நீயே காதல் என்பேன் - 4

sizzling_saran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">2 ஆண்டுகளுக்கு முன்...<br /> <br /> மாதவி,சாதனா,அனு மூவரும் அவர்களின் முதுகலை படிப்பான எம்.பி.ஏ வில் காலடி எடுத்து வைத்த நேரம் அது...<br /> <br /> ஏய் என்னடி இவ்வளோ சிக்கிரமா படிப்பு மூடியர மாறி இருக்கு??இன்னும் ஒரு வருஷம்தா!!!-மாதவி சோகமாக கூற மீதம் இருந்த இருவரும் அதை அப்பொழுதுதான் எண்ணியவர்களாக ஆம் என்று தலை அசைத்து ஆமோதித்தனர்...<br /> <br /> இந்த வருட படிப்பின் முதல் நாளை யாரும் மறக்க முடியாதபடி செய்ய வேண்டும் என்று யோசித்தவர்களாக ஒவ்வொரு பேராசிரியர்களின் நடை,பாவனை என அனைத்தையும் ஒப்பனை செய்து காட்டிய வண்ணம் இருக்க....உடன் இருந்த அனைவரும் அவர்களின் பெயரை கோஷமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர்...<br /> <br /> நீனா என்ற பேராசிரியர் போல் சாதனா பாடம் எடுத்துக் கொண்டிருக்க,அவளிடம் சந்தேகம் கேட்பதை போல் மாதவி செல்கிறாள்..<br /> <br /> அந்த சந்தேகத்திற்கான விடை தெரியாத சாதனா(நீனா)மாதவியின் காதை திருக....மாதவி கையில் இருந்த சாக்பீசை கொண்டு சாதனாவை அடிக்க.... அங்கே அவர்களின் முடிவில்லாத மற்றொரு சண்டை துவங்கியது<br /> <br /> இவை அனைத்தையும் நல்லபிள்ளை(silent killer)போல் அமர்ந்து இருந்த அனு படம் எடுத்து கொண்டிருந்தால்...<br /> <br /> மாதவி மற்றும் சாதனாவின் கலாட்டவில் மூழ்கி அவர்களை பார்த்து சிரித்தும் கூச்சலிட்டும் கொண்டிருந்த அனைவரும் வகுப்பறையின் வாயிலில் பேராசிரியர் நீனா நிற்பதை பார்க்க தவறினர்...<br /> <br /> எல்லா ட்ராமாவும் ஓவரா??எனக் கைகளை கட்டியவாரு பேராசிரியருக்கே உரிதான ஒரு செறுக்குடன் நீனா குரலை உயர்த்தி கேட்க....அனைவரும் பேயை கண்டது போல் உரைந்து இருந்தனர்...<br /> <br /> செத்தோ...போயும் போயும் நம்ப இவகிட்டயா மாட்டனு<img class="smilie smilie--emoji" loading="lazy" alt="😨" title="Fearful face :fearful:" src="https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f628.png" data-shortname=":fearful:" />என சாதனா முனுமுனுக்க..<br /> <br /> நம்பல இன்னைக்கு வச்சி செய்ய போறா!!!!என மாதவி சாதனாவிற்கு மட்டும் கேட்கும்படி கூறினாள்...<br /> <br /> அங்க என்ன பேச்சு இரண்டு பேருக்கும்??<br /> <br /> நத்திங் மேம்!!!என கோரசாக இருவரும் சொல்ல...<br /> <br /> யு போத் கம் டு தி ஷ்டாப் ரூம்,ரைட் நவ்!!!எனக் கூறி அங்கு இருந்து செல்ல இருந்த நீனாவை நிறுத்திய இருவரும்...<br /> <br /> மேம் அனு என அவளை சுட்டிக் காட்டினர்...<br /> <br /> தன் கைப்பேசியுடன் உரைந்தபடி அமர்ந்து இருந்த அனுவை பார்த்த நீனா...<br /> <br /> ஓ நீங்கதா இவங்க படத்துக்கு கேமராமெனா???<br /> <br /> யு டூ கம் டு தி ஷ்டாஃப் ரூம் என சொல்லி வெளியேறினாள்...<br /> <br /> அனு...சாதனா மற்றும் மாதவியை முறைக்க,இருவரும் என்ன நடந்தது என்பது போல் அவளை பார்த்தனர்...<br /> <br /> உங்களலாம் என்ன செய்யுறதோ...ரொம்ப நல்ல வருவீங்கடீ என பற்களை கடித்தபடி அனு கூற<br /> <br /> இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்ப என்றபடி இளித்து வைத்த இருவரையும் பார்த்து முறைக்க முயன்ற அனு அதில் தோற்று சிரிக்க....<br /> <br /> அதன் பின் மூவரும் தங்களை சமன்படுத்திக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு...<br /> <br /> ஷால் ஐ கம் இன் மேம்....</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN