அனைத்தும் முடிந்தது... தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் ஒரு மகனாய் செய்து முடித்துவிட்டான் திபாகரன். ஆனால் மனைவிக்கு... அவளை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் ரணமாய் வலித்தது. தன்னவளின் நோய் தெரியாமல்.. அவளின் வலி தெரியாமல்.. அவளின் பிரச்சனை தெரியாமல் ஒரு கணவனாய் இதுவரை இருந்து விட்டான். ஆனால் இனி…
‘இப்படியான உடல்நிலையில் இருப்பவளையா... எனக்காகப் பேசவில்லை... என்னைத் தேடி வரவில்லை என்று இருந்தேன்...' என்று அவன் மனதே அவனைக் கொன்றது.
தற்போதும் இவன் மனது அன்று வல்லவனுடன் பேசிய பேச்சை நோக்கி பயணித்தது. "இன்று தன்யாவுக்கு இருதய மாற்று ஆபரேஷன் என்பதை நான் உன் தந்தை கிட்ட சொல்லிட்டனே... ஏன்... கடலழகன் உன்னிடம் சொல்லலையா?..." என்று கேட்க
என்ன பதில் சொல்வான்... தந்தை சொல்லவில்லை என்பதை எப்படிச் சொல்வான்…
வல்லவன், "உன் தந்தை... மகிழ்வரதன் அலுவலகத்தில் செய்த தவறு எனக்குத் தெரியும்... அதை சாக்கிட்டு... உனக்கும் தன்யாவுக்கும் நடக்க இருந்த திருமணத்திற்கு உன்னை பற்றி முழுமுதலாய் விசாரித்துச் சொன்னது நான் தான்... இன்னும் சொல்லனும்னா... மகிழ்வரதனுக்கும்... உன் தந்தைக்கும் இடையில் பாலமாக இருந்தது நான் தான்... அதாவது உனக்குத் தெரியுமா..."
அவர் கேட்க, 'இல்லையே... இல்லையே... எனக்கு எதுவும் தெரியாதே...' என்று கூவியது விதுனதிபாகரனின் மனது.
'ஏன் அப்பா சொல்லல... எதுக்கு மறைக்கனும்... இதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயங்கள்... அதிலும் இன்று தன்யாவுக்கு இருதய மாற்று ஆபரேஷன் நடக்க இருக்க... எதுக்கு இந்தத் தற்கொலை முடிவு... ஏன் ப்பா... ஏன்... எல்லாம் நல்ல மாதிரியாக தான... நடந்துட்டு இருந்தது.... பிறகு ஏன்...' என்று இவன் மனம் அறற்றியது.
கடலழகன் மனதில் ஆயிரம் இருந்தது... மகனின் வாழ்வு தன்னால் தான் கெட்டு விட்டது... இத்தனைக்கும் சொந்தங்களிடமும்... அலுவலகத்திலும் இவர் செய்த திருட்டை சொல்லவில்லை. தெரிந்த ஒரு சில பேரும் இப்படி செய்து மகன் வாழ்வை அழிச்சிட்டான்னு கடலழகன் காது படவே பேச... தன் செயலின் வீரியம் புரிந்தது இவருக்கு. அதிலும் மாமனார் வீட்டில் தன் மகன் பட்ட அவமானம் வேறு அவரைக் கொல்ல... இன்னும் இன்னும் குறுகிப் போனார் மனிதர். தற்போது தன்யரித்விகாவுக்கு மாற்று இருதயம் கிடைத்து விட... அறுவை சிகிச்சையும் நல்ல முறையில் முடிந்து... எங்கே தன்யாவுக்கு வேறு மணம் செய்து வைத்து விட்டால்... பின் மகனின் வாழ்வு?.. அவருக்குத் தெரியும்... எந்த நிலையிலும் மகன் அவன் மனைவியை விட்டு தரவும் மாட்டான் என்று... அதேபோல் வேறு ஒரு வாழ்வை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான் என்று. இளம் குறுத்துகளான இருவரின் வாழ்வும் எங்கே போய் முடிய போகிறது என்று மனதில் பயம் கொள்ள... இதுபோலான பல எண்ணங்களுக்கு இடையில் தன் திருட்டுக்குத் தண்டனையாக... தற்கொலை முடிவை எடுத்தார் கடலழகன். ஆனால் காலம் கடந்த முடிவு. விளைவு... இரு இளம் நெஞ்சங்களும் மையிருட்டில் சிக்கிக் கொண்டன.
நாட்கள் அதன் போக்கில் நகர... தன்னுள் இறுகி குற்ற உணர்வில் தவிக்க ஆரம்பித்தான் திபாகரன். அந்நேரம் இவனின் வெளிநாட்டுப் பயணச் செய்தி உறுதியாக.. மனைவியின் உடல்நிலையைப் பேணிக் காக்க... அவளின் தாய் வீட்டால் மட்டுமே முடியும் என்ற தவறான முடிவை எடுத்தவன்... மனைவியின் சுக வாழ்வுக்காக.. அவளும் இந்நேரத்தில் தாயை எதிர்பார்ப்பாள் என்ற எண்ணத்தில் மனைவியைச் சந்திக்காமல் அவளுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கொள்ளாமல்... அடுத்தக் கண்டத்தை நோக்கி பறந்து விட்டான் ஆண்மகன்.
‘இப்படியான உடல்நிலையில் இருப்பவளையா... எனக்காகப் பேசவில்லை... என்னைத் தேடி வரவில்லை என்று இருந்தேன்...' என்று அவன் மனதே அவனைக் கொன்றது.
தற்போதும் இவன் மனது அன்று வல்லவனுடன் பேசிய பேச்சை நோக்கி பயணித்தது. "இன்று தன்யாவுக்கு இருதய மாற்று ஆபரேஷன் என்பதை நான் உன் தந்தை கிட்ட சொல்லிட்டனே... ஏன்... கடலழகன் உன்னிடம் சொல்லலையா?..." என்று கேட்க
என்ன பதில் சொல்வான்... தந்தை சொல்லவில்லை என்பதை எப்படிச் சொல்வான்…
வல்லவன், "உன் தந்தை... மகிழ்வரதன் அலுவலகத்தில் செய்த தவறு எனக்குத் தெரியும்... அதை சாக்கிட்டு... உனக்கும் தன்யாவுக்கும் நடக்க இருந்த திருமணத்திற்கு உன்னை பற்றி முழுமுதலாய் விசாரித்துச் சொன்னது நான் தான்... இன்னும் சொல்லனும்னா... மகிழ்வரதனுக்கும்... உன் தந்தைக்கும் இடையில் பாலமாக இருந்தது நான் தான்... அதாவது உனக்குத் தெரியுமா..."
அவர் கேட்க, 'இல்லையே... இல்லையே... எனக்கு எதுவும் தெரியாதே...' என்று கூவியது விதுனதிபாகரனின் மனது.
'ஏன் அப்பா சொல்லல... எதுக்கு மறைக்கனும்... இதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயங்கள்... அதிலும் இன்று தன்யாவுக்கு இருதய மாற்று ஆபரேஷன் நடக்க இருக்க... எதுக்கு இந்தத் தற்கொலை முடிவு... ஏன் ப்பா... ஏன்... எல்லாம் நல்ல மாதிரியாக தான... நடந்துட்டு இருந்தது.... பிறகு ஏன்...' என்று இவன் மனம் அறற்றியது.
கடலழகன் மனதில் ஆயிரம் இருந்தது... மகனின் வாழ்வு தன்னால் தான் கெட்டு விட்டது... இத்தனைக்கும் சொந்தங்களிடமும்... அலுவலகத்திலும் இவர் செய்த திருட்டை சொல்லவில்லை. தெரிந்த ஒரு சில பேரும் இப்படி செய்து மகன் வாழ்வை அழிச்சிட்டான்னு கடலழகன் காது படவே பேச... தன் செயலின் வீரியம் புரிந்தது இவருக்கு. அதிலும் மாமனார் வீட்டில் தன் மகன் பட்ட அவமானம் வேறு அவரைக் கொல்ல... இன்னும் இன்னும் குறுகிப் போனார் மனிதர். தற்போது தன்யரித்விகாவுக்கு மாற்று இருதயம் கிடைத்து விட... அறுவை சிகிச்சையும் நல்ல முறையில் முடிந்து... எங்கே தன்யாவுக்கு வேறு மணம் செய்து வைத்து விட்டால்... பின் மகனின் வாழ்வு?.. அவருக்குத் தெரியும்... எந்த நிலையிலும் மகன் அவன் மனைவியை விட்டு தரவும் மாட்டான் என்று... அதேபோல் வேறு ஒரு வாழ்வை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான் என்று. இளம் குறுத்துகளான இருவரின் வாழ்வும் எங்கே போய் முடிய போகிறது என்று மனதில் பயம் கொள்ள... இதுபோலான பல எண்ணங்களுக்கு இடையில் தன் திருட்டுக்குத் தண்டனையாக... தற்கொலை முடிவை எடுத்தார் கடலழகன். ஆனால் காலம் கடந்த முடிவு. விளைவு... இரு இளம் நெஞ்சங்களும் மையிருட்டில் சிக்கிக் கொண்டன.
நாட்கள் அதன் போக்கில் நகர... தன்னுள் இறுகி குற்ற உணர்வில் தவிக்க ஆரம்பித்தான் திபாகரன். அந்நேரம் இவனின் வெளிநாட்டுப் பயணச் செய்தி உறுதியாக.. மனைவியின் உடல்நிலையைப் பேணிக் காக்க... அவளின் தாய் வீட்டால் மட்டுமே முடியும் என்ற தவறான முடிவை எடுத்தவன்... மனைவியின் சுக வாழ்வுக்காக.. அவளும் இந்நேரத்தில் தாயை எதிர்பார்ப்பாள் என்ற எண்ணத்தில் மனைவியைச் சந்திக்காமல் அவளுடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கொள்ளாமல்... அடுத்தக் கண்டத்தை நோக்கி பறந்து விட்டான் ஆண்மகன்.
பெண்ணவளின் மனதை அறியவில்லை.. அறிய முற்படவும் இல்லை என்பதே உண்மை. விதுனதிபாகரன் மனதில் மனைவியின் பால் காதல் இருந்தது... கூடவே மாமனார் வீட்டில் கிடைத்த அவமானமும் மனதை சூழ்ந்து இருந்தது. மனைவியின் நலனுக்காகவே அன்று அவளை விட்டுச் சென்றவன் இன்று அதீத காதலில் மனைவி முன் குற்றவாளியாக நிற்கிறான்.
இன்று
இருவரின் எண்ணோட்டங்களும் நிகழ் காலத்தை நேக்கி முற்றுகையிட்டது... கணவனின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு இருந்தாள் தன்யா. இப்படியான ஒரு காலைப் பொழுதை பெண்ணவளின் மனம் எத்தனையோ முறை கனவில் தூரிகை கொண்டு ஓவியமாய் வரைந்தது. அதே இன்று நிஜமான போது... மங்கை மனதின் ஆர்ப்பரிப்புக்கு சொல்லவா வேண்டும்.. இதோ இந்தச் சுகம் இன்று முழுவதும் நீளாதா என்ற ஆசையில் தன் இடது பாதத்தைக் கணவன் மேல் படரவிட்டு... தன்னவனை இன்னும் நெருங்கி அவன் நெஞ்சில் முகம் பதித்து இடது கையைக் கணவனின் கழுத்தில் இட்டுத் துயில் கொள்ள... மனைவியின் உடல் மொழியில் துயில் கலைந்தவனோ... தன்னவளை புரட்டி... மங்கையின் நெஞ்சில் முகம் புதைத்து.. முத்தமிட்டு... "I love you my sweetheart..." என்று காதலோடு மொழிய.... அதில் பெண்ணவளின் உடலும்... மனமும்ஒருங்கே மயங்காமல் இருந்தால் தான் அதிசயம். அதில் தன்னவனைத் தன்னுள்ளே இறுக்கிக் கொண்டாள் தன்யரித்விகா.
"கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." விடாமல் ஒலித்த அழைப்பு மணியின் ஓசையில்... இனிமை கலைய... உடலும் மனமும் அதிர... தன்யா பதைபதைக்கவும்
அதைக் கண்டவன் "ஏய்... ரிலாக்ஸ்... எதுக்கு இவ்வளவு பதட்டம்... நீ என் மனைவி ரிது..." கணவனின் வார்த்தைகள் எதுவும் மங்கையை எட்டவில்லை.. அவளிடம் அதே படபடப்பு நீண்டது.
"கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." அழைப்பு மணியும் நின்றபாடில்லை.
"நீ இவ்வளவு எமோஷனல் ஆகக் கூடாது... ரிலாக்ஸ் ரிது..." மனைவியை அணைத்து இவன் எடுத்து சொல்ல
"முதல்ல... வெளிய யாருன்னு பாருங்க..."
"யாரா இருந்தா என்ன... நீ முதல்ல கூலாகு..."
"பெல் சத்தம் நின்னா தான் நான் கூலாக... இப்ப நீங்க போறீங்களா இல்ல நான் போகவா..."
அவ்வார்த்தைக்குக் கட்டுப்பட்டு.. மனைவியை அணைத்து விடுவித்தவன்... மனமேயில்லாமல் எழுந்து சென்று கதவைத் திறக்க...
"காலையில கூவுன கோழி... இப்ப குழம்பா கொதிக்குது... இன்னும் என்ன டா தூக்கம் வேண்டியிருக்கு. எங்க அவ... சீமாட்டிக்கு முறைவாசல் செய்யனும்னு கூடத் தெரியாதா?..." என்று கேட்டபடி உள்ள வந்தவர் வேற யாரு சாட்சாத் தமிழரசி தான்.
"ம்மா... எதுக்கு இப்படி விடாம மணிய அழுத்துற... அவளுக்கு அதிகச் சத்தம் நல்லதுக்கு இல்லனு உங்களுக்குத் தெரியாதா... மணி இப்ப எட்டு தான.. எல்லாம் மெல்ல பார்த்துக்கலாம்..." இவன் கண்டன குரலில் சொல்ல
"அது எப்படி டா... வேலைக்குப் போற கணவனுக்கு இந்நேரம் அடுப்புல வெந்து... கைய சுட்டு... சோறு பொங்கியிருக்க வேணாம்.. அப்படிச் செய்றவ தான நல்ல பொண்டாட்டி... ஆனா இவ என்ன இன்னும் ஒய்யாரமா தூங்கிட்டு இருக்கா... என்ன இருந்தாலும் பெத்தவ மாதிரி வராது டா...."
"ம்மா... நைட் நான் வந்தது லேட்... நாங்க தூங்க போனதும் லேட்... அப்பறம் எப்படி சீக்கிரம் எழ... ஆமா பொண்டாட்டி கைய சுட்டுகிட்டு சோறு பொங்கி போடனும்னு யார் சொன்னா..."
"உனக்கு எதுவும் தெரியாது டா... இதெல்லாம் உலக வழக்கம்... காலம் காலமா இப்படித் தான நடந்துட்டு வருது...." என்று சொன்ன தமிழரசி மகனின் அறை பக்கம் வந்து மருமகளைப் பார்த்த பார்வையில் சங்கடபட்டு போனாள் தன்யா.
பின்னே தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு... அவள் கலைந்த ஓவியமாய் அமர்ந்திருக்க....
இங்கிதம் அற்று மருமகளை வெறித்தவர் 'அவ்வளவு தான்... எல்லாம் முடிந்ததா... ஒரே ராத்திரில என் பிள்ளைய கைக்குள்ள போட்டுகிட்டாளா... இவ உட்கார்ந்து இருக்கறத பார்த்தா அப்படித் தான தெரியுது...' என்று மனதிற்குள் அறற்றிய தமிழரசி
"அய்யோ... அய்யோ... அய்யோ.... இதுக்குத் தான் நான் சொன்னேன்... நீ எங்க கேட்ட.... சின்னப் பிள்ளைங்க இருக்கற வீடு டா.... அவ இருக்கிற கோலத்தைப் பாரு...." வயிற்றிலும் வாயிலும் அடித்து கொண்டு இன்னும் அவர் என்னவெல்லாம் பேசியிருப்பாரோ
"ம்மா..." மகன் போட்ட அதட்டலும்.... உறுத்து விழித்த விழிகளிலும் "கப்"பென வாயை பூட்டிக் கொண்ட தமிழரசி... பின் நயமாய் " டேய் வீடு முறைவாசல் செய்யல.... நான் வந்து இவ்வளவு நேரம் ஆகுது.... ஒரு காப்பித் தண்ணி போட்டு தரல.... அதை தான நான் கேட்டன்... இவ எல்லாம் என்ன டா மருமக...." என்றிட
மாமியார் வைத்த ஒப்பாரியில்.. யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் காபி கலக்க.. தன்யா தன்னை சீர் செய்த படி அவசரமாய் அடுக்களைக்குள் நுழைய எத்தனிக்க...
அதில் வெகுண்ட தமிழரசி "ஏய் ச்சீ... எங்க வர... காலையில் எழுந்ததும் குளிக்காம.. அறைய விட்டு வெளிய வராத... உன் வீட்டுல வளர்ற நாய்... வீட்டை எல்லாம் சுத்தி வருமே... அப்படியில்ல இருக்கு உன் பழக்கம்... ச்சீ... ச்சீ..." என்று தணலைக் கொட்ட
"ம்மா." என்று அதட்டிய திபாகரன் மனைவியைக் காண... அவளோ அவமானத்தில் அதிர்ந்த முகத்துடன் தலை கவிழ்ந்திருந்தாள். "ம்மா... என்ன பேசுறன்னு தெரிந்து தான் பேசுறீங்களா... தெரியாதத சொன்னா தன்யா கேட்டுப்பா... அதுக்குப் போய்… நாய்ன்னு... இனி இப்படிப் பேச வேணாம் சொல்லிட்டேன்... இப்ப என்ன உங்களுக்கு டீ தான வேணும்... இதோ நான் குளிச்சிட்டு... ஃபிளாஸ்க்ல எல்லாருக்கும் டீயும்.. டிபனும் வாங்கிட்டு வரேன்... போதுமா" என்று தாயை எச்சரித்தவன்
மனைவியிடம் "ரிது நீ அறைக்குப் போ... நான் வந்து உன்னைய கூப்பிடற வரை நீ வெளியே வராத...." என்று கட்டளையிட்டு சென்று விட... உணவு மேஜையிலேயே ஆணி அடித்தார் போல் அமர்ந்து விட்டார் தமிழரசி.
ஏற்கனவே மருமகளின் வரவு தமிழரசிக்கு பிடிக்கவில்லை.. இதில் மகன் அவளை இப்படித் தாங்கினால் பொறுக்குமா... வயிறு காந்தது அவருக்கு. அதில், “என்னத்த சொல்ல பொண்டாட்டிய ஒரு வார்த்தை சொல்ல விட மாட்றான்.. என் மாமியார் கிட்ட எல்லாம் நான் எவ்வளவு பேச்சு வாங்கின.. இவன் அப்பா ஒரு நாள் எனக்கு இப்படிப் பரிந்து பேசி வந்திருப்பாரா… எல்லாம் தலையனை மந்திரம் வேலை செய்யுது…” தமிழரசி வாயை மூடுவதாக இல்லை.. அவரின் முனுமுனுப்போ மகன் வரும்வரை நீண்டு கொண்டே தான் இருந்தது.
டிபன் வாங்கி வந்தவன் மனைவியை அழைக்க தங்கள் அறையைக் காண... தன்யா அங்கு இல்லை… குளியல் அறையில் சத்தம் கேட்கவும் மனைவி அங்கிருக்கிறாள் என்பதை உணர்ந்தவனோ
உணவு மேஜையில் உணவு கவரை வைத்து விட்டு.. தட்டு எடுத்து வந்து தாய்க்கு உணவை பரிமாறியவன் “நீ சாப்பிடு ம்மா… தங்கைகளுக்குக் கொடுத்துட்டேன்” என்க
“என்ன டா திபா இனி தினமும் ஓட்டல் சாப்பாடு தானா?” தாய் வேண்டுமென்றே கேட்க
மகனிடம் மவுனம் மட்டுமே.. காலையிலேயே தாயிடம் பேசி இருக்கிற டென்ஷனை ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை அவன்… கூடவே மனைவியைத் தாய் பேசிய பேச்சுகள் அவனுக்கு ஒப்பவில்லை. விளைவு... தாயை மனம் நோக பேசி விடுவோமோ என்ற பயம் சூழ.. இப்படியான பேச்சுகளை வளர விடக் கூடாது என்ற எண்ணத்தில் அமைதி காத்தான் திபாகரன்.
தன்யா குளித்து வரவும்.. மனைவியை அமர சொல்லி.. பரிமாறி தானும் உண்டு முடிக்கும் வரையும் அவனிடம் அதே மவுனம் குடிகொண்டது.. பின் ஃபாக்டரியிலிருந்து அழைப்பு வர... அவர்களுக்குத் தகுந்த பதிலை தந்தபடியே தயாரானவன்.. வீட்டின் சூழலை மறந்து.. ஏன் மனைவியையும் மறந்து.. அவள் முகத்தைக் கூட காணாமல் அவசரமாக இவன் வெளியேற... கணவனின் செயலில் விக்கித்து நின்றாள் அவன் மனையாட்டி.