காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 7

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கால கடிகாரம் யாருக்கும் நிற்க்காமல் தங்கள் வேலையை செவ்வனே செய்ய நாட்கள் நிமிடங்காளாய் கரைந்தோடியது.... இதோ அதோவென ஜெய் ஊருக்கு புறப்படும் நாளும் நெருங்க கழுத்தை நெறிக்கும் கடைசி நிமிட வேலைகளை செய்து கொண்டிருந்தான் அவன்.

லேப்டாப்பில் தம்பிக்கு தெரியவேண்டிய
முக்கிய தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக பதிந்து வைத்தவன் அதை கடவுச்சொல் கொண்டு பத்திரபடுத்தியும் வைத்தான்.

இரவு பத்து மணியிருக்க அவன் அறைகதவு தட்டும் ஒலி கேட்க "யாரு" என்றவன் "கதவு திறந்துதான் இருக்கு உள்ள வாங்க" என்றுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

அவனின் அளவான உடலுக்குவாகிற்க்கு பொருத்தமான சிவப்புநிற ஸீலிவ்லெஸ் டீ ஷர்ட்டும் நீண்ட கால்களுக்கு ஷார்ட்சும் அணிந்து அறைகதவை திறந்து "நான்தான் ஜெய்"என்றபடி உள்ளே நுழைந்தான் கேஷவ்.

கேஷவின் குரலில் அவனை அறிந்து கொண்ட ஜெய் லேப்டாபில் இருந்து கண்களை அகற்றாமலேயே "என்னடா இந்நேரத்தில... நாளைக்கு போட்டோ ஷூட் இருக்குள்ள!!!! காலைல 4மணிக்கே கிளம்பனும் சொன்ன.... இன்னும் முழுச்சிட்டு இருக்க ஏதாவது முக்கியமான விஷயமா கேஷவ்" என்று ஜெய் கேட்க.

"ஆமாடா நாளைக்கு கிளம்பனும்". என்றவன் யோசனையாய் அண்ணனின் முகம் பார்த்தான்.

லேப்டாப்பில் இருந்து கண்களை பிரித்தவன் தம்பியின் முகம் பார்த்தான். அதிலிருந்து என்ன படித்தானோ மடிக்கணினியை ஷெட்டவுன் செய்து மூடி பக்கத்தில் வைத்தவன் "இப்போ சொல்லு கேஷவ் என்ன பேசனும் எதை பத்தி பேசனும்" என்று கேள்வி எழுப்பினான்.

"போட்டோ ஷூட் பத்திதான் ஜெய்
நாளைக்கு ஒரு நாள்ளையே இந்த ஷூட் முடிச்சிட்டேனா நல்லா இருக்கும்.,.. பட் எனக்கு மனசுக்கு திருப்தி வரலைனா அடுத்த நாளுக்கும் போக வேண்டி வரும் ஜெய்... அதான் நீ அரேஞ்ச் பண்ணியிருக்க ஸ்டாஃப் அன்ட் டீலர்ஸ் மீட்டிங் ல என்னால அட்டன் பண்ணமுடியாது" என்று ஜெய்யை தயக்கமாய் பார்த்தான் கேஷவ்.

"நாளை மறுநாள் முக்கியமானதொரு மீட்டிங்கை கேஷவிற்க்காக நடத்த திட்டமிட்டுள்ளான் ஜெய்... அவனுக்கும் இந்த நிறுவனத்தை தன் தம்பியுடன் ஏற்று நடந்த வேண்டும் என்று ஆசை அதன் முதல் படியாய் இந்த அறிமுக கூட்டத்தைக் கொண்டு அவனையும் இந்த கம்பெனியின் எம்.டி யாக அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளான். இதன் உள்நோக்கு அறியாத கேஷவ் அந்த கூட்டத்திற்க்கு கலந்துகொள்ளமல் போய்விடுவோமோ என்ற தவிப்பில் அண்ணனிடம் முதலிலேயே கூறிவிடுவது நல்லது என்று கூறிவிட்டுட்டான்.

"கேஷவ் be confident ... நீ எடுக்குற பிக் சரியில்லாம போகுமா!?!... இங்க பாரு கேஷவ் நாளைக்கே உன் வேலை முடியும் நான் நம்புறேன் டா... அப்படி முடியலனாலும் நீ வொரி பண்ணிக்காத என்கிட்ட இன்பார்ம் பண்ணிடு போதும்... நான் மீட்டீங்கை இன்னொரு நாள் போஸ்பாட்ன் பண்ணிடுறேன்..." ஓகே என்று தைரியம் கூறினான் ஒரு தமையனாய்.

"ரொம்ப தெங்க்ஸ் டா..... நீ என்ன சொல்லுவியோன்னு நினைச்சிட்டு இருந்தேன்... இப்போதான் கொஞ்சம் பிரியா பீல் பண்றேன்". என்றான் கேஷவ்.

பிறகு ஜெய் ஏதோ யோசனை வந்தவனாக "அப்புறம் கேஷவ் நாம எடுத்து இருக்கிற காண்ட்ராக்ஸ் அண்ட் டீலர்ஸ் டிட்டெல்ஸ் எல்லாம் இந்த இதுல சேவ் பண்ணி வைச்சிருக்கிறேன்... நான் ஊருக்கு போனதும் இந்த லேப்டாப்ப யூஸ் பண்ணிக்க யாரையும் ரொம்ப நம்பாத எல்லாம் உன்னோட கட்டுபாட்டுல வைச்சிக்கோ... ஏதாவது ரொம்ப முக்கியமான முடிவுகளை எடுக்கனுமுன்னா என்னையோ இல்ல அப்பாவையோ கலந்துக்கோ..."என்று பொறுப்பாய் பேசி தம்பிக்கு சில அறிவுறைகளையும் கூற மறக்கவில்லை.

"பயப்படத ஜெய் பாத்துக்குறேன்" என்று நம்பிக்கையுடன் கூற ஜெய்யின் மனதிற்க்கு முழு திருப்தியாய் இருந்தது.
அன்று இரவு வெகுநேரம் பல கதைகளை பேசியபடி இருந்தவன் இரவு தாமதமாகவே தன் அறைக்கு திரும்பினான் கேஷவ்.

அதிகாலை சில்லென்று காற்று, மெல்லிய கீற்றாய் கீழ்வானில் வெளிச்சம், பொழுது புலராத காலை வேலை பூவின் இதழ்களிலும் புற்களின் நுனியிலும் பனிதுளிகள் தன் முத்தத்தின் தடத்தை பதித்திருக்க கேஷவ் தன் அறையில் கிளம்பிக்கொண்டு இருந்தான். சாதரண கருப்பு நிற சட்டையும் அதற்க்கு பொருந்துவது போல் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்தவன் தனது சிகையை அழகாய் விரல்களைக் கொண்டு சரிசெய்து சட்டையின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டு தனக்கு தேவையான கேமீரா சகிதம் எடுத்து வைத்தவன், ஷோல்டர்பேகை எடுத்துக்கொண்டு கிழே இறங்கி வரவேற்பறையில் அவன் தயாராய் வைத்திருந்த ஷூவை அணிந்து கொண்டிருந்தான். அந்த அறையின் குளுமை அவனுக்கு சிலிர்ப்பை வழங்க 'இந்த டைம்ல சூடா காபி குடிச்ச நல்லா இருக்கும்' என்று தோன்றிய வண்ணம் அடுத்த காலணியை கால்களுக்குள் நுழைத்தவன் அதற்க்கு கயிறுக் கட்டி கொண்டிருக்க அடுக்கலையில் மின்விளக்கின் ஒளி தெரிந்து பார்வையை அங்கே பதியவிட்டவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது. அடுக்கலைக்குள் நுழைந்த நாராயணி அடுப்பில் பாலை ஏற்றியவர் டிக்காஷனை பில்டரில் வடிகட்டி அதை மிதமான ஸ்ட்ராங்கில் கலந்து குடிக்கும் பதத்தில் மகனிடம் கொண்டு வந்து நீட்டினார்.

தாயினிடம் புன்னகை முகமாக ஆவளுடன் காபியை கையில் வாங்கியவன் "இந்த குளிருக்கு கொஞ்சம் காபி குடிச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன் கொண்டு வந்துட்டிங்க தெங்க்ஸ் மா...." என்றான் காபியை ஒரு மிடறு விழுங்கியபடி "அம்மான்னா அம்மாதான்" என்று தாயின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்தான் கேஷவ்.

சின்ன சிரிப்பை உதிர்த்த நாராயணி "நீ காலைல புறப்படனுமுன்னு சொன்னது நியாபகம் வந்துச்சி புள்ளை வெறும் வயித்தோட போனா எந்த தாயிக்கும் மனசு தாங்குமா அதுலயும் உங்களயெல்லாம் கவனிக்கரதுல தான் என் சந்தோஷமே இருக்கு இதுக்கு போய் தேங்க்ஸா " என்றார் ஆத்மார்த்தமாக.

காபி கப்பை அன்னையின் கைகளில் திணித்தவன் அவர் கால்களில் விழுந்து "இன்னைக்கு உங்க மகன் நினைச்சது நடக்கனுமுன்னு பிளஸ் பண்ணுங்கமா" என்றான் கேஷவ் அவன் கால்களில் விழுவதை எதிர்பார்க்கதவர் "என்ன கேஷவ் இது எந்திரி கண்ணா" என்று அவனை எழுப்ப முயன்றவரை தடுத்தவன் "பிளஸ் பண்ணுங்கமா" என்றான் மறுபடியும்

அவன் தலையில் ஆதுரமாய் கை வைத்தவர் மனநிறைவுடன் "நீ நினைச்சது நடக்கும் கேஷவ் நல்லபடியா போய்டு வா ராஜா" என்று கூறி வாசல்வரை வந்தார். குளிருக்கு இதமான கருப்பு ஜெர்கினை அணிந்தவன் பைக் சாவியுடன் தனது அதி நவின புதிய மாடல்களின் வரிசையில் இருந்த பைக்கில் அமர்ந்து அதன் தலை பகுதியில் இருந்த வாயில் சாவியை சொறுகி உயிருட்டினான் தாயிடம் விடைபெற்று கேஷவ் அந்த தார் சாலையில் மின்னெலென சீறிபாய்ந்தது கம்பீரமாய் தெரிந்தவனின் உருவம் ஒரு புள்ளியின் அளவாய் தெரிந்தது அது மறைந்தே போனது.

________________________________________

மாலை வேலையில் வானிலையில் சிறு மாற்றம் தெரிய மழையின் தாக்கம் ஏற்பட உள்ளது என்பதற்க்கு அறிகுறியாய் கருத்த மேகங்கள் சூரியனை மறைத்துக்கொள்ள குளிமையான ஈரக்காற்று வீசியது.

இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ரைட்டு

என்று இசையமைப்பாளர் விஜய்ஆண்டனியின் இசையில் டிவியில் பாடல் ஒளித்துக்கொண்டிருக்க

அடுக்கலையில் கை வேலையாக இருந்த மஞ்சுளாவின் காதுகளில் விழுந்தது. "அது என்னது இச்சு கொடு வெச்சு கொடுன்னு .... பாட்டா போடுறாங்க சே..... "என்று சலித்துக்கொள்ள

அதுவரை பாடலை பார்த்துக்கொண்டு இருந்தா கவியும் தியாவுமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர். இதில் கவி ஒரு படி மேலே போய் அன்னையின் அருகில் நின்றவள் "இச்சு கொடுன்னா இப்படிம்மா" என்று அவரை அணைத்து கன்னத்தில் இச் கொடுக்க கவியை முறைத்தவர் "இதுக்கு விளக்கம் வேறய முதல்ல சேனல மாத்துங்க கருமாம் கருமாம் பாட்டா ஒடுது" என்று தலையில் அடித்துக்கொண்டார்.

"அய்யோ இது தாம்மா டிரெண்டு" என்று கூறிவிட்டு மறுபடி சோபாவில் வந்து அமர வெளியில் காற்று பலம் கொண்டு அடித்தது... " கவி மேலே காயப்போட்டு இருக்க துணியெல்லாம் எடுத்துட்டு வா" என்று கவியிடம் கூறினார் மஞ்சுளா.

முகத்தை அஷ்ட்டகோணலாக்கிய கவி "எனக்கு புடிச்ச பாட்டு வரும்போதுதான் வேலை சொல்லுவிங்க..... இதோ இவ உட்காந்து இருக்காலே இவளுக்கு சொல்ல வேண்டியதுதானே"...என்று தனக்கு விருப்பப்பட்ட பாடல் போய்விடுமோ என்று சண்டை போட

"உன்னை போக சொன்னா நீ போகவேண்டியது தானே!! என்னையேன் சொல்ற??" என்று தியாவும் கலத்தில் குதிக்க

"ஏன் நீ போனா கொடியில இருக்க துணி கைக்கு வராதோ!!" என்றாள் கவி

"ஏன் அதை உன்னால எடுக்க முடியாதோ!!!?" என்று இவளும் ஆரம்பிக்க அங்கு ஒரு குருஷேத்திர போர் மூல தயாராகிக்கொண்டு இருந்தது.

அதில் எரிச்சலுற்ற மஞ்சுளா" இப்போ ரெண்டுபேரும் வாய மூடல அவ்வளவுதான் சொல்லிட்டேன்". என்று அரட்டியவர். "ஏய் தியா இங்க வா இந்த இதை நறுக்கிக்கொடு" என்றவர் பெரியவளை பார்த்து "இதை செய்றியா?? இல்லை துணி எடுத்துட்டு வரியா???" என்றார் மிரட்டல் தோணியில்

மெல்ல அசடு வழிந்தவள் நான் "துணியே எடுத்துட்டு வறேன் மா" என்று மாடி ஏறிச்சென்றாள் கவி

"பெத்து வைச்சிருக்கரது ரெண்டே ரெண்டு.... ஆனா ஒரு ஊருக்கு சமம்.. அதுவும் ஒன்னுத்துக்கு ஒன்னு நல்லா வாயடிச்சி சண்டை போடுதுங்க.... அய்யோ கடவுளே இப்படி என்னை சோதிக்கிறியே இதுங்கள அடக்குறவன் தான் இதுங்களுக்கு புருஷனா வரனும்". என்று வாய் விட்டு புலம்பியபடி மஞ்சுளா மாலை வேலை பலகாரத்தை செய்ய

அன்னை கொடுத்ததை நறுக்கியபடியே அன்னையை முறைத்த தியா "ஹீ ஹீ அப்படி எங்கள.அடக்குறவன் வருவானா!?!... இல்ல அடங்குறவன் வருவான்னன்னு!?!.. பார்க்கலாம்". என்று இளித்தபடி சிறிய குரலில் சொல்ல அது மஞ்சுளாவின் காதில் சரியாக விழாமல் போனது

'என்ன என்னடி கேட்ட??" என்று தியாவிடம் கேட்க "அது ஒன்னும் இல்லமா இது போதுமா இல்ல வேற ஏதாச்சும் நறுக்கட்டும்மான்னு கேட்டேன்" என்றபடி பல் இளித்து வைத்தாள்.

"மொதல்ல அதை நறுக்கு போதும் " என்று கூறி தன் வேலையை தொடர்ந்தார் மஞ்சுளா.

"இந்த மண்டுக்கு நான் நினைக்கரது புரியலைய இல்ல அந்த மரமண்டைக்கு புரிஞ்சும் புரியாதமாதிரி இருக்கானா??" என்று யோசனையுடன் சித்துவின் நினைவில் இருக்க அவளுடைய நிலையினையே பாடல் வரிகளா உறுப்பெற்றது போல் தொலைகாட்சியிலும் பாடல் வரிகள் வர அதையே இமைக்காமல் பார்த்திருந்தாள் தியா

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..

வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..

அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!
........................................................................

அன்னை மேலே அனுப்பியது நல்ல சந்தர்ப்பமாய் அமைந்தது போல் இருக்க ஷீலாவிடம் தனிமையில் பேச நினைத்திருந்தவள் அன்று விடுமுறை என்பதால் வெளியில் சென்று பேசமுடியாமல் தவித்தவள் துணி எடுத்துவர மாடிக்கு சென்ற சாக்கை வைத்து அலைபேசியுடன் மாடிக்கு சென்று துணிகளை எடுத்து வைத்தவள் அங்கே போடப்பட்ட கருங்கல் ஸ்லப்பில் அமர்ந்துக்கொண்டு சில்லென்ற காற்றை அனுபவித்தபடி தோழிக்கு கால் செய்ய நினைத்து அவளிடம் அலைபேசி இல்லததை நினைவுபடுத்தியவள் ராஜூவிற்க்கு போன் செய்து காத்திருந்தாள்.

அவளின் காத்திருப்பிற்க்கு பயனாய் இரண்டே ரிங்கில் எடுத்து பேசனான் ராஜூ.

"ஹலோ ராஜூ எப்படி இருக்கிங்க ஷீலா எப்படி இருக்க?? ஒன்னும் பிரச்சனை இல்லையே??". என்று அவள் பாட்டிற்க்கு சலசலவென அருவியாய் பேச அந்த பக்கத்தில் இருக்கும் நபருக்குதான் வாயில் சொற்க்கள் வர மறுத்ததோ என்னவோ

"ஹலோ கவி நாங்க நல்லாதான் இருக்கோம்.. நீ எப்படி இருக்க?°" என்று லயிப்பே இல்லாமல் ராஜூவின் குரல் குலித்தது.

"என்ன ராஜூ ??குரல் ஏதோ போல ஒரு இருக்கு??" என்று சந்தேகமாய் கேட்க அதறக்கும் மவுனமாய் நின்றவன் "ஹாலோ... ஹலோ ராஜூ ஷீலா இருக்கால அவ கிட்ட கொஞ்சம் போனை கொடுக்குறிங்களா?".என்று கவி கேட்டாள்.

"இதோ இங்க தான் இருக்கா... ஒன் மினிட் ..." என்றவன் 'இந்த ஷீலு கவி" என்று அவளிடம் அலைபேசியை நீட்டினான். ராஜூ.

அதை வாங்கிய ஷீலா "சொல்லு கவி எப்படி இருக்க?". என்க

"நல்ல இருக்கேன் ஷீலா... ஏன் ராஜூ ஒரு மாதிரியா.இருக்கார்?? ஏன் ராஜூவோட குரல் வித்தியாசமா இருக்கு?" என்று கூறியவள் என்ன "ஷீலா ஏதாவது பிரச்சனையா?". என்றாள் கவி.

சிறிது நேர அமைதிக்கு பின் சிறு விசும்பலுடன் ஆரம்பித்தாள் ஷீலா "கல்யாணம் முடியுறதுலதான் பிரச்சனைன்னு பார்த்த... இப்போ அது விஸ்வரூபம் எடுத்து இருக்கு" என்றாள் மூக்கை உருஞ்சியபடி

"அழதா ஷீலா" என்றவள் அவள் அழுகை நிற்காததை கண்டு "இப்போ நீ அழுதா பிரச்சனை முடிஞ்சிடும்ன்னு சொல்லு உனக்கு ஹெல்ப்பா நானும் கொஞ்சம் அழறேன்". என்று கோபமாய் பேசி அவளை சமாதபடுத்தியவள் "அழறதா நிறுத்திட்டு சொல்லு ஷீலா" என்றாள் கவி

"ரொம்ப பெரிய பிரச்சனை ஆகிடுச்சி கவி எங்க வீட்டுல.. அதை நாங்க எதிர்பார்த்ததுதான். ஆனா ராஜூ வீட்லயும் இந்த பிரப்பளம் வரும்ன்னு நான் எதிர்பாக்கல!!". என்றாள் ஷீலா

"பெரியவங்கள கலந்துக்காம நீங்களே செய்துகிட்ட கல்யாணத்துல ரெண்டு சைடும் பிரச்சனை வரும்ன்னு உனக்கு தெரியாத ஷீலா?? அவங்களுக்கும் புள்ள மேல எவ்வளவு கனவு இருந்திருக்கும்..." என்று பெரிய மனுஷியாய் கூறியவள் "முதல்ல உன் வீட்டுக்கு போனியே என்ன சொன்னாங்க சொல்லு" என்றாள்.

"செமா டோஸ் எங்களுக்கு... அப்பவோட அண்ணன், தம்பி, மாமன், மாச்சான் எல்லாம் அடிக்க வந்துட்டாங்க.... என்னை என் அப்பா திட்டி அடிக்கவும் ராஜூதான் எனக்காக பேசினார்... அதுகுள்ள உங்க அப்பாவும் வந்துட்டார்." என்றாள் ஷீலா

"என்னது எங்க அப்பாவா!!!!?!" என்று அதிர்ந்துவிட்டாள் கவி

"ம்... ஆமா அங்கிள் தான் பட் அவருக்கு என்னை தெரியல!! நாங்க உன் பிரெண்ட்ஸ்ன்னும் தெரியல!". என்று கூறியதும் இப்போதுதான் சற்று ஆசுவாசமாய் மூச்சிவிட்டாள் கவி

"அப்பா என்ன சொன்னார் ஷீலா"

"இவங்கள பிரிச்சிவிடலாம்ன்னு எல்லோரும் சொல்லும்போது அவர்தான் என் கிட்ட கேட்டார் ரிஜிஸ்டர் மேரேஜ் ?" பண்ணிட்டிங்களான்னு

" மேரேஜ் ரிஜிஸ்ட்டர் பண்ணிட்டு நேரா இங்கதான் வறோம் சார் நாங்க.... நான் செத்தாலும் ராஜூ வோட பொண்டாட்டியாதான் சாவேன்னு சொன்னாதும்.. அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசி இவங்கள பிரச்சாலும் ஒன்னும் பண்ணமுடியாது டேவிட். அப்படின்னு சொல்ல என் அண்ணன் முறைல இருக்கவன் எங்கள கத்தியால குத்த வந்தான். அவனை தடுத்து உங்க அப்பா தான் எங்கள காப்பத்தி அவங்கள நீங்க பிரிக்க முடியாது... என்ன மடத்தனமான காரியம் பண்றிங்க?? இதுக்கு தண்டனை என்னன்னு தெரியுமா?? இவங்க ரெண்டுபேரும் மேஜர் இவங்க கல்யாணம் கோர்ட் வரையும் பேசும் சொல்றத புரிஞ்சி கொஞ்சம் பொறுமையா யோசிங்க.. சொல்லி எங்க வீட்டு ஆளுங்கள சமதானப்படுத்தி எங்கள ராஜூ வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டார் கவி".

"ஹே..... நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன்... எங்க அப்பா உன்னை மாமியார் வீட்டுக்கே அனுப்பி வைச்சிட்டார்... பாத்திய நான் தெரிஞ்சி பண்ணேன்... எங்க அப்பா தெரியாம பண்ணி இருக்கார்..". என்றாள் கவி.

"ம்.. ஆமா கவி" என்றாள் ஷீலா

"சரி ராஜூ வீட்டுல என்ன சொன்னாங்க?".

"ராஜூவோட அம்மாவுக்கு என் மேலேயுன் ராஜூ மேலேயும் ரொம்ப கோவமா இருக்காங்க... வந்ததுல இருந்து இது வரையும் ஒரு வார்த்தை கூட பேசல கவி.... அதுதான் அவனுக்கு ரொம்ப வருத்தம். அவங்களுக்கு நாங்க இப்படி செஞ்சதுதான் கோபம்னு ராஜூவோட தம்பி சொன்னான்.. அவன் தான் எங்ககிட்ட போசுவான்"

"எனக்கு வீட்டுல இருங்கரது ரொம்ப கஷ்டமா இருக்கு கவி..அதான் மண்டேல இருந்து காலேஜ் வரலாம்ன்னு இருக்கோம்.. அதான் பிரின்சிபில் சாரை பார்க்க நாளை காலேஜ் போறான் ராஜூ". என்று கூறினாள் ஷீலா.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவி " ஷீலா அவங்க கோவத்துலயும் நியாயம் இருக்குள்ள... நீ அதுக்குன்னு பேசாமலேயே இருக்காத நீயா போய் பேசு உன் பக்க நியாயத்தை எடுத்து சொல்லு உன்னை புரியவைக்க முயற்சி பண்ணு.. தேடி எடுத்தாலும் உன்னை போல மருமகள அவங்களாள கண்டுபிடிச்சிருக்க முடியாதுன்னு அவங்களே சொல்ற அவளவுக்கு அவங்கிட்ட நீ நடந்துக்க புரியுதா??" என்றவள் "சரி சரி அழுமூஞ்சி மாதிரி இருக்காத நீயூலி மேரிட் கபூல் சோ சிரிச்ச முகமா இரு.. எல்லாம் சரி ஆகிடும் ராஜூவுக்கும் புரியவை சரியா?? நீயூம் பீல் பண்ணாத!! ஆண்டிய சமாதனம் பண்ற வழிய பாருங்க.. பெரியவங்க அப்படித்தான் இருப்பாங்க... நீதான் பார்த்துக்கனும் புரியாதா?!?". என்றாள் கவி

"சரிடி பாட்டியம்மா நானே போய் பேசுறேன்.. ஆண்டிய பாத்துக்குறேன்" என்று கூறி புன்னைகைக்க

"தட்ஸ் மை கேர்ள்".என்றவள் "மன்டே காலேஜ்ல மீட் பண்ணலாம்..ஆண்டிய சமாதனப்படுத்த நிறைய ஐடியா தறேன். ஒகே பை" என்று போனை அணைத்தாள் கவி.

_______
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN