நீயே காதல் என்பேன் - 5

sizzling_saran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதன் பின் மூவரும் தங்களை சமன்படுத்திக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு...

ஷால் ஐ கம் இன் மேம்....

அந்த அறையில் இருந்த அனைத்து ஆசிரியர்களின் தலையும் அவர்கள் புறம் திரும்ப....மூவரும் கொலை குற்றவாளி போல் தலையை கவிழ்த்தபடி தரையை பார்த்துக் கொண்டிருந்தனர்....

அங்கு சிலர் இவர்கள் செய்ததிற்கு வருந்துவதாக எண்ண!!அவர்களுக்கு மட்டுமே தெரியும் உதடு வரை வந்த சிரிப்பை மறைக்க அப்படி நிற்கிறார்கள் என்பது...

நீனாவும் எச்.ஓ.டி மேமும் மூவரையும் வரையறை இல்லாமல் வாழ்த்திக் கொண்டிருக்க😂😛

எப்போ முடிக்கறதா உத்தேசம்!!!என்பது போல் மூவரும் அவர்களை கடும்புடன் பார்த்தப்படி இருந்தனர்.....

ஒரு வழியா தன்னிடம் எல்லா அறிவுரை ஷ்டாக்கும் தீர்ந்துவிட எச்.ஓ.டி இதான் கடைசி எச்சரிக்கை என்பதோட மூவரையும் வெளியேவிட்டார்...

ப்பா....மரண மொக்கையா பேசி கொல்றாங்க என கண்களை மூடி அதை மறக்க முயன்ற அனுவை பார்த்து இருவரும் சிரிக்க....அவர்களை கோபம் தீர தன் கையால் அடுத்து முடித்து ஓய்ந்தால் அனு...

அனு பேபி ஒய்(why) டென்ஷன்...ஏதோ இதா நம்ப முதல் முறையா திட்டு வாங்குறா மாறி???-மாதவி

அதனே!!! எனத் தோலை குளுக்கி சாதனாவும் சொல்ல....இருவரையும் திட்ட இனிமே அகராதியில்தா வார்த்தைகள் தேடனும் என்ற நிலையில் அனு அவர்களின் பர்சை வேகமாக எடுத்து "இன்னைக்கு நீங்க செய்த காரியத்துக்கு,பட்டினியா இருங்க" என்றவாறு அங்கிருந்து நகர்ந்தாள்

ஏய்!!!!!

என்ன கொடுமை சரவணா இது !!!என இருவரும் வேறு வேறு தொனியில் கத்தியவாறு அவள் பின்னே ஓடினர்...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஏய்!!!!ஒரு வழியா மாயா படத்துக்கு டிக்கெட் கிடைச்சுது...புக் செய்துவிட்டேன் என்று வெற்றி புன்னகையோடு மாதவி சொல்ல...

சாதனா மற்றும் அனு கண்கள் மின்ன செம்ம டீ செல்லோ!!!எத்தனை மணி ஷோ?? எனக் கேட்டனர்...

அவர்கள் கொஞ்சியதில் முகம் மலர்ந்த மாதவி....அவர்களின் அடுத்த கேள்வியில் அமைதி ஆனாள்..

சொல்லுடி!!!

அது!!!!நாளைக்கு நைட் 10 மணிக்கு

கிழிஞ்சுது போ😨😨என இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்😅

😇😇😇😇😇😇😇😇😇

அம்மா இன்னைக்கு நாங்க அனு விட்டுல தங்குறதா முடிவு செஞ்சிருக்கோ...மாதவி இயல்பாக அவங்க ப்ளானை எக்ஷிக்யூட் செய்ய,அவளின் அம்மா அவளை ஒரு நிமிடம் சந்தேக பார்வையோட பார்க்க,மாதவி சற்று தடுமாறி போனால்...

என்ன மா ஏதோ நம்பாத மாதிரி தெரியுது??வேணும்னா ஆண்ட்டி(அனுவின் அம்மா) கிட்ட போன் செஞ்சி கேட்கிறியா??

அதெல்லாம் இல்ல...இந்த வாரம் நீங்க நம்ப விட்டுலதான இருப்பீங்க...அப்பறம் என்ன இப்போ தீடிர்னு அனு விட்டுல??

அச்சோ இந்த விஷியத்த மறந்துடனே!!மாதவி எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இளித்து வைத்தால்

சொல்லுடி?

அது....ஆஆஆ அது ஆண்ட்டி எங்கயோ வெளி ஊருக்கு கல்யாணத்துக்கு போறாங்க அதான் அப்படியே வீட்டை பார்த்துக்க அங்க இருக்கோ...

அவர்களின் முக பாவனையில் இருந்து தான் சொன்னதை நம்பி விட்டார்கள் என்று உணர்ந்த மாதவி நிம்மதி பெருமூச்சி விட்டாள்

இதே பொய்யை மீதம் இருந்த இருவரும் வெவ்வெறு மாதிரி சொல்லி வீட்டை சமாளித்து ஒரு வழியாக திரையரங்கை வந்தடைந்தனர்...

அங்கே டிக்கெட் வாங்க வரிசையில் நின்றவர்கள் ஏதோ பெரிய சாதனை புரிந்ததுப் போல் ஒருவரை ஒருவர் பார்த்து வெற்றி புன்னகை வீசினர்...

இனி நடக்கப் போகும் கூத்து தெரியாமல்😛😋😂
 

Author: sizzling_saran
Article Title: நீயே காதல் என்பேன் - 5
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN