உன்னாலே உனதானேன் 11

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை ஆபிஸ் முடிந்து வந்த வினய் தனது காரில் ரேஷ்மி, வீரலட்சுமி மற்றும் அபியின் குடும்பம் சகிதமாக வெளியே கிளம்பினான்....
முதலில் கடற்கரைக்கு சென்ற அவர்கள் அங்கு தங்கள் நேரத்தை செலவிட்டனர்... இருஜோடிகளுக்கும் தனிமையை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக குழந்தையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்ட வீரலட்சுமி குழந்தையுடன் தன் நேரத்தை செலவிட இருஜோடிகளும் தனித்தனியாக தம் துணையுடன் தமக்கு கிடைத்த அந்த அற்ப நேரத்தை செலவிட்டனர்...

அபியும் ரியாவும் கடல் மண்ணில் அமர்ந்து கதைபேச வினயும் ரேஷ்மியும் குழந்தைக்கும் வீரலட்சுமிக்கும் தேவையானவற்றை வாங்கிகொடுத்துவிட்டு கடலோரமாக காலாற நடந்தனர்...

வானம் முழுதும் இருளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க வெண்ணிலவு மெதுமெதுவாய் தன் வரவால் அக்காரிருளிற்கு ஒளி சேர்க்க சில்லென்று தென்றலும் அதனுடன் கைகோர்த்து அச்ஜோடியை வருடிச்சென்றது... இருவரும் கைகோர்த்து கதைபேசியபடி கடல்மண்ணில் ஒருசேர பாதம் பதித்தபோது அவர்களது பாதங்களை கழுவிச்சென்ற கடலலைகள் அவர்களின் கை பிணைப்பின் இறுக்கத்தை நொடிக்கொரு தடவை அதிகரித்தது...
அந்த இறுக்கத்தை உணரும் நேரம் இருவரின் பார்வைகளும் பரிமாறிக்கொள்ளப்பட என்று அந்த நிமிடங்களை தம் மனப்பெட்டகத்தில் இருவரும் சேமித்துக்கொண்டனர்....
இருவரின் மனமும் இந்த நொடி நீளாதா என்று ஏங்கியபோதும் அதை வாய் வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லை... ஆனால் வினயோ பின்னியிருந்த இருவரது கையையும் உயர்த்தி மறுகையால் தடவிக்கொடுத்து அதில் தன் இதழ் பதித்து தன் மனதிலிருந்ததை செயலால் உணர்த்தினான்... அவன் செயலில் வெட்கம் சூழ்ந்து கொள்ள அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ரேஷ்மி..... அவளது செயலுக்கு தன் ஆதரவை தெரிவிக்கும் முகமாக அவளை ஒருபுறமாக அணைத்தது அவனது கரம்....
இவ்வாறு அந்த மோனநிலையை அனுபவித்தவாறு இருவரும் தம் நடையை தொடர என்றும் போல் அன்றும் அதனை தடை செய்தது வினயின் மொபைல்....

ரேஷ்மியை விட்டு விலகியவன் தன் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து அதன் தலையீடு தந்த எரிச்சலில் யாரென்று பாராமல் போனை அட்டென்ட் செய்தவன்

“டேய் எங்க இருந்துடா எனக்குனே கிளம்பி வர்றீங்க....??? வீட்டுல இருந்தாலும் நிம்மதியா இருக்கவிட மாட்டேன்றீங்க.... வெளியில வந்தாலும் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்கவிட மாட்டேன்றீங்க... ஏன்டா நான் சந்தோஷமா இருந்தா உங்களுக்கு மூக்கு வேர்த்திருமா??? எப்படிதா சரியாக அந்த டைமிற்கு கால் பண்ணிரீங்கோ...” என்று புலம்பியவனை பார்த்து சிரித்த ரேஷ்மியை முறைத்தான் வினய்...

அந்தப்புறம் பேசியதும்

“ஐயோ சாரி சார்... நான் என்னோட ப்ரண்டுனு நினைத்து தான் அப்படி ஹார்ஸ்ஸா பேசிட்டேன்.... ஐயம் ரியலி சாரி சார்....”

“.....”

“ஆமா சார்.... ஓகே சார்... ஐல் லெட்யூ நே சார்.... என்ட் வன்ஸ் எகெய்ன் ஐயம் ரியாலி சாரி சார்....”

“...”

“ஓகோ சார்.... பாய் டேக் கேயார்..” என்றுவிட்டு போனை அணைத்தவன் அருகில் நின்று வாயை மூடி சிரித்துகொண்டிருந்த ரேஷ்மியை முறைத்தான்.

அவளோ
“யாரு வினய் அந்த ப்ரெண்டு....??? பாவம் நீங்க கத்துன கத்துல அவருக்கு ஸ்பீக்கர் அவுட்டாகிருக்கும்..” என்றுவிட்டு அவள் மீண்டும் சிரிக்க

“என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குல்ல???”

“வேற என்ன பண்ணுறது வினய்??? யாருனு தெரியாம காச்சு மூச்சுனு கத்திட்டு அப்புறம் ஐயோ சார் சாரி சார் தெரியாம பண்ணிட்டே சார்னு காலில் விழமுடியாத குறைக்கு போனில் கெஞ்சினா பார்க்கிற எனக்கு சிரிப்பு வராமல் வேற என்ன வருமாம்??” என்றுவிட்டு ரேஷ்மி மறுபடியும் சிரிக்க

“என்னம்மா பண்ணுறது??? நீயும் நானும் ஜாலியாக இருப்பது அந்த கடவுளுக்கு பொறுக்காது போல.... ஏதாவது ஒரு பிரச்சினையை அனுப்பிட்டே இருக்காரு...ஒன்னு போன்ல வருது... இல்லைனா குழந்தை ரூபத்தில் வருது.... நான் என்னம்மா பண்ணுறது??? என் கஷ்டம் எனக்கு தான் தெரியும்...” என்றவனை

“என்ன வினய் குழந்தையை பிரச்சனைனு சொல்லுறீங்க???அனு தனியாகவே இருந்து பழகிவிட்டதால நம்ம கூட ரொம்ப அட்டாச்டா இருக்கா.... குழந்தை அங்க போனதும் நமக்காக ஏங்கி போயிருவானு நான் கவலை பட்டுட்டு இருக்கேன்... நீங்க என்னவென்றால் இப்படி பேசுறீங்க வினய்??”

“அதென்னவோ உண்மை தான் ஷிமி.. எனக்கு கூட அனு போன பிறகு எப்படி இருக்கப்போறேனு தெரியலை...அனு நம்ம கூட கொஞ்ச நாள் தான் இருக்கா.. ஆனா எனக்கு காலையிலேயே அனுவை கொஞ்சிட்டு போனா தான் அன்றைய நாளே நல்லா இருக்க மாதிரி இருக்கும்....அதோடு......” என்று வினய் இழுக்க

“அதோடு...” என்று ரேஷ்மி எடுத்து கொடுக்க

“அனு தயவால் தான் அவளை கொஞ்சுகின்ற சாக்கில் உன்னையும் கொஞ்சுகின்ற சான்ஸ் கிடைக்குது...” என்றவன் ஷிமியை பார்த்து கண்ணடிக்க அதில் வெட்கம் அவளை கொள்வனவு செய்த போதிலும் அதனை சிரமப்பட்டு மறைத்தவள் அவனை முறைக்க முயன்று தோற்றாள்...

“ஏன் ஷிமி கஷ்டப்படுற அதான் வரலையே விட்டுரு....” என்றவனது காதை வலிக்காமல் திருகியவள்

“டேய் புருஷா உனக்கு கொழுப்பு ரொம்ப கூடிபோச்சு.... கவனிக்கிற விதத்தில் கவனித்தால் தான் எல்லாம் கன்ரோலுக்கு வரும் போல...”

“ஐயோ ஷிமி வலிக்குது மா... தெரியாமல் சொல்லிட்டேன்... நான் என்னமா பண்ணுறது?? இந்த வாய் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்குது... அதான் இப்படி..”

“முதல்ல அந்த வாய்க்கு ஒன்று கொடுக்கிறேன்..” என்றவளிடம் சீரியசாக

“என்ன கொடுப்ப ரேஷ்மி நச்சுனு ஒரு இச்சா???” வினய் கேட்க சுற்றும் முற்றும் ஏதோ தேடினாள் ரேஷ்மி... அவளது எண்ணம் அறிந்தவன் விடு ஜூட் என்று ஓடத்தொடங்க அவனை துரத்தத்தொடங்கினாள் ரேஷ்மி...

இவ்வாறு தங்கள் விளையாட்டை தொடர்ந்தவர்கள் நேரமாவதை உணர்ந்து வினய் அனைவரையும் கிளப்பிக்கொண்டு இரவு உணவிற்காக ஒரு ரெஸ்டோரண்டிற்கு அழைத்து சென்றான்... அங்கு அனைவர் முன்னிலையிலும் மீண்டும் ஒருமுறை கேக் வெட்டி ரேஷ்மியின் பிறந்தநாளை கொண்டாடினான் வினய்.. இரவு உணவை முடித்துக்கொண்டு வினய் நைட் ஷோ போகலாம் என்று கூற அபியோ

“இல்லை கவின் அனு இப்பவே ரொம்ப டயர்டாகிட்டா... அம்மாவுக்கும் இதுக்குமேல முடியாது கவின்... நீயும் ரேஷ்மியும் போயிட்டு வாங்க நாங்க கிளம்புறோம்...” என்று தங்கள் நாடகத்தை தொடங்க ரேஷ்மியோ அதன் பாதையையே மாற்ற முயன்றாள்...

“வினய் அப்போ நாமும் கிளம்பலாம்... அத்தான் பேமிலி இல்லாமல் எப்படி?? நாம இன்னொரு நாள் வரலாம்...” என்று ஒரு குண்டை தூக்கிப்போட வினயிற்கோ ஐயோ என்றிருந்தது... இருந்தும் சமாளிக்கும் முகமாக

“ஆமா ஷிமி.. அண்ணா சொல்வதும் கரெக்ட் தான்... அண்ணா எல்லோரையும் கூட்டிட்டு காரில் வீட்டுக்கு கிளம்பட்டும்... நாம அப்படியே நைட் சோ முடிச்சிட்டு போகலாம்...” என்ற வினய் கூற அவனை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தாள் ரேஷ்மி...

வினயோ மைண்ட் வாயிசில்

“ ஐயய்யோ கண்டுபிடிச்சிடுவாளோ??? கண்டுபிடிச்சா அவ்வளவு தான்... என்னை காப்பாற்று கடவுளே...” என்று மனதினுள் பதறியவன் வெளியில் இயல்பாய் இருக்க முயன்றான்... வினய் அழைத்த அந்த கடவுள் ரியா ரூபத்தில் வந்தார்..

“இல்லை ரேஷ்மி நீங்க இரண்டு பேரும் நைட் சோ முடிச்சிட்டே வாங்க... எங்களால் இந்த பிளானை ட்ராப் பண்ண வேண்டாம்.... எனக்கும் உங்க கூட ஜாயின் பண்ண ஆசையாக தான் இருக்கு.. பட் அனுவிற்கு தூக்கம் வந்தா நானும் அவங்க அப்பாவும் கட்டாயம் வேண்டும்... அத்தையாலும் அனுவை தனியாக சமாளிக்க முடியாது... சோ நீங்க இரண்டு பேரும் போயிட்டு வாங்க...” என்றவள் ரேஷ்மியின் காதருகே வந்து

“ரேஷ்மி நீ உன் புருஷன் கூட நைட் சோ பார்க்கிறப்போ நாங்க எதுக்கு கரடியாட்டம்??? நல்லா என்ஜாய் பண்ணாமல் இப்படியா கிடைத்த சான்சை மிஸ் பண்ணுவ....??” என்று காதில் குசுகுசுத்துவிட்டு

“கொழுந்தானாரே என் தங்கச்சியை பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாங்க... படம் பார்க்கப்போறேனு தியேட்டரில் தூங்கிடாதீங்க....”என்று வினயை கேலி பண்ணவும் தவறவில்லை..

வினயின் திட்டப்படி தன் காரை அபியை எடுத்துச் செல்லக்கூறியவன் தன் நண்பனை அழைத்து பைக்கை வரவழைத்தான்.... பைக் வந்ததும் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பியவர்கள் பத்து நிமிட பயணத்தின் பின் தியேட்டரை அடைந்தனர்...

ஏற்கனவே ஆன்லைனில் புக் செய்திருந்த படியால் ரேஷ்மியும் வினயும் நேரடியாக தியேட்டரினுள் சென்றனர்... அவர்கள் சென்ற தியேட்டர் வழமையான தியேட்டர்கள் போல் அல்லாது சிறிதாக இருக்க அதை பற்றி ரேஷ்மி வினயிடம் கேட்க அவனோ வி.ஐ.பீ ஷோ தியேட்டர்ஸ் சிறியதாக தான் இருக்கும். பாமிலியாக வர முடிவு செய்திருந்தபடியால் வி.ஐ.பி ஷோவிற்கு டிக்கட் புக் பண்ணியதாக கூறினான்... ரேஷ்மியும் இதற்கு முன் வி.ஐ.பி ஷோ சென்றில்லாத படியால் அவன் கூறியதை உண்மை என்று நம்பினாள்..

ரேஷ்மியை அமர வைத்தவன் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிவருகிறேன் என்று கூறி அரங்கிலிருந்து வெளியேறினான்... அவன் வெளியேறிய அடுத்த நொடி விளக்குகள் அனைத்தும் அணைய ஸ்க்ரீனில் படம் ஒளிப்பரப்பாகத்தொடங்கியது....

வினயை அழைக்க தன் மொபைலை எடுத்தவளை தடை செய்தது வினயின் குரல்..

“ஓய் பொண்டாட்டி.... நான் இங்கே தான் இருக்கேன்... உனக்கு ஒரு சின்ன சப்ரைஸ்... அந்த சப்ரைஸ் என்னான.... முதலில் நீ இப்போ இந்த ஸ்க்ரீனில் போற படத்தை பாரு....அதற்கு பிறகு சொல்றேன்...” என்று அவனது குரல் ஸ்பீக்கரில் ஒலிக்க அதை கண்டு கொண்டவள் அவனது வேண்டுகோளின் படி அந்த படத்தை பார்க்கத் தொடங்கினாள்...

அதில் முதலில் வினயின் சிறு வயது படங்களும் அவளது சிறு வயது படங்களும் வந்து சென்றது.... பின் அவர்கள் இருவரின் வளர்ச்சிக்கட்டத்தின் ஒவ்வொரு படங்களும் வந்து சென்றது... பின் ரேஷ்மியின் காலேஜ் டேஸில் எடுத்த படங்களும் வினயின் காலேஜ் டைமில் எடுத்த படங்களும் வந்துசென்றன....
பின் ஒரு வீடியோ வந்தது... அதில் ரேஷ்மியை பின் தொடர்ந்து வினய் வருவது போலவும் அவள் திரும்பி பார்க்கும் போது வினய் அங்கு வந்த ஒரு பைக்கில் ஏறி செல்வது போலவும் இருந்தது... பின் அவள் கடற்கரை மண்ணில் நடந்து செல்ல அவளை பின்தொடர்ந்து அவளது ஒவ்வொரு பாதச்சுவடுக்கும் அருகில் அவனது பாதச்சுவட்டை பதித்து நடந்து செல்வதாகவும் அதை தொடர்ந்து அவளறியாமல் வினய் அவள் தலையில் வெள்ளை நிற ரோஜாப்பூவை செருகிவிட்டு மறைந்து கொள்ளும் காட்சி என்று அந்த காணொளி தொடர்ந்தது...

அதன் பின் அவர்களது நிச்சயதார்த்தத்தில் மோதிரம் மாற்றும் போது எடுத்த புகைப்படங்கள் ஸ்கீரின் முழுவதும் பரப்பப்பட்டு ஒவ்வொன்றாக முன் வந்து பெரிதாகியது.... அதன் பின் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட படங்கள்... பின் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில செல்பிகள்..
இறுதியாக முதல் நாள் இரவு எடுத்த அவளது பிறந்த நாள் படங்கள்.... காணொளியின் இறுதியில் அவர்களது இதழ் முத்தத்தோடு அந்த காணொளி முடிவடைந்திருந்தது...

இந்த குறுப்படத்திற்கு பாக்ரௌண்டு மியூசிக்காக சென்றது என் சுவாசக்காற்றே பாடல்.....

என் சுவாசக் காற்றே
சுவாசக் காற்றே நீயடி

உன் நினைவுகள்
என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள்
காணுமா...காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே

சுவாசக் காற்றே நீயடி
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை
காண்பேனா

திரையில் சென்ற குறும்படம் முடிந்ததும் அந்த அரங்கின் முன் வரிசையின் இரு விளக்குகள் மட்டும் ஒளிர்ந்தன.... அந்த ஒளியின் கீழ் கையில் மைக்குடன் நின்றிருந்தான் வினய்....

“ஓய் மை ஸ்வீட் பொண்டாட்டி... எதுக்கு மறுபடியும் இப்படி ஒரு சப்ரைஸ்னு உனக்கு புரியாமல் இருக்கலாம்... இன்றைக்கு உன்னுடைய பிறந்த நாள் மட்டுமில்லை.. அதோடு இன்றைய நாள் இன்னொரு விஷயத்துக்கும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்... அது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை... சோ நானே சொல்றேன்....இந்த நாள் என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத ஒரு நாள்... என் ஏன்ஜல்... என் பெட்டர் ஹாப்.. என்னோட சோல்மேட்... உன்னை முதன் முதலாக பார்த்து என் மனதை பறிகொடுத்த நாள்... அதாவது நான் உன்னை டாவடிக்க ஸ்டார்ட் பண்ண நாள்... இந்த மூன்று வருஷமாக நானும் எப்படியாவது இந்த நாளிலேயே உனக்கு ப்ரபோஸ் பண்ணலாம்னு ட்ரை பண்ணேன்.... ஆனா பண்ணமுடியலை...... சோ இப்போ அதையெல்லாம் சேர்த்து வைத்து சொல்லப்போறேன் என்காதலை...

காதல் அப்படிங்கிறதை விட மூன்று வருஷமாக நான் பண்ண தவம்னு சொல்லலாம்... உன்னை பார்த்த முதல் நொடியில் விழுந்தவன் தான்.... எப்படி விழுந்தேனா இந்த கும்கி படத்துல நம்ம விக்ரம் பிரபு தண்ணியில விழுந்து எழுந்ததும் ஒரு வரியை பாடுவாறே.... என்ன வரி அது???... ஆஹா நியாபகம் வந்திருச்சி

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்...

அவரு தண்ணியில விழுந்தாரு... நான் காதலில் விழுந்தேன்... அவ்வளவு தான் டிப்பரன்ஸ்...
இது தான்மா நான் முதன்முதலில் காதலில் விழுந்த கதை......
விழுந்தவன் சும்மா இருப்பேனா?? நீந்த தொடங்கிட்டேன்.... அதாவது நான் என்ன சொல்ல வர்றேனா காதலிக்க தொடங்கியதும் அடுத்த ஸ்டெப்பா உன்னை பாலோ பண்ண தொடங்கினேன்.... இந்த காதலில் ரொம்ப கஷ்டமான டாஸ்கே இது தான்.... லவ்வரை லவ்வருக்கே தெரியாமலும் அவளுக்கு டவுட்டும் வராமல் பாலே பண்ணுற மாதிரி ஒரு சேலன்ஜிங்கான டாஸ்க் வேற எதுவும் இல்லை.... இந்த ஸ்டேஜில் தான் என் ஸ்வீட் ஹாட்டை பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்.... அவளுக்கு புடிச்சது, புடிக்காதது, அவளோட ப்ளஸ் மைனஸ் எல்லாமே.... என்னடா பாலே பண்ணுறேனு டிடெக்டிவ் வேலை பார்த்திருக்கானேனு உனக்கு தோன்றலாம்..... உனக்கு தோன்றுவதென்ன.... எனக்கே அப்படி தான் தோனுச்சு.... ஆனா உன்னை பற்றி நான் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்..... என் பேபிமா என் லவ்வை அக்செப்ட் பண்ணி டேட் பண்ணியிருந்தாலும் என்னால் உன்னை இவ்வளவு தூரத்திற்கு புரிந்திருக்க முடியாது..... நம்ம தெகிடி பட ஹூரோ அசோக் செல்வன் அளவுக்கு இல்லைனாலும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு உன்னை பற்றி தெரிந்து கொண்டேன்....

காதலுக்கு கண்ணில்லைனு சொல்லுவாங்க..... ஆனா தினம் தினம் நான் கண்ணால் பார்த்தவை தான் என்னை உன்வசம் இழுத்தது....

எப்போதும் கேலி கிண்டல் படிப்புனு ஜோரா போயிட்டு இருந்த என் வாழ்க்கையில் உன் வரவு பல மாற்றங்களை கொண்டு வந்தது.. அதில் முதலாவது வழமைக்கு மாறாக காலையில் பை தர்ட்டிக்கெல்லாம் எழும்பத்தொடங்கினேன்.... உன் மாமியார் கூட என் மாற்றத்தில் ஷாக் ஆகிட்டாங்கனா பார்த்துக்கோவேன்.... ஆனா என்னோட அந்த திடீர் மாற்றம் பஸ் ஸ்டாப்பில் நின்று உன்னை டாவடிக்கனு அவங்களுக்கு தெரிந்திருந்தால் என்னை வகையாக கவனிச்சிருப்பாங்க....உன் வீடும்
என் வீட்டில் இருந்து ரொம்ப தூரம்.... இரண்டு பஸ் மாறி வந்தா தான் அம்மணி தரிசனம் கிடைக்கும் என்பதற்காக காலையிலேயே எழும்பி டிப் டாப்பாக ரெடியாகி வந்து பஸ் ஸ்டாண்டில் நின்று மை லவ்வை பார்த்திட்டு காலேஜ் போயிட்டு மறுபடியும் காலேஜ் முடியும் போது பஸ் ஸ்டாண்டில் வந்து நின்று அம்மணியை அம்மணிக்கு தெரியாமல் வழியனுப்பு வைத்தால் தான் ஐயா ஹாப்பி....

இது ஜஸ்ட் எக்ஸாம்பல் தான் மா... இன்னும் உன்னால் நிகழ்ந்தது ஏராளம்... அதெல்லாம் சொல்லப்போனா நான் உனக்கு பிரபோஸ் பண்ண முடியாது.. சோ அதை பிறகு ஒரு நாள் சொல்லுறேன்...

இப்படி வன் சைட்டா லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருந்தவனுக்கு போட்ட பாரு ஒரு சடன் பிரேக்கு... உனக்கு நியாபகம் இருக்கா இல்லையானு தெரியலை... ஒரு பையன் உன்னை பாலோ பண்ணான்னு அவனை லெப்ட் அன்ட் ரைட் வாங்குன பாரு அன்றைக்கு உன்னை பற்றி முழுமையாக புரிந்து கொண்டேன்... நீ அவனை கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அந்த இடத்தில் ஒளிந்திருந்து உங்களை வாட்ச் பண்ணிட்டு இருந்த என்னை கேள்வி கேட்ட மாதிரி இருந்தது... அன்றைய நாளுக்கு பின் உன்னை நான் பாலோ பண்ணவே இல்லை....

என்னடா நீ அவ்வளவு நல்லவனானு உன் மைண்ட் வாய்ஸ் கேட்பது எனக்கு புரியிது....நான் பாலோ பண்ணலைனு தான் சொன்னேன்.. உன்னை பார்க்கவே இல்லைனு சொல்லையே.... ஹிஹிஹி.... அது என்னனா மூன்று மாதம் உன் பின்னால் சுற்றியதில் அம்மணி எங்கெல்லாம் பவனி போவீங்கனு ஐயாவுக்கு அத்துப்படி.... அதனால் பார்க்கனும்னு தோனும் போது வந்து பார்ப்பேன்...

இப்படியே மூன்று வருடத்தை ஓட்டிட்டேன்... உன்னை கரெக்ட் பண்ண தான் முடியலை கல்யாணம் சரி பண்ணலாம்னு கல்யாணம் பண்ணிட்டேன்... அதற்கு பிறகாவது ப்ரோபஸ் பண்ணேன்னா??? ம்ம்ம் இல்லையே..... சத்தியமாக சொல்றேன் ஷிமி.... இப்போ வரை உன்னை எப்படி கரெக்ட் பண்ணுறதுனு தெரியலை....நானும் ரூம் போட்டெல்லாம் யோசிச்சி பார்த்துட்டேன்... ஒரு ஐடியாவும் வர மாட்டேன்குது....

பார்த்தியே ரொமேண்டிக்கா பேச வேண்டிய நேரத்தில் எப்படி மொக்க போட்டுட்டு இருக்கேனு...

காதல் வந்தால் கவிதை வரும்னு சொல்லுறாய்ங்க... ஆனா எனக்கு உன்னை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி பேச இரண்டு வார்த்தை வர மாட்டேன்குது... காலக்கொடுமைடா....

இவன் சொல்ல வந்ததை சொல்லவே மாட்டானானு நீ மைண்ட் வாயிசில் திட்டுறது எனக்கு புரியிது.... சோ ஜவ்வு மாதிரி இழுக்காமல் நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிர்றேன்....

யூ மை பொண்டாட்டி... ஐ யோர் புருஷன்.... லவ் யூ நிறைய.....:love::love::love:

அதாவது என்ன சொல்ல வர்றேனா உன்னை முதன் முதலில் பார்த்த இதே நாள் அதாவது நான் காதலில் விழுந்த இந்த நாளில் இருந்து இன்றுவரை உன்னை அதாவது முன்னாள் காதலி பின்னாள் மனைவியான உன்னை மட்டுமே இந்த நெஞ்சுக்குள்ள பூட்டி வைத்து பூஜிக்கிறேன்னு சொல்ல மாட்டேன்... ஆனா இந்த இதயத்தை காதல் என்ற பெட்ஷூட்டால் மூடியது நீ மட்டும் தான்.... அப்போ மூடுன பெட்ஷூட் இன்னும் வரை திறக்கலை... திறக்கவில்லைனு சொல்வதை விட யாராலும் திறக்க முடியாத அளவுக்கு மூடி வைத்திருக்கு உன் மேல் நான் கொண்ட காதல்...

யப்பா சாமி... இப்பவே கண்ணை கட்டுதே.... அம்மாடி ஷிமி இதுக்கு மேல மேல்மாடியில் சரக்கு இல்லை.... தயவு தாட்சண்யம் பார்த்து இந்த பயபுள்ளையை ஏத்துக்கோ....

மூச்சை பிடித்து பேசிருக்கேன் மா... தயவு செய்து லவ் யூ டு சொல்லிருமா..” என்றவன் முன்னிருக்கையில் இருந்த அந்த ரோஜா பூங்கொத்துடன் அவளை நோக்கி வந்து முழங்காலிட்டு அவளிடம் பூங்கொத்தை நீட்டினான்...

அதை எவ்வித உணர்ச்சியும் வெளிக்காட்டாது வாங்கியவள் அவன் எழுந்ததும் அவளை பார்த்து அவன் சிரிக்க அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டாள் ரேஷ்மி...

கன்னத்தை பிடித்தபடி நின்றவனுக்கு நடந்தது எதுவும் மனதில் பதியவில்லை... தன்னிலை அடைவதற்கே அவனுக்கு சில கணங்களானது... தன்னிலை அடைந்தவனுக்கு அப்போது தான் ரேஷ்மி வெளியில் சென்றது நியாபகம் வந்தது...

விரைந்து வாசலிற்கு வந்தவன் அவளைத்தேட அவளோ அவர்கள் வந்த பைக்கிற்கு அருகில் நின்றிருந்தாள்...
விரைந்து அவளருகில் வந்தவன் ஏதோ கூற முயலும் போது அதை தடுத்த ரேஷ்மி பைக்கை எடுக்குமாறு கூறினாள்... ஆனால் வினயோ அவளது நிலையை அறியும் பொருட்டு ஏதோ கேட்க அவனை முறைத்து பார்த்தவளின் கண்களில் இருந்த உஷ்ணம் அவனது நாவை கட்டிப்போட்டது...

வினய் பைக்கை எடுத்ததும் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டவள் ஏதும் பேசவில்லை.... வினயோ அவளது மனநிலை அறியாது குழம்பித்தவித்தான்... தனது இந்த செயல் அவளது மனநிலையை ஏதேனும் குழப்பிவிட்டதோ என்று பயந்தவனுக்கு அவளது பெற்றோரின் இறப்பிற்கு பின் அவள் இருந்த நிலை கண்முன் வந்து அவனை இன்னும் பதற வைத்தது...

என்ன செய்வதென்று புரியாமல் வினய் தன்னுள் குழம்பியவாறு இருக்க அவன் குழப்பத்திற்கு காரணமானவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை...
வீட்டிற்கு வந்தவர்கள் தங்கள் அறைக்கு வந்ததும் அறைக்கதவை தாழ்ப்பாளிட்ட ரேஷ்மி வினயிடம் நெருங்கி அவன் சட்டையை கொத்தாக பிடித்தாள்...
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN