உன்னை கடத்தி வைகல, உன்னை இப்படி சொல்லி மிரட்டுறதுக்கு கூட எனக்கு பிடிக்க வில்லை தான் ஆனால் என்ன செய்றது, நான் நினைத்தது நடக்கணும் என்று தான் இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ண வேண்டியதாயிருக்கு" "என்ன நல்லவன் போல பேசுனா, நான் நீ சொல்றதை கேட்பேனு நினைச்சிட்டியா, ஒரு பெண்ணை இப்படி கடத்தி கொண்டு வந்து வசீர்க்கியே, இது உணக்கு அசிங்கமா தெரியல, நல்லா கேட்டுக்கோ என்னால் நீ சொல்றதை செய்ய முடியாது, எனக்கு நெஸ்ட் மண்ட் மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு," "அதனால் எனக்கு எதுவும் பிரோப்ளேம் இல்ல,.." "லூசாடா நீ, அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் னு சொல்றேன், நீ என்னை இப்படி கடத்தி வகிக்கிறது மாப்பிளை வீட்டுக்கு தெரிந்தால் என் வாழ்க்கையை வீணாகிடும்" "அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது," "உன் கிட்ட பேசுரதே வேஸ்ட்", என கூறி அவள் வெளியே செல்லும் வழியை தேடி சென்றால்,.. "போகாத, போனால் உன் உயிருக்கு தான் ஆபத்து,.." "எனக்கு அதை பற்றி கவலை இல்லை, நான் இங்கு ஒரு நிமிஷம் கூட இருக்கபோறதில்லை, என கூற செல்ல போனவலின் முன் சென்று அவளை தடுத்து நிறுத்தினான்,.. தன்னை வழிமறைத்தவனிடம் "வலியை விடு, இல்ல, நடக்கிறதே வேற,..." "பேசாமல் நான் கூறியதை மட்டும் கேளு.." "ப்ச்.. என அவள் அவனை தள்ளி விட்டு போக எத்தனித்த நேரம், அவன் அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் வசம் செய்து கொண்டான்.. "என்ன பண்ணுற, என்ன விடு..." என்றவளை தன்னை விட்டு தள்ளிவிட்டான், அதில் தடுமாறிக்கொண்டே அவள் சென்று நின்றாள்,.. பின் தன் முதுகுபுரம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவளின் நெற்றி பொட்டை குறி வைத்தபடி நின்றான்.....
 

Author: Zeeraf
Article Title: நினைவு 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN