அத்தியாயம்: 17
வர்ஷித் டைரியில் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் அவனின் காதலி தான் என்பதை புரிந்துகொண்டாள் வர்ஷித்தின் அம்மூ. அவள் தான் என்பதற்கு ஆதாரமாக ஆதிகாவின் சிறு வயது போட்டோ ஒன்றை டைரியின் கடைசி பக்கத்தில் இடம் பெற்று, சந்தேகத்தை தீர்த்து தெளிவான பதிலை கையில் தந்தது வர்ஷித்தின் அம்மூ ஆதிகா தான் என்று.
மேல சென்ற வர்ஷித், தன் மேல் உள்ள கோபத்திலும், அவள் முகத்தில் எப்படி முழிப்பது என்ற குற்ற உணர்விலும் கீழே வராமல் மொட்டை மாடியிலே படுத்துகொண்டான். தான் மட்டும் அவள் மீது காதல் வைத்தால் போதுமா? அதற்காக இப்படியா அவள் அனுமதி இன்றி செய்வது? அவள் என்னை காதலிக்க வில்லையே, இதை எப்படி ஏற்று இருப்பாள். அவள் மனம் புண் பட்டிருக்குமே. என்னை enna நினைத்திருப்பாள். கண்டிப்பா என் தேவைக்கே அவளை தொட்டேன் என நினைத்துவிட்டால்.... அட கடவுளே ஏன் என்னைய ரொம்ப சோதிக்கிற? இதுக்கு ஒரு சீக்கிரமா முடிவு கட்டணும். அவளோட நிம்மதிய நானே பறிச்சிட்டேனே என தன்னை தானே திட்டிக்கொண்டே கண் அயர்ந்தான்.
அவளுக்கு வர்ஷித் காதலித்ததை நினைத்து அதிர்ச்சி என்றால் தன்னையே காதலித்தது தான் பேரதிர்ச்சி.
இதனை படித்து முடித்தவளுக்கு இனிமேல் வர்ஷித் தனக்கு மட்டுந்தான். அவருடைய காதலும் தனக்கு தான் என நினைத்து ஆனந்தம் கொள்வதா? அல்ல தன்னால் இவ்வளவு வலியை வாழ்வில் சந்தித்திருக்கிறான் என்பதை நினைத்து வருத்தம் கொள்வதா? இத்தனை காதல் என்மீது வைத்துவிட்டு இவ்வளவு ஒதுக்கம் காட்டுவது எதற்கு? விஷ்ணுவை விரும்பியதால் தன்னை வெறுக்கிறாரோ? தன்னை இனிமேல் ஏற்கமாட்டாரோ? என பல கேள்விகள் அவளுள் எழும்பியது சற்று நேரம் முன்னால் அவன் செலுத்திய அன்பை மறந்து.
தன் வாழ்க்கையில் தனக்கு தெரியாமலே தன்னால் ஒருவன் கஷ்டப்பட்டிருப்பது எவ்வளவு வேதனையை தரும் என்பதை அப்போது உணர்ந்தாள் ஆதிகா.
என்ன ஒரு வகையான காதல் இவனது? நான் சந்தோசமாக உள்ள வரை அவனது காதல் வாழுமாம். இதை நினைக்கும்போதெல்லாம் அவள் பூரித்துப்போனாள். இவன் ரத்தம் கொடுத்ததை நினைக்கையில் மேலும் உடல் சிலிர்த்து போனாள்.
கடவுளின் கணக்கை எண்ணி வியந்துதான் போனாள். எவ்வளவு சரியாக இருவரையும் சேர்த்து வைத்துள்ளார். இவ்வுலகில் நடப்பது எல்லாம் ஒரு வித காரணத்தோடு என்பதை முன்னாள் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், அதுவே இன்று கண்முன் நிகழ்ந்திருப்பதை எண்ணி அதிசயித்து போனாள். என்னால் வர்ஷித் பட்ட துன்பங்களுக்கு இனி நானே மருந்தாக வேண்டும்.
தன் சந்தோஷத்திற்காக என்ன வேணாலும் செய்யும் மனிதர்கள் வாழும் இந்த மண்ணில் என்னுடைய சந்தோசத்தை எண்ணி தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த வர்ஷித் ஆதிகாவின் மனதில் காதலையும் தாண்டி ஒரு பெரிய இடத்தை பெற்றிருந்தான். கோடி காரணங்களை கொட்டினாலும் இனிமேல் வர்ஷித் தான் தன் வாழ்வென்று முடிவு செய்தாள். அவனின் மனதிலுள்ள குறைகளை களைய வேண்டும். பிறகு, வாழ்க்கையை ஆரம்பிக்கணும் என கனவு கோட்டையை கற்பனையில் கட்டி முடித்தாள். நாளை வர்ஷித் செய்ய இருக்கும் செயல் தெரியாமல்.
வர்ஷித் சொல்லியிருந்தால் கூட இவ்வளவு காதலித்திருப்பான்னு எனக்கு தெரிஞ்சிருக்காது. வெறும் மூணு வார்த்தையில முடிஞ்சிருக்கும். இத படிச்சி முழுமையாக தெரிஞ்சிக்கிட்டோம் என ஒரு மனது கூச்சல் போட்டாலும், இன்னொரு மனம் அவன்கிட்ட திட்டு வாங்க ரெடியா இரு
நம்ம ஏதோ ஒரு ஆர்வத்துல படிச்சித்துக்கு திட்டு கண்டிப்பா உண்டு என பயமுறுத்தியது.
'முதல இன்னிக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு என்கிட்ட பேசுறதே சந்தேகம் தான். இதுல எங்க திட்டுறது. அப்படி திட்டுனா கூட வாங்கிக்கலாம்' என மனதை அடக்கி வைத்து வர்ஷித்தின் காதலுக்கு தானே உரிமை கொண்டவள் என்ற நிம்மதியில் தாமதமாகவே உறங்கிப்போனாள்.
பொழுதும் விடிந்தது. குற்ற உணர்வோடும், ஆதிகா முகத்தில் எப்படி முழிப்பது எனும் பயத்தோடும் அறையை நோக்கி பயணித்தான். வர்ஷித் அறைக்குள் நுழையும்போது, ஆதிகா நிம்மதியே உருவென உறங்கிக்கொண்டிருந்தாள்.
உறங்குபவளையே பார்த்து கொண்டிருந்தான். அவளின் உதடு அவனிடம், 'ஏன் நேற்று என்னை மட்டும் விட்டு சென்றாய்?' என கோபித்து கேள்வி கேட்பது போல தோன்ற, :இது என்ன மாதிரியான எண்ணம்' என தன்னையே திட்டிக்கொண்டு சட்டென்று பார்வையை மாற்றியவனின் பார்வையில் சிக்கியது கண்ணீர் தடம் பதிந்த அவளின் கன்னங்கள் தான். அவனின் காதலை படித்து வருத்தமுற்று சில கண்ணீர் துளிகள் சிந்தினாள் அவள். ஆனால், அவனோ நேற்று விருப்பமில்லாத முத்தத்தை ஏந்திய தாலே இந்த கன்னம் இன்று கண்ணீர் தடம் ஏந்திக்கொண்டிருக்கிறது. அவள் இதற்காக வருந்தி இருக்கிறாள் என அவன் எடுத்துக்கொண்டான், வர்ஷித் ஆதிகாவை நெருங்கும்போது அவள் மறுப்பேதும் சொல்லாமல் அவனிடம் உருகி நின்றதை மறந்து.
தன்னால் தான் அவளுக்கு கஷ்டம், வேதனை எல்லாமே. இனிமேல் அவளிருக்கும் பக்கம் கூட போகவே கூடாது என எண்ணி மனதில் பதிய வைத்துக்கொண்டான், இது நடக்காத செயல் என்பதை அறியாமல்.
'இவள் வேதனை படுவதை தன்னால் பார்க்க இயலாது, சீக்கிரமாகவே டிவோர்ஸ்க்கு ஏற்பாடு செய்யணும்' என மீண்டும் தான் காதலை தன்னுள் அடக்கிக்கொண்டு யோசித்தான்.
இவளின் டிவோர்ஸ் விஷயத்தில் காட்டும் தீவிரத்தை விஷ்ணுவின் அச்சிடேன்ட் விஷயத்திலும் காட்ட வேண்டும் என முடிவெடுத்தான்.
ஏனென்றால், விஷ்ணு விஷயத்தில் ஒரு சந்தேகம் மனதை குடைந்து கொண்டிருக்க, அவனின் நண்பன் ஒருவன் காவல் துறையில் பணிபுரிகிறான். அவனிடம் இந்த அச்சிடேன்ட் பற்றி விசாரிக்க சொல்லி இருந்தான்.
இரண்டு நாட்கள் சென்றிருக்க, ஆதிகாவிடம் பாராமுகம் காட்டியே வந்தான் அந்த சம்பவத்திற்கு பிறகு. அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவன், 'அறையிலே ஒரு பைலை எடுக்க மறந்துவிட்டேன்' என தாயிடம் கூறி மேல சென்றான் வர்ஷித். அங்கு குளித்து விட்டு வந்த ஆதிகா, 'வர்ஷித் இப்போ தான் கீழே சென்றான், கண்டிப்பா இப்போ வரமாட்டான்'எனும் அசட்டு தைரியத்தில் கதவை தாழிடாமலே ஆடையை மாற்றிக்கொண்டிருந்தாள்.
வர்ஷித் தீடிரென்று கதவை திறந்ததும் தான் இருக்கும் நிலை குறித்து அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள். ஆனால், அவனோ அங்கு ஆதிகா இருப்பது தெரியாமல் கதவை தட்டாமலே நுழைந்துவிட்டன். வந்தவன் அவளின் நிலை அறியாமல், அவள் விரித்த விழியில் விழுந்து கிடந்தான் வர்ஷித். அவளின் விழிகள் மந்திரம் கூறி தந்திரம் செய்து இயந்திரம் போல் ஆக்கிவிட்டது ஆறடி ஆண்பிள்ளையை ஒரு நொடியில். பிறகு சுதாரித்தவன் அவள் இருக்கும் நிலை கண்டு வேகமாக வெளியே சென்று நின்று கொண்டான்.
'அய்யோ, கதவ தட்டி பாத்துட்டு உள்ளே போயிருக்கலாம்.
அவ என்ன பத்தி என்ன
நினைச்சிருப்பா, கண்டிப்பா தப்பாத்த நினைப்பா. ஏற்கனவே,நேத்து அப்படி ஆயிடுச்சு இப்போ இது மாதிரி வேற' என நொந்துகொண்டான்.
பிறகு, அறையிலிருந்து வாங்க எனும் ஓசை வந்த பிறகே உள்ளே சென்று கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது ஒரு நிமிடம் ஆதிகாவை பார்த்து சாரி என கூறிவிட்டு நொடிகூட நிற்காமல் நகர்ந்தான். ஆனால், அவளோ நிமிர்ந்துகூட அவனை பார்க்கவில்லை வெட்கத்தில்.
அவனோ அவள் தலை குனிந்து நிற்பதை வேற மாதிரி எடுத்துக்கிட்டான்.
அன்றிரவு அறைக்குள் நுழைந்தவன் படுக்கையை சரி செய்யும் ஆதிகாவிடம், "ஆதிகா இந்த, இதுல ஒரு சைன் போட்டு கொடு"என்றான் வெகு சாதாரணமாக, விவாகரத்து பாத்திரத்தை நீட்டிவிட்டு. அவளுக்கோ அதிர்ச்சி தான். ஆனால், இதை எதிர்பார்த்தது தானே என மனதை தேற்றி கொண்டு விழ இருக்கும் கண்ணீரை முயற்சி செய்து அணை கட்டி தடை செய்தாள். "கொஞ்சம் டைம் வேணும், நல்ல நேரம் பார்த்து சைன் போட்டு தரேன்"என நக்கல் கலந்த தோரணையில் கூற அவனுக்கு சிறுபுன்னகை எழுந்தது. 'பொண்டாட்டி டிவோர்ஸ்க்கு சைன் போட்டு தரேன்னு சொல்றா, இவன் கவலைப்படாம சிரிக்கிறான்.இவனை காதல ஒத்துக்கவச்சி , லைப் ஆரம்பிக்குறதுக்குள்ள கடவுளே வயசாகிடும் போல'என மனதிலே திட்டிக்கொண்டே படுத்தாள், அவனும் வழக்கம் போல் சோபாவில் படுத்துகொண்டான்.
அந்நேரம், வசந்தா அங்கு ஆதிகாவிடம் ஏதோ கேக்க வந்தவர், இவ்விருவர் இருக்கும் நிலையை கண்டு வேதனையும் குழப்பமும் அடைந்தார். இதுங்கள இப்படியே விடக்கூடாது எனும் முடிவுக்கொண்டு, "ஆதிகா"என அழைத்தார். இருவரும் திரும்பி பார்க்க, "என்னப்பா வர்ஷித் சோபால படுத்திருக்க, கை கால் அசையாம நைட் முழுக்க ஒரே மாதிரி படுத்திருந்த கை கால் வலிக்கும்ப்பா, எழுந்து மேல படுப்பா" என சாதாரணமாக கூறினாலும் அதில் கட்டளை இருந்தது, மேல ஏறி படு என்று. பிறகு ஏதோ கேக்கவந்து அதை மறந்து போக்குக்காக எதையோ கேட்டுவிட்டு சென்றார் வசந்தா. வர்ஷித் வேற என்ன செய்வது என வழி தெரியாமல் மேல படுத்துகொண்டான்.
வர்ஷித் டைரியில் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் அவனின் காதலி தான் என்பதை புரிந்துகொண்டாள் வர்ஷித்தின் அம்மூ. அவள் தான் என்பதற்கு ஆதாரமாக ஆதிகாவின் சிறு வயது போட்டோ ஒன்றை டைரியின் கடைசி பக்கத்தில் இடம் பெற்று, சந்தேகத்தை தீர்த்து தெளிவான பதிலை கையில் தந்தது வர்ஷித்தின் அம்மூ ஆதிகா தான் என்று.
மேல சென்ற வர்ஷித், தன் மேல் உள்ள கோபத்திலும், அவள் முகத்தில் எப்படி முழிப்பது என்ற குற்ற உணர்விலும் கீழே வராமல் மொட்டை மாடியிலே படுத்துகொண்டான். தான் மட்டும் அவள் மீது காதல் வைத்தால் போதுமா? அதற்காக இப்படியா அவள் அனுமதி இன்றி செய்வது? அவள் என்னை காதலிக்க வில்லையே, இதை எப்படி ஏற்று இருப்பாள். அவள் மனம் புண் பட்டிருக்குமே. என்னை enna நினைத்திருப்பாள். கண்டிப்பா என் தேவைக்கே அவளை தொட்டேன் என நினைத்துவிட்டால்.... அட கடவுளே ஏன் என்னைய ரொம்ப சோதிக்கிற? இதுக்கு ஒரு சீக்கிரமா முடிவு கட்டணும். அவளோட நிம்மதிய நானே பறிச்சிட்டேனே என தன்னை தானே திட்டிக்கொண்டே கண் அயர்ந்தான்.
அவளுக்கு வர்ஷித் காதலித்ததை நினைத்து அதிர்ச்சி என்றால் தன்னையே காதலித்தது தான் பேரதிர்ச்சி.
இதனை படித்து முடித்தவளுக்கு இனிமேல் வர்ஷித் தனக்கு மட்டுந்தான். அவருடைய காதலும் தனக்கு தான் என நினைத்து ஆனந்தம் கொள்வதா? அல்ல தன்னால் இவ்வளவு வலியை வாழ்வில் சந்தித்திருக்கிறான் என்பதை நினைத்து வருத்தம் கொள்வதா? இத்தனை காதல் என்மீது வைத்துவிட்டு இவ்வளவு ஒதுக்கம் காட்டுவது எதற்கு? விஷ்ணுவை விரும்பியதால் தன்னை வெறுக்கிறாரோ? தன்னை இனிமேல் ஏற்கமாட்டாரோ? என பல கேள்விகள் அவளுள் எழும்பியது சற்று நேரம் முன்னால் அவன் செலுத்திய அன்பை மறந்து.
தன் வாழ்க்கையில் தனக்கு தெரியாமலே தன்னால் ஒருவன் கஷ்டப்பட்டிருப்பது எவ்வளவு வேதனையை தரும் என்பதை அப்போது உணர்ந்தாள் ஆதிகா.
என்ன ஒரு வகையான காதல் இவனது? நான் சந்தோசமாக உள்ள வரை அவனது காதல் வாழுமாம். இதை நினைக்கும்போதெல்லாம் அவள் பூரித்துப்போனாள். இவன் ரத்தம் கொடுத்ததை நினைக்கையில் மேலும் உடல் சிலிர்த்து போனாள்.
கடவுளின் கணக்கை எண்ணி வியந்துதான் போனாள். எவ்வளவு சரியாக இருவரையும் சேர்த்து வைத்துள்ளார். இவ்வுலகில் நடப்பது எல்லாம் ஒரு வித காரணத்தோடு என்பதை முன்னாள் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், அதுவே இன்று கண்முன் நிகழ்ந்திருப்பதை எண்ணி அதிசயித்து போனாள். என்னால் வர்ஷித் பட்ட துன்பங்களுக்கு இனி நானே மருந்தாக வேண்டும்.
தன் சந்தோஷத்திற்காக என்ன வேணாலும் செய்யும் மனிதர்கள் வாழும் இந்த மண்ணில் என்னுடைய சந்தோசத்தை எண்ணி தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த வர்ஷித் ஆதிகாவின் மனதில் காதலையும் தாண்டி ஒரு பெரிய இடத்தை பெற்றிருந்தான். கோடி காரணங்களை கொட்டினாலும் இனிமேல் வர்ஷித் தான் தன் வாழ்வென்று முடிவு செய்தாள். அவனின் மனதிலுள்ள குறைகளை களைய வேண்டும். பிறகு, வாழ்க்கையை ஆரம்பிக்கணும் என கனவு கோட்டையை கற்பனையில் கட்டி முடித்தாள். நாளை வர்ஷித் செய்ய இருக்கும் செயல் தெரியாமல்.
வர்ஷித் சொல்லியிருந்தால் கூட இவ்வளவு காதலித்திருப்பான்னு எனக்கு தெரிஞ்சிருக்காது. வெறும் மூணு வார்த்தையில முடிஞ்சிருக்கும். இத படிச்சி முழுமையாக தெரிஞ்சிக்கிட்டோம் என ஒரு மனது கூச்சல் போட்டாலும், இன்னொரு மனம் அவன்கிட்ட திட்டு வாங்க ரெடியா இரு
நம்ம ஏதோ ஒரு ஆர்வத்துல படிச்சித்துக்கு திட்டு கண்டிப்பா உண்டு என பயமுறுத்தியது.
'முதல இன்னிக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு என்கிட்ட பேசுறதே சந்தேகம் தான். இதுல எங்க திட்டுறது. அப்படி திட்டுனா கூட வாங்கிக்கலாம்' என மனதை அடக்கி வைத்து வர்ஷித்தின் காதலுக்கு தானே உரிமை கொண்டவள் என்ற நிம்மதியில் தாமதமாகவே உறங்கிப்போனாள்.
பொழுதும் விடிந்தது. குற்ற உணர்வோடும், ஆதிகா முகத்தில் எப்படி முழிப்பது எனும் பயத்தோடும் அறையை நோக்கி பயணித்தான். வர்ஷித் அறைக்குள் நுழையும்போது, ஆதிகா நிம்மதியே உருவென உறங்கிக்கொண்டிருந்தாள்.
உறங்குபவளையே பார்த்து கொண்டிருந்தான். அவளின் உதடு அவனிடம், 'ஏன் நேற்று என்னை மட்டும் விட்டு சென்றாய்?' என கோபித்து கேள்வி கேட்பது போல தோன்ற, :இது என்ன மாதிரியான எண்ணம்' என தன்னையே திட்டிக்கொண்டு சட்டென்று பார்வையை மாற்றியவனின் பார்வையில் சிக்கியது கண்ணீர் தடம் பதிந்த அவளின் கன்னங்கள் தான். அவனின் காதலை படித்து வருத்தமுற்று சில கண்ணீர் துளிகள் சிந்தினாள் அவள். ஆனால், அவனோ நேற்று விருப்பமில்லாத முத்தத்தை ஏந்திய தாலே இந்த கன்னம் இன்று கண்ணீர் தடம் ஏந்திக்கொண்டிருக்கிறது. அவள் இதற்காக வருந்தி இருக்கிறாள் என அவன் எடுத்துக்கொண்டான், வர்ஷித் ஆதிகாவை நெருங்கும்போது அவள் மறுப்பேதும் சொல்லாமல் அவனிடம் உருகி நின்றதை மறந்து.
தன்னால் தான் அவளுக்கு கஷ்டம், வேதனை எல்லாமே. இனிமேல் அவளிருக்கும் பக்கம் கூட போகவே கூடாது என எண்ணி மனதில் பதிய வைத்துக்கொண்டான், இது நடக்காத செயல் என்பதை அறியாமல்.
'இவள் வேதனை படுவதை தன்னால் பார்க்க இயலாது, சீக்கிரமாகவே டிவோர்ஸ்க்கு ஏற்பாடு செய்யணும்' என மீண்டும் தான் காதலை தன்னுள் அடக்கிக்கொண்டு யோசித்தான்.
இவளின் டிவோர்ஸ் விஷயத்தில் காட்டும் தீவிரத்தை விஷ்ணுவின் அச்சிடேன்ட் விஷயத்திலும் காட்ட வேண்டும் என முடிவெடுத்தான்.
ஏனென்றால், விஷ்ணு விஷயத்தில் ஒரு சந்தேகம் மனதை குடைந்து கொண்டிருக்க, அவனின் நண்பன் ஒருவன் காவல் துறையில் பணிபுரிகிறான். அவனிடம் இந்த அச்சிடேன்ட் பற்றி விசாரிக்க சொல்லி இருந்தான்.
இரண்டு நாட்கள் சென்றிருக்க, ஆதிகாவிடம் பாராமுகம் காட்டியே வந்தான் அந்த சம்பவத்திற்கு பிறகு. அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவன், 'அறையிலே ஒரு பைலை எடுக்க மறந்துவிட்டேன்' என தாயிடம் கூறி மேல சென்றான் வர்ஷித். அங்கு குளித்து விட்டு வந்த ஆதிகா, 'வர்ஷித் இப்போ தான் கீழே சென்றான், கண்டிப்பா இப்போ வரமாட்டான்'எனும் அசட்டு தைரியத்தில் கதவை தாழிடாமலே ஆடையை மாற்றிக்கொண்டிருந்தாள்.
வர்ஷித் தீடிரென்று கதவை திறந்ததும் தான் இருக்கும் நிலை குறித்து அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள். ஆனால், அவனோ அங்கு ஆதிகா இருப்பது தெரியாமல் கதவை தட்டாமலே நுழைந்துவிட்டன். வந்தவன் அவளின் நிலை அறியாமல், அவள் விரித்த விழியில் விழுந்து கிடந்தான் வர்ஷித். அவளின் விழிகள் மந்திரம் கூறி தந்திரம் செய்து இயந்திரம் போல் ஆக்கிவிட்டது ஆறடி ஆண்பிள்ளையை ஒரு நொடியில். பிறகு சுதாரித்தவன் அவள் இருக்கும் நிலை கண்டு வேகமாக வெளியே சென்று நின்று கொண்டான்.
'அய்யோ, கதவ தட்டி பாத்துட்டு உள்ளே போயிருக்கலாம்.
அவ என்ன பத்தி என்ன
நினைச்சிருப்பா, கண்டிப்பா தப்பாத்த நினைப்பா. ஏற்கனவே,நேத்து அப்படி ஆயிடுச்சு இப்போ இது மாதிரி வேற' என நொந்துகொண்டான்.
பிறகு, அறையிலிருந்து வாங்க எனும் ஓசை வந்த பிறகே உள்ளே சென்று கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது ஒரு நிமிடம் ஆதிகாவை பார்த்து சாரி என கூறிவிட்டு நொடிகூட நிற்காமல் நகர்ந்தான். ஆனால், அவளோ நிமிர்ந்துகூட அவனை பார்க்கவில்லை வெட்கத்தில்.
அவனோ அவள் தலை குனிந்து நிற்பதை வேற மாதிரி எடுத்துக்கிட்டான்.
அன்றிரவு அறைக்குள் நுழைந்தவன் படுக்கையை சரி செய்யும் ஆதிகாவிடம், "ஆதிகா இந்த, இதுல ஒரு சைன் போட்டு கொடு"என்றான் வெகு சாதாரணமாக, விவாகரத்து பாத்திரத்தை நீட்டிவிட்டு. அவளுக்கோ அதிர்ச்சி தான். ஆனால், இதை எதிர்பார்த்தது தானே என மனதை தேற்றி கொண்டு விழ இருக்கும் கண்ணீரை முயற்சி செய்து அணை கட்டி தடை செய்தாள். "கொஞ்சம் டைம் வேணும், நல்ல நேரம் பார்த்து சைன் போட்டு தரேன்"என நக்கல் கலந்த தோரணையில் கூற அவனுக்கு சிறுபுன்னகை எழுந்தது. 'பொண்டாட்டி டிவோர்ஸ்க்கு சைன் போட்டு தரேன்னு சொல்றா, இவன் கவலைப்படாம சிரிக்கிறான்.இவனை காதல ஒத்துக்கவச்சி , லைப் ஆரம்பிக்குறதுக்குள்ள கடவுளே வயசாகிடும் போல'என மனதிலே திட்டிக்கொண்டே படுத்தாள், அவனும் வழக்கம் போல் சோபாவில் படுத்துகொண்டான்.
அந்நேரம், வசந்தா அங்கு ஆதிகாவிடம் ஏதோ கேக்க வந்தவர், இவ்விருவர் இருக்கும் நிலையை கண்டு வேதனையும் குழப்பமும் அடைந்தார். இதுங்கள இப்படியே விடக்கூடாது எனும் முடிவுக்கொண்டு, "ஆதிகா"என அழைத்தார். இருவரும் திரும்பி பார்க்க, "என்னப்பா வர்ஷித் சோபால படுத்திருக்க, கை கால் அசையாம நைட் முழுக்க ஒரே மாதிரி படுத்திருந்த கை கால் வலிக்கும்ப்பா, எழுந்து மேல படுப்பா" என சாதாரணமாக கூறினாலும் அதில் கட்டளை இருந்தது, மேல ஏறி படு என்று. பிறகு ஏதோ கேக்கவந்து அதை மறந்து போக்குக்காக எதையோ கேட்டுவிட்டு சென்றார் வசந்தா. வர்ஷித் வேற என்ன செய்வது என வழி தெரியாமல் மேல படுத்துகொண்டான்.