என்னடி மாயாவி நீ: 1

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாயம்: 1
நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே நானும்
மெழுகுவர்த்தியும்....
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
...
வெண்மை நிற நிலா குட்டி குட்டி நட்சத்திரங்களுடன் அமைதியாக ஆட்சி புரிகின்றன இந்த இருள் சூழ்ந்த உலகில். ஐக்கிய
அமெரிக்காவின் வடகிழக்கிலும் வாசிங்க்டன் டிசிக்கும் பாஸ்டனுக்கும் நடுவிலும் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரத்திலும் அமைந்திருந்தது அந்த அழகான நகரம்.
ஐக்கிய அமெரிக்காவில் மிகக் கூடுதலான மக்கள் தொகையுடைய அந்நகரம், கையைத் தூக்கி வரவேற்பது போல அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை கொண்டு, ஆங்கிலேயர்களின் கைக்கு குடியேற்றம் மாறும் வரை "நியூ ஆம்ஸ்டர்டாம்" என்ன அழைக்கப்பட்ட நியூ யார்க் நகரம் தான் அந்த நகரம்.
அந்நகரில் நெடுமென வளர்ந்திருக்கும் அப்பார்மெண்டில், நிலவும் அமைதியை குலைக்கும் வண்ணம் போன் அலறியது. அதை உயிர்பித்தவன் மாமா என்ன அழைக்கையில் எதிர்முனையிலிருந்து, 'என்னப்பா எப்படி இருக்க?, ஒழுங்கா சாப்பிடுறீயா?, வேலையெல்லாம் சுமுகம் தானே?(இவரின் கேள்வி, மனம் முழுவதும் பிறந்த மண்ணின் வாசத்தை பரப்ப) என வினவ, அதற்கு விடையளிக்கும் பொருட்டு 'எல்லாமே நலம் தான் மாமா' என கேள்விகளை அடுக்கும் மாமாவிடம் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே பதிலளித்தான் அந்த வாலிபன்.
அப்புறம் உன் உடம்பு ஆரோக்கியமா தானே உள்ளது? என இவனை அக்கறையோடு வினாவினரிடத்தில் இவனோ பதிலுக்கு ஏதேனும் விசாரிக்கவில்லை...விசா- ரிக்கும் மன நிலையில் இவன் இல்லை என்பதே சரி. சிறிது நேரம் கழித்தே ஆரோக்கியம் தான் மாமா என்றான், அருகிலிருந்த பீர் பாட்டிலயும் சிகரெட்டையும் பார்த்து கொன்டே...
அப்பறம் வர்ஷித் நீ எப்போ ஊருக்கு வருவ, உனக்கு எப்போ கல்யாணம் செய்து பார்ப்பது என எப்போதும் இவனை இம்சிக்கும் கேள்வியை கொடுத்தார் அவனது மாமா. வர்ஷித்தோ இதற்கு கொஞ்சம் நாள் போகட்டும் என சொல்லியே பல மாதங்களை கடத்தினான். இவன் வேலைக்காக இங்கு வந்த ஒரு வருடம் முழுவதும் இவனிடம் அவன் மாமா வழக்கமாக கேட்கும் கேள்வி இதுதான்...
இனிமேலும் இவரிடம் பேசி தள்ளிப்போட முடியாது என தீர்மானித்தவனாக சரி மாமா, நீங்க ஆக வேண்டியதை பாருங்க எனக் கூறியபின் அவனது மாமாவோ இப்போதான் நிம்மதியாக உள்ளது... எங்க நீ கல்யாணமே வேணாம்ணு சொல்லிடுவியோன்னு பயமா இருந்தது எனக் கூறினார். போனை கட் செய்த பிறகு, பெண் பார்ப்பதற்கு ஆரம்பிக்கவேண்டும் என முடிவெடுத்தார்.
வெறுப்பாக அறைக்குள் அமர்ந்து, அலுவலக நண்பன் ஆகாஷ் கூட மதுவருந்த ஆரம்பித்துவிட்டான் வர்ஷித் சோகத்தை மறைப்பதற்கு... மச்சான் ஊரிலிருந்து வந்து இந்த கெட்ட பழக்கத்தை வேற கத்துக்கிட்ட, மாமா கிட்ட கல்யாணத்துக்கு சரினு சொல்ல மாற்ற, எப்போ பாரு சோகமா முகத்த வச்சிக்கிட்டு சுத்துறியே உனக்கு என்னதான் பிரச்சனை என கேட்டான் ஆகாஷ்.
ஆணுக்கே உறிய கம்பிரம் கொண்டு, வெற்று தோளோடு முட்டி வரை டிரௌசர் மட்டுமே அணிந்து முகத்தில் கொள்ளை வாட்டத்து டனும் அமர்ந்திருக்கும் வர்ஷித் நிறைய வற்புறுத்தலுக்கு பிறகே வாயை கட்டவிழ்த்தான் failure என்று...
தெளிவா சொல்லேன்டா என ஆகாஷ் கேட்க, love என சொல்லும்போது மலர்ந்த முகம், failure என சொல்லும்போது வாட்டத்தின் உச்சத்திற்க்கே சென்றது.
நியூ யார்க் சிட்டியை நனைத்த பனி கூட இவன் மனதை குளிருட்டவில்லை போலும் அவ்வளவு கடுமையாக பிரதிபலித்தான் மது அருந்தி கொன்டே...
ஏன்? என்னவானது அந்த பெண்ணுக்கு உன்னை ஏற்க மறுத்தாள் என கேட்ட நண்பனிடம் நான் என் மனசை அவளிடம் சொல்லவில்லை. அவள் எனக்கு கிடைக்கமாட்டாள் என ஏற்கனவே தெரியும் என்ற வர்ஷித் அவள் என்றுமே மாயாவி தான். தனக்கு கிடைக்காத வரம் என நினைத்து மருகிக்கொண்டான்.
சரி மச்சான் கடந்த காலத்தை விட்டுட்டு எதிர்காலத்த நினை. உன் மாமா திருப்திக்காவது அவர் காட்டும் பொன்னை கட்டிக்கோ, இந்த குடிப்பழக்கத்தயெல்லாம் மறந்திடு என்று கூறி போதை மயக்கத்தில் படுக்கையில் சரிந்தான் ஆகாஷ்.
அவனோ பித்து பிடித்தாற்போல அமர்ந்து, அவளை மறக்கத்தானே இந்த பழக்கமெல்லாம் பழகினேன்... வருங்காலத்தில் இந்த பழக்கத்தை கூட மறந்திடுவேன். ஆனால், உன்னிடம் தொலைத்த என் மனதை நான் எப்படி மறப்பது என்னும் சிந்தனையை சந்தித்தான் மனதில்...
வாய்விட்டு சொல்லாத காதல், சொர்க்கத்தை சேராது என்பர். ஆனால், இவனது காதல் திருமணம் சொர்க்கத்திலே நிச்சயிக்கப்பட்டவை என்பதை கடவுள் மட்டுமே அறிந்த விசயமாகும்...
உனது பெயரெழுதி
பக்கத்துல... எனது பெயரை
நானும் எழுதிவச்சேன்...
அதை மழையில் நனையாம
குடை புடிச்சேன்... மழை விட்டு நான் நனஞ்சேன்...
என இவன் அம்மு என்று செல்லப்பெயரிட்டு மனதில் வைத்திருக்கும் காதலியின் பெயரையும் இவனது பெயரையும் சேர்த்து எழுதி பார்த்து, இது கனவில் மட்டுமே சாத்தியம் என இவன் உருகி கசிந்துக்கொண்டிருக்க...
ஆனால் அவளோ...
Heyyy பெண்னே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்- கிறாய்.... நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்...
என கைபேசி அழைக்க, உயிர்ப்பித்த விஷ்ணு திரையில் கண்ட பெயரைக்கண்டு மகிழ்ச்சி கொண்டான்.
'பட்டு' என அழைத்தவன் மறுமுனையிலிருந்து 'ஏன்டா? உன்னையே ஒருத்தி நினைச்சுகிட்டு இருக்கேன் ஒரு போன் பண்ணியாடா...வர கோபதித்துக்கு உன்கிட்ட பேசக்கூடாதுனு இருந்தேன். ஆனா, இந்த மனசு கேட்க மாட்டிக்குதே என்ன செய்ய... என காய்ச்சு எடுத்தாள்ஆதிகா.
ஏன்டி இரண்டு மூணு நாளைக்கு அப்புறம் பேசுறோம்.. அப்பவும் இப்படி திட்டுறியேடி... இங்க கொஞ்சம் வேலடி அதான் இல்லனா உன்கிட்ட பேசாம எப்படி டி இருப்பேன் என்றான் விஷ்ணு...
சரி சரி நீ வேலைனு சொன்ன ஒரு வாரம் இன்னையோட முடியுதுல...என கேட்டவளுக்கு ஆமாடி, நாளைக்கு சென்னைல இருந்து வந்துருவேன். நீ சொன்ன மாதிரி உங்க வீட்ல வந்து நம்ம கல்யாணத்த பத்தி பேசுறேன் சரியா... இப்போ சந்தோசமாடி என கேட்டவனிடத்தில் ஐ லவ் யூ டா என கூறிவிட்டு சீக்கிரமா வா நாளைக்கு பாப்போம் என கூறி காலை கட் செய்தாள்...
எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் அப்பாவோட கம்பெனியை கையில் பொற்றுப்பேற்று கொண்டு செட்டில் ஆகிவிடுவோம். பிறகு, வேறென்ன, நேசித்தவளின் கையை பிடிக்க வேண்டும் என நினைத்தவன் கடவுளே நாளைக்கு எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான் (விதியே சதி செய்ய போவதை யார் அறிவார்) தனது சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டுவிட்டான்.
அங்கு அவளோ மூச்சு முட்டியபடி போர்வைக்குள் இருந்து வெளியே வந்தாள். ஏனன்றால், வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பதால் தினமும் இரவு போர்வைக்குள்ளிருந்து தான் போன் பேசுவாள். நாளைக்கு மட்டும் நல்ல விதமாக நடந்தால்,பயந்து போன் பேச வேண்டியது இல்ல என நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளின் எண்ணம் எல்லாம் விஷுணுவை காதலித்த பள்ளி பருவமே சுற்றியது...
நான்கு வருடத்திற்கு முன் நடந்த காட்சியெல்லாம் மலர்ந்தது நினைவில்...
காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் Saraswathi Mandhir Hr Sec School ல் பயின்றனர் விஷ்ணுவும் ஆதிகாவும்...
அழகான நாட்கள்... திரும்ப பெற முடியாத நினைவுகள்... ஒரே மாதிரியான யூனிபார்ம்... இரட்டை ஜடைகள்... ஸ்கூல் பேக்...பேனா புக்ஸ் நோட்... ஆசிரியர்... நன்பேண்டா... கேலி... சிரிப்பு... சாப்பாடு...சண்டை, திட்டு... ரேங்க் கார்டு இன்னும் சொல்லி கொன்டே போகலாம்
அந்த பள்ளியில் விஷ்ணு 12ஆம் வகுப்பும், ஆதிகா 11 ஆம் வகுப்பும் பயின்றனர்.
அந்த வருடம் பள்ளியின் முதல் நாள். ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு அனைவரும் சந்தித்தால் அனைவரின் முகத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
முதல் நாள் என்பதால் காலை 9.15க்கு பிரார்த்தனைக்கூடம் நடைபெற்றது. அதில், தேசிய கீதமான 'ஜன கன மன அதி நாயக ஜெயகே' என்னும் பாட்டை அழகாகவும் சரியாகவும் பாடிய 11 ஆம் வகுப்பு மாணவிகள் அடங்கிய குழுவிற்கு கூடத்தின் இறுதியில் பாராட்டு வழங்கப்பட்டது. அதில் ஆதிகாவும் ஒருத்தி.
அப்போது, ஏதோ அந்த வயதிற்குரிய உணர்வுகளினால் அவள் உருட்டி உருட்டி விழிக்கும் கண்களை பார்த்தும் நீண்ட கூந்தலின் அழகை பார்த்தும் அவளின் மேல் ஒரு விதமான ஈர்ப்பு எழுந்தது விஷ்ணுவிற்கு ...
ஆதிகாவிற்கும் இந்த ஈர்ப்பு தோன்றுமா என அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
நன்றி !

வணக்கம் தோழமைகளே இனிமேல் உங்க கூட நானும் என்னோட முதல் கதையும் பயணிக்க போகிறோம். படிச்சிட்டு எப்படி இருக்குனு கண்டிப்பா கமெண்ட்ல சொல்லுங்க. உங்க ஆதரவு எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதனால ஆதரவு தர மறந்துடாதீங்க... கீழ கமெண்ட் சொல்லுங்க.


என்னடி மாயாவி நீ: 2
 
Last edited:

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

P Bargavi

Member
மாயம்: 1
நான்கு கண்ணாடி
சுவர்களுக்குள்ளே நானும்
மெழுகுவர்த்தியும்....
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
...
வெண்மை நிற நிலா குட்டி குட்டி நட்சத்திரங்களுடன் அமைதியாக ஆட்சி புரிகின்றன இந்த இருள் சூழ்ந்த உலகில். ஐக்கிய
அமெரிக்காவின் வடகிழக்கிலும் வாசிங்க்டன் டிசிக்கும் பாஸ்டனுக்கும் நடுவிலும் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரத்திலும் அமைந்திருந்தது அந்த அழகான நகரம்.
ஐக்கிய அமெரிக்காவில் மிகக் கூடுதலான மக்கள் தொகையுடைய அந்நகரம், கையைத் தூக்கி வரவேற்பது போல அமைந்திருக்கும் சுதந்திர தேவி சிலையை கொண்டு, ஆங்கிலேயர்களின் கைக்கு குடியேற்றம் மாறும் வரை "நியூ ஆம்ஸ்டர்டாம்" என்ன அழைக்கப்பட்ட நியூ யார்க் நகரம் தான் அந்த நகரம்.
அந்நகரில் நெடுமென வளர்ந்திருக்கும் அப்பார்மெண்டில், நிலவும் அமைதியை குலைக்கும் வண்ணம் போன் அலறியது. அதை உயிர்பித்தவன் மாமா என்ன அழைக்கையில் எதிர்முனையிலிருந்து, 'என்னப்பா எப்படி இருக்க?, ஒழுங்கா சாப்பிடுறீயா?, வேலையெல்லாம் சுமுகம் தானே?(இவரின் கேள்வி, மனம் முழுவதும் பிறந்த மண்ணின் வாசத்தை பரப்ப) என வினவ, அதற்கு விடையளிக்கும் பொருட்டு 'எல்லாமே நலம் தான் மாமா' என கேள்விகளை அடுக்கும் மாமாவிடம் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே பதிலளித்தான் அந்த வாலிபன்.
அப்புறம் உன் உடம்பு ஆரோக்கியமா தானே உள்ளது? என இவனை அக்கறையோடு வினாவினரிடத்தில் இவனோ பதிலுக்கு ஏதேனும் விசாரிக்கவில்லை...விசா- ரிக்கும் மன நிலையில் இவன் இல்லை என்பதே சரி. சிறிது நேரம் கழித்தே ஆரோக்கியம் தான் மாமா என்றான், அருகிலிருந்த பீர் பாட்டிலயும் சிகரெட்டையும் பார்த்து கொன்டே...
அப்பறம் வர்ஷித் நீ எப்போ ஊருக்கு வருவ, உனக்கு எப்போ கல்யாணம் செய்து பார்ப்பது என எப்போதும் இவனை இம்சிக்கும் கேள்வியை கொடுத்தார் அவனது மாமா. வர்ஷித்தோ இதற்கு கொஞ்சம் நாள் போகட்டும் என சொல்லியே பல மாதங்களை கடத்தினான். இவன் வேலைக்காக இங்கு வந்த ஒரு வருடம் முழுவதும் இவனிடம் அவன் மாமா வழக்கமாக கேட்கும் கேள்வி இதுதான்...
இனிமேலும் இவரிடம் பேசி தள்ளிப்போட முடியாது என தீர்மானித்தவனாக சரி மாமா, நீங்க ஆக வேண்டியதை பாருங்க எனக் கூறியபின் அவனது மாமாவோ இப்போதான் நிம்மதியாக உள்ளது... எங்க நீ கல்யாணமே வேணாம்ணு சொல்லிடுவியோன்னு பயமா இருந்தது எனக் கூறினார். போனை கட் செய்த பிறகு, பெண் பார்ப்பதற்கு ஆரம்பிக்கவேண்டும் என முடிவெடுத்தார்.
வெறுப்பாக அறைக்குள் அமர்ந்து, அலுவலக நண்பன் ஆகாஷ் கூட மதுவருந்த ஆரம்பித்துவிட்டான் வர்ஷித் சோகத்தை மறைப்பதற்கு... மச்சான் ஊரிலிருந்து வந்து இந்த கெட்ட பழக்கத்தை வேற கத்துக்கிட்ட, மாமா கிட்ட கல்யாணத்துக்கு சரினு சொல்ல மாற்ற, எப்போ பாரு சோகமா முகத்த வச்சிக்கிட்டு சுத்துறியே உனக்கு என்னதான் பிரச்சனை என கேட்டான் ஆகாஷ்.
ஆணுக்கே உறிய கம்பிரம் கொண்டு, வெற்று தோளோடு முட்டி வரை டிரௌசர் மட்டுமே அணிந்து முகத்தில் கொள்ளை வாட்டத்து டனும் அமர்ந்திருக்கும் வர்ஷித் நிறைய வற்புறுத்தலுக்கு பிறகே வாயை கட்டவிழ்த்தான் failure என்று...
தெளிவா சொல்லேன்டா என ஆகாஷ் கேட்க, love என சொல்லும்போது மலர்ந்த முகம், failure என சொல்லும்போது வாட்டத்தின் உச்சத்திற்க்கே சென்றது.
நியூ யார்க் சிட்டியை நனைத்த பனி கூட இவன் மனதை குளிருட்டவில்லை போலும் அவ்வளவு கடுமையாக பிரதிபலித்தான் மது அருந்தி கொன்டே...
ஏன்? என்னவானது அந்த பெண்ணுக்கு உன்னை ஏற்க மறுத்தாள் என கேட்ட நண்பனிடம் நான் என் மனசை அவளிடம் சொல்லவில்லை. அவள் எனக்கு கிடைக்கமாட்டாள் என ஏற்கனவே தெரியும் என்ற வர்ஷித் அவள் என்றுமே மாயாவி தான். தனக்கு கிடைக்காத வரம் என நினைத்து மருகிக்கொண்டான்.
சரி மச்சான் கடந்த காலத்தை விட்டுட்டு எதிர்காலத்த நினை. உன் மாமா திருப்திக்காவது அவர் காட்டும் பொன்னை கட்டிக்கோ, இந்த குடிப்பழக்கத்தயெல்லாம் மறந்திடு என்று கூறி போதை மயக்கத்தில் படுக்கையில் சரிந்தான் ஆகாஷ்.
அவனோ பித்து பிடித்தாற்போல அமர்ந்து, அவளை மறக்கத்தானே இந்த பழக்கமெல்லாம் பழகினேன்... வருங்காலத்தில் இந்த பழக்கத்தை கூட மறந்திடுவேன். ஆனால், உன்னிடம் தொலைத்த என் மனதை நான் எப்படி மறப்பது என்னும் சிந்தனையை சந்தித்தான் மனதில்...
வாய்விட்டு சொல்லாத காதல், சொர்க்கத்தை சேராது என்பர். ஆனால், இவனது காதல் திருமணம் சொர்க்கத்திலே நிச்சயிக்கப்பட்டவை என்பதை கடவுள் மட்டுமே அறிந்த விசயமாகும்...
உனது பெயரெழுதி
பக்கத்துல... எனது பெயரை
நானும் எழுதிவச்சேன்...
அதை மழையில் நனையாம
குடை புடிச்சேன்... மழை விட்டு நான் நனஞ்சேன்...
என இவன் அம்மு என்று செல்லப்பெயரிட்டு மனதில் வைத்திருக்கும் காதலியின் பெயரையும் இவனது பெயரையும் சேர்த்து எழுதி பார்த்து, இது கனவில் மட்டுமே சாத்தியம் என இவன் உருகி கசிந்துக்கொண்டிருக்க...
ஆனால் அவளோ...
Heyyy பெண்னே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்- கிறாய்.... நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்...
என கைபேசி அழைக்க, உயிர்ப்பித்த விஷ்ணு திரையில் கண்ட பெயரைக்கண்டு மகிழ்ச்சி கொண்டான்.
'பட்டு' என அழைத்தவன் மறுமுனையிலிருந்து 'ஏன்டா? உன்னையே ஒருத்தி நினைச்சுகிட்டு இருக்கேன் ஒரு போன் பண்ணியாடா...வர கோபதித்துக்கு உன்கிட்ட பேசக்கூடாதுனு இருந்தேன். ஆனா, இந்த மனசு கேட்க மாட்டிக்குதே என்ன செய்ய... என காய்ச்சு எடுத்தாள்ஆதிகா.
ஏன்டி இரண்டு மூணு நாளைக்கு அப்புறம் பேசுறோம்.. அப்பவும் இப்படி திட்டுறியேடி... இங்க கொஞ்சம் வேலடி அதான் இல்லனா உன்கிட்ட பேசாம எப்படி டி இருப்பேன் என்றான் விஷ்ணு...
சரி சரி நீ வேலைனு சொன்ன ஒரு வாரம் இன்னையோட முடியுதுல...என கேட்டவளுக்கு ஆமாடி, நாளைக்கு சென்னைல இருந்து வந்துருவேன். நீ சொன்ன மாதிரி உங்க வீட்ல வந்து நம்ம கல்யாணத்த பத்தி பேசுறேன் சரியா... இப்போ சந்தோசமாடி என கேட்டவனிடத்தில் ஐ லவ் யூ டா என கூறிவிட்டு சீக்கிரமா வா நாளைக்கு பாப்போம் என கூறி காலை கட் செய்தாள்...
எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் அப்பாவோட கம்பெனியை கையில் பொற்றுப்பேற்று கொண்டு செட்டில் ஆகிவிடுவோம். பிறகு, வேறென்ன, நேசித்தவளின் கையை பிடிக்க வேண்டும் என நினைத்தவன் கடவுளே நாளைக்கு எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டான் (விதியே சதி செய்ய போவதை யார் அறிவார்) தனது சொந்த ஊரான திருச்சிக்கு புறப்பட்டுவிட்டான்.
அங்கு அவளோ மூச்சு முட்டியபடி போர்வைக்குள் இருந்து வெளியே வந்தாள். ஏனன்றால், வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பதால் தினமும் இரவு போர்வைக்குள்ளிருந்து தான் போன் பேசுவாள். நாளைக்கு மட்டும் நல்ல விதமாக நடந்தால்,பயந்து போன் பேச வேண்டியது இல்ல என நினைத்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளின் எண்ணம் எல்லாம் விஷுணுவை காதலித்த பள்ளி பருவமே சுற்றியது...
நான்கு வருடத்திற்கு முன் நடந்த காட்சியெல்லாம் மலர்ந்தது நினைவில்...
காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் Saraswathi Mandhir Hr Sec School ல் பயின்றனர் விஷ்ணுவும் ஆதிகாவும்...
அழகான நாட்கள்... திரும்ப பெற முடியாத நினைவுகள்... ஒரே மாதிரியான யூனிபார்ம்... இரட்டை ஜடைகள்... ஸ்கூல் பேக்...பேனா புக்ஸ் நோட்... ஆசிரியர்... நன்பேண்டா... கேலி... சிரிப்பு... சாப்பாடு...சண்டை, திட்டு... ரேங்க் கார்டு இன்னும் சொல்லி கொன்டே போகலாம்
அந்த பள்ளியில் விஷ்ணு 12ஆம் வகுப்பும், ஆதிகா 11 ஆம் வகுப்பும் பயின்றனர்.
அந்த வருடம் பள்ளியின் முதல் நாள். ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு அனைவரும் சந்தித்தால் அனைவரின் முகத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி அப்பட்டமாக வெளியே தெரிந்தது.
முதல் நாள் என்பதால் காலை 9.15க்கு பிரார்த்தனைக்கூடம் நடைபெற்றது. அதில், தேசிய கீதமான 'ஜன கன மன அதி நாயக ஜெயகே' என்னும் பாட்டை அழகாகவும் சரியாகவும் பாடிய 11 ஆம் வகுப்பு மாணவிகள் அடங்கிய குழுவிற்கு கூடத்தின் இறுதியில் பாராட்டு வழங்கப்பட்டது. அதில் ஆதிகாவும் ஒருத்தி.
அப்போது, ஏதோ அந்த வயதிற்குரிய உணர்வுகளினால் அவள் உருட்டி உருட்டி விழிக்கும் கண்களை பார்த்தும் நீண்ட கூந்தலின் அழகை பார்த்தும் அவளின் மேல் ஒரு விதமான ஈர்ப்பு எழுந்தது விஷ்ணுவிற்கு ...
ஆதிகாவிற்கும் இந்த ஈர்ப்பு தோன்றுமா என அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
நன்றி !

வணக்கம் தோழமைகளே இனிமேல் உங்க கூட நானும் என்னோட முதல் கதையும் பயணிக்க போகிறோம். படிச்சிட்டு எப்படி இருக்குனு கண்டிப்பா கமெண்ட்ல சொல்லுங்க. உங்க ஆதரவு எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதனால ஆதரவு தர மறந்துடாதீங்க... கீழ கமெண்ட் சொல்லுங்க.


என்னடி மாயாவி நீ: 2
Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN