என்னைப் பற்றிய அறிமுகம்

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அனைவருக்கும் வணக்கம் மக்கா,

என் பெயர் சகிமொழி. பள்ளிப்படிக்கும் காலத்தில் அம்மா பழக்கி விட்டது தான் இந்த புத்தகவாசிப்பு... அதுவே என்னை இதுவரை கொண்டுவந்து இருக்கு என்று நினைக்கிறேன். அதனால் என் முதல் நன்றி என் அம்மாவுக்கு

அப்புறம் இது என்னுடைய நான்காவது நாவல். எதோ பொழுதுப்போக்குக்காக வேட்பேடில் எழுத ஆரம்பித்து இன்று ஒரு தளத்தில் எழுதும் அளவிற்கு வாய்ப்பு கிடைச்சியிருக்கு. இது எல்லாம் என்னையும் என் எழுத்துக்களையும் நம்பி வாசித்த மக்களால் வந்தது. என் இரண்டாவது நன்றி என் வாசகர்களுக்கு

மூன்றாவது , யுவனிக்கா அக்காவுக்கு நான் ஒரு அப்பிளிக்கேசன்ல படிச்சத விட புத்தகங்களிலும் எழுத்தாளர்களின் தளத்திலும் தான் நிறைய வாசிச்சி இருக்கேன். அப்படி தளத்துல வாசிக்கும் போது , ச்ச்ச் நம்ம கதை இப்படி ஒரு தளத்துல வந்தா எப்படி இருக்கும் என்று நினைத்தது உண்டு. அந்த ஆசையை சாத்தியப்படுத்த முடிஞ்சது அக்காவால தான். ரொம்ப நன்றி அக்கா

நான்காவது , என் சக எழுத்தாளர்களுக்கு...அவங்ககூட என்னையும் ஒரு பயணியாய் அனுமதித்தற்கு...நன்றி அக்காஸ் அண்ட் தங்கைஸ்

நன்றி,

சகிமொழி


தீண்டல் - 1
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN