எனை மீட்டும் இயலிசையே -16

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
16


காலை கதிரவன் எழுந்து நீண்ட நேரம் ஆகி இருந்தது....சோம்பல் முறித்தபடி எழுந்தான் சத்யா.....தன் அருகில் இயல் இல்லாமல் போகவே சின்னதாய் ஒரு குளியல் போட்டுவிட்டு கீழே சென்றான்..

சமையல் அறையில் ஈர முடியை துணி கொண்டு முடிந்ததிருக்க இடுப்பில் உயர்த்தி சொருகிய புடவையோடு மும்முறமாய் சமைத்துக் கொண்டிருந்தாள் இயல்.... "

"புஜ்ஜிமா.... ஏன் சீக்கிரம் எழுந்துட்டீங்க... "என்று அவளின் தோள் மீது இரு கைகளையும் வைத்து அதன் மீது முகத்தை பதித்தவாரு கேட்டான்...

"சும்மாதான்.... இந்தாங்க காபி... "

"எனக்கு உப்பு காபி தான் வேணும்.. "

"சாரி சத்யா.... "

"இப்ப எதுக்கு மூஞ்சி இப்படி போகுது..உப்பு காபி குடிச்சா தான ஸ்பெஷல் ஸ்வீட் கிடைக்கும்... "என்று அவளின் இதழை வருடிக் கொண்டே சொல்ல....

"அதெல்லாம் உப்பு காபி இல்லாமலே கிடைக்கும் "என்று அவள் முனகலாக சொல்ல...

"ஹேய் புஜ்ஜி.... என்ன சொன்ன.."

"நான் ஒன்னும் சொல்லலையே... "

அவளை திருப்பி அவன் ஸ்பெஷல் இனிப்பை சுவைத்து "வர வர ஸ்வீட் அதிகம் ஆகிட்டே போகுதுடா புஜ்ஜி....

இன்னும் ஒன்னு ப்ளீஸ்..... "என்று கிட்ட வர அவனை தள்ளிவிட்டு ஓட முயன்றவளை இழுத்து ஒரு முறை பல முறை என்று தொடர்ந்து கொண்டிருந்தது...

அன்றைய நாள் முழுதும் சில்மிஷங்களுடனும் சீண்டலுடனும் சென்றது.....

இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு மேலே வந்தனர்....

"சத்யா எனக்கு ஸ்டோரி புக் வேணும்.."

"அந்த ட்ரால இருக்கு எடுத்துக்கோடா... பட் ஒன் கண்டிஷன் ஒன் அவர் தான் டைம்.... அதுக்கு மேல நான் படிக்கணும்... "

"ஏன் இப்பவே படிங்கப்பா... இருங்க உங்களுக்கும் ஒன்னு எடுத்து தரேன்... "

இயலின் அருகில் வந்த சத்யா "அடி என் மக்கு புஜ்ஜி நான் படிக்க வேண்டிய புக்கே நீதான்... இப்ப சொல்லு நான் படிக்கட்டுமா.. "

"ம்ஹும் போங்கப்பா... "

"அச்சோ இப்படி சிணுங்குனா நான் எப்படிடி போறது... "

"ம்.... இப்படி தான்.... "என்று அவனை பிடித்து தள்ளிவிட....அவனும் சிரித்து கொண்டே படுக்கையில் சென்று கால் நீட்டி சாய்ந்த வாரு அமர்ந்து இவள் பார்த்து கொண்டிருப்பதை பார்த்து கண்ணடித்தான்.... இசை வெட்கப் பட்டு திரும்பிக் கொண்டாள்...

"சரியான திருட்டு கள்ளன்.... "என்று மனதிற்குள் நினைத்தவள் புன்னகைத்துக் கொண்டே புத்தகத்தை எடுக்க சென்றாள்...

அப்படி எடுக்கும் போது அந்த டைரி கண்ணில் பட அதில் இருந்த ரத்தம் நினைவுக்கு வர.....எதுவும் எடுக்காமல் பேசாமல் வந்து சத்யாவின் மடியில் படுத்து அவன் வயிற்றில் முகம் புதைத்து கொண்டாள்....

அவளின் இந்த செயலில் திகைத்த சத்யா அதை தொடர்ந்து வந்த விசும்பல் சத்தத்தில் பதறினான்...

"புஜ்ஜிமா.. என்னாச்சுடா... எதுக்கு அழற... "என்று அவளை நிமிர்த்த முயல அவள் இன்னும் இருக்கமாய் கட்டி கொண்டாள்...

"ப்ளீஸ்டா புஜ்ஜி.... அழாத... எனக்கு கஷ்டமா இருக்கு..... மீண்டும் மீண்டும் எதாவது ஒரு விஷயத்தில் உன்ன அழ வச்சிட்டே இருக்கேன்.... "

அவனது பேச்சில் நிமிர்ந்தவள் "இல்ல சத்யா... அப்டிலாம் சொல்லாதீங்க... நான் தான் உங்களை ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன்..... அன்னிக்கு நீங்க பேசுனப்ப நான் உங்களுக்கு புரிய வச்சிருக்கணும்.... இல்லையா இப்ப சண்டை போட்ட மாதிரி இங்க இருந்தே நான் சண்டை போட்டு இருக்கனும்... அப்ப கோழை மாதிரி ஓடிட்டேன்.. அதனால் தான் நீங்க சாகற அளவுக்கு போனது கூட தெரியாம கோவமா இருந்திருக்கேன்... அது.....அந்த..... டைரி பூரா ரத்தம் சத்யா.. நான் உங்களை இழந்திருப்பேன்... "என்று கைகளால் முகத்தை மூடி அழ... அவளை தேற்றும் வழி அறியாமல் தவித்தான்...

அழும் இயலை தன் மார்பில் சாய்த்து தலை கோதி ஆசுவாசப்படுத்தினான்..

"ஏன் சத்யா அப்படி பண்ணீங்க.... " என்று அவள் விம்மலுக்கு இடையில் கேக்க...

"தெரியலடா....அப்ப உன்னை கஷ்ட படுத்தி இழந்துட்டேன்ங்கற வேதனைல எனக்கு உயிர் வாழவே பிடிக்குல... எல்லாத்தையும் எடுத்து கீழ போட்டப்ப உன் டைரி கிடைச்சுது...

அதை எடுத்து படிச்சேன்... நீ என்னை பார்த்த நிமிஷம் இருந்து கல்யாணம் முன்னாடி வரைக்கும் எல்லாம் எழுதி இருந்த...நிஜமாடி அத படிச்சதும் நான் நானாவே இல்ல.... அதான் எல்லாத்தையும் என் கையாலயே வெறியோட அடிச்சு நொறுக்கினேன்... கடைசியா தலையை எங்கயோ அடிச்சதுல மயங்கிட்டேன்...

அப்பறம் கண் விழிச்சு பார்த்தா ஹாஸ்பிடல்ல இருந்தேன்... ஆனால் உன்னை திரும்ப பார்க்கும் வரைக்கும் நான் உயிர் இருந்தும் பொணமா தாண்டா இருந்தேன்....

இயல் தன் அழுகையை நிறுத்திவிட்டு அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்... பின் மெல்ல எழுந்து அவன் கண் கன்னம் மூக்கு நெற்றி என்று மாறி மாறி முத்த மழை பொழிய சத்யா அவளின் அதிரடியில் திகைத்து பின் ரசித்து மோகம் கொண்டு அவனும் சளைக்காமல் திருப்பி தர....

அந்த யுத்தம் நீண்ட நேரம் தொடர்ந்தது....

அடுத்த நாள் காலை...

"புஜ்ஜி... புஜ்ஜி... ப்ளீஸ் டி...... "

"அச்சோ போங்கப்பா... நிறைய வேலை இருக்கு... அத்த மாமாலாம் வந்துருவாங்க... "

"நான் ஹெல்ப் பண்றேன்டி.... எனக்காக ப்ளீஸ்... ப்ளீஸ்... "

"நோ நோ.... புரிஞ்சிக்கோங்க....எனக்கு வெக்கமா இருக்கும்.... "

"என்கிட்ட என்ன வெக்கம்.... பேசாத போடி புஜ்ஜி.... "என்று பொய் கோவம் கொண்டவன் அருகில் சென்ற இயல்...

"என் புஜ்ஜிப்பாக்கு கோவத்தை பாரு" என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டியவள்.... "ஆடலாம்.... போய் பாட்டை போடுங்க...."

"இதோ ரெடியா இருக்கே "என்று ரிமோட்டை அழுத்தினான்...

காந்தக் கண்ணழகி

லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

முத்து பல் அழகி

சோடி சேர வாடி

வெண்ணிலவில் லேண்டு வாங்கி

மச்சிவீடு கட்டிக்கிட்டு

இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பத்து புள்ள பெத்துகிட்டு

தமிழ் மட்டும் சொல்லி தந்து

தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா

கிட்ட வாடி

உன்ன அப்படியே சாப்புடுவேன்

கெத்தாதாண்டி

கேடி இல்ல கில்லாடிதான்

தெரியும் மாமா

நீ கேட்காமலே தந்திடுவேன்

என்ன ஆமா

பட்டுன்னுதான் தொட்டதுமே

காலி ஆனேன்

நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே

ஜாலி ஆனேன்

போடு கும்முறு டப்பர

கும்முறு டப்பர

கும்முறு டப்பர

கும்முறு டப்பர

கும்மறு கும்மறு கும்மறு

கும்மாறா......

"போதும் புஜ்ஜிப்பா..... கீழ போகலாம்... "

"செமயா ஆடுற புஜ்ஜி.... செம கிக்கா இருக்கு போ.. "

"ம்ஹ்ம்.... தேங்க்ஸ் புஜ்ஜிப்பா.... "

"தேங்க்ஸ்டி புஜ்ஜி.... "என்று அணைத்து இதழ் தீண்டி விட்டே அவளை விட்டான்...

"கிடைக்கற கேப்ல எல்லாம் சேட்ட பண்றீங்க புஜ்ஜிப்பா.... வாங்க போகலாம்.... "

அவர்கள் ஆடி களைத்து கீழே வர அங்கு துளசி சந்திரன் சுமித்ரா நாதன் இனியன் புகழ் என்று அனைவரும் இருக்க இருவருக்கும் வெட்கமாகி போனது.... அவர்களின் அருகில் சென்ற துளசியும் சந்திரனும்....

"இப்ப தான்டா எங்களுக்கு சந்தோசமா இருக்கு "

"எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க " என்று இருவரும் அவர்கள் காலில் விழுந்தனர்...

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இதே மாதிரி ஒண்ணா சந்தோசமா இருக்கனும்டா.... நல்லா இருங்க செல்லங்களா... "என்று இருவருக்கும் ஆசீர்வாதம் செய்தனர்...

பிறகு சுமித்ரா நாதனிடம் சென்றவர்கள் ஆசீர்வாதம் வாங்க..

"மனசு நிறைஞ்சு சந்தோசமா இருங்கப்பா... நல்ல ஆரோக்கியமாக சந்தோசமா இருங்க... "என்று ஆசீர்வாதம் செய்தனர்.... இருவர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் துளிர்த்தது.....

இயலும் சத்யாவும் இனியன் அருகில் செல்ல அவன் இருவரையும் தோளோடு அணைத்துக் கொண்டான்....

அப்போது அவர்களின் அருகில் வந்த புகழ் "என் காலில் எல்லாம் விழ வேண்டாம்ப்பா... ரெண்டு பேரும் நல்லா இருங்க... "என்று இரு கையை தூக்கி ஆசீர்வாதம் போல் செய்ய அவன் காதை பிடித்த இருவரும்

"என் டைரிய எப்ப எடுத்தீங்க கொழுந்தனாரே... "

"ஹி ஹி.....அதுவா.... இந்த அரிச்சந்திரன அதை வச்சாவது மாத்தலாம்னு நான் தான் மண்டபத்தில் இருந்து வரும் போது உங்க பொருளை உங்க வீட்ல கொடுத்துட்டு இதை மட்டும் எடுத்துட்டு வந்து சத்யா ரூம்ல வச்சிட்டேன்... "

அவனை அடிப்பது போல் கை ஓங்கி பின் அணைத்து கொண்டான் சத்யா...

"தம்பிடா.. "



"நகருங்க.... இவன் என் கொழுந்தன் அண்ட் பிரண்ட்.... எனக்கு தான் முதல் உரிமை.... "

"ஹேய் இவன் எனக்கு தம்பி... எனக்கு தான் முதல் உரிமை..... "

"இல்ல எனக்கு தான்"

"இல்ல எனக்கு தான்... "

"எனக்கு "

"இல்ல எனக்கு "

என்று இருவரும் அவனை இழுக்க

"ஹலோ.... ரெண்டு பேரும் போங்க அந்த பக்கம்.... டூர் போய் டையர்டா வந்தவனை போட்டு இழுத்துட்டு.... "என்று வேகமாய் துளசியின் அருகில் சென்று அவர் மடியில் படுத்துக் கொண்டான்...

இசை சிரித்து கொண்டே காபி கொண்டு வர செல்ல.....அவள் பின்னே போனா சத்யாவை

"நீங்க எங்க போறீங்க மாப்பிளை.... வந்து உக்காருங்க.. "என்று சொல்ல சத்யாவும் அசடு வழிந்துகொண்டே இனியன் பக்கத்தில் அமர்ந்தான்....

பிறகு இசை காபி கொண்டு வர அதை குடித்து விட்டு இனியனின் திருமண நிச்சய விஷயத்தை கூறினார் நாதன்...

அனைவரும் இனியனுக்கு வாழ்த்து கூறினார்கள்...

சாப்பிட்டு முடித்த பின் இசை குடும்பத்தினர் கிளம்பி விட்டனர்... பயண களைப்பில் துளசி சந்திரன் புகழ் மூவரும் உறங்க சென்று விட....

சமையல் அறையில் இருந்த இயலை தூக்கி கொண்டு மேலே சென்றான்...

"புஜ்ஜிப்பா என்ன பண்றீங்க... யாராச்சும் பாக்க போறாங்க.. "

"யாரும் இல்லடி புஜ்ஜி... "என்று அறைக்கு சென்றுதான் இறக்கி விட்டான்...

"என்ன புஜ்ஜிப்பா..... எதுக்கு தூக்கிட்டு வந்தீங்க "

"புஜ்ஜி ஹனிமூன் போக போறோம்டி...எங்க தெரியுமா குலுமணாலி.... அதுவும் நாளைக்கே... இப்ப தான் எல்லாம் கான்போர்ம் ஆச்சு..."

"ஹை.....சூப்பர் புஜ்ஜிப்பா... இந்த சீசன்ல சூப்பரா இருக்கும்ல... ஜாலியா சுத்தி பாக்கலாம்.. "

""போடி புஜ்ஜி... அங்க ஒன் அண்ட் ஒன்லி உன்னை மட்டும் தான் சுத்தி பாக்க போறேன்..... "

"ம்ம்.... போங்கப்ப...."

"சும்மா சும்மா சிணுங்கிட்டே இருக்காதடி... உன் புஜ்ஜிப்பா அப்புறம் சும்மா இருக்க மாட்டேன்.... "என்று கிட்டே வந்து அவள் வெற்றிடையை நிரட...

"புஜ்ஜிப்பா... "என்று காற்றாய் வந்த வந்த அவள் குரலில் உடல் சிலிர்த்து மீண்டும் அவளை ஆள தொடங்கினான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN