மனைவியை அழைத்துச் செல்ல... தங்கள் அறைக்கு வந்த திபாகரன் தன்னவளைக் கண்டதும் மெய் மறந்து நின்று விட்டான். தன்யா அழகி தான்.. இன்று பேரழகியாய் தெரிந்தாள் அவன் கண்ணுக்கு. வீட்டில் எப்போதும் நீளமான கவுன் மற்றும் பாவாடை சட்டை தான் உடுத்துவாள் பெண். அப்போதெல்லாம் தன் கண்ணிலும் கருத்திலும் படாத மனைவியின் பிம்பத்தை தற்போது அனுஅனுவாக ரசித்து தன்னுள் பதித்துக் கொண்டான் இவன்.
திபாகரனின் விழிகள் மனைவியை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை வருடியது… பீச் நிறத்தில் நேர்த்தியாய் கையால் செய்த எம்பிராய்டரி வேலைப்பாடுடன் கூடிய டாப் மற்றும் ராயல் ப்ளூ நிறத்தில் பேண்ட் அணிந்து ஷாலை வலது தோளில் வழிய விட்டு.. முடியை வாரி குதிரைவாலிட்டு.. கழுத்திலும் காதிலும் சிறிய அளவில் தொங்கல் வைத்த ரோஸ் கோல்ட் மிளிர.. வலது கையில் பிரேஸ்லட் மற்றும் இடது கையில் கடிகாரத்துடன் கிளம்பி... தங்கப் பதுமை என நின்ற மனைவியைக் காணக் காண… தெவிட்டவில்லை இவனுக்கு. இவன் விழியில் தற்போது ரசனை போய்.. கணவன் பார்வை குடிகொள்ள ஆரம்பிக்க
வந்ததிலிருந்து தன்னையே விழுங்கும் கணவனின் ரசனைப் பார்வையில் பெண்ணவளுக்கோ மூச்சடைத்தது என்றால் அவனின் உரிமைப் பார்வையில் இவளுள் மின்சாரம் பாய்ந்தது.
தன்னை மீட்டுக் கொண்டவள், “விதுன் வெளிய கிளம்பனும்னு சொன்னீங்க” என்று சிறிய குரலில் இவள் நினைவூட்ட
அதில் “ஹாங்” என்று தன்னிலை மீண்டவன்.. இரண்டே எட்டில் மனைவியை நெருங்கி அவள் கண்ணங்களைத் தன் இரு கைகளில் ஏந்தியவனோ... “you look so pretty டி, இந்த அழகு எனக்கே எனக்கு சொந்தம்னு நினைக்கும் போது I feel arrogance” நான் கர்வம் கொள்கிறேன் என்றவனின் குரல் பெண்ணவளை வசீகரிக்கவும்... நெஞ்சு படபடக்க நாணத்துடன் இவள் இமைகளைத் தாழ்த்திக் கொள்ளவும் “i love you ரிது darling” என்று உணர்வுப்பூர்வமாக மொழிந்தவன் பின் நெற்றியில் இதழ் பதித்து “வா போகலாம்” என்று அழைக்க… கணவன் காதலில் உள்ளம் களிக்கச் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் தன்யா.
விதுனதிபாகரனிடம் தற்சமயம் கார் இல்லை, அதனால் பைக் வசதிப்படுமா அல்லது கார் புக் செய்யவா என்று இவன் நேற்றே மனைவியிடம் கேட்டிருக்க, அவளின் பதில் பைக் என்று வர, இதோ இருவரின் முதல் பயணமே பைக் என்று ஆனது.
பைக்கில் ஏறி அமர்ந்தது முதல் தன்யாவிடம் பேச்சு இல்லை… அவள் ஏன் பேசப் போகிறாள்… கணவனின் அருகாமையில், தன் முதல் பைக் பயணத்தைச் சுற்றியுள்ள இயற்கையோடு ரசிக்கத் தான் பெண்ணவளின் உள்ளம் விழைந்தது. இப்படி வெளியே செல்லாதவள் இல்லை… ஆனால் இயற்கையை இப்படி ரசனையோடு ரசித்தவள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு மனநிலை முன்பெல்லாம் இருந்தது இல்லை. இறைவனும் அப்படி ஒரு வாய்ப்பை அவளுக்குத் தந்தது இல்லை. இன்று கணவன் அவளுக்கு அதைத் தர... இதயத்தில் பேராவலும் பேரானந்தமும் சூழ்ந்தது பெண்ணவகளுக்கு. அதுவும் எப்படி சின்ன தம்பி குஷ்பு போல் “போவோமா ஊர்கோலம்…” என்று இவளுள் பிரவாகம் எடுத்தது... அவளின் ரசனை.
ஆனால் திபாகரன் அப்படி இல்லை போல... “ரிது உனக்கு ஓகே தான, சரியா உட்கார், பார்த்து கவனம், பிடிச்சிக்கோ ரிது” இப்படியாக அவன் சலசலத்து வர... எதற்கும் எதிர்வினை ஆற்றவில்லை இவள்.
மனைவியின் மனநிலை தெரியாமல் கடுப்பானவன் கண்ணாடி வழியே அவளை ஊடுருவி முறைத்து “ரிதூஊஊஊ” என்றழைக்க அவளிடம் அதே அமைதி
பொறுமையிழந்தவன் சாலையோரம் வண்டியை நிறுத்த, அதை உணர்ந்தவள், “ஹாங் ஏன் வண்டிய நிறுத்திட்டிங்க” என்று விழித்தெழுந்தவள் போல் கேட்க
“இங்க என்ன பார்” என்று அவன் அழுத்திச் சொன்னதும் கண்ணாடியின் வழியே இவள் கணவனைக் காண “கூப்பிட கூப்பிட.. பதிலே இல்ல உன் கிட்ட, என்ன இது ஹ்ம், நாம ஃப்ளைட்ல போகல... பைக்ல போறோம் ஞாபகம் வச்சிக்கோ” என்று இவன் அதட்ட
“என்ன பெரிய ஃப்ளைட்... அதுல நான் நிறைய தடவை போயிருக்கேன். எனக்கு பைக் தான் வேணும்... ஜில்லுன்னு முகத்துல காத்து பட... தலை முடி எல்லாம் பறக்க... சுத்தி எவ்வளவு அழகு, சூப்பரா இருக்கு இந்தப் பயணம்” என்று தன் உள்ளத்தின் மகிழ்ச்சியை முகம் விகாசிக்க தன்யா சொல்லவும்
இவளுக்கு பைக் ஓகேவா என்று இன்னும் இவனுள் குறுகுறுத்திருந்த கேள்வி விலகி விட, மனைவியின் முகம் கண்டு மகிழ்ந்தவன் “சரி.. சரி.. அதுக்காக கவனம் இல்லாம இருக்காத, என்னைய பிடிச்சிக்கோ” என்றிட
“நான் கவனமா தான் வரேன், நீங்க முதல்ல வண்டிய எடுங்க, முதல்ல ரோட்ட பார்த்து ஓட்டுங்க... சும்மா வெட்டி கதை பேசிட்டு, ஹ்ம்.. ரைட் ரைட் எடுங்க” அவன் சொன்னதைச் செய்யாமல் கிண்டல் குரலில் கண்டக்டர் பாணியில் இவள் மொழிய
'திமிர பார்த்தியா இந்த முயல் குட்டிக்கு' என்று நினைத்தவன் உடனே வண்டியின் வேகத்தைக் கூட்ட
அதில் இவ்வளவு நேரம் இருந்த கிண்டல் எல்லாம் விலக “அச்சோ விதுன்.. வி..துன்..” என்றவள் கண்களை இறுக்க மூடி தன்னவனைக் கட்டிக் கொண்டு அலற
“ஹா.. ஹா.. உனக்காக நான் மெதுவா போனா.. என்ன பேச்சு பேசின நீ.. எங்கமா அந்த வீர தீர மங்கை” என்றவன் முகத்தில் கேலி இழையோட, குறும்பு சிந்தும் கண்களால் இவன் அங்கும் இங்கும் தேடுவது போல் பாவனை செய்ய
கோபம் இருந்த போதும் கணவனின் கேலியிலும் பாவனையிலும் கவரப்பட்டவளாகச் சிரிப்பில் இதழோரம் துடிக்க, “போங்க போங்க நான் உங்க பேச்சி க்கா..” அழகாய் தலையசைத்து மொழிந்தவள் பொய்யாய் “பட் பட்” என கணவனின் முதுகில் அடித்துரைக்க
“க்கா வா.. ஹா..ஹா.. க்கா எல்லாம் இல்ல.. இனிமே நமக்குள்ள பழம் மட்டும் தான்” என்று உல்லாசமாய் சொன்னவன், மனைவியின் கையை மென்மையாய் பற்றி இழுத்து தன்னவளின் உள்ளங்கையில் ஒரு முத்தத்தைப் பதிக்க
கணவனின் அதிரடியிலும், பார்வையில் கட்டுண்டு இருந்தவள்.. பின் திகைப்புடன் சுற்றும் முற்றும் பார்த்து “என்ன இது ரோட்டுல” என்று முனங்க
“அதான் யாரும் இல்லையே டி” என்றவன் காதலோடு கண்சிமிட்ட.... இன்னைக்கு இவர் சரியே இல்லை என்ற எண்ணத்தில் முகம் சிவந்தது மனையாட்டிக்கு.
கணவன் அழைத்து வந்த இடத்தைப் பார்த்ததும் “இங்கயா” என்ற கேள்வியுடன் இவள் இறங்க
“ஆமாம் இங்க தான்” என்றவன் வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு வந்து மனைவியின் கரம் பற்றி முன்னேற, சற்றும் அசையவில்லை பெண்ணவள்.
“என்ன ரிது அமைதியா இங்கேயே நின்னுட்ட... வா”
“எதுக்குங்க இங்க” இவளுள் சுணக்கம்
மனைவியைக் கூர்ந்தவன் “இது என்ன கேள்வி.. நம்ம பாக்டரிய உனக்குக் காட்ட எனக்கு ஆசை இருக்காதா” என்றவன் குரலில் பேராவல் ஓடியது
அதை எல்லாம் உணராமல் “அது..” இவள் தயங்க
வரும் போது இருந்த மகிழ்ச்சி தற்சமயம் மனைவியிடம் இல்லை என்பதைக் கண்டு கொண்டவன் “என்ன அது.. ஏன் நம்ப கம்பெனிய பார்க்க உனக்கு இஷ்டம் இல்லயா” என்று அழுத்தத்துடன் ஒலித்த கணவனின் குரலில்
“அச்சோ.. அது இல்லங்க.. முதல் தடவை நாம இரண்டு பேரும் வெளிய வரோம்.. சோ நீங்க வேற எங்கனா அழைச்சிட்டு போவீங்கன்னு நினைச்சேன், நம்ம கம்பெனிய நினைக்கல அ…தான்…” இவள் சற்றே தயக்கத்துடன் சொல்ல
தன் தவறை உணர்ந்தவனோ “ஓஹ்.. எனக்கு நம்ம பாக்டரினா ரொம்ப பிடிக்கும் ரிது. அதான் நான் வேற எங்கேயும் யோசிக்கல, நெக்ஸ்ட் டைம் நான் இப்படி சொதப்ப மாட்டேன் பிலீவ் மீ” என்று உளமாற சொன்ன
கணவனின் முகத்தில் வருத்தத்தைக் கண்டவள், மென்மையாய் தன்னவனின் கைப்பற்றி, “ஒன்னும் சொதப்பல வாங்க” என்று புன்னகை முகமாய் கணவனை உள்ளே அழைத்துச் செல்ல தன்யா எத்தனிக்க
எதிர்ப்பட்ட திபாகரனின் அந்தரங்க காரியதரிசி பாலாஜியோ, “வெல்கம் மேம்... வெல்கம் சார்” என்று வரவேற்றவர் பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, அதை இன்முகமாய் ஏற்றவள் “இன்னைக்கும் ஆபிஸ் இருக்கா” இவள் கணவனிடம் கேட்க
“புரொடக்ஷன் பீல்டுல வேலை இருக்கும் ரிது… சன்டே மட்டும் ஒரு பேட்ச் தான் வேலை செய்வாங்க... எதாவது அவசரம்.. சந்தேகம்னா.. பாலாஜி வருவார்”
“ஓ..” இவளிடம் அமைதி
பெரிய அளவில் இல்லையென்றாலும் கனகச்சிதமாக இருந்தது அந்த இடம். இவர்கள் உள்ளே நுழைய, நேரெதிரே அலுவலகம் இயங்க, அதனின் வலதுபுறம் பாக்டரி இயங்க பக்கத்திலே தொழிலாளர்களுக்கான ஸ்டோர் ரூம் இருந்தது. இடதுபுறமோ உணவகம் இருக்க... இவை மூன்றையும் இணைக்கச் சின்னதாய் தோட்டத்துடன் கூடிய நடைபாதை இருந்தது. பார்த்த அனைத்தும் தன்யாவுக்குப் பிடித்து விட… அதிலும் கணவன் ஒவ்வொரு இடத்தையும் குரலில் துள்ளலுடன்… நெஞ்சார்ந்த ஆர்ப்பரிப்பில் கர்வத்தோடு விளக்கும் போது.. இந்த தொழிலைக் கணவன் எந்தளவு நேசிக்கிறான் என்பதை உணர்ந்தாள் பெண்ணவள். அதை இவள் தன் வாழ்த்தில் தெரிவிக்க... அகமகிழ்ந்து போனான் திபாகரன்.
இறுதியாய் தன் அறைக்கு மனைவியை அழைத்து வந்தவன் வாசலிலேயே நிறுத்தி “ரிது வலது கால எடுத்து வச்சி உள்ள போ” என்று சொல்ல
அதில் கணவன் கேலி செய்கிறானோ என்ற எண்ணத்தில் இவள் அவனைக் காண… அவன் முகமோ அப்படி இல்லை என்பதை நிரூபிக்கவும்… விழிவிரித்தவளின் முகமோ பின் எதற்கு என்ற கேள்வியைத் தாங்கியிருக்க... அதைப் படித்தவன் “இது என் சாம்ராஜ்ஜியம், நீ என் மகாராணி, அப்ப நீ வலது கால எடுத்து வச்சி தான என் கோட்டைக்குள்ள போகனும்” என்றவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி உள்ளார்ந்த அன்பில் சொல்ல
“ஹா.. ஹா.. ராணி மட்டும் எப்படி தனியா போவாங்க... அப்ப கூட ராஜாவும் தான வரனும்” இவளும் நான் ஒன்றும் உங்களுக்குச் சளைத்தவள் அல்ல என்பது போல் ஒற்றை புருவத்தை உயர்த்தி கணவனையும் உடன் அழைக்க
“அம்பேல்” என்பது போல் இரு கைகளையும் உயர்த்தி மனைவியிடம் சரணடைந்தவனோ, பின் தன் வலது கையை மனைவியின் தோளில் இட்டு தன்னுடன் சேர்த்தணைத்த படி, இடது கையால் கதவு குழியைத் திறந்து கொண்டு, இருவரும் உள்ளே பிரவேசிக்க அதில் “
to our place” என்றவனின் கரங்களோ ஒரு முறை மனைவியை இறுக அணைத்து விடுவித்தது.
சிறிய அறையே என்றாலும், இதுவும் கச்சிதமாக அழகாக இருந்தது. அறையை இவள் சுற்றிப் பார்க்க, அவனின் சுழலும் நாற்காலிக்கு மேலே சுவரில் அப்துல்கலாம் ஐயாவின் புகைப்படம் இருக்க, அதன் கீழே “வாய்ப்புக்காகக் காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்…” என்ற அவரின் பொன்மொழி பொறிக்கப்பட்டிருக்க, அதன் நேர் எதிர் சுவரில் அழகிய கடிகாரம் வீற்றிருக்க, வலது புற சுவரிலோ காட்டுப் பாதை நோக்கி ஓடும் ஒற்றை குதிரை புகைப்படம் ஒன்று வீற்றிருந்தது, அனைத்தையும் பார்த்த பெண்ணவள் மனதினில் பெருமை.. பெருமை.. பெருமை… மட்டுமே கூடவே கணவனின் திறமையை வியந்து அங்கிருந்த அழகை இவள் கண்டு ரசித்த நேரம் மனைவியின் உணர்வுகளை ஆவானித்தவனோ புன்சிரிப்புடன் தன்னவளை பின்புறமாக அணைத்து, அவளின் வலது தோளில் தன்னுடைய தாடையை வைத்து “கீழ விழுந்தா குதிரை மட்டும் தான் உடனே எழும்பி ஓடும், சோ அது மாதிரி தான் நான் என்றும் இருக்கனும்னு நினைப்பேன்” என்று இவன் தன் உள்ளத்தைப் பகிர, இவன் என் கணவன் என்ற பெருமையில் சதிராட்டம் ஆடியது பெண்ணவள் உள்ளம்.
பேச்சின் இடையே மனைவியை நடத்தி வந்து தன் சீட்டில் அவளை இவன் அமர வைக்க, தான் இருக்கும் சூழல் உணர்ந்து விதிர்விதிர்த்துப் போனாள் இவள். அதில் பதட்டத்துடன் முகம் அதிர, உடல் நடுங்க அடுத்த நொடி பெண்ணவள் எழுந்து விட
தன்னவளின் உணர்வுகளை ஆவானித்தவனோ “ரிது, what happen, any problem, என்ன டி” இவனுள் பதட்டம்
பின்னே இவ்வளவு நேரம் சிரித்த முகமாய் இருந்தவள் பதட்டத்துடன் முகத்தில் வியர்வை அரும்ப நின்றால் எப்படி இருக்கும்... அதுவும் மிக இயல்பாய் நடந்த ஒன்றுக்கு ஏன் இந்த நடுக்கம், இவனுள் புரியாத புதிர்.
கணவனின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், அளிக்கத் தோன்றாமல்… ஏன் முடியாமல்… தன்னை சமாளித்து நடந்து வந்து அங்கிருந்த எதிர் இருக்கையில் இவள் அமர, தன்னிடமிருந்த கைக்குட்டையால் மனைவியின் முகத்தைத் துடைத்தவனோ, அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்து அருந்தச் சொல்ல, அதை மறுக்காமல் வாங்கிப் பருகியவளோ, கணவனின் முகம் பார்த்து “நான் உங்கள hug பண்ணிக்கவா, I want to hug u விதுன்” முகம் கசங்க கரகரத்த குரலில் மன்றாடலுடன் தயக்கத்துடன் மனைவி கேட்க
இவனுக்குத் தாங்குமா... “பைத்தியம் இதையெல்லாம் கேட்பியா டி” என்று அதட்டியவன் குரலுக்கு மாறாய் அவனின் கரங்களோ மனைவியை மென்மையாய் பற்றி எழுப்பி நிறுத்தி
இதமாய் அணைத்துக் கொள்ள... இருநெஞ்சங்களின் இதயத் துடிப்பு மட்டுமே அவ்வறையை நிறைத்திருந்தது
திபாகரனின் விழிகள் மனைவியை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை வருடியது… பீச் நிறத்தில் நேர்த்தியாய் கையால் செய்த எம்பிராய்டரி வேலைப்பாடுடன் கூடிய டாப் மற்றும் ராயல் ப்ளூ நிறத்தில் பேண்ட் அணிந்து ஷாலை வலது தோளில் வழிய விட்டு.. முடியை வாரி குதிரைவாலிட்டு.. கழுத்திலும் காதிலும் சிறிய அளவில் தொங்கல் வைத்த ரோஸ் கோல்ட் மிளிர.. வலது கையில் பிரேஸ்லட் மற்றும் இடது கையில் கடிகாரத்துடன் கிளம்பி... தங்கப் பதுமை என நின்ற மனைவியைக் காணக் காண… தெவிட்டவில்லை இவனுக்கு. இவன் விழியில் தற்போது ரசனை போய்.. கணவன் பார்வை குடிகொள்ள ஆரம்பிக்க
வந்ததிலிருந்து தன்னையே விழுங்கும் கணவனின் ரசனைப் பார்வையில் பெண்ணவளுக்கோ மூச்சடைத்தது என்றால் அவனின் உரிமைப் பார்வையில் இவளுள் மின்சாரம் பாய்ந்தது.
தன்னை மீட்டுக் கொண்டவள், “விதுன் வெளிய கிளம்பனும்னு சொன்னீங்க” என்று சிறிய குரலில் இவள் நினைவூட்ட
அதில் “ஹாங்” என்று தன்னிலை மீண்டவன்.. இரண்டே எட்டில் மனைவியை நெருங்கி அவள் கண்ணங்களைத் தன் இரு கைகளில் ஏந்தியவனோ... “you look so pretty டி, இந்த அழகு எனக்கே எனக்கு சொந்தம்னு நினைக்கும் போது I feel arrogance” நான் கர்வம் கொள்கிறேன் என்றவனின் குரல் பெண்ணவளை வசீகரிக்கவும்... நெஞ்சு படபடக்க நாணத்துடன் இவள் இமைகளைத் தாழ்த்திக் கொள்ளவும் “i love you ரிது darling” என்று உணர்வுப்பூர்வமாக மொழிந்தவன் பின் நெற்றியில் இதழ் பதித்து “வா போகலாம்” என்று அழைக்க… கணவன் காதலில் உள்ளம் களிக்கச் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் தன்யா.
விதுனதிபாகரனிடம் தற்சமயம் கார் இல்லை, அதனால் பைக் வசதிப்படுமா அல்லது கார் புக் செய்யவா என்று இவன் நேற்றே மனைவியிடம் கேட்டிருக்க, அவளின் பதில் பைக் என்று வர, இதோ இருவரின் முதல் பயணமே பைக் என்று ஆனது.
பைக்கில் ஏறி அமர்ந்தது முதல் தன்யாவிடம் பேச்சு இல்லை… அவள் ஏன் பேசப் போகிறாள்… கணவனின் அருகாமையில், தன் முதல் பைக் பயணத்தைச் சுற்றியுள்ள இயற்கையோடு ரசிக்கத் தான் பெண்ணவளின் உள்ளம் விழைந்தது. இப்படி வெளியே செல்லாதவள் இல்லை… ஆனால் இயற்கையை இப்படி ரசனையோடு ரசித்தவள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு மனநிலை முன்பெல்லாம் இருந்தது இல்லை. இறைவனும் அப்படி ஒரு வாய்ப்பை அவளுக்குத் தந்தது இல்லை. இன்று கணவன் அவளுக்கு அதைத் தர... இதயத்தில் பேராவலும் பேரானந்தமும் சூழ்ந்தது பெண்ணவகளுக்கு. அதுவும் எப்படி சின்ன தம்பி குஷ்பு போல் “போவோமா ஊர்கோலம்…” என்று இவளுள் பிரவாகம் எடுத்தது... அவளின் ரசனை.
ஆனால் திபாகரன் அப்படி இல்லை போல... “ரிது உனக்கு ஓகே தான, சரியா உட்கார், பார்த்து கவனம், பிடிச்சிக்கோ ரிது” இப்படியாக அவன் சலசலத்து வர... எதற்கும் எதிர்வினை ஆற்றவில்லை இவள்.
மனைவியின் மனநிலை தெரியாமல் கடுப்பானவன் கண்ணாடி வழியே அவளை ஊடுருவி முறைத்து “ரிதூஊஊஊ” என்றழைக்க அவளிடம் அதே அமைதி
பொறுமையிழந்தவன் சாலையோரம் வண்டியை நிறுத்த, அதை உணர்ந்தவள், “ஹாங் ஏன் வண்டிய நிறுத்திட்டிங்க” என்று விழித்தெழுந்தவள் போல் கேட்க
“இங்க என்ன பார்” என்று அவன் அழுத்திச் சொன்னதும் கண்ணாடியின் வழியே இவள் கணவனைக் காண “கூப்பிட கூப்பிட.. பதிலே இல்ல உன் கிட்ட, என்ன இது ஹ்ம், நாம ஃப்ளைட்ல போகல... பைக்ல போறோம் ஞாபகம் வச்சிக்கோ” என்று இவன் அதட்ட
“என்ன பெரிய ஃப்ளைட்... அதுல நான் நிறைய தடவை போயிருக்கேன். எனக்கு பைக் தான் வேணும்... ஜில்லுன்னு முகத்துல காத்து பட... தலை முடி எல்லாம் பறக்க... சுத்தி எவ்வளவு அழகு, சூப்பரா இருக்கு இந்தப் பயணம்” என்று தன் உள்ளத்தின் மகிழ்ச்சியை முகம் விகாசிக்க தன்யா சொல்லவும்
இவளுக்கு பைக் ஓகேவா என்று இன்னும் இவனுள் குறுகுறுத்திருந்த கேள்வி விலகி விட, மனைவியின் முகம் கண்டு மகிழ்ந்தவன் “சரி.. சரி.. அதுக்காக கவனம் இல்லாம இருக்காத, என்னைய பிடிச்சிக்கோ” என்றிட
“நான் கவனமா தான் வரேன், நீங்க முதல்ல வண்டிய எடுங்க, முதல்ல ரோட்ட பார்த்து ஓட்டுங்க... சும்மா வெட்டி கதை பேசிட்டு, ஹ்ம்.. ரைட் ரைட் எடுங்க” அவன் சொன்னதைச் செய்யாமல் கிண்டல் குரலில் கண்டக்டர் பாணியில் இவள் மொழிய
'திமிர பார்த்தியா இந்த முயல் குட்டிக்கு' என்று நினைத்தவன் உடனே வண்டியின் வேகத்தைக் கூட்ட
அதில் இவ்வளவு நேரம் இருந்த கிண்டல் எல்லாம் விலக “அச்சோ விதுன்.. வி..துன்..” என்றவள் கண்களை இறுக்க மூடி தன்னவனைக் கட்டிக் கொண்டு அலற
“ஹா.. ஹா.. உனக்காக நான் மெதுவா போனா.. என்ன பேச்சு பேசின நீ.. எங்கமா அந்த வீர தீர மங்கை” என்றவன் முகத்தில் கேலி இழையோட, குறும்பு சிந்தும் கண்களால் இவன் அங்கும் இங்கும் தேடுவது போல் பாவனை செய்ய
கோபம் இருந்த போதும் கணவனின் கேலியிலும் பாவனையிலும் கவரப்பட்டவளாகச் சிரிப்பில் இதழோரம் துடிக்க, “போங்க போங்க நான் உங்க பேச்சி க்கா..” அழகாய் தலையசைத்து மொழிந்தவள் பொய்யாய் “பட் பட்” என கணவனின் முதுகில் அடித்துரைக்க
“க்கா வா.. ஹா..ஹா.. க்கா எல்லாம் இல்ல.. இனிமே நமக்குள்ள பழம் மட்டும் தான்” என்று உல்லாசமாய் சொன்னவன், மனைவியின் கையை மென்மையாய் பற்றி இழுத்து தன்னவளின் உள்ளங்கையில் ஒரு முத்தத்தைப் பதிக்க
கணவனின் அதிரடியிலும், பார்வையில் கட்டுண்டு இருந்தவள்.. பின் திகைப்புடன் சுற்றும் முற்றும் பார்த்து “என்ன இது ரோட்டுல” என்று முனங்க
“அதான் யாரும் இல்லையே டி” என்றவன் காதலோடு கண்சிமிட்ட.... இன்னைக்கு இவர் சரியே இல்லை என்ற எண்ணத்தில் முகம் சிவந்தது மனையாட்டிக்கு.
கணவன் அழைத்து வந்த இடத்தைப் பார்த்ததும் “இங்கயா” என்ற கேள்வியுடன் இவள் இறங்க
“ஆமாம் இங்க தான்” என்றவன் வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு வந்து மனைவியின் கரம் பற்றி முன்னேற, சற்றும் அசையவில்லை பெண்ணவள்.
“என்ன ரிது அமைதியா இங்கேயே நின்னுட்ட... வா”
“எதுக்குங்க இங்க” இவளுள் சுணக்கம்
மனைவியைக் கூர்ந்தவன் “இது என்ன கேள்வி.. நம்ம பாக்டரிய உனக்குக் காட்ட எனக்கு ஆசை இருக்காதா” என்றவன் குரலில் பேராவல் ஓடியது
அதை எல்லாம் உணராமல் “அது..” இவள் தயங்க
வரும் போது இருந்த மகிழ்ச்சி தற்சமயம் மனைவியிடம் இல்லை என்பதைக் கண்டு கொண்டவன் “என்ன அது.. ஏன் நம்ப கம்பெனிய பார்க்க உனக்கு இஷ்டம் இல்லயா” என்று அழுத்தத்துடன் ஒலித்த கணவனின் குரலில்
“அச்சோ.. அது இல்லங்க.. முதல் தடவை நாம இரண்டு பேரும் வெளிய வரோம்.. சோ நீங்க வேற எங்கனா அழைச்சிட்டு போவீங்கன்னு நினைச்சேன், நம்ம கம்பெனிய நினைக்கல அ…தான்…” இவள் சற்றே தயக்கத்துடன் சொல்ல
தன் தவறை உணர்ந்தவனோ “ஓஹ்.. எனக்கு நம்ம பாக்டரினா ரொம்ப பிடிக்கும் ரிது. அதான் நான் வேற எங்கேயும் யோசிக்கல, நெக்ஸ்ட் டைம் நான் இப்படி சொதப்ப மாட்டேன் பிலீவ் மீ” என்று உளமாற சொன்ன
கணவனின் முகத்தில் வருத்தத்தைக் கண்டவள், மென்மையாய் தன்னவனின் கைப்பற்றி, “ஒன்னும் சொதப்பல வாங்க” என்று புன்னகை முகமாய் கணவனை உள்ளே அழைத்துச் செல்ல தன்யா எத்தனிக்க
எதிர்ப்பட்ட திபாகரனின் அந்தரங்க காரியதரிசி பாலாஜியோ, “வெல்கம் மேம்... வெல்கம் சார்” என்று வரவேற்றவர் பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, அதை இன்முகமாய் ஏற்றவள் “இன்னைக்கும் ஆபிஸ் இருக்கா” இவள் கணவனிடம் கேட்க
“புரொடக்ஷன் பீல்டுல வேலை இருக்கும் ரிது… சன்டே மட்டும் ஒரு பேட்ச் தான் வேலை செய்வாங்க... எதாவது அவசரம்.. சந்தேகம்னா.. பாலாஜி வருவார்”
“ஓ..” இவளிடம் அமைதி
பெரிய அளவில் இல்லையென்றாலும் கனகச்சிதமாக இருந்தது அந்த இடம். இவர்கள் உள்ளே நுழைய, நேரெதிரே அலுவலகம் இயங்க, அதனின் வலதுபுறம் பாக்டரி இயங்க பக்கத்திலே தொழிலாளர்களுக்கான ஸ்டோர் ரூம் இருந்தது. இடதுபுறமோ உணவகம் இருக்க... இவை மூன்றையும் இணைக்கச் சின்னதாய் தோட்டத்துடன் கூடிய நடைபாதை இருந்தது. பார்த்த அனைத்தும் தன்யாவுக்குப் பிடித்து விட… அதிலும் கணவன் ஒவ்வொரு இடத்தையும் குரலில் துள்ளலுடன்… நெஞ்சார்ந்த ஆர்ப்பரிப்பில் கர்வத்தோடு விளக்கும் போது.. இந்த தொழிலைக் கணவன் எந்தளவு நேசிக்கிறான் என்பதை உணர்ந்தாள் பெண்ணவள். அதை இவள் தன் வாழ்த்தில் தெரிவிக்க... அகமகிழ்ந்து போனான் திபாகரன்.
இறுதியாய் தன் அறைக்கு மனைவியை அழைத்து வந்தவன் வாசலிலேயே நிறுத்தி “ரிது வலது கால எடுத்து வச்சி உள்ள போ” என்று சொல்ல
அதில் கணவன் கேலி செய்கிறானோ என்ற எண்ணத்தில் இவள் அவனைக் காண… அவன் முகமோ அப்படி இல்லை என்பதை நிரூபிக்கவும்… விழிவிரித்தவளின் முகமோ பின் எதற்கு என்ற கேள்வியைத் தாங்கியிருக்க... அதைப் படித்தவன் “இது என் சாம்ராஜ்ஜியம், நீ என் மகாராணி, அப்ப நீ வலது கால எடுத்து வச்சி தான என் கோட்டைக்குள்ள போகனும்” என்றவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி உள்ளார்ந்த அன்பில் சொல்ல
“ஹா.. ஹா.. ராணி மட்டும் எப்படி தனியா போவாங்க... அப்ப கூட ராஜாவும் தான வரனும்” இவளும் நான் ஒன்றும் உங்களுக்குச் சளைத்தவள் அல்ல என்பது போல் ஒற்றை புருவத்தை உயர்த்தி கணவனையும் உடன் அழைக்க
“அம்பேல்” என்பது போல் இரு கைகளையும் உயர்த்தி மனைவியிடம் சரணடைந்தவனோ, பின் தன் வலது கையை மனைவியின் தோளில் இட்டு தன்னுடன் சேர்த்தணைத்த படி, இடது கையால் கதவு குழியைத் திறந்து கொண்டு, இருவரும் உள்ளே பிரவேசிக்க அதில் “
to our place” என்றவனின் கரங்களோ ஒரு முறை மனைவியை இறுக அணைத்து விடுவித்தது.சிறிய அறையே என்றாலும், இதுவும் கச்சிதமாக அழகாக இருந்தது. அறையை இவள் சுற்றிப் பார்க்க, அவனின் சுழலும் நாற்காலிக்கு மேலே சுவரில் அப்துல்கலாம் ஐயாவின் புகைப்படம் இருக்க, அதன் கீழே “வாய்ப்புக்காகக் காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்…” என்ற அவரின் பொன்மொழி பொறிக்கப்பட்டிருக்க, அதன் நேர் எதிர் சுவரில் அழகிய கடிகாரம் வீற்றிருக்க, வலது புற சுவரிலோ காட்டுப் பாதை நோக்கி ஓடும் ஒற்றை குதிரை புகைப்படம் ஒன்று வீற்றிருந்தது, அனைத்தையும் பார்த்த பெண்ணவள் மனதினில் பெருமை.. பெருமை.. பெருமை… மட்டுமே கூடவே கணவனின் திறமையை வியந்து அங்கிருந்த அழகை இவள் கண்டு ரசித்த நேரம் மனைவியின் உணர்வுகளை ஆவானித்தவனோ புன்சிரிப்புடன் தன்னவளை பின்புறமாக அணைத்து, அவளின் வலது தோளில் தன்னுடைய தாடையை வைத்து “கீழ விழுந்தா குதிரை மட்டும் தான் உடனே எழும்பி ஓடும், சோ அது மாதிரி தான் நான் என்றும் இருக்கனும்னு நினைப்பேன்” என்று இவன் தன் உள்ளத்தைப் பகிர, இவன் என் கணவன் என்ற பெருமையில் சதிராட்டம் ஆடியது பெண்ணவள் உள்ளம்.
பேச்சின் இடையே மனைவியை நடத்தி வந்து தன் சீட்டில் அவளை இவன் அமர வைக்க, தான் இருக்கும் சூழல் உணர்ந்து விதிர்விதிர்த்துப் போனாள் இவள். அதில் பதட்டத்துடன் முகம் அதிர, உடல் நடுங்க அடுத்த நொடி பெண்ணவள் எழுந்து விட
தன்னவளின் உணர்வுகளை ஆவானித்தவனோ “ரிது, what happen, any problem, என்ன டி” இவனுள் பதட்டம்
பின்னே இவ்வளவு நேரம் சிரித்த முகமாய் இருந்தவள் பதட்டத்துடன் முகத்தில் வியர்வை அரும்ப நின்றால் எப்படி இருக்கும்... அதுவும் மிக இயல்பாய் நடந்த ஒன்றுக்கு ஏன் இந்த நடுக்கம், இவனுள் புரியாத புதிர்.
கணவனின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், அளிக்கத் தோன்றாமல்… ஏன் முடியாமல்… தன்னை சமாளித்து நடந்து வந்து அங்கிருந்த எதிர் இருக்கையில் இவள் அமர, தன்னிடமிருந்த கைக்குட்டையால் மனைவியின் முகத்தைத் துடைத்தவனோ, அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்து அருந்தச் சொல்ல, அதை மறுக்காமல் வாங்கிப் பருகியவளோ, கணவனின் முகம் பார்த்து “நான் உங்கள hug பண்ணிக்கவா, I want to hug u விதுன்” முகம் கசங்க கரகரத்த குரலில் மன்றாடலுடன் தயக்கத்துடன் மனைவி கேட்க
இவனுக்குத் தாங்குமா... “பைத்தியம் இதையெல்லாம் கேட்பியா டி” என்று அதட்டியவன் குரலுக்கு மாறாய் அவனின் கரங்களோ மனைவியை மென்மையாய் பற்றி எழுப்பி நிறுத்தி
இதமாய் அணைத்துக் கொள்ள... இருநெஞ்சங்களின் இதயத் துடிப்பு மட்டுமே அவ்வறையை நிறைத்திருந்தது