இனிய ஆரம்பம்!

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய் ஃபிரண்ட்ஸ்!

உங்கள் மீராஜோ

ஆனால் இந்த கதை முழுவதும் கற்பனையே!

நீங்கள் எனக்கு தந்த ஆதரவிற்கு நன்றி கூறி என் பயணத்தை தொடர்கிறேன்... என்றும் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்!

கதை யின் பெயர் சிம்டாங்காரன்!
இதற்கு அர்த்தம் கண் சிமிட்டாமல் பார்க்க வைப்பவன்! நான் புற அழகை மட்டும் கூறவில்லை... ஏனென்றால் அழகு என்பது மனதைப் பொறுத்த விசயம்! நமக்கு பிடித்தவர்கள்தான் உலகிலேயே மிக அழகாகத் தோன்றுவர். இல்லையா!?

நம் வாழ்வில் நாமும் கண் சிமிட்ட மறந்து யாரையேனும் பார்த்திருப்போம்! அதற்கு காரணம், அவர்கள் நம் மீது கொண்ட அன்பா இருக்கலாம்!.. அக்கரையாக இருக்கலாம்! அவர்களின் திறமையாக இருக்கலாம்! இத்யாதி... (etc ... பா!)

நம் சிம்டாங்காரன் னும் அப்படித்தான் புற அழகில் மட்டுமல்ல அக அழகிலும் கண் சிமிட்டாமல் பார்க்க வைப்பான்.

நம் கதாநாயகன் பெயர் ஸ்ரீமேகன்.
மேகத்தைப்போல மென்மையானவன். (பிறந்ததும் அவன் பெற்றோர் தூக்கிப் பார்த்து உணர்ந்து பெயர் வைத்திருக்கலாம்! அல்லது மனதால் மென்மையாக இருப்பான் என்றும் பெயர் வைத்திருக்கலாம்), மேகத்தைப்போல போல கருணை மிகுந்தவன், மேகத்தைப்போல குளிர்ந்த மனம் உடையவன், இத்யாதி, இத்யாதி!

ஸ்ரீ மேகனுடைய காதலை சொல்வது தான் நம் கதை. ..

இந்த கதையையும் நீங்கள் படித்து, ஓட்டு போடுங்கள். .. comments பண்ணுங்க! நன்றி!

ஓகே ஃபிரண்ட்ஸ்! இனி கதைக்குள் செல்வோம்...


நன்றி!


👀1👀
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN