யாசிக்கிறேன் உன் காதலை - 16

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖 யாசிக்கிறேன் உன் காதலை - 16 💖

"டாலு", என்றான் முகத்தை நிமிர்த்தி. நேகா அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னடா? எதுக்கு அழுகுற??", என்று கண்ணீரைத் துடைத்தபடி. அவன் மார்பிலே புதைந்து அழுதாள்.

"என்னாச்சு??", என்றனர் அனைவரும் பதட்டமாக. துரு மற்றவர்களைப் பார்வையால் அடக்கினான்.


"சொன்னாதானே தெரியும், எதுக்கு அழுகுற? என்னாச்சு என் டாலுக்குட்டிக்கு??", என்றான் அவள் தலைமேல் தாடையை வைத்து அணைத்தபடி.


"எனக்கு கஷ்டமா இருக்கு தேவ், எதுக்கு தாத்தா இப்படி பண்றாங்க?? எல்லாரும் என்னைய சண்டாலிக்காரி (சண்டக்காரி)-யா தானே நினைப்பாங்க", என்றாள் அழுகையுடன்.


"டாலு!! மத்தவங்க எப்படி நினைச்சா என்ன?? உன்ன யாரும் சண்டக்காரின்னு நினைக்க மாட்டாங்க டா, எல்லாருக்கும் தெரியும், எப்படியாச்சும் மேரேஜ நிறுத்தலாம், நீ அழாத", என்றான் விலகி அவள் கண்ணீரைத் துடைத்து.

"எப்படிடா நிறுத்துறது??", என்றான் சந்தோஷ் வேகமாக.


"பொண்ணு இங்க இருந்தா தானே கல்யாணம் நடக்கும், பொண்ண தூக்கிட்டா!", என்றான் புருவம் உயர்த்தி.


"என்ன!!!", என்றனர் அனைவரும் அதிர்ச்சியுடன்.

நேகா எதுவும் பேசாமல் மீண்டும் துருவின் தோளில் சாய்ந்து கொண்டாள். துரு ஒரு கையால் அவளை அணைத்தபடி, "டாலுவ டெல்லிக்கு அனுப்பிடலாம்".


"அன்னைக்கு உனக்கு கல்யாணம் டா, இவ இல்லாமல் எப்படி??", என்றான் விரு வேகமாக. மற்றவர்களும் அதே கேள்வியுடன் பார்த்தனர், அபியைத் தவிர.

"அதுனால என்ன, இவள நாம அனுப்பிடலாம். என் ஃபிரண்ட் ஹரிய பிக்கப் பண்ணி வீட்ல விட சொல்லிடலாம், மேரேஜ் முடிஞ்சதும் நீங்க யாராச்சும் கிளம்பிப் போயிடுங்க", என்றான் யோசனையுடன்.

"ஏய்! கல்யாணத்த நிறுத்த முடியாதுன்னு நா அழுகுறேன்னு நினைச்சியா?? இந்த மேரேஜ் நிறுத்துறதுலாம் ஒரு மேட்டரே இல்ல", என்றாள் விலகி.


"அப்புறம் எதுக்கு அழுகுற??", என்றனர்.


"இவ்ளோ ஃபைட் பண்ணுறோமே!! என் கேரக்டர் மாறிப்போச்சுன்னு தான் அழுதேன்", என்றாள் சலிப்புடன்.


"அடிப்பாவி!! அதுக்கா இப்படி கண்ணீர் விட்ட? இதுல சண்டக்காரின்னு கூட ஒழுங்கா சொல்லத் தெரியல, அழுக வேற!", என்றான் நந்து கிண்டலாக. நேகா பொய்யாக முறைத்தாள்.


"நாங்க யூஎஸ்ல எப்படி இருப்போம் தெரியுமா?! செம்ம ஜாலியா இருப்போம், வீக் எண்ட் வந்தா சுத்தப் போயிடுவோம், ஒரு சின்ன முகச்சுளிப்பு கூட யார்கிட்டயும் காட்டினது இல்ல, ஆனா இங்க நேகி கோவப்படுறா, அபி கோவப்படுறா", என்றாள் தியா கவலையாக.

"நாங்க அங்க இருக்குறப்ப வீக் எண்டானதும் ஒவ்வொருத்தரு வீட்ல ஒரு வீக் நாங்க மட்டும் பார்ட்டி பண்ணுவோம், எல்லா மம்மி டாடி மீட் பண்ணி ஃப்ரீயா பேசிட்டு இருப்பாங்க, அந்த நாள் எங்க மூணு ஃபேமிலி (தியா,ஆதி,அபி) டே தான்", என்றாள் ஆதி சந்தோஷமாக.

"இப்படி எல்லாம் இருந்துட்டு, இங்க இவ்ளோ இத ஃபாலோ பண்ணுறோம்னா அதுக்கு ரீசன் ஃபேமிலி ஒண்ணா இருக்கணும், பிரியக் கூடாதுன்னு மட்டும் தான்", என்றாள் அபி பொறுமையாக.

"சரி!! என்ன?! பார்ட்டி தானே வேணும், வச்சுட்டா போச்சு", என்றான் ரிஷி கிண்டலாக.


"ஆமா! பார்ட்டி வச்சுடலாம், நா சரக்கு ரெடி பண்ணட்டா?", என்றான் விரு கிண்டலாக.


"நோ!! நாங்க அதெல்லாம் குடிக்க மாட்டோம்", என்றனர் நான்கு பேரும் வேகமாக.


"வேற என்ன வேணும்?? சொல்லுங்க! பார்ட்டி பண்ணிடலாம்", என்றான் சந்தோஷ் ஆர்வமாக. பெண்கள் ஆறு பேரும் சாப்பாடு லிஸ்ட் சொன்னார்கள்.


"நாங்க போய் வாங்கிட்டு வரோம், இன்னைக்கு நைட்டு நாம பார்ட்டிய செளிப்ரேட் பண்ணலாம்", என்றான் துரு சந்தோஷமாக.


"டன்!!", என்றனர் அனைவரும் சிரிப்புடன்.

"சரி! நா கீழப் போயி எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன்", என்று மித்ரா போகப் போனாள்.


"ஏய்!! லூசு! தாத்தாக்குத் தெரியாமத் தான் பண்றோம், நீயே போய்ப் போட்டுக் கொடுத்துருவ போலையே!!", என்று நந்து அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.

"சரி! அம்மா கிட்ட மட்டும் நைட் நமக்கு சமைக்கச் சொல்லிடலாம்ல", என்றாள் சந்தியா.


"சரி!!", என்றான். ஆண்கள் ஐந்து பேரும் மாடியில் இருந்து வெளியே செல்லும் படிக்கட்டு வழியாகக் கீழே சென்றனர்.


பெண்கள் அங்கே உட்கார்ந்து அரட்டை அடித்தனர்."பசங்க எங்க?? இன்னும் சாப்பிட வராம இருக்காங்க, வரச் சொல்லு!", என்றார் தாத்தா, டைனிங் டேபிளில் உட்கார்ந்து.

"அது வந்து பா... ஆபீஸ் மீட்டிங், சாப்பிட வர லேட்டாகும், நீங்க சாப்பிடுங்க", என்று பார்வதி பரிமாறினார்.


"அப்ப அபி, சந்தியா, ஆதிலாம் எங்க??", என்றார் சாப்பிட்டுக்கொண்டே.

"மாமா!! ஸ்நாக்ஸ் நிறைய சாப்பிட்டனால லேட்டா சாப்பிட வரேன்னு சொன்னாள்க", என்றார் அகிலா தயங்கியபடி.

"சரி!! இனிமே ஸ்நாக்ஸ்லாம் கொடுக்காத, இப்ப சாப்பிட வராம இருக்காங்க", என்றார் சாப்பிட்டுக்கொண்டே.


"சரி மாமா!!".


தாத்தா சாப்பிட்டுச் சென்றார். "இதுங்கள வச்சுக்கிட்டு என்னதான் பண்றது??", என்றார் அகிலா சலிப்புடன்.


"அதான் இதுங்க எப்ப பார்த்தாலும் இப்படி நம்மள வம்புல மாட்டி விடுதுங்க", என்றார் முல்லை.


"நாங்க சாப்பிட வரலாமா??", என்று அப்பாக்கள் உள்ளே நுழைந்தபடி.


"வாங்க!!", என்று அனைவருக்கும் பரிமாறினார்கள்.

"பசங்க எங்க??", என்றார் நாதன், சாப்பிட்டுக்கொண்டே

"பசங்க பார்ட்டி பண்ணப் போறாங்க, ஹோட்டலுக்குப் போய் சாப்பாடு வாங்கிட்டு இந்நேரம் வந்து இருப்பாங்க", என்றார் பார்வதி, நிதானமாக.

"என்ன?!!", என்றனர் ஆண்கள் அதிர்ச்சியாக.


"என்ன? பசங்க சாப்பிடணும்னு ஆசைப்பட்டு பண்றாங்க அதுல உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சன இருக்கா??", என்றார் முல்லை, எரிச்சலுடன்.


"பிரச்சனை இருக்கு தான், எங்கள விட்டுட்டாங்களே!!", என்றனர் அப்பாக்கள் கிண்டலாக. பெண்கள் பொய்யாக முறைத்தனர். ஆண்கள் சிரிப்புடன் சாப்பிட்டனர்.

மேலே அனைவரும் ஊட்டி விட்டபடி சாப்பிட்டு முடித்தனர். பிறகு உட்கார்ந்து பாட்டு, டான்ஸ், அரட்டை அடித்தனர். இவர்கள் சத்தம் கேட்டு நேசமணி மாடி படிக்கட்டில் ஏறப் போனார். நாதனும் குணாவும் பிள்ளைகளுக்குப் போன் செய்து சொன்னார்கள். அதற்குள் தாத்தா மொட்டைமாடி படியில் ஏற ஆரம்பித்தார்.


ஆண்கள் அனைவரும் பெண்களை டேங்க் இருக்கும் மாடிக்கு இழுத்துச் சென்றனர். தாத்தா மாடிக்கு வந்து பார்க்கும்போது அங்கு சாப்பிட்டக் கவர்கள் மட்டுமே இருந்தது. அதனைப் பார்த்ததும் கோவமாக எடுத்து வெளியே வீசினார். மாடி முழுக்கத் தேடினார். சிறிது நேரம் நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தவர் கீழே செல்லப்போகும் போது தும்மல் சத்தம் கேட்டு மீண்டும் நின்றார்.


விரு தியாவின் வாயை ஒரு கையால் மூடினான். சந்தியாவின் வாயை ரிஷி மூடினான். மித்ராவின் வாயை நந்து மூடினான். சந்தோஷ் ஆதியின் வாயை மூடினான். பெண்கள் நால்வரும் கையை எடுக்க முயற்சி செய்தனர். நேகா மறுபடியும தும்மல் போட்டாள். துரு வேகமாக அவள் வாயில் கைவைத்து மூடி அவளை அணைத்தபடி தாத்தாவை எட்டிப்பார்த்தான். தாத்தா மீண்டும் மாடியைச் சுற்றிவந்தார்.


நேகா துரு கையை எடுக்க முயற்சி செய்தாள். மற்ற பெண்கள் ஆண்களின் கையை அடித்துத் தன் வாயில் இருந்த கையை எடுக்க வைத்தனர். அபி இவர்களைப் பார்த்துச் சிரிப்பை அடக்கினாள். ஆண்கள் நால்வரும் அசடு வழிந்தனர்.


துரு வேகமாக கையை உதறியபடி, "ஏன்டி கடிச்ச??", என்றான் மெதுவாக.


"உன்னால எனக்கு மூச்சு முட்டுது மேன்", என்றாள் முறைப்புடன்.

"உஸ்...", என்றனர் மற்றவர்கள் வாயில் கை வைத்து.

தாத்தா கீழே சென்றார்."ஸ்சப்பா...", என்று அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

"கிரேட் எஸ்கேப்!", என்றாள் நேகா, சிரிப்புடன்.


"உன்னால மாட்டி இருப்போம் டி", என்று அவள் இடுப்பில் கைவைத்துத் தூக்கி டேங்கில் உட்கார வைத்தான்.


"ஏய்! தேவ்!! இறக்கி விடு மேன்", என்றாள் பயத்தில்.

"இவ இங்கயே இருக்கட்டும், யாரும் இறக்கி விடாதீங்க டா", என்றான் விளையாட்டாக.


மற்றவர்கள் லேசாகச் சிரித்தனர், "தேவ்!! இறக்கி விடு", என்றாள் கெஞ்சலாக.


"சரி!! இறக்கிவிடுறேன், அதுக்கு முன்னாடி எதுக்குத் தாத்தாவுக்கு நாம இங்கே இருக்குறது தெரியணும்னு நினைச்ச, சொல்லு".

மற்றவர்கள் லேசாகசா சிரித்தனர்.
"தேவ்!! இறக்கி விடு", என்று சிணுங்கினாள்.


"ஒரு தப்பு பண்ணுனா மாட்டாத மாதிரி பண்ணனும் இனிமே இப்படி பண்ணாத".

"தும்மல் வந்தா நா என்ன பண்ணுவேன்?? இறக்கி விடு தேவ்!", என்றாள் கைகளை விரித்து, கெஞ்சலாக.



துரு சிரிப்புடன், "முடியாது", என்றான்.


"அப்ப நானே குதிக்கிறேன்", என்று குதித்தாள். துரு வேகமாக அவள் இடுப்பில் கை வைத்து மெல்லமாக இறக்கி விட்டான். துருவின் கண்களை ஆழமாகப் பார்த்தாள்.

"பிடிக்காம கீழ விழுன்னு விட்டுருக்கணும் டி உன்ன", என்றான் கிண்டலாக.

"நீ என்னைய விட மாட்டன்னு தெரியும், அதான் குதிச்சேன்" என்றாள் சிரிப்புடன்.


"ஓ... அவ்ளோ நம்பிக்கையா?? ம்ம்... சரி! வாங்க! டைமாச்சு, கீழ போலாம்", என்று கீழே அழைத்துச் சென்றான்.

மறுநாள் அனைவரும் கோவிலுக்குக் கிளம்பி கீழே வந்தனர் நேகாவைத் தவிர. "இன்னைக்குக் கடைசி நாள் திருவிழா, காப்பு அவுக்கப் போறாங்க, எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க", என்றார் நேசமணி தாத்தா.

நேகா சாதாரணத் துணியில் கீழே இறங்கி வந்தாள்."நீ என்ன இன்னும் கிளம்பாம இருக்க", என்றார் தாத்தா அவளைப் பார்த்து.

"நா வரல, அதனால கிளம்பல", என்றாள் தோளைக் குலுக்கியபடி. அனைவரும் கேள்வியாக அவளைப் பார்த்தனர் ஆதி, தியா, அபியைத் தவிர.


"ஏன்??", என்றார் தாத்தா.


"வர இஷ்டம் இல்ல, வரல", என்றாள் மீண்டும் தோளைப் குலுக்கியபடி.

"குணா..!!", என்றார் கோபமாக.


"அப்பா!! அவ வந்து தான் காப்ப அவுக்கபா போறாளா?? வரலன்னா விடுங்களேன்", என்றார் எரிச்சலை மறைத்தபடி.


"ஆமாங்க!! போற நேரத்துக்கு எதுக்கு சண்ட, பாப்பா! பத்திரமா இரு, சாப்பாடு சமையலறையில இருக்கு", என்றார் அபிராமி பாட்டி.

"சரி பாட்டி!!", என்றாள் அவர் கன்னத்தில் முத்தமிட்டு.


"கோவிலுக்குப் போறப்ப இது என்ன எச்சு பண்ணிக்கிட்டு?!", என்றார் தாத்தா, முறைப்புடன்.

"என்ன தாத்தா?! உங்களுக்கும் வேணுமா??", என்றாள் கண்ணடித்து. தாத்தா முறைப்புடன் வெளியே சென்றார். மற்றவர்கள் இவளைப் பார்த்துச் சிரிப்புடன் சென்றனர்.

துரு சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் வேகமாக உள்ளே வந்து, "உனக்கு உடம்புக்கு முடியலையா என்ன???", என்றான் அக்கறையாக.

"இல்ல தேவ்!", என்றாள் சிரிப்புடன்.


"பத்திரமா இரு, ஏதாச்சும் வேணும்னா கால் பண்ணு சரியா?", என்று அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான். நேகா செல்கின்றவனைச் சிரிப்புடன் பார்த்தாள்.


அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். சிறிது நேரம் கழித்து நேகா துருவிற்கு போன் செய்தாள். "ஹலோ!! ஹலோ!! டாலு! மோல சத்தத்துல எதுவும் கேட்கல, வெளியே வந்து பேசுறேன் இரு", என்று வேகமாக வெளியே வந்தான். மற்றவர்கள் தங்களுக்குள்ளயே பேசிக்கொண்டு இருந்ததால் துரு செல்கிறதைக் கவனிக்கவில்லை.


"சொல்லுடா! டாலு!! கேட்குதா?", என்றான், காரின் பக்கத்தில் வந்து.

"நீ கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா??", என்றாள் தயங்கியபடி.


"ஏன்டா? என்னாச்சு??", என்றான் பொறுமையாக.

"தனியா இருக்க பயமா இருக்கு", என்றாள் தயங்கியபடி.


"சரி!! நா வந்து கோவிலுக்குக் கூட்டிட்டு வரேன்", என்றான், காரில் ஏறி உட்கார்ந்த படி.

"இல்ல தேவ்!! எனக்கு தலைவலியா இருக்கு, நா உன்கிட்ட தனியா கொஞ்சம் பேசணும் வரியா??", என்றாள் தயங்கியபடி.

"சரி! வரேன்", என்று யோசனையுடன் காரில் வீட்டிற்குச் சென்றான்.

நேகா தாழ்வாரத்தில் உள்ள சோபாவில் யோசனையுடன் படுத்திருந்தாள். "டாலு!!", என்று உள்ளே வந்தான். நேகா வேகமாக எழுந்து உட்கார்ந்தாள்.

"என்னடா?? ரொம்ப தலை வலிக்குதா??", என்றான் அக்கறையாகப் பக்கத்தில் வந்து.


"இல்ல தேவ்!! நவ் பெட்டர்".

"சரி! சாப்டியா??".

"இல்ல! நீ??".


"ம்ம்.. கோவில்ல சாப்பிட்டேன், முதல்ல சாப்பிடு".

"கொஞ்ச நேரம் ஆகட்டும், உன் தாத்தா எட்டப்பா என்ன சொல்றாரு??", என்றாள் கிண்டலாக.


"என்ன கிண்டலா??", என்றான் பொய்யான முறைப்புடன்.

"இல்ல நக்கல்!! நா கோவிலுக்கு வந்தா தான் எல்லாம் பண்ணுவாரோ!!", என்றாள் மீண்டும் கிண்டலாக.

"உன் வாய் இருக்கே! தாத்தாவ எதுக்குடி டென்சன் பண்ற?? நானே நைட்டு வெளியில சாப்பிட்டதப் பத்தி எப்ப கேப்பாரோன்னு பயத்துல இருக்கேன், நீ வேற", என்றான் சலிப்புடன்.


"நீ எதுக்குதான் பயப்படல!! தாத்தா தலைல என்ன கொம்பா முளைச்சிருக்கு, எப்பப் பாரு ப்ரஷர் குக்கரத் தலைல வச்சுக்கிட்டு அழைறாரு", என்றாள் கிண்டலாக.

"தாத்தாவையே கிண்டல் பண்றியா டி??", என்றான் பொய்யான மிரட்டலுடன்.


"அப்படித்தான் பண்ணுவேன், ஏன்னா அவரு எனக்கும் தாத்தா", என்றாள் சிரிப்புடன்.


"உனக்குத் தாத்தா தானே, அப்புறம் எதுக்கு கிண்டல் பண்ற??", என்றபடி பக்கத்தில் வந்து உட்கார வந்தவனின் கால் தடுக்கி நேகாவின் கன்னத்தில் இதழ் பதித்தபடி அவள் மேலேயே விழுந்தான். இருவரும் அதிர்ந்தனர்.

"இங்க என்ன நடக்குது??", என்று நேசமணி தாத்தா உச்சகட்டக் கோபத்தில் கத்தினார். இருவரும் வேகமாக எழுந்து நின்றனர்.

தாத்தாவின் சத்தத்தைக் கேட்டு மொத்தக் குடும்பமும் வேகமாக உள்ளே ஓடி வந்தனர்." தாத்தா!!", என்று துரு ஆரம்பிக்கும்போதே கையை உயர்த்தி,


"நீ பேசாத!! உனக்கும் அபிக்கும் கல்யாணம் முடிவு பண்ணுனா.. நீ இங்க இவ கூட என்ன பண்ணிட்டு இருக்க??", என்றார் ஆத்திரமாக.

"தாத்தா!! அது வந்து கால் ஸ்லிப்பாகிருச்சு...", என்று இழுத்தான்.



"வாய மூடு!! எல்லாரும் கோவில்ல தானே இருந்தோம், நீ எதுக்கு இங்க வந்த?? உனக்கும் அபிக்கும் கல்யாணம் முடிவு பண்ணி பத்திரிக்கை அடிக்கக் கொடுத்தா, நீ இவ கூட இருக்க, நீ எப்பப் பார்த்தாலும் இவளுக்கு சப்போர்ட் பண்றப்பவே நினைச்சேன், நம்ம என்ன சொன்னாலும் கேட்குறவன் இவ விஷயத்துல மட்டும் எதுக்கு எதிர்க்குறான்னு யோசிச்சேன், இப்பத்தானே தெரியுது, எதனாலன்னு!", என்றார் ஆத்திரமாக.



"போதும் தாத்தா!! ரொம்ப ஓவராப் பேசுறீங்க, இப்ப என்ன நடந்ததுன்னு காச்சு மூச்சுன்னு காத்துறீங்க?? தேவ் எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவான், நானும் தேவும் லவ் பண்றோம்", என்றாள் அழுத்தமாக. அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.


"என்ன சொன்ன??", என்றார் தாத்தா, கோபமாக.


"நா சொன்னது கேக்கலையா?? நானும் தேவ துருவன்னும் லவ் பண்றோம், எப்பப் பாரு நீங்கதான் முடிவு பண்ணுவீங்களா?? எங்க வாழ்க்கைய நாங்க தான் முடிவு பண்ணுவோம், உங்க முடிவ எங்க மேல திணிக்காதீங்க", என்றாள் கோவத்துடன், அவர் பக்கத்தில் வந்து.


"ஓ... இது தெரியாம துருவுக்கும் அபிக்கும் கல்யாணம் முடிவு பண்ணிட்டேன் போல, பார்வதி!! மாப்பிள்ள!! உங்க வீட்டுக்கு அபி தான் மருமகளா வரணும்னு நினைக்கிறீங்களா??", என்றார்.


இருவரும் துருவைப் பார்த்தனர். துரு கோபத்துடன் நின்றான். "அதுவந்து ப்பா அப்படி எல்லாம் எதுவும் இல்ல", என்றார் பார்வதி, தயங்கியபடி.


"ஆமா! மாமா!! எதுவும் கட்டாயம்லாம் இல்ல", என்றார் நாதன்.




"சரி!! இப்ப என் முடிவக் கேட்டுக்கோங்க, நா சொன்ன தேதியில கல்யாணம் நடக்கணும், அதே முகூர்த்தத்துல ரவீனுக்கும் அபிக்கும், நேகவதிக்கும் துருக்கும் கல்யாணம் நடக்கணும், நடந்தே ஆகணும்!! இத யாராலும் மாத்த முடியாது", என்றார் முடிவாக. நேகாவின் முகம் மலர்ந்தது, துரு இயலாமையுடன் நின்றான்.

"இந்த முடிவ யாரும் மாத்தக்கூடாது, மாத்தவும் விடமாட்டேன், துரு உன்கிட்ட இத நா எதிர்பார்க்கல, எதிர்பார்க்கல", என்று வருத்தத்துடன் சொல்லி விட்டு வெளியே சென்றார்.

"டாடி!!", என்றாள் நேகா சிரிப்புடன்.


"ஆர் யு ஹாப்பி பேபி டால்??", என்றார் பொறுமையாக.


"எஸ் டாட்", என்று சிரிப்புடன் அபியை அணைத்தாள். அபி அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள்.

"நேகா!! நீ என்ன பண்ணிருக்கன்னு உனக்குத் தெரியுதா??", என்றார் அகிலா, கோபமாக.


"என்ன மீ?? எனக்கு தெரியாம நடக்குமா??", என்றாள் சிரிப்புடன். அகிலா மற்றவர்களைச் சங்கடமாகப் பார்த்தார். பார்வதி துருவின் பக்கத்தில் சென்று அவன் தோளில் கை வைத்தார்.

துரு அவரை இயலாமையுடன் பார்த்தான். நேகா முன்னால் இருப்பவரைப் பார்த்தபடி நின்றதால் பின்னால் நிற்கும் துருவின் முகத்தைப் பார்க்காமல் குணாவின் பக்கத்தில் வந்தாள்."டாட்!!", என்றாள் சிரிப்புடன்.


குணா அவள் கையைப் பிடித்து, "நீ துருவ லவ் பண்றியா??", என்றார் அவள் கண்களைக் கூர்மையாகப் பார்த்து.

"ஆமா டாடி!!", என்றாள் சிரிப்புடன். மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். துரு உச்சக்கட்டக் கோபத்தில் நின்றான்.


"அப்ப துரு??", என்றார் கூர்மையானப் பார்வையுடன்.


நேகா யோசனையுடன், " சொன்னா தான் லவ்வா டாடி??", என்றாள் குழப்பமாக.


"பேபிடால்!! உன் கண்ணுல தெரிரக் காதலுக்கானப் பிரதிபலிப்பு துரு கண்ணுல தெரியல டா, அவன் கண்ணுல கோவம், குழப்பம், வருத்தம், இயலாமை தான் தெரியுது", என்றார் வருத்தமாக. நேகா துருவைத் திரும்பிப் பார்த்தாள். துரு கோபமாக வெளியே சென்றான்.


இனி நேகாவின் நிலை என்ன?? துருவின் கோபம் தணியுமா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.........


💗யாசிப்பு தொடரும்....💗
 

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN