![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f496.png)
![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f496.png)
"துரு மாமா சின்ன வயசுல இருந்தே உன்னத்தான் அபி விரும்புனாரு, உனக்கும் துரு மாமாவுக்கும் தான் கல்யாணம்னு தாத்தாவ தவிர மத்த எல்லாரும் முடிவு பண்ணி வச்சிருந்தாங்க, எல்லாரோட சந்தோசத்தையும் இந்த நேகா தான் கெடுத்துட்டா, ஏய்!! நீ சந்தோஷமா இருந்தா போதுமா?? உன் ஒருத்தியோட சந்தோசத்துக்காக சுத்தி இருக்க எல்லாரோட சந்தோசத்தையும் அழிச்சுட்ட, என்ன ஜென்மமோ!!" என்றாள் சந்தியா ஆத்திரமாக.
"சந்தியா!! நீ ரொம்ப ஓவரா பேசுற" என்றாள் அபி கோபமாக.
"நீங்கதான் என் அண்ணாவ வேணான்னு சொல்லிட்டீங்களே!! நீங்க பேசாதீங்க, என் அண்ணனுக்கு நடந்த அந்நியாயத்த நானும் சந்தியாவும் கேட்போம் இதுல நீங்க தலையிடாதீங்க" என்றாள் மித்ரா கோபமாக.
"ஸ்சப்பா..... பேசி முடிச்சுட்டீங்களா ரெண்டு பேரும், இல்ல இன்னும் இருக்கா??" என்றாள் நேகா சலிப்புடன்.
"என்ன நக்கலா??" என்றாள் சந்தியா கோபமாக.
"நக்கலா எனக்கா மஸ்கிட்டோ சத்தத்துக்கு எல்லாம் நா ஏன் கவலைப்படனும்??" என்றாள் நிதானமாக.
"யாரப் பார்த்து கொசுன்னு சொல்லுற? உன்னால எப்படி இப்படி எதுவும் நடக்காத மாதிரி பேச முடியுது" என்றாள் மித்ரா கோபமாக.
"உங்க ரெண்டு பேருக்கும் இப்ப நடந்ததுல என்ன பிரச்சன?? நானும் போனாப் போகுதுன்னு பார்த்தா ரொம்ப ஆடுறீங்க, எங்கப் போனாலும் பின்னால வந்து குத்தலாப் பேசுறது, எப்பப் பார்த்தாலும் முறைக்கிறது, என்ன பூச்சாண்டி காட்டுகிறீர்களா?? உங்கள எல்லாம் எனக்கு கொஞ்ச நாளா தான் தெரியும் மக்சிமம் உங்க ரெண்டு பேர் கூட தான் நானும் அபியும் இருந்துருக்கோம் அப்பக் கூட எங்க கேரக்டர ஜட்ஜ் பண்ண முடியல, பிரச்சன நடந்ததுக்கு நா தான் காரணம், நா இல்லைன்னு சொல்லலையே!! என்ன நடந்ததுன்னு ஒரு வார்த்த ரெண்டு பேரும் கேட்டுருப்பீங்களா?? இல்லல இதுல நாங்க வரணும்னு நீங்க ரெண்டு பேரும் எதிர்பார்த்தோம்னு சொன்னதெல்லாம் பொய்னு இதுல இருந்தே தெரியுது. விரு, ரிஷி, சந்தோஷ், நந்து நாலு பேரும் என் மேல தப்பு இருந்தும் என்னைய ஒரு வார்த்த கூட திட்டாம என் மனசை மாத்த ட்ரை பண்றாங்க, ஆனா நீங்க???"
"சரி! அதெல்லாம் விடுங்க என்னையக் கேள்வி கேட்குற உரிமை உங்க ரெண்டு பேருக்கும் நா தரவே இல்லையே!! என் கிட்ட கோவப்பட, திட்டுறதுக்கு, ஏன் இப்படி பண்ணன்னு அடிக்கக் கூட தேவ் ஒருத்தனுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு, மத்த யாருக்கும் இல்ல, நீங்க ரெண்டு பேரும் இதுல தலையிடாதீங்க, இங்கப் பாரு தேவ்!! நா உன்ன லவ் பண்ணுறேன், அது எப்பல இருந்துன்னுலா எனக்குத் தெரியாது, ஒன்னு மட்டும் நல்லா தெரியும் நா சாகுற வரைக்கும் என் மனசுல நீ மட்டும் தான் இருப்ப, ஐ லவ் யூ லாட்" என்றாள் கோபமும் காதலுமாக.
துருவின் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் அமைதியாக நின்றான். "இங்கப் பாரு தேவ்!! என் காதல எப்ப உணர்ந்தனோ! அப்பவே அத வெளிப்படுத்திட்டேன் இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல, உன்ன ஹர்ட் பண்ணிட்டேன் சாரி.." என்றாள் கலங்கிய குரலில்.
"இப்படி பேசுனா நாங்க.." என்று சந்தியா ஆரம்பிக்கும்போதே,
"போதும் நிறுத்துங்க, நானும் பாக்குறேன் ரொம்ப ஓவராத்தான் பேசுறீங்க, துருவே அமைதியா நிக்கிறான், உங்களுக்கு என்ன??" என்றான் சந்தோஷ் கோபமாக.
"அட! உனக்கு ஒரு விஷயம் தெரியாதா மச்சி?? நம்மள விட மித்ராவுக்கும் சந்தியாவுக்கும் தான் துரு மேல பாசம் அதிகம்" என்றான் விரு நக்கலாக.
"என்ன மாமா நக்கலா??" என்றாள் சந்தியா கோபமாக.
"வாய மூடுடி, ரொம்பத் தான் பேசுற, உன்னப் போய் லவ் பண்றேன் பாத்தியா என்னைய என் செருப்பாலேயே அடிக்கணும்" என்றான் ரிஷி கோபமாக. சந்தியா அதிர்ச்சியும் ஆச்சரியமாகப் பார்த்தாள். "என்ன?? ரொம்ப அதிர்ச்சியாகுற மாதிரி பாக்குற, என்னைய நீ லவ் பண்ற தானே?!" என்றான் ஆத்திரமாக.
"அது... அது.." என்றாள் தயங்கியபடி.
"என்ன அது அது, நீ என்னைய லவ் பண்ணுறது எனக்குத் தெரியும், அத நேகா தான் கண்டுபிடிச்சு சொன்னா, உன்னால என்னைய நேகி கூட சேர்த்து வச்சுப் பாக்க முடியாம நீ கோபப்பட்டது, அதுமட்டுமில்லாம உன் போன்ல என் போட்டோ மேல ஐ லவ் யூன்னு எழுதி வச்சுருக்குறது எல்லாமே அவதான் கண்டுபிடிச்சு சொன்னா, எனக்கும் உன் மேல லவ் இருக்குன்னு நா புரிஞ்சிக்கிட்டேன் பட் இப்ப ஏன் அப்படி நினைச்சேன்னு என் மேலேயே எனக்கு கோவம் வருது" என்றான் கோபமாக. சந்தியா முழித்தபடி நின்றாள்.
"இவ்ளோ பேசுறீங்களே ரெண்டு பேரும் நாங்க ஏன் எதுவும் நேகிய சொல்லாம இருக்கோம்னு கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா??" என்றான் விரு கோபமாக.
"மூளைன்னு இருந்தா தானே மாமா யோசிக்க முடியும், ஏய்!! மித்ரா நீ பேசுற பேச்சுக்கு சத்தியமா உன்ன நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்", என்றான் நந்து கோவமாக.
"உன்ன யாரு பண்ண சொன்னா? உன்னையக் கல்யாணம் பண்ணனும்னு ஒன்னும் நா வெய்ட் பண்ணல" என்றாள் முறைப்புடன்.
"அதையேதான் நானும் சொல்லுறேன், நீ யாரையோ போய்ப் பண்ணிக்கோ, வீட்ல என்னையக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா முடியாதுன்னு சொல்லிடு, நா கண்டிப்பா என் அப்பாக்கிட்ட முடியாதுன்னு சொல்லிடுவேன்" என்றான் கோபமாக. மித்ரா முறைத்தாள்.
"என்ன முறைக்கிற? உனக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு பேசி வச்சிருக்காங்கன்னு உன் அம்மா சொன்னாங்க தானே உன்கிட்ட?" என்றான் ஆத்திரமாக. மித்ரா தலைகுனிந்தாள்.
"துரு!! பேசுடா இதுங்கலாம் எவ்ளோ பேசுதுங்க, பேசாம அமைதியா நிக்கிற!" என்றான் ரிஷி.
"என்ன பேசச் சொல்ற?? எனக்கும் சேர்த்துத்தான் எல்லாரும் பேசுறீங்களே! இன்னும் பேச என்ன இருக்கு??" என்றான் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல்.
"தேவ்!! உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு எனக்கு தெரியும், நா இந்தக் கல்யாணத்த தாத்தா கிட்ட சொல்லி ஸ்டாப் பண்ணிடுறேன், நீ எப்போதும் போல இருந்தாலே எனக்குப் போதும், வேற எதுவும் வேணா" என்றாள் நேகா கெஞ்சலாக. துரு கோபமாகப் பக்கத்தில் இருந்த சேரை இழுத்து கீழே தள்ளினான். ஆண்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர், பெண்கள் பயத்துடன் பார்த்தனர்.நேகா கலங்கிய கண்களுடன் பார்த்தாள். துரு வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
"பேபி!! நீ வா முதல்ல, சாப்பிடு, துரு கொஞ்சம் நார்மல் ஆகட்டும் அப்புறம் பேசுவான்" என்றாள் அபி. நேகா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
"துரு!! என்ன டா?? திடீர்னு இப்படி எல்லாம் பண்ற? நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே!!" என்றான் சந்தோஷ் கவலையாக.
"என்னடா?? தங்கச்சிக்கு சப்போட்டா வரப் போறியா??" என்றான் நக்கலாக.
"என்ன டா? இப்படி பேசுற??" என்றான் வருத்தமாக.
"துரு!! நேகா மேல இருக்க கோபத்த எங்க மேல காட்டாத, அவ உன்ன லவ் பண்ணதுக்கு நீதான்டா காரணம், நீ குழந்தையா பாத்தா போதுமா? அவ எப்படி பாக்கனும்னு நீ எப்படி முடிவு பண்ணுவ?" என்றான் விரு கூர்மையான பார்வையுடன். துரு அமைதியாக நின்றான்.
"அவளும் பொண்ணு தான்டா! உன் கேரிங், உன் அன்பு, நீ அவளுக்கு சப்போர்ட் பண்றது, இதெல்லாம் பார்த்து அவளுக்கு உன் மேல லவ் வந்துச்சு, அதுக்கு அவ என்ன பண்ணுவா டா?" என்றான் ரிஷி கூர்மையான பார்வையுடன்.
"எனக்காக யாரும் தேவ் கிட்ட பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கல, எங்களுக்கு நடுவுல நீங்க யாரும் வராதீங்கன்னு ஏற்கனவே ஒரு தடவை சொல்லிட்டேன், இனி இப்படி யாராச்சும் பேசுறதக் கேட்டேன்! அதுக்கு அப்புறம் உங்க யார்கிட்டயும் பேச மாட்டேன்" என்றாள் நேகா கோபமாக.
"நேகி!! போதும்! நீ முதல்ல சாப்பிடு" என்றாள் ஆதி.
"இதப் பத்திப் பேச ஆரம்பிச்சா பேசிட்டே தான் இருக்கணும், நீ வா முதல்ல" என்று தியா டைனிங் டேபிளுக்கு இழுத்துச் சென்றாள். அபியும் ஆதியும் கூட சென்றனர். மற்றவர்கள் சலிப்புடன் அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்திருந்தனர். துரு எதையும் கண்டுகொள்ளாமல் போனை நோண்டிக் கொண்டே இருந்தான்.
"பேபி... நேகா!! சொல்றதக் கேளு" என்று டைனிங் ரூமிலிருந்து சத்தம் கேட்டது. அனைவரும் யோசனையுடன் உள்ளே சென்றனர்.
"இது காரக்குழம்பு, இத ஏன் ஊத்தி சாப்பிடுற??" என்றான் சந்தோஷ் பதறியபடி.
"அதைத்தான் நாங்களும் சொல்றோம், கேட்க மாட்டேங்குறா" என்றனர் மூவரும். நேகா எதையும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். துரு அமைதியாக அவளைப் பார்த்தபடி அவள் எதிரே உட்கார்ந்தான்.
"நேகா!! போதும்! இத சாப்பிடாத" என்றான் விரு கெஞ்சலாக.
"ஏய்! நேகா!! சொல்லுறோம்ல! ஏன் இப்படிப் பண்ற??" என்றான் ரிஷி கோபமாக.
"நீ ரொம்பப் பிடிவாதம் பிடிக்குற நேகி" என்றான் நந்து எரிச்சலுடன்.
நேகா கலங்கிய கண்களுடன், "தேவ்வ நா ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன், அதுக்கு நானே எனக்கு பனிஷ்மெண்ட் தந்துக்குறேன்" என்று சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றாள்.
துரு யோசனையுடன் அங்கே உட்கார்ந்திருந்தான். மற்றவர்கள் கலைந்து சென்றனர். சந்தோஷ், ரிஷி, விரு, நந்து நால்வரும் யோசனையுடன் துரு ரூமில் உட்கார்ந்து இருந்தனர். துரு கையில் பால் டம்ளருடன் உள்ளே வந்து, "சந்தோஷ்!! இத போய் உன் தங்கச்சி கிட்டக் கொடு" என்றான் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல்.
மற்றவர்கள் முகம் மலர்ந்தது, "இத நீயே கொடுத்தா அவ சந்தோஷப்படுவாள்ல" என்றான் சந்தோஷ் சிரிப்புடன்.
"நீ நினைக்கிற மாதிரி நா நினைச்சு இதக் கொண்டு வரல, இந்த இடத்துல யாரா இருந்தாலும் இதத் தான் பண்ணுவேன்" என்றான் அழுத்தமாக.
"துரு!! நீ நேகா மேல கோவமா இருக்க, புரியுது, நீ கொடுத்தன்னு சொல்லிக் கொடுத்தாலே அவ சந்தோஷப்படுவா" என்றான் விரு.
"நீ எனக்குத் தம்பியா இல்ல அவளுக்கா டா?? நீ அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல, அவ நானும் லவ் பண்ணுறேன் நினைச்சுக் கனவு காணுவா, அது எப்பவும் நடக்காது" என்றான் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல்.
"அவ குடிச்சா போதும் டா, இவன் தான் கொடுத்தான்னு சொல்லி அவள இன்னும் ஹர்ட் பண்ண வேணாம், துரு நாங்க என்னைக்குமே உன் தம்பி தான், நீ அவ கூட எப்படி பழகுனன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருடா, சந்தோஷ்!! நீ போய் அவ கிட்டக் கொடு" என்று ரிஷி சந்தோஷை அனுப்பினான். நாட்கள் அதன் போக்கில் வேகமாகச் சென்றது. எதிர்பார்த்தக் கல்யாண நாளும் வந்தது.
துரு மற்றும் ரவீன் மந்திரம் சொல்லிக்கொண்டே இருந்தனர். "பொண்ணஅழைச்சிண்டு வாங்கோ" என்றார் ஐயர். இருவரையும் அழைத்து வந்தனர். ரவின் அபியைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
"மாமா!! அக்கா உனக்குத் தான், அப்புறம் சைட்டடி, உன்னத்தான் எல்லாரும் பார்க்குறாங்க" என்றான் நந்து கிண்டலாக. ரவீன் சிரிப்புடன் தலையை ஆட்டி மந்திரம் சொல்ல ஆரம்பித்தான். இருவரையும் உட்காரவைத்தனர்.
துரு நேகாவைத் திரும்பிப் பார்க்காமல் மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தாள். ஐயர் தாலியைக் கொடுத்தார். ரவீன் சந்தோஷமாக அபியின் கழுத்தில் தாலியைக் கட்டினான். அபி சிரிப்பும் அழுகையுமாக அவனைப் பார்த்தாள்.
துரு தாலியைக் கட்டப் போகும்போது நேகாவின் கண்களை ஆழமாகப் பார்த்தான். அவனின் கூர்மையானப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் நேகா தலைகுனிந்தாள். துருவின் கண்கள் மின்னியது லேசானச் சிரிப்புடன் தாலியை கட்டினான். அனைவரின் முகமும் சந்தோஷத்தில் ஜொலித்தது. சடங்குகள் அனைத்தும் நல்லபடியாக முடிந்து வீட்டிற்கு வந்தனர்.
அபியை ரவீனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் இவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அபிக்கும் ரவீனுக்கும் அவர்கள் பரம்பரை மரக்கதவு அறையில் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அபி யோசனையுடன் ரூமிற்குள் வந்தாள்.
"என்ன ஹனி?? வெக்கப்பட்டுக்கிட்டு வருவேன்னு பார்த்தா யோசனையோட வர?" என்றான் கிண்டலாக.
"ரவி!! எனக்கு பேபிய நினைச்சா கவலையா இருக்கு, துரு மாறுவாரா இல்லையா?? ஒன்னுமே புரியல, அவரோட ஃபேஸ் பார்த்து எதுவுகம் கண்டுபிடிக்க முடியல" என்றாள் கவலையாகக் கையில் இருந்தப் பாலை டேபிள் மேல் வைத்தபடி.
"அத நேகா பாத்துக்குறேன்னு சொன்னா, அவ எல்லாத்துக்கும் ரெடியா இருக்கா, அவளப் பத்தி இந்த நேரத்துல பேசாம நம்ம லைஃப்ப பார்க்கச் சொன்னா" என்றான் வருத்தத்துடன்.
"என்கிட்டயும் அதத்தான் சொன்னா, அதும் அவளுக்கு இன்னும் பத்து மாசத்துல குழந்தை வேணுமாம், ஆர்டர் போடுறா, நா கேட்டத எனக்குக் கொடுன்னு சொல்றா" என்றாள் லேசான வெட்கத்துடன்.
"ஹனி!!" என்றான் மென்மையாக.
"இந்தா!" என்று பாலை எடுத்துக் கொடுத்தாள்.
"நீ தான் ஃபர்ஸ்ட்" என்று குடிக்க வைத்துத் தானும் குடித்து முடித்து, "லவ் யூ சோ மச் ஹனி!!" என அவள் இதழைச் சிறை செய்தான். அவர்கள் இல்வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பமானது.
துரு அவன் லேப்டாப்பில் வேலைப் பார்த்துக்கொண்டே இருந்தான். கதவு மூடும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். நேகா தயங்கியபடி உள்ளே வந்தாள். "நா உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நீ வேற வழியில்லாம என்னையக் கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு எனக்குத் தெரியும், இப்ப நா உன் ரூமுக்குள்ள வந்தது கூட உனக்குப் பிடிக்கலன்னு தெரியும், ஐ ஆம் சாரி" என்றாள் கலங்கிய குரலில்.
துரு அமைதியாக லேப்டாப்பை மூடி எடுத்து வைத்தான். "தேவ்!! நீ என்னைய திட்டு, அடி, இப்படிப் பேசாம அமைதியா இருக்காத, உன் அமைதி என்னையக் கொல்லாம கொல்லுது, ப்ளீஸ்!! ஏதாச்சும் பேசு" என்றாள் அழுகையுடன்.
"உன்கிட்டப் பால் கொடுத்து அனுப்பலயா??" என்றான் சாதாரணமாக.
"யூ மீன் மில்க்??" என்றாள் அதிர்ச்சியுடன்.
துருவின் மனம் மாறுமா?? அடுத்து என்ன நடக்கும்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.........
![Growing heart :heartpulse: 💗](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f497.png)
![Growing heart :heartpulse: 💗](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f497.png)
Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.