உன்னாலே உனதானேன் 14

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலை ஆறுமணிக்கு கண்விழித்த ரேஷ்மி அவளை அணைத்திருந்த வினயின் கையினை மெதுவாக விலக்கியவள் அவனது உறக்கம் கலையாதவாறு எழ முயன்றவளை ஏதோ தடுத்தது... என்னவென்று பார்க்க அவளது நைட்டியின் ஒரு முனை வினயின் கையில் அணிந்திருந்த மோதிரத்தில் சிக்கியிருந்தது...

அதை விடுக்க முயன்று கீழே குனிந்தவள் மெதுவாக அவனது மோதிரத்தில் சிக்கியிருந்த அந்த முனையை எடுக்க முயன்று கொண்டிருக்கும் போதுதான் கவனித்தாள் அவன் அணிந்திருந்த மோதிரத்தில் கே என்ற எழுத்தினுள் ஆர் என்ற எழுத்து பின்னிப்பிணைந்து எழுதப்பட்டிருந்தது... அதை பார்த்தவளுக்கு அதில் முத்தமிட தோன்றிட மெதுவாக அவன் கையை எடுத்து அந்த மோதிரத்திற்கு இதழ்களின் ஈரம்படாதவாறு ஒரு முத்தத்தை பதித்துவிட்டு எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்... குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றிவிட்டு இறைவன் முன்னிலையில் தன் வாழ்வு வினயுடம் இனிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்..
காலை உணவை தயாரித்து முடித்தவள் காபி கலந்துகொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்..

வினயை எழுப்ப சென்றவள் ஒரு நிமிடம் தயங்கி யோசிக்கத்தொடங்கினாள்..

“இப்போ இவரை எழுப்பலாமா வேணாமா?? அவருக்கு நம்ம மேல உள்ள கோபம் இன்னும் குறையலைனு அவர் கீழ படுக்கை விரிச்சி படுத்திருக்கதிலேயே புரியிது... இப்போ நாம எழுப்பி காபி குடுத்தா வாங்கிப்பாரா இல்லை நீயும் வேணாம் உன் காபியும் வேணாம்னு போயிருவாரா?? சீ சீ.. நம்ம ஆளு அவ்வளவு டெரர் எல்லாம் இல்லை... என்ன லேசுல கோபம் வராது... வந்த என்ன பண்ணுவாருனு சரியாக யூகிக்க முடியாது... நம்ம கையால காபி வாங்கி குடிக்க வைக்கனும்.... ஆனா டென்சன் படுத்தக்கூடாது.... அப்படி ஒரு பிளானை யோசிக்கனும்...இப்போ என்ன பண்ணலாம்???” என்று யோசித்தவளுக்கு வினயின் கைபேசி கண்ணில் பட்டது...
அதை பார்த்ததும் சட்டென்று ஒரு யோசனை தோன்றிட மொபைலை எடுத்தவள் அதில் ஏதோ செய்துவிட்டு பழையபடி வினயின் அருகில் வைத்தவள் அறை வாசலுக்கு சென்று நின்றுகொண்டு நடப்பதை கவனிக்க தொடங்கினாள்..

அவள் அங்கிருந்து நகர்ந்த அடுத்த நொடி அவனது மொபைல் அலறத்தொடங்கியது..

அது அலறியதாவது

“டேய் புருஷா... குட்மார்னிங்... லவ்யூடா....எந்திரி நேரமாச்சு..” என்று ரேஷ்மியின் குரலில் ஒலித்தது.
முதல் முறை அலறிய போது வினய் எழுந்துவிட்டானா என்று எட்டி பார்த்தாள் ரேஷ்மி.. ஆனால் வினயோ இன்னும் உறங்கிக்கொண்டிருந்தான்.

இரண்டாவது முறை அலறியபோதும் இதே தொடர்ந்தது... மூன்றாவது முறை அலறிய போது வினயிடம் சிறு அசைவு தெரிந்தது...
அவனிடம் அசைவு தெரிந்ததும் நடப்பதை கவனிக்க தொடங்கினாள் ரேஷ்மி..

வினயோ

“இவ எதுக்கு இன்னைக்கு நம்மை கனவுல இப்படி டார்ச்சர் பண்ணுறா??? லவ்யூ லா சொல்றா....” அரை தூக்கத்தில் உளறிபடி மறுபடியும் தூங்க முயல அதை பார்த்த ரேஷ்மிக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

மீண்டும் மீண்டும் ரேஷ்மியின் குரல் ஒலிக்க வினயின் தூக்கம் முழுவதுமாக கலைந்தது... கண்விழித்தவன் சுற்றும் முற்றும் ரேஷ்மியை தேட அவள் அங்கு இல்லை...

“என்னடா இது?? அப்போ இவ்வளவு நேரம் நாம கேட்ட குரல் கனவுலயா கேட்டுச்சு?? அப்படினாலும் அது எதுக்கு தேய்ந்த டேப் ரெக்கார்டர் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்கு???? ஒரு வேளை லவ் முத்திப்போய் இந்த த்ரீ பட தனுஷ் மாதிரி நமக்கு ஏதும் மண்டையில் ஓடுற வயர் ஏதும் லூசாகிருச்சா??” என்று தனக்குள் வினவியபடி எழுந்து அமர்ந்தவனை மீண்டும் கலைத்தது ரேஷ்மியின் அந்த குரல்..
வினயோ சுற்றும் முற்றும் தேட கண்ணில் ஏதும் தென்படவில்லை...

“ஐயோ ஷிமி வாய்ஸ் கேக்குது.. ஆனா ஷிமி இல்லையே.. நமக்கு கண்ணுல ஏதும் கோளாறோ??? இந்த மாலைக்கண் மாதிரி காலைக்கண்ணுன்னு ஏதாவது டிசாடரா???” என்றவன் மீண்டும் சுற்றும் முற்றும் தேடி இறுதியில் அவனது மொபைலில் இருந்து தான் ரேஷ்மியின் குரல் வருவதை கண்டு கொண்டான்...

மொபைலை எடுத்தவன் அதை பார்க்க அதில் அலாரம் என்று தோன்ற அதை நிறுத்தியவன் தன் மொபைலை நோட்டமிட்டவாறு தலையை நிமிர்த்த அப்போது தான் உள்ளே வருவது போல் வினய் முன்னே காபி தட்டுடன் வந்தாள் ரேஷ்மி...

படுக்கையில் இருந்து எழுந்தவன் படுக்கையை மடித்து வைத்துவிட்டு ரேஷ்மி கொண்டு வந்த காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.
காபி குடிப்பதாய் சொல்லிக்கொண்டு ஓரக்கண்ணால் தன்னவளை சைட் அடித்துக்கொண்டிருந்தான் வினய்.. அவள் காபி எடுத்து வரும் போதே அவளது அலங்காரம் கண்ணில் பட அதை அவள் அறியாது ரசித்துக்கொண்டிருந்தான் வினய்.

மென்பச்சையும் வெள்ளையும் கலந்த காட்டன் சாரியில் அழகுப்பதுமையாய் இருந்தாள் ரேஷ்மி. குளித்ததற்கு சான்றாய் தலை முடியை துவாயினால் முடிந்திருந்தாள். அதிலிருந்து ஆங்காங்கே சில கூந்தல் வெளி வந்திருந்திருந்தது... நெற்றியை வட்டமாய் சிறிய சிவப்பு நிற பொட்டொன்று ஆக்கிரமித்திருக்க வகிடானது இரத்த சிவப்பு நிற குங்குமத்தால் நிறந்தீட்டப்பட்டிருந்தது.. கண்ணிற்கு கீழே கறுப்பு நிற மை ஆழமாய் பதிந்திருக்க அதனுடன் கம்பெனி கொடுத்திருந்து அந்த வெள்ளைக்கல் பதித்த மூக்குத்தி.....அந்த ஒப்பனை போதாதென்று அந்த ஸ்ரோபரி வண்ண இதழ்களும் லிப் பாம் இனால் பாலிஷ் செய்யப்பட்டு அதன் கட்டமைப்பை செழிப்பாய் காட்டியது.. இந்த செயற்கை ஒப்பனையை தோற்றகடித்தது அந்த கன்னத்தில் விழுந்த சிறு குழி...

ஐந்து நிமிடத்தில் குடித்து முடிக்க வேண்டிய காபியை பதினைந்து நிமிடங்கள் கடந்த பின்பும் குடித்து முடிக்கவில்லை.
ரேஷ்மியோ வினய் எதற்காக இப்படி நேரம் தாழ்த்துகிறான் என்று புரியாமல் அவனை ஆராய்ச்சியோடு பார்க்க அப்போது தான் தெரிந்தது அவன் இல்லாத காபியை சுவைத்து கொண்டிருப்பது..அதை பார்த்தவள் வினயிடம் இருந்த கப்பை பிடுங்கி எடுத்தவள்

“கப்பில் இருந்த காபி தீர்ந்து ரொம்ப நேரமாச்சு... நீங்க போய் குளிச்சிட்டு வாங்க...” என்றுவிட்டு ரேஷ்மி அறையிலிருந்து செல்ல வினயோ

“இவளுக்கு திடீர்னு என்னாச்சு?? செம்மையா ரெடியாகி அட்டன்டன்ஸ் குடுக்குறா..போனில் அவ வாய்சையே அலாரமாக வைத்து நம்மளை எழுப்புற?? சம்திங் ராங்...அது மட்டும் புரியிது.. இவ எப்போ எப்படி நடந்துப்பான்னு புரிஞ்சிக்கவே முடியலையே.. ஆனா ஒன்னு இன்னைக்கு என் பொண்டாட்டி செம்மையா இருக்கா... காபி குடிக்கும் போது செய்த வேலையை சாப்பிடும் போதும் கண்டினியூ பண்ணிற வேண்டியது தான்... ஆனா நாம தான் அவ மேல கோவமா இருக்கோமே..எப்படி சைட் அடிக்கிறது???” என்று யோசித்தவாறு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் வினய்.....

ஆபிஸிற்கு தயாராகி வெளியே வந்த வினய் சாப்பிடுவதற்காக வந்தமர்ந்தான். அவன் வந்தமர்ந்ததும் ஹாலில் அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டிருந்த வீரலட்சுமி ரேஷ்மியை அழைத்தார்.கையில் லன்ச் பேக்குடன் வந்தவள் அதனை மேசையின் மீது வைத்துவிட்டு வினயிற்கு உணவு பரிமாற தொடங்கினாள்.

அன்று வினயிற்கென்று அவன் விரும்பி உண்ணும் மரக்கறி மற்றும் உளுந்து சேர்க்கப்பட்ட செய்த உப்புமாவும் தொட்டுக்கொள்ள முருங்கைக்காய் குழம்பும் செய்திருந்தாள்.
திருமணத்திற்கு முன்பு வரை உப்புமாவை வெறுப்பவன் ரேஷ்மியின் வித்தியாசமான உப்புமா தயாரிப்பில் அதன் அடிமையாகிப்போனான்.
உணவை கண்டதும் அதில் பால் அவன் மனம் சென்றுவிட ரேஷ்மியை திரும்பிபார்க்க மறந்துவிட்டான்.
அவன் விரும்பி உண்பதை பார்த்தவளுக்கு திருப்தியாய் இருந்தது...
உண்டு முடித்ததும் தான் ஐயோ என்றானது வினயிற்கு..

“இப்படி சாப்பாட்டை கண்டதும் சைட் அடிக்கிற வேலையை மறந்துட்டோமே?? இவ வேற இன்னைக்கு இவ்வளவு அழகா இருக்காளே??? இப்போ எப்படி இவளை இவளுக்கு தெரியாமல் சைட் அடிக்கிறது??” என்று டைனிங் டேபிளில் அமர்ந்தவாறு யோசித்திருந்தவனை அழைத்தாள் ரேஷ்மி.

“என்ன வினய்?? இன்னும் கொஞ்சம் உப்புமா வைக்கவா???” என்று கேட்க வேண்டாம் என்று தடுத்தவன் கைகழுவச்சென்றான். கைகழுவி வந்தவன் தங்கள் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

அறைக்குள் சென்றவன் தனது ஆபிஸ் பையிலிருந்த ஒரு பைலை வெளியே எடுத்து அதை கட்டிலிற்கும் சுவற்றுக்கும் இடையில் இருந்த சந்தில் போட்டுவிட்டு அறை வாசலை பார்த்தபடி இருந்தான்.

வினய் கைகழுவ சென்றதும் மேசையில் இருந்த உணவு பாத்திரங்களை ஒழுங்கு படுத்தியவள் தங்கள் அறைக்குள் சென்றாள்.
அவள் வருவது தெரிந்ததும் ஏதோ தேடுவதை போல் பாசாங்கு செய்யத்தொடங்கினான் வினய்.
அவன் எதையோ சீரியஸாக தேடுவதை கண்ட ரேஷ்மி

“என்ன வினய் தேடுறீங்க??” என்று கேட்க பதிலேதும் சொல்லாமல் தன் தேடுதலை தொடர்ந்தான் வினய்.

“வினய் உங்களை தான் கேட்கிறேன்... என்ன தேடுறீங்க?? சொன்னால் நானும் தேடுவேன்ல??” என்று கேட்க அப்போதும் பதில் இல்லை.
அவன் பதிலளிக்காமல் இருக்க கடுப்பானவள்

“டேய் இப்ப சொல்ல போறியா இல்லயா??” என்று கேட்க இதற்கு மேல் பேசாமல் இருந்தால் அவள்புறம் இருந்து தரமான கவனிப்பு கிடைக்கும் என்று உணர்ந்தவன்

“என்னோட ப்லூ கலர் பைலை காணலை.. அத தான் தேடிட்டு இருக்கேன்..” என்று கூற

“அது உங்க ஆபிஸ் பேக்கில் தானே இருந்துச்சு??? இன்னைக்கு காலையில கூட பார்த்தேனே??” என்று கேட்க வினயோ மைண்ட் வாயிசில்

“ஐயய்யோ இப்படி மாட்டிக்கிட்டேனே.... இப்போ இவ குறுக்கு விசாரணை பண்ண ஆரம்பிச்சிருவாளே??? இப்ப என்ன பண்ணுறது??? ஏதாவது சொல்லி சமாளிப்போம்” என்று முடிவெடுத்தவன்

“நான் பார்த்தப்போ இல்லை....என்னை என்ன பண்ண சொல்ற.....இப்படி கேள்வி கேட்டு என் டைமை வேஸ்ட் பண்ணாத.. முடிந்தால் தேடித்கொடு இல்லைனா உன் வேலையை பார்த்துட்டு கிளம்பு..” என்று கூறிவிட்டு தன் நடிப்பை தொடர்ந்தான்.
அதை உண்மையென நம்பிய ரேஷ்மி அவனுக்கு உதவுவதாக எண்ணி தேடத்தொடங்கினாள்.
வினயோ அவளை சைட் அடிப்பதற்கு வசதியாக வாட்ரோப்பினை திறந்து அதன் கதவின் பின் நின்றுகொண்டு தன் மனையாளை சைட் அடிக்கத்தொடங்கினான்...
மற்றைய இடங்களில் தேடிவிட்டு கடைசியாக கட்டிலிற்கு அடியில் பார்ப்பதற்காக ரேஷ்மி குனிய அதற்கு அவளது முந்தானை இடைஞ்சலாய் இருந்தது... அதை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டு கீழே குனிந்து தேடியவள் கட்டிலின் பின்புறம் பைல் இருப்பதை பார்த்ததும் எழுந்து வினயிடம்

“வினய் பைல் அங்கதான்...” என்று தொடங்கியவள் வினயின் வெறித்த பார்வையின் அர்த்தம் புரியாதவாறு அவன் பார்வை சென்ற இடத்தை நோக்க அது அவளது இடுப்பில் நிலைக்குத்தி நின்றது... அவனது பார்வை தந்த கூச்சத்தில் இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை விடுவித்தாள் ரேஷ்மி.
அதுவரை நேரம் அவளது இடுப்பு மடிப்பிற்கும் முந்தானைக்கும் பாடல் டெடிகேட் செய்து கொண்டிருந்தான் வினய்.
ரேஷ்மி முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகும் போது வினயின் காதல் மனமோ

“ஏழை புத்திக்குள்ள
சுத்துது கிறுக்கு உன் இடுப்பு
கொசுவத்துல சூட்சுமம் இருக்கு ....”

என்ற வரியை பாடியது.
அடுத்து அவள் குனிந்து கட்டிலின் அடியில் தேடும் போது அவளது சேலை விலகி அவளது இடுப்பு மடிப்பு அடிக்கடி வெளிப்பட அதை அவள் இடைக்கிடை சரிசெய்தவாறு இருக்க இங்கு வினயின் மனமோ

“நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நேற இடுப்புல கெறங்கி போனேன்டி”

என்று பாட்டுபாடி அவனது மோகத்திற்கு தூபம் போட அவனது கண்கள் அந்த மெல்லிடையாளின் இடுப்பின் இடுக்குகளை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருந்தது..

ஆராய்ச்சி இறுதிகட்டத்தை அடையும் வேளையில் அதனை வந்து மூடிய முந்தானையின் மேல் வினயிற்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது...
அப்போது தான் ரேஷ்மியை நிமிர்ந்து பார்க்க அவள் கூச்சத்தில் நெளிவது அவன் கண்களில் பட்டது...
சட்டென்று மறுபுறம் திரும்பிக்கொண்டவன் தலையில் அடித்துக்கொண்டு

“ஷிட்... நாம ஜொல்லு விட்டதை பார்த்துட்டாளே... இப்படியாடா ஜொல்லுவிடுவ??? ஜொல்லு விட்டிருந்தா கூட பரவாயில்லை... ஆனா நீ அவ இடுப்பு மேல கண்ணா இருந்ததை இல்லையா அவ பார்த்துட்டா??? இப்போ என்ற பண்ணுறது??? அவ மேல கோபமா இருப்பது போல் சீனை போட்டுட்டு இப்போ அவ பார்க்க ஜொல்லு விட்டு இப்படி நம்ம மானத்தை நாமளே வாங்கிட்டோமே....” என்றவன் தனக்குள் பேசிக்கொண்டிருக்க ரேஷ்மியோ அவனது பைலை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கி தன் பையில் வைத்தவன் ஆபிஸிற்கு செல்ல அறையிலிருந்து வெளியேற முயன்றான்.... அறையின் வாசலை மறைத்தாற் போல் வந்து நின்றிருந்தாள் ரேஷ்மி.

அவள் அவ்வாறு நின்றதும் வினய் மனதினுள்

“இப்போ எதுக்கு இவ இப்படி நிக்கிறா??? இவ நிக்கிற ஆங்கிலே சரியில்லையே... இன்னைக்கு காலையில இருந்தே ஒரு மார்க்கமா தான் சுத்திட்டு இருக்கா.. அதுக்கு சரியா அவ பார்க்கும் போதே தாறுமாறா சைட் அடிச்சிட்டோம்... இப்போ எதுக்கு அப்படி பார்த்தீங்கனு கேட்டு சண்டை போடுவாளோ???” என்று அவன் பாட்டில் யோசித்திருக்க அவன் முன் சுடக்கிட்டு அவனை நிலைப்படுத்தினாள் ரேஷ்மி.

“எங்க கிளம்பிட்டீங்க??? குடுக்க வேண்டியதை குடுக்காமல் போறீங்க???” என்று கேட்க வினயோ இவள் எதை பற்றி பேசுகின்றாள் என்று புரியாது அவளை பார்த்திருந்தான்.
அவனது பார்வையிலேயே அவனுக்கு தான் கூறுவது புரியவில்லை என்று புரிந்து கொண்ட ரேஷ்மி

“அனு இருக்கும் போது மட்டும் தான் கொடுப்பீங்களோ??? இல்லைனா கொடுக்க மாட்டீங்களோ???” என்று கேட்க அப்போதுதான் அவள் எதை கேட்கிறாள் என்று புரிந்து கொண்டான்.

அவனுக்கும் அவள் கேட்டதை கொடுக்க வேண்டும் என்ற அவா எழுந்தாலும் அதை தடை செய்தது அவனது மனம்.

“டேய் வேணாம் டா.... ஸ்டெடியா இரு...நீ அவ மேல கோவமா இருக்கதா சீனை போட்டுட்டு இருக்க... அதை அப்படியே மெயின்டெயின் பண்ணு.. உடனே கவுந்துட்டனா மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி உட்கார்ந்துக்கும்...அப்புறம் வாழ்நாள் முழுசும் சன்னியாசம் தான்... சோ ஸ்டெடியா நில்லு....” என்று அவனை திடப்படுத்த அதன் வார்த்தைகளை புரிந்துகொண்டவன் அவளை விலக்கிவிட்டு செல்ல முயன்றான்.
ஆனால் ரேஷ்மியோ அந்த இடத்தை விட்டு அசையவில்லை...

“ரேஷ்மி விலகு... எனக்கு டைமாச்சு...”

“நீங்க குடுக்க வேண்டியதை குடுங்க. நான் விலகுறேன்...”

“முடியாது.. இப்போ என்ன செய்வ??” என்று வினயும் விடாப்பிடியாய் நின்றான்.

ரேஷ்மியோ

“முடியாதா???” என்று கேட்டபடி விடுவித்திருந்த தன் முந்தானையை இடக்கையால் முன்புறம் எடுத்து இடுப்பில் சொருக அதன் விளைவால் இடுப்பை மறைத்திருந்த சேலை மறைப்பு விலக அதை கண்டு மீண்டும் அதிலேயே நிலைக்குத்தி நின்றது வினயின் கண்கள்.

வினயின் மனமோ

“ஐயய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா???” என்று கேட்க

மூளையோ “டக்கவுட்” என்று ஆட்டத்தை முடித்துவைத்தது...

ஆனால் அவன் எதிர்பாராதவாறு அவனை இழுத்து அணைத்த ரேஷ்மி எக்கி அவனது இரு கன்னத்திலும் இதழ் பதித்துவிட்டு அவனை செல்ல அனுமதித்தாள்... வினயோ இன்னும் விதிர்விதிர்த்து போய் என்ன நடக்கிறதென்று புரியாமல் ஒரு வகை மாயவலையில் சிக்குண்டு நின்றவன் அவள் விடுவித்ததும் ஏதோ மந்திரித்துவிட்ட கோழி போல் அறையிலிருந்து வெளியேறினான்.

வழியில் அபி அழைத்தது கூட அவனது கருத்தில் பதியவில்லை... அபியுடன் நின்றிருந்த ரியாவோ வினயின் நடவடிக்கையின் அர்த்தம் புரியாது அபியை பார்க்க அவனும் வினயிற்கு என்னானது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.
அவர்களை சோபாவில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்து வீரலட்சுமி அபியை அழைத்தார்.

“என்னமா கவின் நான் கூப்பிட கூப்பிட எதுவும் கேட்காதவன் மாதிரி போறான்?? என்னாச்சு மா அவனுக்கு?? நல்லா தானே இருந்தான்...” என்று கேட்க

வீரலட்சுமியோ

“ஏன்டா கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சே.. இது கூடவாடா உனக்கு புரியலை...”

“என்னமா சொல்லுறீங்க?? அவன் அப்படி போறதுக்கும் நான் கல்யாணம் பண்ணதுக்கும் என்னமா சம்பந்தம்???” என்று அபி தன் அன்னையை எதிர் கேள்வி கேட்க வீரலட்சுமிக்கு அபியிற்கு எப்படி புரியவைப்பது என்று புரியாமல் ரியாவை பார்க்க

“அபி நீங்க வாங்க.... நான் சொல்றேன்...” என்று கூற அவனோ

“ஏன் ரியா?? அதான் அம்மா என்னான்னு சொல்றாங்களே... அவங்களே சொல்லட்டும்..” என்று அபி கூற அதில் கடுப்பான ரியா நறுக்கென்று அபியின் கையில் கிள்ளினாள்.

ஐயோ என்று அபி அலற வீரலட்சுமியோ என்னவென்று கேட்க ஒன்றும் இல்லை என்று மழுப்பியவன் ரியாவை பார்க்க அவள் பார்வையில் உஷ்ணம் இருப்பதை கண்டுகொண்டவன் தன் அன்னையிடம் சொல்லிவிட்டு தங்கள் அறைக்கு சென்றான்.
அறைக்கு சென்றதும்

“ஏன் ரியா அப்படி கிள்ளுன??? எப்படி வலிச்சிச்சு தெரியுமா??” என்று அவள் கிள்ளிய இடத்தை தேய்த்துக்கொண்டே கேட்க

“உங்களை கிள்ளியிருக்க கூடாது... அங்கயே வைத்து நாலு சாத்து சாத்தியிருக்கனும்...”

“ஏய் நான் என்னடி பண்ணேன்..??”

“என்ன பண்ணலை?? வாங்கனு சொன்னா வரமாட்டீங்களா??”

“அதுதான் அம்மா சொல்லிட்டு இருந்தாங்களே... அப்புறம் எதுக்கு நீ இடையில புகுந்த??”

“நான் இடையில புகுந்ததை கவனிச்ச நீங்க அத்தை பதில் சொல்ல முடியாமல் தடுமாறுனதை கவனிச்சீங்களா??”

“என்னது தடுமாறுனாங்களா?? அப்படி அவங்க தடுமாறுற அளவுக்கு நான் ஒரு கேள்வியும் கேட்கலையே??? அவங்க தான் சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ சிங்க் பண்ணாங்க அதுக்கு தான் விளக்கம் கேட்டேன்...”

“நல்லா விளக்கம் கேட்டீங்க...”

“ஐயோ குழப்பாமல் பதிலை சொல்லு... நான் கேட்டதுல என்ன தப்பு?? அவன் அப்படி போனதுக்கும் நான் கல்யாணம் பண்ணதுக்கும் என்ன சம்பந்தம்??”

“ஹா நொன்ன சம்பந்தம்... ஐயோ உங்களுக்கு இது கூடவா புரியலை... ரேஷ்மியும் கவினும் ரூம்ல தான் இருந்தாங்க...” என்று ரியா கூற

“ஐயோ குழப்புறாளே..... ரேஷ்மியும் கவினும் அவங்க ரூம்ல இருக்காமல் நம்ம ரூம்லயா இருப்பாங்க?? ஒழுங்கா புரியிற மாதிரி சொல்லுடி...” என்று கேட்க கடுப்பான ரியா அவனை அருகில் வருமாறு அழைத்தாள்.
அருகில் வந்தவன் காதில் ஏதோ குசுகுசுத்தாள்...

“ஆ... இதுவா மேட்டர்....இதுனால தான் பையன் அப்படி போனானோ?? சே... இது கூட புரியாமல் தத்தி மாதிரி அம்மாகிட்ட போய் விளக்கம் கேட்டுருக்கேனே??” என்றவன்

“ரியா அப்போ வினயிற்கும் ரேஷ்மிக்கும் இடையில் எல்லாம் சரியாகிருச்சா???”

“சரி ஆகிடும்னு நம்புறேன்...”

“என்ன ரியா சொல்லுற??” என்று அபி கேட்க நேற்று மாலை ரேஷ்மி கூறியதை அபியிடம் பகிர்ந்து கொண்டாள் ரியா.

“ஏன் ரியா யாரோ ஒருத்தவங்க வாழ்க்கையில் ஏதோ தப்பா நடந்துருங்சினா அதுவே நம்ம வாழ்க்கையிலும் நடக்கும்னு நினைக்கிறது என்னமா நியாயம்??? அந்த பொண்ணு இறப்பு ஈடுகட்ட முடியாதது தான்... ஆனா அதுக்காக இப்படியா???”

“இல்லை அபி.. ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரி... ஆனா ரேஷ்மி ரொம்ப மெச்சுவட் டைப்... அதுதான் அவ ப்ரெண்டோட இறப்பு அவளை ரொம்ப பாதிச்சிருச்சு... நமக்கு அவங்க வேற்றாள்... ஆனா ரேஷ்மிக்கு அப்படி இல்லை.... அவளோட க்ளோஸ் ப்ரெண்ட்... அதோடு அந்த பையனுக்கு அப்படி ஆனதும் அவளோடு எண்ணம் இன்னும் வலுவாகிவிட்டது... அதான் அவ அப்படி நடந்துகிட்டா... ஆனா நான் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டா... அவ ரொம்ப ஸ்ரோங் பர்சனாலிட்டி...அதான் நாம சொன்னாலும் அதை அனலைஸ் பண்ணி சரினு எடுத்துக்குறா....”

“என்னமோ சொல்லுற... எனக்கு தான் ஒன்னும் புரியமாட்டேன்குது... இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்..”

“ஆமாங்க... எனக்கும் அதே கவலை தான்... ஆனா இதை நாம இப்படியே விடக்கூடாது... நம்மால முடிந்த ஏதாவது ஒன்றை செய்து அவங்க நெருக்கத்தை கூட்டனும்..”

“அதை ஏன் ரியா நாம செய்யனும்...அது தான் ரேஷ்மி புரிஞ்சிக்கிட்டானு சொன்னியே... இனி அவங்களே பார்த்துப்பாங்க...”

“டேய் மக்கு புருசா... ஏன் இவ்வளவு மக்கா இருக்க??? எதையும் புரிஞ்சிக்க மாட்டியா??? கல்யாணமாகி மூன்று வருஷமாகிகூட உனக்கு இது தெரியலையா???”

“எதுக்கு இப்போ நீ என்னை மக்குனு சொல்லுற?? அப்படி எதை நான் புரிஞ்சிக்கலை??”

“நீங்க புரிஞ்சிக்கிட்ட அழகு தான் தெரியிதே.… நாம சண்டை போட்டா எப்படி பீல் பண்ணுவோம்னு கூட சரியா தெரியலை...இது புரிஞ்சிக்கிட்டாராம்...” என்று ரியா நொடித்துக்கொள்ள

“ஓ பேபிமா அதை சொல்லுறீங்களா??? எனக்கு இப்போ தான் மேட்டரே புரியிது... சரி நீ சொன்ன மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணுவோம்...” என்றவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு

“ஏன் ரியா நம்ம டூர் பிளானை இதுக்கு யூஸ் பண்ணிக்கிட்டா என்ன??” என்று அபி கேட்க

“ஆமால... அது தான் நல்ல சான்ஸ்... அங்கே செய்யவேண்டியதை நான் பார்த்துக்கிறேன்... நீங்க எனக்கு ஒரு சின்ன சப்போர்ட் மட்டும் குடுங்க...”

“சின்னது என்னமா சின்னது.. பெரிசாவே செய்திடுறேன்...” என்று கண்ணடிக்க அவர்களது உரையாடலை தடுக்கவென எழுந்தது குழந்தை..
குழந்தை எழுந்ததும் அதற்கு குடிக்க கொடுப்பதற்காக ரியா வெளியே அழைத்து செல்ல அபி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்...
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN