விடியலில் கண்விழித்த தன்யா, கணவனின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு இருக்க... அதில் அவளின் உதடுகள் மெல்ல சிரிப்பைத் தத்தெடுக்க, எண்ணங்களோ இரவு நடந்த கலாட்டாவில் மூழ்கவும்... பெண்ணவளின் உதட்டில் விரிந்த புன்னகையே குடிகொண்டது. ‘யப்பா மனுஷன் என்னமா பேசி சமாளிச்சி, சிரிச்சி கடைசியில் சமாதனத்துல முடிச்சிட்டாரே... கில்லாடி தான் இவர். இதைத் தான் ஊடலுக்குப் பின் கூடல்னு சொல்லுவாங்களோ... ஆனால் நேற்று கூடல் இல்லையென்றாலும் எங்களின் நெஞ்சம் காதலில் திளைத்தது என்னமோ உண்மை’ என்று எண்ணியவளின் மனதோ இன்னும் கொஞ்சம் நேரம் கணவனின் அணைப்பில் இருக்க விரும்பியது. ஆனால் முடியாதே... இன்றும் மாமியாரின் பேச்சுக்கு ஆளாக விரும்பாமல், இவள் சற்றே நெகிழ்ந்து விலக நினைக்க, ‘ம்ஹும்’ இங்கு ஆண்மகன் விட்டால் தானே, கணவனின் பிடிவாத அணைப்பே அவன் எழும்பி விட்டதை இவளுக்குத் தெரிவிக்க “ப்ச்சு... விதுன் நேரம் ஆச்சி விடுங்க” என்று இவள் சலிக்க
மனைவியின் முதுகை தன் நெஞ்சோடு அணைத்திருந்தவன் இன்னும் நெருங்கி அவள் காது மடலை முத்தமிட்டு, “அதெல்லாம் நிறையவே நேரம் இருக்கு. அப்ப தான் சொல்லல... சரி இப்ப சொல்லு... டீலுக்கு ஓகே தான?” என்று இரவு விட்ட பேச்சை தற்போது தொடர்ந்தான். மனைவி தினமும் இப்படியே விலகியிருந்து விடுவாளோ என்ற அச்சம் அவனுக்கு. விளக்கங்கள் இல்லாமல் இயல்பாய் மனைவி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற என்ற எண்ணம் கணவனுக்கு... ஆனால் தான் செய்ததற்கு விளக்கங்கள் அல்லாமல் அவர்கள் வாழ்வு சிறக்காது என்பதை ஆண்மகன் எப்போது உணரப் போகிறானோ...
கேட்டவளுக்குக் கோபம் எழ, “இதென்ன காலையிலே வம்பு, விடுங்க நான் போகனும்” கண்விழிக்கும் போதிருந்த ரம்மியமான மனநிலை எல்லாம் தற்சமயம் தன்யாவிடம் இல்லை.
“முடியாது... நீ ஓகேன்னு சொல்லு... நான் விடறேன்”
“என்ன... ஏன், நான் ஓகே இல்லன்னு கூடத் தான் சொல்லுவேன், ஓகே தான் சொல்லனும்னு நீங்க எனக்கு ஆர்டர் போடக் கூடாது” என்றவள் பொறுமையற்று கணவனின் பிடியிலிருந்து விடுபடப் போராட
எதையும் கண்டு கொள்ளாதவன், “இல்ல நீ ஓகே மட்டும் தான் சொல்லனும்... எங்க சொல்லு” இவன் பிடிவாதம் பிடிக்க
"எவ்வளவு பிடிவாதம்” என்று முணுமுணுத்தவள், “சரி... டீலுக்கு ஓகே” என்று பட்டும் படாமல் சொல்லவும் உள்ளக் களிப்பில்
அடுத்த நொடியே மனைவியைச் சரித்து அவளின் நெஞ்சில் முகம் புதைத்து முத்தமிட்டவன் “thank you my sweet heart” என்றவன் தன்னவளை விடுவிக்க... விட்டால் போதும் என்ற மனநிலையில் ஓடிச் சென்று குளியலறைக்குள் புகுந்தாள் தன்யா.
பிறகு எந்த வித பேச்சும் இல்லாமல் காலை உணவு முடிய, அலுவலகம் கிளம்பத் தயாராகி வந்தவன், மனைவியைத் தேட... அவளை சமையலறையில் கண்டவன், “ரிது நான் கிளம்பறேன், எதாவது அவசரம்னா எனக்குக் கால் பண்ணு, என் நம்பர் இருக்கா.. இல்ல இப்பவும் வச்சில்லையா நீ?” என்று கேட்டவன் அங்கு உணவு மேஜையிலிருந்த மனைவியின் கைப்பேசியை எடுத்து தனக்கு அழைக்க அதில் தன் எண்ணை “teddy bear” என்று பதித்திருப்பதைக் கண்டவன் வாய் விட்டே சிரித்து “நான் உனக்கு டெடியாடி?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனின் குரலில் அப்பட்டமாய் மகிழ்ச்சி மட்டுமே மிளிர்ந்தது. இந்த டெடி மனைவிக்கு மட்டுமே பிடித்த ஒன்று என்பதை அவன் எங்கே அறிவான்.
“இந்தா... இந்த பணத்தை அவசர செலவுக்கு வச்சிக்க” என்றவன் மனைவியின் கையில் சில ரூபாய் நோட்டுகளைத் திணிக்க
பணத்தை வாங்கியவள் “என் அக்கவுன்ட்ல பணம் இருக்கு விதுன்... பிறகு எதுக்கு இவ்வளவு” என்றிட
“தெரியும்.. இதை எடுத்து செலவு செய், இதையும் மீறி உனக்குப் பணத் தேவை வந்தால் அப்ப அதை எடுத்துக்கோ”
“ம்ம்ம்.. மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவீங்க தான”
“இல்ல ரிது.. வந்து போனா எனக்கு தான் அலைச்சல்.. அந்த நேரம் இன்னும் கொஞ்சம் வேலைய பார்ப்பேன்.. நான் வெளிய வாங்கிக்கிறேன்”
“ஓ.. சரி இன்னைக்கு ஒரு நாள்.. ஆபிஸ்ல இருந்து யாரையாவது அனுப்பி விடுங்க.. சாப்பாடு கொடுத்து விடறேன்.. நாளையிலிருந்து சமையல்காரம்மாவ மதியத்துக்கு உங்களுக்கும் சேர்த்தே சமைக்கச் சொல்லி கட்டித் தரேன் எடுத்து போங்க”
“ம்ம்ம்.. பார்க்கலாம்”
“என்ன பார்க்கலாம்.. எப்படியும் சாப்பாடு வாங்க யாரையாவது ஹோட்டலுக்கு தான அனுப்புவிங்க, அவர வீட்டுக்கு அனுப்புங்க” என்று இவள் உத்தரவிட
மனைவியின் கரிசனத்தில் மகிழ்ந்தவன் “உத்தரவு மகாராணி” என்று தலை தாழ்த்தி நாடக பாணியில் அதை ஏற்று “இப்படியே சிரித்த முகமா.. தினமும் வெளிய வந்து என்னை வழி அனுப்பு.. வா” என்று தன்னவளை அழைக்க
அங்கு கூடத்தில் அமர்ந்திருந்த மாமியாரைக் கண்ணால் சுட்டிக் காட்டி “அச்சோ! அத்த” என்று இவள் சிறிய குரலில் சொல்லி வர மறுக்க
“அவங்க இருக்கட்டும் நீ வா” என்று பிடிவாதமாய் தன்னவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு
தாயிடம் வந்தவன் “ம்மா நான் ஆபிஸ் கிளம்பறேன்.. எதாவது தேவைனா எனக்குக் கால் பண்ணுங்க” என்றிட
மகன், மருமகளின் சிரிப்பையும், சந்தோஷ முகத்தையும் கண்டவர் “அது என்ன டா எதாவது தேவைனா தான் நான் உனக்குக் கால் பண்ணனுமா” தமிழரசி இதோ விட்டேனா பார் என்பது போல் இடக்காய் கேட்க
தாயின் மனநிலையைப் புரிந்து கொண்டவன் “சரி நீங்க எப்ப வேணா எனக்குக் கால் பண்ணுங்க நான் பேசறேன்.. போதுமா” என்று தாயிடம் தணிந்து சொல்லியவன், மனைவியைத் தன்னுடன் வரும்படி கண்ணாலேயே செய்தி சொல்லி தான் உங்களுக்கு மகன் என்பதை நிரூபித்தான் விதுனதிபாகரன்.
தன்யா கணவன் வீட்டின் வாசத்தை ஓரளவு பழகிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்கும் ஒரே சமையல் என்பதால் காலையில் கணவனுடன் எழுபவள், பின் சமையல் வேலையில் சிங்காரிக்கு உதவி செய்து கணவன் மற்றும் தவமதி, குலமதிக்கு உணவைக் கட்டிக் கொடுத்து அனுப்பிய பிறகு அவளின் நீண்ட நெடிய நேரத்தை அவள் நெட்டி தான் தள்ள வேண்டியிருக்கும். அவளுக்கு பெரியதாக நட்பு வட்டம் இல்லாததால், வீட்டில் தான் பெண்ணவளின் தஞ்சம். எப்போதாவது சிங்காரியுடன் சென்று வீட்டுக்கு வேண்டியதை வாங்கி வருவதோடு சரி. தினமும் வல்லவன் இவளுக்கு அழைத்துப் பேசுவார்... இவள் எப்போதாவது தந்தைக்கு அழைத்துப் பேசுவாள்... தாய்க்கு அது கூட இல்லை. அவளின் அப்பத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்... அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்க... எப்போதாவது மருத்துவருக்கு அழைத்து அவரின் உடல்நிலை பற்றிப் பேசுவதும்... அவரை சென்று பார்த்து வருவதாக இருந்தால் இவள்... அதே போல் எப்போதும் மாமியாரின் முணுமுணுப்பு தொடர... அதைக் கண்டு கொள்ள மாட்டாள். முதல் நாளைத் தவிர சித்ராவைத் தன்யா பார்க்கவே இல்லை, ஆனால் தவமதியும் குலமதியும் பள்ளிக்கு பிறகான நேரம் முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை அண்ணி.. அண்ணி.. என்று இவள் பின்னே தான் சுற்றுவார்கள். அதேபோல் கணவன் மனைவி உறவிலும் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. திபாகரன் அன்பைக் கொட்டினான், அரவணைத்துக் கொண்டான். சிரிக்கச் சிரிக்கப் பேசி தன்னவளையும் சிரிக்கவும்... பேசவும் வைத்தான். ஆமாம்... அவன் மட்டும் தான் பேசுவான்... இவளாகச் சென்று பேசியதில்லை, அதே கணவனுக்கு வேண்டியதை மட்டும் செய்வாள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கணவனிடமிருந்து விலகியே தான் இருந்தாள் தன்யா. ஏன், வழமை போல இரவில் கணவனின் கையணைப்பில் உறங்கினாலும், மனதளவில் ஒன்றவில்லை பெண்ணவள்.
மறுநாள் வார இறுதி, இன்று அலுவலகத்திலிருந்து இரவு வீடு வந்த திபாகரன் உறக்கத்திலிருந்த மனைவியை நெருங்கி அவள் நெற்றி முடியை ஒதுக்கி, கன்னத்தை வருட, கணவனின் செயலில் சற்றே தூக்கம் கலையக் கண்விழித்ததும் தன்யா கண்டது படுக்கையில் தன் அருகே அமர்ந்திருந்த கணவனைத் தான்
“வந்துட்டிங்களா... எப்போ வந்திங்க” தூக்கக் கலக்கத்திலே இவள் கேட்க
“இப்ப தான்”
கணவனின் பதிலில் உறக்கம் முழுமையாக விலக, “தோசை ஊத்தவா” இரவு உணவுக்காகத் தான் கணவன் தன்னை எழுப்பினானோ என்ற எண்ணம் இவளுக்கு.
“வேணாம்.. சாப்டேன்..”
கணவனின் பதிலில் இவள் தன்னவனை முழுமையாகக் காண, குளித்து முடித்து இரவு உடையில் இலகுவாகவே இருந்தவனின் முகமோ துயரத்தையும், சோர்வையும் பிரதிபலித்தது.
“என்ன ஆச்சி விதுன்?” மனைவியின் கேள்விக்கு, பதிலற்று அவளின் முகத்தைப் பற்றி தன் மடிமீது வைத்து, வயிற்றோடு கட்டிக் கொண்டான் இவன்.
அவனுள் பல வலிகள், கடைசிவரை இவள் இப்படியே ஒதுங்கித் தான் இருப்பாளா, ஏன் ஏன் என்று தினமும் பல கேள்விகள் இவனுள், இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் என்று மனதினுள் பிதற்றியவனுக்கு, அப்படி நீ என்ன செய்து விட்டாய் என்று அவன் மனசாட்சி கேட்கத் தான் செய்தது.
அதில் மவுனமாய் இவன் மனைவியின் தலையை வருட, தன்யாவும் பிறகு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. எதுவாக இருந்தாலும் அவரே சொல்லுவாரே என்ற எண்ணம் பெண்ணுக்கு.
“நாளைக்கு சன்டே தானே... வெளிய போய் வரலாம்”
என்ற கணவனுக்கு “எத்தனை மணிக்கு கிளம்பனும்?”
மனைவி பட்டும் படாமல் கேட்ட கேள்வியில் ஒரு நெடிய மூச்சை வெளியிட்டவன் “எழுந்ததும் கிளம்பினா போதும்”
பொதுவாக வார இறுதியில் ஒன்பது ஆகும் இவர்கள் விழிக்க... அதை மனதில் கொண்டு “அத்தை கிட்ட சொல்லிட்டீங்களா” என்று இவள் கேட்க
“ஏன் சொல்லனும்” கணவனின் எதிர் கேள்வியில்
எழுந்து அமர்ந்தவள், இது என்ன கேள்வி என்பது போல் கணவனைப் பார்த்து, “சொல்லாம... அவங்க கிளம்ப வேணாமா” அவர்களும் தானே வருகிறார்கள் என்ற எண்ணத்தில் இவள் கேட்டது.
“அவங்க இல்ல நாம மட்டும் தான் போறோம்”
“அப்ப தவமதி, குலமதி கூட வரலையா”
“ம்ம்ம்..” என்று இவன் தலையசைக்க
கணவனை விசித்திரமாகப் பார்த்தவள், தன்னையே சுற்றி வரும் அந்த இருவரையும் விட்டுப் போக மனமில்லாமல் “ஏன்? அப்படி நாம மட்டும் எங்க போறோம்... அவங்களும் வரட்டுமே”
அவ்வளவு தான் இதுவரை இருந்த அமைதி எல்லாம் திபாகரனிடம் இருந்து தூர போக. “நான் உன் புருஷன் டி... ஏன், உன்ன எங்கனா கடத்திட்டு போய்டுவேன்னு பயமா... அப்படி கடத்திட்டு போக எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றான் கோபத்துடன்.
“பெரிய உரிமை, அதை யாரு எப்ப இல்லைனு சொன்னா... ஏன்னு கேட்டா.. கோபத்த பாரு” என்று கொஞ்சமும் அசராமல் முணுமுணுத்த படி இவள் தன் இடத்தில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்ள
மனைவியின் செயலில் bp ஏற “என் கிட்ட இவளுக்குத் துளியும் பயமே இல்ல” என்று முணுமுணுப்பது தற்போது இவன் முறையாகிப் போக. இருவரின் முணுமுணுப்புடன் தான் அன்றைய இரவு கழிந்தது.
காலையில் முதலில் கண் விழித்த திபாகரன் தன் அணைப்பிலிருந்த மனைவியை எழுப்பி “ரிது சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகு நான் காபி கலக்குறேன்” என்க
“எங்கன்னு சொன்னா தான அதுக்கு ஏத்த மாதிரி ரெடியாக முடியும்”
“சல்வார் போட்டுக்க... நீட்டா பெஸ்டா இருந்தா போதும்” என்ற கட்டளையுடன் அவன் வெளியே செல்ல எத்தனிக்க
அதில் “ரொம்பத் தான்” என்று நாக்கை துருத்தி இவள் கணவனுக்குப் பழிப்பு காட்ட
அதைக் கண்டு கொண்டவன்.. கதவு குழியில் கை வைத்த படி.. “ஓவரா போற டி.. பேசுற உன் உதட்டுக்கு நான் நிறைய தண்டனை தர வேண்டியிருக்கும் நினைவு வச்சிக்கோ” என்று திபாகரன் உதட்டைக் குவித்து காதலோடு மொழிய, அதன் பிறகு மனைவி அங்கு நிற்பாளா என்ன.
ஞாயிறு வீட்டு வேலையாட்களுக்கு விடுமுறை என்பதால் திபாகரனே அனைவருக்கும் காலை உணவுக்கு உப்புமாவே செய்து வைக்க... அந்நேரம் அங்கு வந்தார் தமிழரசி.
திபாகரன், “ம்மா நானும் தன்யாவும்.. வெளிய போறோம்.. வர இரவு ஆகும்.. இப்ப எல்லாருக்கும் உப்புமா இருக்கு சாப்பிடுங்க”
“எங்க டா போறிங்க.. அதென்ன போகும் போது மட்டும் சொல்றது... எல்லாம் உன் மனைவி போதனையா... எங்க அவ... நீ ஏன் அடுப்படியில இருக்க? இன்னும் எழலையா அவ... திருப்பள்ளி எழுச்சி பாடனுமா அவளுக்கு” என்று மூச்சு விடாமல் பேசிய தமிழரசி தான் எப்போதும் ஒரு அக்மார்க் மாமியார் என்பதை நிரூபித்தவர் “இரவு தான் வருவியா... எது மதியம் நாங்க சமைச்சி சாப்பிட... அவ மட்டும் ஓட்டல்ல சாப்பிடுவாளா... அப்ப நாங்க உனக்கு யாரோ தான?”
இன்னும் தமிழரசி என்னவெல்லாம் ஒப்பாரி வைத்திருப்பாரோ... அதற்குள் திபாகரன், “ம்மா நான் உங்கள சமைக்க சொன்னேனா.. மதியத்துக்கு ஆர்டர் பண்றேன். நேரத்துக்கு வரும் சாப்பிடுங்க... நீங்க எதுவும் செய்ய வேணாம் போதுமா” என்றவன் மேலும் அங்கு நிற்காமல் தானும் கிளம்பி... மனைவியையும் கிளப்பிக் கொண்டு வெளியேறி விட்டான் திபாகரன்.
மனைவியின் முதுகை தன் நெஞ்சோடு அணைத்திருந்தவன் இன்னும் நெருங்கி அவள் காது மடலை முத்தமிட்டு, “அதெல்லாம் நிறையவே நேரம் இருக்கு. அப்ப தான் சொல்லல... சரி இப்ப சொல்லு... டீலுக்கு ஓகே தான?” என்று இரவு விட்ட பேச்சை தற்போது தொடர்ந்தான். மனைவி தினமும் இப்படியே விலகியிருந்து விடுவாளோ என்ற அச்சம் அவனுக்கு. விளக்கங்கள் இல்லாமல் இயல்பாய் மனைவி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற என்ற எண்ணம் கணவனுக்கு... ஆனால் தான் செய்ததற்கு விளக்கங்கள் அல்லாமல் அவர்கள் வாழ்வு சிறக்காது என்பதை ஆண்மகன் எப்போது உணரப் போகிறானோ...
கேட்டவளுக்குக் கோபம் எழ, “இதென்ன காலையிலே வம்பு, விடுங்க நான் போகனும்” கண்விழிக்கும் போதிருந்த ரம்மியமான மனநிலை எல்லாம் தற்சமயம் தன்யாவிடம் இல்லை.
“முடியாது... நீ ஓகேன்னு சொல்லு... நான் விடறேன்”
“என்ன... ஏன், நான் ஓகே இல்லன்னு கூடத் தான் சொல்லுவேன், ஓகே தான் சொல்லனும்னு நீங்க எனக்கு ஆர்டர் போடக் கூடாது” என்றவள் பொறுமையற்று கணவனின் பிடியிலிருந்து விடுபடப் போராட
எதையும் கண்டு கொள்ளாதவன், “இல்ல நீ ஓகே மட்டும் தான் சொல்லனும்... எங்க சொல்லு” இவன் பிடிவாதம் பிடிக்க
"எவ்வளவு பிடிவாதம்” என்று முணுமுணுத்தவள், “சரி... டீலுக்கு ஓகே” என்று பட்டும் படாமல் சொல்லவும் உள்ளக் களிப்பில்
அடுத்த நொடியே மனைவியைச் சரித்து அவளின் நெஞ்சில் முகம் புதைத்து முத்தமிட்டவன் “thank you my sweet heart” என்றவன் தன்னவளை விடுவிக்க... விட்டால் போதும் என்ற மனநிலையில் ஓடிச் சென்று குளியலறைக்குள் புகுந்தாள் தன்யா.
பிறகு எந்த வித பேச்சும் இல்லாமல் காலை உணவு முடிய, அலுவலகம் கிளம்பத் தயாராகி வந்தவன், மனைவியைத் தேட... அவளை சமையலறையில் கண்டவன், “ரிது நான் கிளம்பறேன், எதாவது அவசரம்னா எனக்குக் கால் பண்ணு, என் நம்பர் இருக்கா.. இல்ல இப்பவும் வச்சில்லையா நீ?” என்று கேட்டவன் அங்கு உணவு மேஜையிலிருந்த மனைவியின் கைப்பேசியை எடுத்து தனக்கு அழைக்க அதில் தன் எண்ணை “teddy bear” என்று பதித்திருப்பதைக் கண்டவன் வாய் விட்டே சிரித்து “நான் உனக்கு டெடியாடி?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனின் குரலில் அப்பட்டமாய் மகிழ்ச்சி மட்டுமே மிளிர்ந்தது. இந்த டெடி மனைவிக்கு மட்டுமே பிடித்த ஒன்று என்பதை அவன் எங்கே அறிவான்.
“இந்தா... இந்த பணத்தை அவசர செலவுக்கு வச்சிக்க” என்றவன் மனைவியின் கையில் சில ரூபாய் நோட்டுகளைத் திணிக்க
பணத்தை வாங்கியவள் “என் அக்கவுன்ட்ல பணம் இருக்கு விதுன்... பிறகு எதுக்கு இவ்வளவு” என்றிட
“தெரியும்.. இதை எடுத்து செலவு செய், இதையும் மீறி உனக்குப் பணத் தேவை வந்தால் அப்ப அதை எடுத்துக்கோ”
“ம்ம்ம்.. மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவீங்க தான”
“இல்ல ரிது.. வந்து போனா எனக்கு தான் அலைச்சல்.. அந்த நேரம் இன்னும் கொஞ்சம் வேலைய பார்ப்பேன்.. நான் வெளிய வாங்கிக்கிறேன்”
“ஓ.. சரி இன்னைக்கு ஒரு நாள்.. ஆபிஸ்ல இருந்து யாரையாவது அனுப்பி விடுங்க.. சாப்பாடு கொடுத்து விடறேன்.. நாளையிலிருந்து சமையல்காரம்மாவ மதியத்துக்கு உங்களுக்கும் சேர்த்தே சமைக்கச் சொல்லி கட்டித் தரேன் எடுத்து போங்க”
“ம்ம்ம்.. பார்க்கலாம்”
“என்ன பார்க்கலாம்.. எப்படியும் சாப்பாடு வாங்க யாரையாவது ஹோட்டலுக்கு தான அனுப்புவிங்க, அவர வீட்டுக்கு அனுப்புங்க” என்று இவள் உத்தரவிட
மனைவியின் கரிசனத்தில் மகிழ்ந்தவன் “உத்தரவு மகாராணி” என்று தலை தாழ்த்தி நாடக பாணியில் அதை ஏற்று “இப்படியே சிரித்த முகமா.. தினமும் வெளிய வந்து என்னை வழி அனுப்பு.. வா” என்று தன்னவளை அழைக்க
அங்கு கூடத்தில் அமர்ந்திருந்த மாமியாரைக் கண்ணால் சுட்டிக் காட்டி “அச்சோ! அத்த” என்று இவள் சிறிய குரலில் சொல்லி வர மறுக்க
“அவங்க இருக்கட்டும் நீ வா” என்று பிடிவாதமாய் தன்னவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு
தாயிடம் வந்தவன் “ம்மா நான் ஆபிஸ் கிளம்பறேன்.. எதாவது தேவைனா எனக்குக் கால் பண்ணுங்க” என்றிட
மகன், மருமகளின் சிரிப்பையும், சந்தோஷ முகத்தையும் கண்டவர் “அது என்ன டா எதாவது தேவைனா தான் நான் உனக்குக் கால் பண்ணனுமா” தமிழரசி இதோ விட்டேனா பார் என்பது போல் இடக்காய் கேட்க
தாயின் மனநிலையைப் புரிந்து கொண்டவன் “சரி நீங்க எப்ப வேணா எனக்குக் கால் பண்ணுங்க நான் பேசறேன்.. போதுமா” என்று தாயிடம் தணிந்து சொல்லியவன், மனைவியைத் தன்னுடன் வரும்படி கண்ணாலேயே செய்தி சொல்லி தான் உங்களுக்கு மகன் என்பதை நிரூபித்தான் விதுனதிபாகரன்.
தன்யா கணவன் வீட்டின் வாசத்தை ஓரளவு பழகிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்கும் ஒரே சமையல் என்பதால் காலையில் கணவனுடன் எழுபவள், பின் சமையல் வேலையில் சிங்காரிக்கு உதவி செய்து கணவன் மற்றும் தவமதி, குலமதிக்கு உணவைக் கட்டிக் கொடுத்து அனுப்பிய பிறகு அவளின் நீண்ட நெடிய நேரத்தை அவள் நெட்டி தான் தள்ள வேண்டியிருக்கும். அவளுக்கு பெரியதாக நட்பு வட்டம் இல்லாததால், வீட்டில் தான் பெண்ணவளின் தஞ்சம். எப்போதாவது சிங்காரியுடன் சென்று வீட்டுக்கு வேண்டியதை வாங்கி வருவதோடு சரி. தினமும் வல்லவன் இவளுக்கு அழைத்துப் பேசுவார்... இவள் எப்போதாவது தந்தைக்கு அழைத்துப் பேசுவாள்... தாய்க்கு அது கூட இல்லை. அவளின் அப்பத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்... அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்க... எப்போதாவது மருத்துவருக்கு அழைத்து அவரின் உடல்நிலை பற்றிப் பேசுவதும்... அவரை சென்று பார்த்து வருவதாக இருந்தால் இவள்... அதே போல் எப்போதும் மாமியாரின் முணுமுணுப்பு தொடர... அதைக் கண்டு கொள்ள மாட்டாள். முதல் நாளைத் தவிர சித்ராவைத் தன்யா பார்க்கவே இல்லை, ஆனால் தவமதியும் குலமதியும் பள்ளிக்கு பிறகான நேரம் முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை அண்ணி.. அண்ணி.. என்று இவள் பின்னே தான் சுற்றுவார்கள். அதேபோல் கணவன் மனைவி உறவிலும் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. திபாகரன் அன்பைக் கொட்டினான், அரவணைத்துக் கொண்டான். சிரிக்கச் சிரிக்கப் பேசி தன்னவளையும் சிரிக்கவும்... பேசவும் வைத்தான். ஆமாம்... அவன் மட்டும் தான் பேசுவான்... இவளாகச் சென்று பேசியதில்லை, அதே கணவனுக்கு வேண்டியதை மட்டும் செய்வாள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கணவனிடமிருந்து விலகியே தான் இருந்தாள் தன்யா. ஏன், வழமை போல இரவில் கணவனின் கையணைப்பில் உறங்கினாலும், மனதளவில் ஒன்றவில்லை பெண்ணவள்.
மறுநாள் வார இறுதி, இன்று அலுவலகத்திலிருந்து இரவு வீடு வந்த திபாகரன் உறக்கத்திலிருந்த மனைவியை நெருங்கி அவள் நெற்றி முடியை ஒதுக்கி, கன்னத்தை வருட, கணவனின் செயலில் சற்றே தூக்கம் கலையக் கண்விழித்ததும் தன்யா கண்டது படுக்கையில் தன் அருகே அமர்ந்திருந்த கணவனைத் தான்
“வந்துட்டிங்களா... எப்போ வந்திங்க” தூக்கக் கலக்கத்திலே இவள் கேட்க
“இப்ப தான்”
கணவனின் பதிலில் உறக்கம் முழுமையாக விலக, “தோசை ஊத்தவா” இரவு உணவுக்காகத் தான் கணவன் தன்னை எழுப்பினானோ என்ற எண்ணம் இவளுக்கு.
“வேணாம்.. சாப்டேன்..”
கணவனின் பதிலில் இவள் தன்னவனை முழுமையாகக் காண, குளித்து முடித்து இரவு உடையில் இலகுவாகவே இருந்தவனின் முகமோ துயரத்தையும், சோர்வையும் பிரதிபலித்தது.
“என்ன ஆச்சி விதுன்?” மனைவியின் கேள்விக்கு, பதிலற்று அவளின் முகத்தைப் பற்றி தன் மடிமீது வைத்து, வயிற்றோடு கட்டிக் கொண்டான் இவன்.
அவனுள் பல வலிகள், கடைசிவரை இவள் இப்படியே ஒதுங்கித் தான் இருப்பாளா, ஏன் ஏன் என்று தினமும் பல கேள்விகள் இவனுள், இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் என்று மனதினுள் பிதற்றியவனுக்கு, அப்படி நீ என்ன செய்து விட்டாய் என்று அவன் மனசாட்சி கேட்கத் தான் செய்தது.
அதில் மவுனமாய் இவன் மனைவியின் தலையை வருட, தன்யாவும் பிறகு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. எதுவாக இருந்தாலும் அவரே சொல்லுவாரே என்ற எண்ணம் பெண்ணுக்கு.
“நாளைக்கு சன்டே தானே... வெளிய போய் வரலாம்”
என்ற கணவனுக்கு “எத்தனை மணிக்கு கிளம்பனும்?”
மனைவி பட்டும் படாமல் கேட்ட கேள்வியில் ஒரு நெடிய மூச்சை வெளியிட்டவன் “எழுந்ததும் கிளம்பினா போதும்”
பொதுவாக வார இறுதியில் ஒன்பது ஆகும் இவர்கள் விழிக்க... அதை மனதில் கொண்டு “அத்தை கிட்ட சொல்லிட்டீங்களா” என்று இவள் கேட்க
“ஏன் சொல்லனும்” கணவனின் எதிர் கேள்வியில்
எழுந்து அமர்ந்தவள், இது என்ன கேள்வி என்பது போல் கணவனைப் பார்த்து, “சொல்லாம... அவங்க கிளம்ப வேணாமா” அவர்களும் தானே வருகிறார்கள் என்ற எண்ணத்தில் இவள் கேட்டது.
“அவங்க இல்ல நாம மட்டும் தான் போறோம்”
“அப்ப தவமதி, குலமதி கூட வரலையா”
“ம்ம்ம்..” என்று இவன் தலையசைக்க
கணவனை விசித்திரமாகப் பார்த்தவள், தன்னையே சுற்றி வரும் அந்த இருவரையும் விட்டுப் போக மனமில்லாமல் “ஏன்? அப்படி நாம மட்டும் எங்க போறோம்... அவங்களும் வரட்டுமே”
அவ்வளவு தான் இதுவரை இருந்த அமைதி எல்லாம் திபாகரனிடம் இருந்து தூர போக. “நான் உன் புருஷன் டி... ஏன், உன்ன எங்கனா கடத்திட்டு போய்டுவேன்னு பயமா... அப்படி கடத்திட்டு போக எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றான் கோபத்துடன்.
“பெரிய உரிமை, அதை யாரு எப்ப இல்லைனு சொன்னா... ஏன்னு கேட்டா.. கோபத்த பாரு” என்று கொஞ்சமும் அசராமல் முணுமுணுத்த படி இவள் தன் இடத்தில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்ள
மனைவியின் செயலில் bp ஏற “என் கிட்ட இவளுக்குத் துளியும் பயமே இல்ல” என்று முணுமுணுப்பது தற்போது இவன் முறையாகிப் போக. இருவரின் முணுமுணுப்புடன் தான் அன்றைய இரவு கழிந்தது.
காலையில் முதலில் கண் விழித்த திபாகரன் தன் அணைப்பிலிருந்த மனைவியை எழுப்பி “ரிது சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகு நான் காபி கலக்குறேன்” என்க
“எங்கன்னு சொன்னா தான அதுக்கு ஏத்த மாதிரி ரெடியாக முடியும்”
“சல்வார் போட்டுக்க... நீட்டா பெஸ்டா இருந்தா போதும்” என்ற கட்டளையுடன் அவன் வெளியே செல்ல எத்தனிக்க
அதில் “ரொம்பத் தான்” என்று நாக்கை துருத்தி இவள் கணவனுக்குப் பழிப்பு காட்ட
அதைக் கண்டு கொண்டவன்.. கதவு குழியில் கை வைத்த படி.. “ஓவரா போற டி.. பேசுற உன் உதட்டுக்கு நான் நிறைய தண்டனை தர வேண்டியிருக்கும் நினைவு வச்சிக்கோ” என்று திபாகரன் உதட்டைக் குவித்து காதலோடு மொழிய, அதன் பிறகு மனைவி அங்கு நிற்பாளா என்ன.
ஞாயிறு வீட்டு வேலையாட்களுக்கு விடுமுறை என்பதால் திபாகரனே அனைவருக்கும் காலை உணவுக்கு உப்புமாவே செய்து வைக்க... அந்நேரம் அங்கு வந்தார் தமிழரசி.
திபாகரன், “ம்மா நானும் தன்யாவும்.. வெளிய போறோம்.. வர இரவு ஆகும்.. இப்ப எல்லாருக்கும் உப்புமா இருக்கு சாப்பிடுங்க”
“எங்க டா போறிங்க.. அதென்ன போகும் போது மட்டும் சொல்றது... எல்லாம் உன் மனைவி போதனையா... எங்க அவ... நீ ஏன் அடுப்படியில இருக்க? இன்னும் எழலையா அவ... திருப்பள்ளி எழுச்சி பாடனுமா அவளுக்கு” என்று மூச்சு விடாமல் பேசிய தமிழரசி தான் எப்போதும் ஒரு அக்மார்க் மாமியார் என்பதை நிரூபித்தவர் “இரவு தான் வருவியா... எது மதியம் நாங்க சமைச்சி சாப்பிட... அவ மட்டும் ஓட்டல்ல சாப்பிடுவாளா... அப்ப நாங்க உனக்கு யாரோ தான?”
இன்னும் தமிழரசி என்னவெல்லாம் ஒப்பாரி வைத்திருப்பாரோ... அதற்குள் திபாகரன், “ம்மா நான் உங்கள சமைக்க சொன்னேனா.. மதியத்துக்கு ஆர்டர் பண்றேன். நேரத்துக்கு வரும் சாப்பிடுங்க... நீங்க எதுவும் செய்ய வேணாம் போதுமா” என்றவன் மேலும் அங்கு நிற்காமல் தானும் கிளம்பி... மனைவியையும் கிளப்பிக் கொண்டு வெளியேறி விட்டான் திபாகரன்.