பூ 24

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உயிரோடு இருந்தவரை கஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே அனுபவித்த ஜீவன், ஒய்வின்றி மகளுக்காவே வாழ்ந்த ஒரு தாய், வாழ் நாள் முழுக்க செய்த தவறுக்காக சாகும் தருவாயில் கூட தாய் தந்தையிடம் மகளாக, மானசீகமாக மன்னிப்பை வேண்டிய அலமேலு, உயிரற்ற உடலாய் நடு வீட்டில் கிடத்தி இருக்க, வாய் விட்டு அழுதபடி அன்னையின் அருகிலேயே இருந்தாள் அமுதா.

கண்கள் இரண்டும் கண்ணீரை சுரந்த வண்ணமே இருந்தது… இதுவரை ஆதரவாய் தாங்கிய தாய் இன்று இல்லை என்ற உண்மையை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவள் அழுதழுது சோர்ந்து போய் இருந்தாள்.

தில்லையும் அவளுடன் தான் இருந்தார். மகள் உயிருடன் இருந்தவரை அவர் செய்த தப்பு பெரிதாய் தெரிய, இப்போது மகளே இல்லாமல் போனதும் அது எங்கோ ஒரு மூளையில் அடங்கிவிட்டது போல, மகளின் முகத்தை தொட்டு தொட்டு பார்த்து "உன்னை பாதியில எமனுக்கு கொடுக்கவா இந்த வயித்துல வந்து பிறந்த" என்று வாயை பொத்தி அழுதார்.

யார் அழுது என்ன புண்ணியம் எவனை நம்பி வந்தாளோ அவன் கையாலையே தன் இறுதி அத்தியாயத்தை எழுதி கொண்டார், என்று யாருக்கும் தெரியவில்லை ஏன் வீட்டில் இருந்த மகளுக்கு கூட தெரியவில்லையே ஏதோ தாய் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இருக்கிறது என்று தானே நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.

தனக்காகவே வாழ்ந்த தாயின் முகத்தை பார்க்க பார்க்க அழுகை கூடிக்கொண்டே போனது அமுதாவிற்கு படுத்து இருக்கும் தாயை எழுப்புவது போல "அம்மா வா மா... எழுந்துரு மா... என் கூட பேசுமா" என்று அனத்தியபடியே தாயின் கைகளை பிடித்துக்கொண்டு குழந்தை போல் அழும் அமுதாவை காணக்காண நெஞ்சம் கணத்து போனது சுந்தரனுக்கு,

மனைவி இறந்தது கூட தெரியாமல் குடித்துக்கொண்டு தள்ளாடியபடியே வந்த தகப்பனை கண்டவளுக்கு இதயமே கசந்து போனது … "ஏய் யாரு நீ? எதுக்கு என் வீட்டு முன்னாடி இவ்வளவு கூட்டம் இருக்கு? அட கையில மாலை கூட இருக்கு? ஒரு வேலை என்னை இந்த தெரு கவுன்சிலரா தேர்ந்தெடுத்து மரியாதை பண்ண வந்து இருக்காங்களோ!! என்னடா இது நமக்கு தெரியாமலையே நடக்குது?" என்று உளறியபடி ஆட்களை விளக்கி வீட்டுக்குள் வந்த ரத்தினம் கண்டது கீழே கழுத்தில் மாலையுடன் படுத்திருந்த அலமேலுவை தான்.

அந்த முழு குடியிலும் சற்று அதிர்ந்து தான் போனான் ரத்தினம் இருந்தும் பணத்தை பறிக்க மனைவி தன்னிடத்தில் நாடகம் ஆடுகிறாள் என்று எண்ணம் கொண்டு ஏய் "என்னடி இது நடுகூடத்துல படுத்து இருக்க? என்னடி நாடகம் ஆடுறியா? இதுக்கெல்லாம் நான் ஏமாறுவேனா?" என்று நா குளறி குளறி பேசிட கல்போல இறுகி நின்றிருந்த விசாகனுக்கு ரத்தினத்தை பார்த்தும் 'கட்டின பொண்டாட்டி செத்தது கூட தெரியாம குடிச்சிட்டு வந்து ரகளை செய்கிறானே' என்று கோவம் கொண்டவன் "போயா வெளியே" என்று கோவமாக ரத்தினத்தின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டதும்

"டேய்... டேய் விசா... இருடா... என்ன இருந்தாலும் அந்த ஆளு தானடா எல்லாம் செய்யனும்" என்று அவனை அடக்கிட "டேய் அந்த ஆளு" என்று கூற வந்த விசாகன் "பச் போதைய தெளியவைச்சி கூட்டிட்டு வாடா" என்று சலிப்பாக கூறிட

சுந்தரன் அவரை இழுத்துக்கொண்டு கிணற்றடிக்கு சென்றவன் இரண்டு குடம் தண்ணீரை தூக்கி தலையில் ஊற்றி அவனின் போதையை தெளிவிக்க முயன்றான்.

"யோவ் உன் பொண்டாட்டி செத்து போய் இருக்காங்க... அதை சொல்லக்கூட உன்னை தேடி அலைய வேண்டி கிடக்கு, எங்கய்யா போய் தொலைஞ்ச... இதுல நாடகம் போடுறாங்கன்னு அவன் முன்னாடியே சொல்ற துணிச்சல் தாண்டி உனக்கு" என்று அவன் திட்டியபடியே அடுத்த குடத்து தண்ணீரையும் அவன் மேல் ஊற்றிட

"என்ன சொல்ற... நீ பொய் சொல்ற...என் பொண்டாட்டி ஏன் சாகப்போறா?" என்றபடி சுந்தரனை விளக்கி விட்டு கூடத்திற்கு சென்ற ரத்தினம் "ஏய் என்னடி நடிக்கிறியா உன் பொண்ணு கொண்டாந்த பணத்தை கொண்டு போயிட்டேன்னு நாடகம் போடுறியா டீ அவ எனக்கும் கூட தானே பொண்ணு நான் இல்லாம பொறந்துட்டாளா டி நாயே... என் கூட சண்டை போட்டு வாங்க முடியலன்னு இந்த மாதிரி வேலைய பண்றியா" என்று கேட்கவும் சட்டென ரத்தினத்தை நோக்கிய அமுதாவுக்கும் அங்கு சூழ்ந்து உள்ளவர்களுக்கும் புரிந்து போனது அனைத்தும்

அதுவரை தாயின் முகத்தை பார்த்தே கரைந்து கொண்டு இருந்தவள் ஆத்திரம் ஆவேசம் அழுகை என்று உணர்வுகளுடன் போராடியவள் வெறி பிடித்தவள் போல் எழுந்து ரத்தினத்தின் சட்டையை பிடித்தவள் அப்போ,, அப்போ நீ நீதான் என்ன அம்மாவை கொன்னு இருக்க, அட பாவி என் அம்மாவையே கொன்னுட்டியே கொலைகாரா... உன் பணத்தாசைக்கும், குடி வெறிக்கும் என் உலகத்தையே அழிச்சிட்டியே… உனக்கு நல்ல சாவே வராது… உன்னாலதான் என் அம்மா செத்தாங்க நீதான் என் அம்மாவை கொன்னுட்ட… நீ தான் என் அம்மாவை கொன்னுட்ட…" என்று ரத்தினத்தின் நெஞ்சில் குத்தியவள் அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்திட

முதலில் நிதானம் தவறி தடுமாறியவன் அமுதாவின் அடி உறைக்கவும் ஏய் விடு என்னை அப்பனையே கௌ நீட்டுறியா" என்று நா குளறி திமிறியபடி அவள் கையில் இருந்து தன் சட்டையை உருவிக்கொண்டு அடியில் இருந்து தப்பிக்க அமுதாவை கீழே தள்ளிட கீழே விழாமல் அவளை தாங்கிய விசாகன் என்ற கற்சிலைக்கு உயிர் வந்து அடித்த ஒரு அடியில் சுருண்டு போய் கீழே விழுந்த, ரத்தினத்தின் உதடுகள் கிழிந்து உதிரம் கொட்டி தலைக்குள் மின்மினி பூச்சிக்கள் வட்டமடித்துக்கொண்டு இருந்தது.

அவன் அடித்த அடியில் முழு போதையும் விலகி இருக்க தட்டு தடுமாறி கன்னத்தில் கை வைத்து எழுந்தவனை மீண்டும் அடிக்க கையை ஓங்க "ஏப்பா விசாக அந்த ஆளை அடிச்சா மட்டும் எல்லாம் மாறிடுமா?" என்று கூட்டத்தில் இருந்த ஒரு நரைத்த தலை பேசிட

"அதுக்கு என் அத்தை சாவுக்கு காரணமான இந்த ஆளை உயிரோட விட சொல்றாங்களா? இவனை மாதிரி ஒருத்தன்.உயிரோடவே இருக்கக்கூடாது... நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு இவனை தெரு நாயை போல அடிச்சி அடிச்சே கொள்ளனும்" என்றான் ஆத்திரமாய்



"எப்பா சும்மா விட சொல்லுவோமா என்ன இருந்தாலும் அவன் புருஷன் இல்லையா இந்த சம்பரதாயம் இருக்குல்ல" என்று அவரே தொடர

"என்னங்கய்யா உங்க சம்பிரதாயம் இந்தாளு சிதைக்கு தீ மூட்டினா என் அத்தை கட்ட வேகுன்னு நினைக்கிறிங்களா?" என்று கேள்வியை எழுப்பிட

அதுவரையில் அழுகையில் கரைந்தவள் "இல்ல இல்ல அந்த ஆளு எங்க அம்மாவுக்கு நல்ல புருஷனா இருந்ததும் இல்ல... எனக்கு நல்ல தகப்பனாவும் இல்ல... என் அம்மாவுக்கு அந்த ஆளு எதுவும் செய்ய கூடாது... அதை எங்க அம்மா ஆன்மாவும் ஏத்துக்காது" என்று ஆவேசமாய் பேசியவளின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவ்வளவு வலியை உள்ளடக்கி கூறினாள் அமுதா

"ஆத்தா இப்போ வேணா கோவத்துல பேசலாம்" என்றவரை தடுத்து நிறுத்திய இன்னொரு நரைத்த தலை "என்னப்பா இது நடுகூடத்துல சடலத்தை வைச்சிக்கிட்டு வாக்குவாதம்... எய்யா விசாக நீ போ பா அந்த ஆளை போலீஸ் ல ஒப்படை அந்த புள்ள வாழும் போதுதான் நல்ல இல்ல... கடைசியா போகும் போதாவது நிம்மதியா போகட்டும்" என்றிட அய்யோ என் பொண்ணை இப்படி படுக்க வைச்சிட்டானே மூதேவி அவன் கொள்ளையில போக அவன் கையில கட்டை முளைக்க என்று அழுதிட

தாய் இருக்கும் நிலை உரைக்க அம்மா என்ற கூவலுடன் அன்னையை இறுக்க கட்டி அழுதவள் "என்னை தனியா விட்டுட்டியே அம்மா இந்த உலகத்துல... நான் எப்படிம்மா உன்னை விட்டுட்டு இருப்பேன்…" என்று கரைந்து போனவளை மட்டும் தாங்கிய தில்லை "நீ அழாத ராஜாத்தி உனக்கு நான் இருக்கே ஆத்தா அழுவாத தாயீ" என்று ஆறுதலை உரைக்க

விசாகன் அடியிலிருந்து ரத்தினத்தை காப்பற்றிய சுந்தரம் "நீ இரு விசா நான் கூட்டிட்டு போறேன் இந்த ஆளை" என்றவன் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று ஒப்படித்தான்.

அலமேலுவிற்கு செய்யவெண்டிய அனைத்து இறுதி சடங்கையும் விசாகனே செய்தான். அழுதழுது சோர்ந்து போய் மயங்கிய அமுதாவை தில்லை ஆதரவாய் அனைத்துக் கொண்டார்.

அனைத்தும் முடிந்து விரிந்த கூந்தலுடன் வெறும் தரையில் கால்களை கட்டி தலையினை கவிழ்ந்தபடி இருந்த அமுதாவின் நிலைதான் பரிதாபமாய் இருந்தது. சோகமே உருவாய அமர்ந்து இருந்தவளுக்கு சொட்டு தண்ணீர் கூட தொண்டையில் இறங்க மறுத்தது தாயின் புகைபடத்தையே வெறித்துக்கொண்டு இருந்தவளை தில்லையின் குரல் கலைத்தது.

"ஆத்தா அழுவாத தாயீ இந்தா இந்த தண்ணிய குடி" என்று கொடுத்து அருகில் அமர்ந்திட

வேண்டாம் என்று தலையை மறுப்பாய் ஆட்டியவள் அதே நிலையில் அமர்ந்து இருக்க, "இந்த கிழவிய மன்னிச்சிடு தாயீ" என்றிட்டதும் அவரது வாயை பொத்தியவள் வேணாம் என்றவாறு தலை ஆட்டியவள் "நீ பண்ணது சரிதான் அம்மத்தா... அதை எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன் தப்பானவரை தேரந்தெடுத்தது, எங்க அம்மா செய்த தப்பு" என்றவள் "அம்மத்தா அம்மா" என்று விம்மியபடி அவர் மடியில் படுத்தாள்.

"அழாத ராஜாத்தி இனி அழுவக்கூடாது டா தைரியமா இருக்கனும். உன் ஆத்தாளையே பாரு என்னை எதிர்த்து தைரியமா தான் இருந்தா... உன்னையும் ஒத்தையால அந்த படுபாவியோட தயவு இல்லாமதானே வளர்த்தா... அவ ரத்தம் யா நீ என் புருஷன் மருதாச்சலமூர்த்தி ரத்தம் அவளுக்கு பொறந்துட்டு இனி அழக்குடாதுடா" என்று கண்ணீரை துடைத்து விட

"அப்பத்தா நீ" என்று வந்தான் விசாகன் அமுதாவின் கலங்கிய முகம் பார்த்து நிறுத்தி இருந்தான்.

"அய்யா ராசா நானே உன்னை கூப்பிடனும்னு இருந்தேன். ஒரு கெட்டது நடந்த வீடு பதினாறு நாள் துக்கம் இருக்கு… வீட்டுல தினமும் விளக்கு ஏத்தனும்... ஆளில்லாம இருக்கவும் கூடாது... நடக்க வேண்டிய சடங்க இங்கனையே நடத்திடுவோம் யா" என்றிட

"ம்" என்று சம்மத்தை தெரிவித்தவன் "நீ அப்பத்தா" என்றிட

"நானும் என்ற பேத்திக்கு துணையா இங்கனையே இருக்கேன் யா... காரியம் முடிஞ்சதும் புள்ளைய நம்மூட்டுக்கு கூட்டிட்டு போய்டுவோம்" என்றிட

"அம்மத்தா நான் இங்கயே" என்று தடுமாறிட

அதில் கோவம் கொண்ட விசாகன் "இப்போ உன்னை வரியான்னு கேக்கல... வான்னு சொன்னாங்க புரியுதா... வாய மூடிட்டு அப்பத்தா கூட வந்து சேரு இது அதுன்னு ஏதாவது மூச்சி விட்டு என்ன செய்வேன்னு தெரியாது" என்று கர்ஜனையாக கூறிட

கப்சிபென்று வாயை மூடிக் கொண்டவள் சரி என்று தலையே ஆட்டி சம்மதத்தை சொல்ல

"கூட்டிட்டு வந்து சேரு அப்பத்தா" என்றவன் அமுதாவிடம் திரும்பி பாசமாய் கூறினாள் வேலைக்கு ஆகாது என்று தெரிந்தவன் "முத்து பொஞ்சாதி கொண்டு வர்ற சாப்பாட்டை ஒழுங்கா சாப்பிட்டு தூங்குற வழிய பாரு சாப்பிடலன்னு தெரிஞ்சா அடுத்த நிமிஷம் இங்க இருப்பேன் புரியுதா" என்று அதட்டி விட்டு விடுவடுவென அங்கிருந்து கிளம்பி விட்டான்.

இதோ அதோவென பதினாறம் நாள் காரியத்தையும் முடித்து அமுதாவையும் அழுத்துக்கொண்டு பெரிய வீட்டிற்கு வந்துவிட்டார் தில்லை இருந்தும் எப்போதும் அவளில் ஒரு வெறுமையை உணர்ந்துக்கொண்டே தான் இருந்தாள் அமுதா.

_______

"என்னங்க... என்னங்க…"

"ம் சொல்லு மரகதம்" என்று செய்தியில் கண்ணை பதித்திருந்த சௌந்தரலிங்கம் என்வென்று கேட்க

"இதையே பாத்துட்டு இருங்க உங்க அருமை பொண்ணு ஒழுங்கா சாப்பிட்டு, தூங்கி, இரண்டு வாரம் ஆகுது போக, போக இன்னும் துரும்பா போயிடுவா போல இருக்கு" என்று ஆதங்கமாக தொடங்கி அழுகையில் முடித்திட

"என்னடி சொல்ற?... அவளுக்கு என்ன செய்து உடம்புக்கு முடியலையா? ஏதாவது" என்று பதறிய சௌந்தரலிங்கம் "இதை உடனே சொல்றதுக்கு என்ன இரண்டு வாரம் காத்துக்கிட்டு இருந்தியோ" என்று திட்டியவர் உடனே மகளின் அறைக்கு செல்ல

அவளோ விசாகனிடம் போட்ட சண்டையின் தாக்குதலில் இருந்தாள். ஏற்கனவே அண்ணன் தந்தை செய்த சத்தியம் மனதில் காயத்தை ஏற்படுத்தி இருக்க விசாகனின் வார்த்தைகள் அதில் அமிலத்தை ஊற்றியது போன்ற உணர்வில் இருந்தாள். மெத்தையில் கண்களை மூடி படுத்து இருந்தவளின் கருவிழிகள் சுவற்றையே வெறித்து இருந்தன .

மனதில் நிறைந்தவனிடம் 'நீ என்னை எப்படி சொல்லலாம் வேற ஒருத்தனை கட்டிக்கோன்னு அதை சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு ஹீரோ… என்னை நினைக்காதன்னு சொல்ல கூட உனக்கு உரிமை இல்லை... ஆனா நீ சாதரணமா சரி போய் பார்த்து வைச்சவனை கட்டிக்கோன்னு சொல்ற!!! போடா இனி நீயா என்னை தேடி வரனும் அதுவரை நான் பேச மாட்டேன். ஏன் ஒரு பார்வை கூட உன்னை பார்க்க மாட்டேன்' என்று மனதோடு அவனிடம் சண்டையிட்டபடி படுத்துக்கிடந்தவளை

"தேவா" என்ற தந்தையின் கரிசனமான அழைப்பில் எழுந்து அமர்ந்தவள் நிலத்தினை பார்த்தாள் இந்த இரு வாரங்கள் தந்தை தாய் என எவர் முகத்தையும் பார்க்க பிரியப்படாமல் இருந்தாள்..

தந்தையை கண்டு முகம் திருப்பியவளின் அருகில் அமர்ந்தவர் "என்ன தேவா சரியா சாப்பிடறது இல்லலயாம், உன் அம்மா கவலைபடுறா" என்றார் தலையை வருடியபடி

அதற்கும் அமைதியாய் இருந்தவளை "என்ன மா எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லு உடம்புக்கு முடியலையா இல்லை" என்று பரிவாய் கேட்டவரை முடிந்த மட்டும் முறைத்த மரகதம்

"எப்படி சொல்லுவா? அதான் நீங்க ரெண்டுபேருமா சேர்ந்து வீட்டு பொம்பளைங்கள கேட்காம சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கிங்களே.. எல்லாம் அதால கூட இருக்கலாம் இல்லையா?" என்று கூறி முகத்தை திருப்பிக்கொள்ள

"அட நீ வேற மரகதம் அதையேன் இப்போ நியாபக படுத்துற... வேற ஏதாவது கூட இருக்கலாம் இல்லையா?" என்று மனைவியை அடக்கி பேசியவர் மகளிடம் "தேவாமா அப்பாவும், அண்ணனும் உனக்கு நல்லதை தான் பண்ணுவோம். உன் அத்தைகாரி தான் அப்படி... மத்தபடி அருண் ரொம்ப நல்ல பையன் மா உன் மேல நிறைய ஆசைய வைச்சி இருக்கான். அது மட்டும் இல்லாம நம்ம ஜெயசந்திரன் கிட்டயும் அருண் இதை பத்தி பேசின பிறகுதான் நான் முடிவையே சொன்னேன்".

"கல்யாணம் பண்ணி வைச்சாலும் அவனோட தான் நீ தங்க போறது அங்க சாந்தா வர முடியாது உன்னை ஒரு சொல் சொல்ல விட மாட்டான் அருண் பையன்.... உன் அண்ணன் அதை பத்தி எல்லாத்தையும் பேசி வைச்சி இருக்கான் மா…" என்று மகளுக்கு புரிய வேண்டுமே, தான் அவளுக்கு உரு விளைவிக்க வில்லையே என்று நிறுபித்திட பேச

"என்ன தான் இருந்தாலும் உங்க தக்கச்சிக்கு நாக்கு விஷக்கொடுக்கு என் மக எப்படி தாங்குவா பூவாட்டும் பொண்ணே வளர்ந்து ஒரு பாழும் கிணத்துல தள்ளி விட முடிவு பண்ணிட்டிங்க" என்று மகளை அனைத்துக்கொண்டு அழுதிட

"மரகதம்" என்று கர்ஜனையாக பேசியவர் "முதல்ல அழுவதை நிறுத்து நாராசமா இருக்கு... உனக்கு என்னடி பண்ணனும் அவளை கூப்பிட வேண்டாம்னு சொன்னேன் வரவைச்சிட்டு, எல்லாம் கதையும் தெரிஞ்சா? அவ என்ன செய்வா? வேலைய காட்டிட்டா நீ வெளியே கொட்ற என்னால கொட்ட முடியல அவ்வளவு தான் வித்தியாசம் எனக்கும் இருக்கு டி பாசம்... என்னமோ இப்ப உடனே எல்லாம் நடந்து போறா மாதிரி பேசிக்கட்டு இருக்க, அமைதியா இரு எது நடக்கனுமோ அது மட்டும் தான் நடக்கும்". என்றவர் துண்டை உதறி தோளில் போட்டபடி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

"என்னம்மோ பண்ணுங்க நான் சொல்றதை யார் கேக்குறா ஏய் நீயாவது என் பேச்சை கேளுடி" என்று மகளை பார்த்துக் கூறியவர் புலம்பியபடியே அறையே விட்டு வெளியேற

கண்களை இறுக்க மூடி படுத்தவளின் கருவண்டு விழிகள் நிலையில்லாமல் அலைபாய விருட்டென எழுந்தவள் மேகலாவை காண சென்றாள்.

"ஏய் வா புள்ள உள்ள வா புள்ள" என்றிட "கலா கோவில் போகலாம் வரியா டீ" என்றிட்டாள் தேவா

"ஒரு நிமிஷம் இரு புள்ள" என்றவள் அம்மா நான் கோவில் போய்ட்டு வறேன்" என்று குரலை கொடுத்தவள் மறுமொழிக்கு காத்திராமல் தேவாவுடன் கோவிலுக்கு சென்றாள்.

"சொல்லு புள்ள என்ன உன் மனசை அறிக்குது"

"கலா"

"தெரியும் புள்ள என்று ஏதோ இருக்கு இல்லன்னா நீ இப்படி இருக்க மாட்ட சொல்லு புள்ள"

அன்று தனக்கும் விசாகனுக்கும் நடந்த வாக்குவாதத்தை கூறி அவளின் தோள் சாய்ந்திட

"என்ன தேவா குழந்தை மாதிரி அழற அந்த அண்ணனை பத்தி தான் தெரியும் ல உனக்கு, சாதரணமாவே சண்டியர் கணக்கா கோவம் வரும் இதை பத்தி பேசினா என்ன செய்வாரு அதான் அடிச்சிப்போட்டாரு விடு புள்ள உனக்கு இது எல்லாம் சாதாரணம்" என்று தேற்றிட

"பச் இல்ல கலா என் மனசே விட்டு போச்சி… நான் தான் முதல்ல இருந்து இழுத்து பிடிச்சிக்கிட்டு இருக்கேன் அவர் மனசுல கடுகு அளவு கூட என் மேல அபிப்பிராயம் இல்ல" என்று அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது

"இங்க பாரு புள்ள இதை நீ சொன்னாப்போல கொஞ்சம் ஆறப்போடு, படிப்புல கவனத்தை திருப்பு இன்னும் ஆறு மாசம் இருக்கு உன் அத்தை பெத்த ரத்தினத்துக்கு பரிசம்போட்டு பட்டா போட அதுவரை உனக்கு நேரம் இருக்கு சரியா… எப்ப வேண அந்த அண்ணன் மனசு மாறலாம்" என்று சமாதனம் செய்திட்டவளிடம்

"ஒருவேள மாறலன்னா?" என்று அச்சத்தோடு கேட்டாள் தேவா

"நல்லதாவே நினைக்க மாட்டிய புள்ள? அது எல்லாம் மாறும் புரிஞ்சிதா இப்போ நாம வந்த வேலைய பாப்போம்... இன்னும் கொஞ்ச நாள்ல அடுத்த செம் வரப்போகுது ஒழுங்கா மார்க்க வாங்கு இதுல தேறிட்டா நாம படிக்கறதை வைச்சிக்கூட கல்யாணத்தை ஒத்தி போடலாம் எது நடந்தாலும் நமக்கு லாபம் தானே" என்று மேகலா கூறியதும்

"நடக்குமா டி" என்று ஈனஸ்வரத்தில் கேட்டவளை கொலை வெறியுடன் பார்த்த மேகலா "அப்படியே கழுத்துல கைய வைச்சி நெறுக்கி சாகடிச்சிடுவேன். மாறுமா நடக்குமான்னு சந்தேகமாவே கேப்பியா எனக்கு தொண்டை தண்ணி வத்தி போகுதுடி உனக்கு சமாதானம் சொல்லியே" என்று சலிப்புடன் கூற

மேகலாவின் தாடையை பிடித்து ஆட்டியவள் கோச்சிக்காதடி "எனக்கு இருக்க டென்ஷனை உன்கிட்ட கேட்டேன்" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொள்ள

"அதை விடு புள்ள நாளைல இருந்து காலேஜ் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு தெரியும் ல வீட்டுல சொல்லிடு இல்ல அதுக்கும் உன் நொண்ணன் குதிப்பான்... பிக்காலி பைய அவனால வந்தது இது எல்லாம், நீங்க ஜோடி சேரவே இல்லை இவன் வேலைய காட்டி ஜோடியே சேர முடியாதபடி பிரிச்சி விட்டு வேடிக்கை பாக்குறான்... நீயெல்லாம் ஒரு பொண்ணு பின்னாடி நாயா சுத்தி தான்டா கல்யாணம் பண்ணுவ என் பிரெண்டை பண்ற டார்ச்சருக்கு" என்று ஜெயசந்திரனுக்கு இன்ஸ்டென்ட் சாபத்தை கொடுத்த மேகலா தோழியை சாமி தரிசனம் செய்ய சன்னதியை நோக்கி அழைத்து சென்றாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN