என்னடி மாயாவி நீ: 12

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று இரவு வரை வர்ஷித் சொன்னதையே யோசித்தவள் இரவிற்கு வீட்டிலேயே இருவருக்கும் சேர்த்து சமைத்து இருந்தாள். அவள் பரிமாறும்போது அவளின் முகம் கலையிழந்து தென்பட்டது வர்ஷித்தின் கண்களுக்கு. இதற்கு ஏற்றவாறு ஆதிகாவும் வர்ஷித்தின் வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்து அதையே யோசித்து கொண்டிருந்தாள்.

வர்ஷித், 'என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்குற' என கேட்க 'இல்லை ஒண்ணுமில்ல' என கூறினாள். அவனும் மேல ஏதும் கேட்க விரும்பாமல் சாப்பிட்டான். அவன் எழுந்து சென்ற பிறகே டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்ண முயன்றாள். எவ்வளவு முயற்சித்தும் அவளால் கண்ணீரை தடுக்க முடியவில்லை. எண்ணப்போக்கில் எண்ணிக்கொண்டு சாப்பாட்டை கொறித்துவிட்டு சமயலறையில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் ஹாலில் உட்கார்ந்து போன் நோண்டி கொண்டிருக்கும் கணவனை கண்டு அங்கு போனாள். 'பழைய நியாபகங்கள் வந்திருக்கும் போல, யாருக்கு தான் மறக்க முடியும். அதுக்கூட சின்ன பிள்ளையிலிருந்து அம்மா அப்பா கூட இருந்தவ அதான் இங்க தனியா இருக்கறதுனால சோகமா இருக்கா' என யோசித்தே அவளின் முகவாட்டத்தின் காரணத்தை கேட்காமல் விட்டான், அவனை பற்றியே அவள் நினைப்பது அறியாமல். அவளின் தனிமையை முதலில் போக்கணும் என எண்ணியவன், ஆதிகாவிடம், 'இங்க நீ தனியா இருப்பில, நீயும் இன்டெர்வியூக்கு சென்று வேளைக்கு போனால் உனக்கொரு மாறுதல் கிடைக்கும்ல. இத பத்தி யோசி, உனக்கு சம்மதம்னா சொல்லு நான் மேற்கொண்டு ஏற்பாடு பண்றேன்' என கூற ஆதிகா, 'நான் யோசிக்கிறேன்' என அவனிடம் சொன்னாலும் அறைக்கு வந்தவள் "அட லூசு, நீ சொன்னா நான் கேட்காம இருப்பேனா, அதிகாரமா சொல்லாம பட்டும் படாமல் சொல்ற' என அவனை மனதுக்குள் திட்டினாள். அவள் அந்த அறையில் படுத்து, காதில் தலையணி கேட்பொறியை(head set) காதுகளில் அணிந்து பாடலை கேட்டு கொண்டு படுத்துறங்கினாள். அவள் உறங்குவதை உறுதி படுத்திகொண்டு அறைக்குள் நுழைந்து, அவளின் ஹெட் செட்டை கழட்டி வைத்து விட்டு போர்வையை இழுத்து போர்த்தி விட்டு அடுத்த அறைக்கு சென்று படுத்து உறங்கினான் வர்ஷித்.

அடுத்த நாள் காலை அழகாக மலர்ந்தது. காலை வேலைகளை முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி மாடிபடியில் இறங்கிக்கொண்டிருந்த மாநிறத்திற்கு கொஞ்சம் வெள்ளையாக நிறம் கொண்ட வர்ஷித் மெரூன் வண்ணம் படிந்த சட்டை அணிந்து, அலைபாயும் கேசத்தை சரி செய்துகொண்டே வந்த அழகில் ஆதிகா ஆடித்தான் போனாள்.

கீழே இறங்கி வரும் பொழுதில் அவனும் ஆதிகாவின் அழகில் மதி மறந்து போனான். இருவரது கண்ணும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டு கலந்தது. ஹாலுக்கு வந்தவன், 'ஐயோ இனிய இவ கண்ணை பார்க்கவே கூடாது. நான் என்ன பன்ரேன்னு எனக்கே தெரியல அப்படி இவ கண்ணுல என்ன இருக்குனு தெரியல' என எண்ணிக்கொண்டான்.

அவன் சாப்பிட அமர்ந்தவுடன் அவனுக்கு பரிமாறிவிட்டு, அவனையே கவனித்து கொண்டிருந்தாள். சாப்பிடும்போது அவளை பார்த்து, ' நான் கேட்டதுக்கு என்ன முடிவு பண்ணிருக்க' என வர்ஷித் கேட்க ஆதிகா பேயறைந்தது போல திகைத்து நின்றுகொண்டிருந்தாள். வர்ஷித் விவகாரத்தை பற்றித்தான் கேட்கிறான் என நினைத்து பயந்தாள். அவளின் பயத்தை கலைக்கும்படி வந்து விழுந்தது வர்ஷித்தின் வார்த்தைகள். "நான் என்ன கேட்டேன்? எதுக்கு இவ இப்படி பயப்புடுறா" என நினைத்துக்கொண்டு, 'வேலைய பத்தி யோசிக்க சொன்னனே யோசிச்சியா' என கேட்டு அவளின் மனதின் பயத்தை போக்கினான். 'ஓ அதுவா' என கூறியவளை வியப்பாக பார்த்தவன் 'வேற என்ன ' என வினவினான். 'இல்ல இல்ல ஒண்ணுமில்ல'என கூறி சமாளித்தாள். "இவனே அத பத்தி கேட்கல நாமலே நியாபக படுத்த கூடாது, அப்புறம் யானை தன் கையால தனக்கே மண்ணை வாரி போட்டது போல ஆகிடும்" என எண்ணிக்கொண்டு அவள் பரிமாறினாள். சாப்பிட்டு கைகழுவ போகும் கணவனை பார்த்தவள், "வேலைக்கு போறதுக்கு எனக்காக யோசிச்சு என்னோட விருப்பத்தை கேட்டு பண்ண நினைக்கிற. ஆனால், நம்ம வாழ்க்கையை பிரிக்கப்போகும் விவகாரத்தோட பின் விளைவு பத்தி யோசிக்காம, என்னோட விருப்பத்தை கேட்காம முடிவெடுத்திருக்கியே உன்ன என்ன சொல்றதுன்னே தெரியல? என தனக்குள்ளே கவலை கொண்டாள்.

வர்ஷித் கைகழுவி வந்து அசையாது நின்ற ஆதிகாவை, "இவ என்ன அடிக்கடி பிரீஸ் ஆகியறா, என்ன ஆச்சு இவளுக்கு" என யோசித்தவாறே அவள் முன் சொடக்கிட்டு அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தான். அவனை பார்த்தும் உணர்ச்சியற்று இருந்த அவளிடம் 'என்ன ஆச்சு உனக்கு, வேலைக்கு போறத பத்தி என்ன முடிவு பண்ணிருக்க, இதே கேள்வியை முன்னாடி கேட்டதுக்கு பதிலே இல்லை இப்பவாவுது சொல்லு' என கேட்க, 'நான் வேலைக்கு போறேன். ஆனால், அதுக்கு ஒரு நிபந்தனை உண்டு. நீங்கதான் அதை பண்ணனும். இதுக்கு சரின்னா எனக்கும் சரி' என்று கூறிய ஆதிகாவை புரியாமல் பார்த்தான் வர்ஷித். "இவ என்ன புரியாம பேசுறா, தனியா இருப்பாளேன்னு சொன்னா, நமக்கே டீல் பேசுறா"என எண்ணினாலும் அவள் குழந்தை தனம் மாறாத பேச்சில் மறுப்பு சொல்ல முடியாமல் சரி என்றே தலையை ஆட்டிவைத்தான். "இவ வேற என்ன கேட்க போறானு தெரியலையே" என பயந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், 'என்ன செய்யணும், உன்னோட டீல் என்ன?' என கேட்க அவளோ, 'இன்னைக்கு சாயங்காலம் சொல்றேன்' என சொல்ல அவனோட நிலைமைதான் பரிதாபம் ஆனது. அவனும் சென்று விட ஆதிகா வர்ஷித் சென்ற திசையையே பார்த்துக்கொண்டே, "நாம் சொல்வதை அவன் நிறைவேற்ற வேணும் இல்லனா விடக்கூடாது செய்ய வச்சே ஆகணும்" என தீர்மானித்தாள்.

அவன் அலுவலகம் சென்றுமே, "அவள் என்ன கேட்பாள்" என்பதை பற்றிய யோசித்தான். "அவள் முதல் முதலாக கேட்க போகிறாள், கண்டிப்பாக செய்தே ஆகணும்" என நினைத்து மறுபடியும் வேலைக்குள் தன்னை மூழ்கடித்துக்கொண்டான்.

ஆதிகா மறுபடியும் அவன் சொன்னதையே மனதில் அசைபோட்டு கொண்டிருந்தாள். அவன் ஏன் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறான் என ஆராய ஆரம்பித்தாள். "என்னைய அவனுக்கு பிடிக்கலையா?, பிடிக்காமயா எல்லாத்தையும் பாத்து பாத்து செய்றான். முதல் காதல மறச்சேன்னு இப்படி நடந்துக்குறானா? இல்லையே, அன்னைக்கு சொல்ல வந்தப்பவும் தெரியும்னு சொன்னானே, அவனுக்கும் அது தெரியுமே. வேற ஒருத்தன காதலிச்சவன்னு பாக்குறானா? இல்லையே நம்ம நிலைமையை அவனே புரிஞ்சுகிறானே, அவனே நம்ம தனிமையை போக்க வேலைக்கு போனு சொல்ரேன். எல்லா வகையிலும் யோசித்து பதில் கிடைத்தவளின் மூளைக்கு கடைசியில் ஒரு விடையில்லா கேள்வி வந்தது. நமக்கு முன்னாடி வேற யாரையாவது லவ் பண்ணி சேராமல் போயிருக்குமோ இல்லை இப்பவும் வேற பொண்ண லவ் பன்றானோ அதான் இந்தமாதிரி செய்றானோ, அந்த பொன்னையும் மறக்கமுடியாம என்னையையும் ஏதுக்கமுடியாம இருக்காணோ? இதுக்கு தான் டிவோர்ஸ் தரேன்னு சொன்னானோ. என்ன மாதிரி இவனும் சூழ்நிலையில் கைதியா மாட்டடிகிட்டுத்தான் என்ன கல்யாணம் பண்ணிகிட்டானோ? கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாவது என்கிட்டே சொல்லிருக்கலாம்ல, ஏன் என்கிட்டே சொல்லல. ஆமா, நம்ம கஷ்டம் தான் அவனுக்கு தெரியுமே மேல கஷ்டப்படுத்தவேணாம் என நினைத்திருப்பான். அதான் சொல்லல போல. அவன் சந்தோசமா இருக்கனும் அதுவே எனக்கு போதும் அதுக்காக என்னவேனாலும் பண்ணலாம்" என உறுதிகொண்டாள். இவனை எப்படி பிறருக்கு விட்டுக்கொடுப்பது என ஒரு நிமிடம் வருந்தினாள். ஐயோ நம்ம எப்போ இவனை லவ் பண்ண ஆரம்பித்தோம் என தன்னிலை அறிந்தவுடன் வெட்கம் கூட எட்டி பார்த்தது. சரி நம்ம ஆசைய சொன்ன இவன் என்ன சொல்லுவான், "இப்பதானே நமக்கு கல்யாணம் ஆச்சு அதற்குள் எப்படி என்பதை கேட்டால் என்ன சொல்வது இல்லை வேற ஏதாவுது தப்பா பேசிட்டா என்ன பண்றது" என எண்ணி, "வேணாம் சொல்ல வேணாம், அவன் ஏதாவுது சொல்லிட்டா என்னோட மனசுக்கு இனி எதையும் தாங்குற சக்தி இல்லை" என முடிவெடுத்தாள். "இருக்குற வரைக்கும் சந்தோசமா பாத்துக்கலாம், அப்புறம் அவனோட விருப்பம். நாம அத பத்தி பேசவேணாம், அவனே கேட்டால் அவனோட விருப்பத்துக்கு ஏற்றவாறு செய்யலாம்" என தனக்கே கூறி கொண்டு வீட்டு வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.

நாளைக்கு ஞாயிறு கிழமை நல்லா ஓய்வெடுக்கணும் என்ற எண்ணத்தோடு அலுவலகத்திலிருந்து வேலை பளு காரணமாக தாமதமாக வீடு திரும்பினான். வீட்டிற்குள் நுழையும்போதே அவனை வரவேற்த்தது, ஆதிகாவின் அம்மா என்ற சொல்தான். ஆதிகா தனது பெற்றோருடன் பேசி சிரித்து கொண்டிருந்தாள். வர்ஷித்துக்கு அவனது அம்மாவுடன் இருந்த மகிழ்ச்சியான நாட்கள் நினைவுக்கு வந்தது. கோபம் பின்னுக்கு சென்று அம்மாவின் சிரித்த முகமே முன் வந்தது. "அம்மா சிரிச்சு எத்தன நாள் ஆச்சு" என எண்ணி வருந்திக்கொண்டிருந்தான். அப்போது ஆதிகா வந்து சாப்பிட கூப்பிட்டாள். மனதை மறைத்து சிரிக்க முயன்றவனுக்கு நியாபகம் வந்தது காலையில் ஆதிகாவிடம் போட்ட ஒப்பந்தம். அவளே 'நான் சொல்றத செய்விங்களா? அப்படி செஞ்ச நானும் வேலைக்கு போறேன்' என சொல்ல, வர்ஷித்தோ, ஆதிகா முதல் முறை கேட்டதில் மறுப்பு சொல்ல மனம் வராமல், 'சரி நான் செய்றேன், என்ன செய்யணும் சொல்லு' என ஒத்துக்கொண்டான்.

ஆதிகா வர்ஷித்திடம் என்ன கேட்பாள்? வர்ஷித் அதை செய்து முடிப்பானா? ஆதிகா காதல் வர்ஷித்திற்கு தெரிய வருமா? அடுத்த பகுதியில் காண்போம்.

நன்றி!
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 12
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN