என்னடி மாயாவி நீ: 26

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 26

நாட்கள் வேகமாகவும் காதலாகவும் கரைந்து ஓடின வர்ஷித் ஆதிகாவிற்கு. சுப்பிரமணியன் எவ்வளவோ யோசித்து பார்த்தார் 'சொத்துக்கு உன்னை வாரிசாக அறிவிக்கப்போகிறேன்' என வர்ஷித்திடம் எப்படி சொல்வது என. ஏனென்றால், பள்ளி படிக்கும்போதே கொஞ்சம் விவரம் அறிந்த வயதிலேயே வர்ஷித் சொல்லிவிட்டான் நான் வளர்ந்து வரும்போது என்கையில் சொத்து எதுவும் நீங்க கொடுக்கக்கூடாது என. அன்றைக்கு விஷ்ணுக்கும் வர்ஷித்திற்கும் பெரிய வாக்கு வாதமே நடந்தது.

அன்று இரவு அனைவரும் சாப்பிடும்போது சுப்பிரமணியன், "சாப்பிட்டு எல்லாரும் இங்கயே கொஞ்ச நேரம் இருங்க பேசணும்" என்றார். எல்லாரும் சாப்பிட்டு முடித்து நடுக்கூடத்திற்கு வந்தனர். வர்ஷித்தை அழைத்து அருகில் அமரவைத்துக்கொண்டார் அவனது தந்தை. "என்னப்பா?" என அவன் கேட்க அவனின் கரம் பிடித்து "உனக்கு இது புடிக்காதுனு எனக்கு தெரியும்பா ஆனால் எனக்கு வேற வழி தெரில" என அவர் கூறும்போதே கொஞ்சம் யூகித்திருந்தான். "இனிமேல் என்னோட பொறுப்பெல்லாம் நீங்க ஏத்துக்கப்பா கம்பெனியை இனிய நீ பாத்துக்கோப்பா சொத்துக்கும் இனி நீ தான் வாரிசு" என அவர் கூற அவன் கையை அவரிடமிருந்து வெடுக்கென பிடுங்கி கொண்டு எழுந்தான். அவனின் வேகத்தை கண்டனர் திகைத்து போனர். "முடியவே முடியாதுப்பா" என கோபத்தில் கூறி பின் ஒரு நொடி எடுத்தவன் "இந்த ஊருல உள்ளவங்க உங்க பிரண்ட்ஸ் ஆபீஸ்ல உள்ளவங்க எல்லாருமே இதான் சொல்றாங்கப்பா நான் பணத்துக்காகத்தான் உங்ககிட்ட பழகுறேன்னு, இதுல நீங்க வேற இப்படி செய்தா எல்லாரும் சொன்னது உண்மைன்னு ஆகிரும்ப்பா இது எனக்கு வேணாம்ப்பா ப்ளீஸ்" என வேதனை நிறைந்த குரலில் கூறினான். "நீ கண்டவர்களுக்கு யோசிக்கிறத விட்டுட்டு உன்னோட அப்பாவுக்காக யோசி, எனக்கும் வயசாகிட்டே போகுது என்னால பிசினஸ்லாம் பாக்க முடியல இனிமேல் நீதான் இதெல்லாம் பாக்குற. என்னோட பிள்ளைக்கிட்ட தான இப்படியெல்லாம் சொல்ல முடியும் நீ எங்கள அப்பா அம்மாவா நினைச்சா இதுக்கு ஓத்துக்கோ" என சுப்பிரமணியும் கோபத்துடன் தீர்க்கமான முடிவாய் சொன்னார். அவனுக்கோ கோபம் தலைக்கேற, மடமடவென மாடி படியேறி சென்றான். அறைக்கு சென்று பால்காணியில் இரவு காற்றின் இனிமையை ரசிக்க முடியாமல் கோபம் முகத்தில் கொப்பளிக்க நின்றான். ஆதிகா இவற்றை பார்த்தவள் அத்தை மாமாவிடம் சென்று "அவர்கிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் நீங்க கவலைப்படாம தூங்குங்க" என அவர்களை அனுப்பிவிட்டு மேல அறைக்கு வந்தாள். வர்ஷித் அருகில் சென்று நின்றுகொண்டாள். அவனோ, "நீ போய் படுமா நான் வரேன்" என கூறியும் அவள் நகராமல் நிற்க வேதனை நிறைந்த குரலில் "நீயாவது நான் சொல்றத கேளு ஆதிமா" என்றான்.

அவனை சமாதானப்படுத்த தண்ணீர் கொடுத்து அறைக்குள் உட்காரவைத்து வர்ஷித் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் பொதித்து வைத்து, "உன் பேச்சை கேட்காமல் வேறு யாரு பேச்சை கேட்பேன், நான் சொல்றதையும் சிறிது பொறுமையாக கேளு மாமா" என கூற அவன் ஆதிமாவின் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தான். "அத்தை மாமா சொன்னதுபோல நானும் சொல்ல வரல. ஆனா, அவுங்க சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சு பாரு மாமா. உன்னோட முடிவுல யாரையும் கஷ்டப்படுத்திடாத" என அவள் கூற அவனோ "அப்படி நான் பார்த்தா அது எனக்கே கஷ்டம்டி எத்தனை பேரு என் காதுபட பேசிருக்காங்க தெரியுமா பணத்துக்காகதான் இந்த வீட்ல இவன் இருக்கான்ணு இதுனாலயே விஷ்ணுவோட சொந்தகாரங்ககூடெல்லாம் சண்டை, அப்பவே சொன்னேன் என்ன மறுபடியும் ஹாஸ்டல்ல விட்டுருங்கனு, அதுக்கு இங்க யாருமே ஒத்துக்கல அப்பவே சொல்லிட்டேன் சொத்துல எனக்கு பங்கு கொடுக்கக்கூடாதுனு ஆனால் இப்போ மறுபடியும் இப்படி பேசினா" என அவன் கூற ஆதிகா "இங்க யாருக்கும் நீ நல்லவன்னு நிரூபிக்க தேவை இல்லை மாமா. இப்போ மத்தவங்கள பத்தி யோசிச்சு அத்தை மாமாவ கஷ்டப்படுத்திடாத மாமா. சரி நீ முதல இந்த பிரச்சனையை பக்கத்துல வச்சி பாக்காம
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு அப்பறம் பாரு மாமா இதற்கான பதில் கண்டிப்பா கிடைக்கும்" என கூறி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அவனது நெஞ்சில் பலபேரின் பேச்சு வேதனையாய் உருமாறி அவனை வருத்த அவன் நிம்மதியை தேடி "எனக்கு நிம்மதி தரனும்னா அது உன்னால மட்டும்தான் முடியும் ஆதிமா" என கூறினான். அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டவளுக்கு முகம் சட்டென சிவந்து அவளின் வெட்கத்தை வெளியே காட்டி சம்மதத்தை தானாக வர்ஷித்திடம் கூறியது.

மஞ்சத்தில் சரிந்தவள் மீது தானும் சரிந்து பெண்ணவளை வேறு உலகிற்கு கொண்டு செல்ல தயாராகினான். இங்கு காதலும் காமமும் தாண்டி ஒரு வித ஆறுதல் இருந்தது. தனது மன காயத்திற்கு தன் காதலை மருந்தாக்கி கொண்டிருந்தான். காதலில் இன்பம் மட்டுமில்லை தன் இணைக்கு ஒரு துன்பம் என்றால் அதை குணப்படுத்தும் ஆற்றல் காதலுக்கே உடையது. அதுவே இங்கு நிகழ்ந்தது.

அவளிடம் கொஞ்சம் முரட்டு தனமாகவே நடந்துகொண்டான். அவனால் வலி ஏற்பட்டாலும் அதை பொருட்கொள்ளாமல் அவனது காயத்திற்கு மருந்தாகவே இருந்தாள். நடு இரவில் விடுவித்து தன்னவள் தன்னை விட்டு அகலாதவாறு தன் மீது போட்டுக்கொண்டு மன்னிப்புக்கோரி தூங்கவைத்தான்

விடிந்தும் தூங்குபவளை எழுப்ப மனம் வராமல் மெத்தையில் சீராக படுக்கவைத்து போர்வையை போர்த்திவிட்டு நெற்றியில் இதழ் பதித்து குளிக்க சென்றான். குளித்து வந்து பார்க்கும்போது விழித்திருந்தும் எழாமல் இருந்தாள். இரவு முழுவதும் தனக்கு ஆடையாக இருந்தவனை காணும் என்ற தவிப்பிலும் தனது ஆடை ஏதும் அருகில் இல்லை எனும் கோபத்திலும் போர்வைக்குள் படுத்திருந்தாள். அவன் வெளியே வந்தவுடன் "டேய் கடன்காரா! என்னைய எழுப்பிவிடாம எங்கடா போன ட்ரெஸ்ஸ கூட பக்கத்துல எடுத்து போடல" என கோபத்தில் கத்தியவளின் நிலைமையை பார்த்து விஷம சிரிப்புடன் நின்றான். 'பார்வைய நொண்டிப்புடுவேன்' என செய்கை செய்து முறைத்தாள். "சரியான ராட்சசி" என முணுமுணுத்து விட்டு அவசரத்தில் ஏதும் கிடைக்காததால் அவன் நேற்று அணிந்திருந்த ஆடையையே எடுத்து கொடுக்க அதில் வெட்கமடைந்தவள் அவனை தவிர்த்து செல்ல எத்தனித்தவளை இழுத்து நன்றி என கிசுகிசுத்து இதழில் மென்முத்தமிட்டு அவளை விடுவித்தான். அவள் முகமெங்கும் குங்குமம் போல ஆனது வெட்கத்தில்.

வர்ஷித் அம்மா அப்பா ஆதிகா என எல்லோரின் கூற்றை கொண்டு எல்லோரின் ஆசை படி நானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என முடிவெடுத்து எல்லோரிடமும் கூறினான். இதில் அனைவர்க்கும் மகிழ்ச்சியே. சுப்பிரமணியன் நிம்மதியாக உணர்ந்தார். ஆதிகா தன்னவனை காதலுடன் பார்க்க, வர்ஷித் அப்பா அம்மாவிடம் ஆசி பெற்று பொறுப்பை ஏற்றுக்கொண்டான். இதனால் ராகேஷ் தன்னிடம் கண்டிப்பாக மோதுவான் என யூகித்து வைத்திருந்தான்.

நாட்களும் செல்ல இருவருக்கும் காதல் வாழ்க்கை அழகோவியமாய் இருந்தது.அன்று, ஒரு பிசினஸ் பார்ட்டி நடக்கவிருந்தது. அதற்கு, சுப்பிரமணியன் வர்ஷித்தை போக சொன்னார்.அவனது மறுப்பு அவரிடம் எடுபடவில்லை. ஆதிகாவையும் அழைத்து சென்றிருந்தான். அங்கு எல்லாம் சுமூகமா செல்ல, ராகேஷ் உருவத்தில் சோதனை ஒன்று வந்தது. ராகேஷ் அங்கு மது அருந்தி, அது போடும் தாளத்திற்கேற்ப தள்ளாடி வர்ஷித் அருகில் வந்தான். வர்ஷித்தும் ஆதிகாவும் ஜோடியாக நிற்க இதனை கண்ட ராகேஷ் அதிர்ச்சி அடைந்தான். "ஏன்டா நண்பனு சொல்லி உள்ள வந்து அப்பா அம்மாவ உரிமை கொண்டாடின, விஷ்ணு போனதுக்கு பிறகு சொத்துக்கு பொறுப்பெடுத்து கடைசியில அவனோட காதலியை கூட நீ விட்டுவைக்கலயா என்ன ஜென்மம்டா நீ உனக்கு அசிங்கமா இல்ல", "ஏன்மா உன் காதலன் தான் இவன்கிட்ட ஏமாந்தான் நீயும் ஏமாந்துட்டியா சரியான ஏமாத்துக்காரன்டா நீ"1 என கேவலமான பார்வையோடு இருவரிடமும் கூற வர்ஷித்திற்கு கோபம் தலைக்கேறியது. ஆதிகாவிற்கு அழுகையும் பயமும் முட்டிக்கொண்டது. வர்ஷித் கோபமாக ராகேஷின் சட்டையை பற்ற அவனும் தள்ளாடிக்கொண்டே வர்ஷித்திடம் சண்டைக்கு வந்தான். சண்டையிட்ட இருவரையும் பிரித்து கோபத்தில் கர்ஜிக்கும் வர்ஷித்தை கூட்டி போனாள் ஆதிகா.

காரில் வரும்போதும் கோபமாகவே காணப்பட்டான். ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ள வில்லை. ஆதிகா ராகேஷை சந்தித்த நாளுக்கு சென்றாள். அன்றுதான் ஆதிகாவும் விஷ்ணுவும் கடைசியாக சந்தித்தது. விஷ்ணு சென்னை போவதற்கும் முதல் நாள் இருவரும் சந்தித்து பேசி கொண்டிருக்கும்போது அங்கு ராகேஷ் வந்தான். அப்போ விஷ்ணு ஆதிகாவிடமிருந்து விலகி ராகேஷை கொஞ்சம் தூரம் கூட்டி சென்று பேசினான். என்ன பேசினார்கள் என ஆதிகாவிற்கு தெரியவில்லை. ஆனால் ராகேஷின் மிரட்டல் பாவனை செய்ய விஷ்ணு கோபத்துடன் அவனிடம் கத்திவிட்டு வந்தான். கடைசியாக ராகேஷ் ஆதிகாவை பார்த்து ஏளன பார்வையை வீச அவள் கூனிக்குறுகி நின்றாள். அவளுக்கு அர்த்தமறியா பயம் தொற்றிக்கொண்டது. விஷ்ணுவிடம் அவன் யாரென கேட்டாள் அவன் அதற்கு "ராகேஷ்" என்றான். அப்பதிலே இனிமேல் அவனை பற்றி கேக்காதே என எச்சரிக்க அவள் மேல எதுவும் கேட்க வில்லை. நினைவிலிருந்து மீண்டவள் வீடு வர அறைக்குள் செல்ல அவளை தொடர்ந்து வந்த வர்ஷித், "ஏண்டி என்ன தடுத்த ஏன் என்ன தடுத்த இன்னைக்கு அவன கொன்னு போட்டுருப்பேன்டி" என கோப உச்சியில் கத்த "ஆமா மாமா விட்டுருந்தா நீ கொன்னுருப்ப, அப்பறம் ஜெயிலுக்கு போவ நான் மட்டும் இங்க தனியா கிடக்கணும்" என புலம்ப வர்ஷித் சற்று அமைதியாக இருந்தான். "உனக்கும் ராகேஷிற்கும் என்ன பிரச்சனை? " என ஆதிகா கேட்க அவனோ அதிர்ச்சியில், "அவன உனக்கு தெரியுமா?" என பதில் கேள்வி கேட்டான். அதற்கு அன்று நடந்ததை கூறினாள். அவளே "இருவருக்கும் என்ன பிரச்சனை?" என கேட்க வர்ஷித் "ஒன்றுமில்லை" என சமாளித்தான். "ஒண்ணுமே இல்லாமதான் இவ்ளோ சண்டை போட்டிங்களா எனக்கு இப்பவே உண்மை தெரியணும்" என விடாப்பிடியாக கேட்க, வர்ஷித் பலமுறை இல்லை என சொல்லி ஓய்ந்து போன பிறகு சொன்னான் எல்லாவற்றையும் விஷ்ணு இறப்பு, சொத்து பிரச்சனை, ஆதிகாவின் பெற்றோர் கடன் பிரச்சனை என எல்லாமே கூறினான். அவளோ அதிர்ச்சியிலும் கோபத்திலும் அவனின் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள். "ஏன்டா இத என்கிட்டே மறச்ச, இவ்ளோ நடந்திருக்கு என்கிட்ட சொல்ல தோணாலய உனக்கு, ஏன் விஷ்ணு மேல மறுபடியும் பீலிங் வரும்னு நெனச்சி சொல்லலையா, என்ன சந்தேக படுறியா, என்னோட காதல சந்தேக படுறியா" என ஆக்ரோஷத்திலும் ராகேஷ் ஏதும் வர்ஷித்தையும் செய்திடுவானோ என்ற பயத்திலும், இத்தனை நடந்தும் என்கிட்டே சொல்லலையே என ஆற்றாமையிலும் நிதானமில்லாமல் தான் என்ன பேசுகிறோம் என்பதுகூட தெரியாமல் பேச, இதுக்கு மேல் விட்டால் பெரிய பிரச்சனை வந்துவிடும் என ஆதிகாவை இழுத்து அனைத்து இதழால் சிறையிட்டான் அவளது கோபத்தையும் இதழையும். முதலில் திமிறினாலும் பிறகு அவனுள் அடங்கி போனாள். சில நொடிகளில் விடுவித்தவன் ரத்தம் கசியும் வாயோடு நின்றவளை மெத்தையில் பிடித்து தள்ளிவிட்டு அங்கையே தலையை கையால் தாங்கிக்கொண்டு அமர்ந்துவிட்டான். அடுத்தடுத்து எல்லாம் உணர்வதற்குள் நடந்து முடிய அப்போதே ஆதிகா தான் பேசியதை உணர்ந்து தான் இப்படி தவறாக பேசிவிட்டோமே என வர்ஷித்திடம் மன்னிப்பு கூற நகர்ந்து வருபவளின் இரு தோள்களையும் அழுத்தி பிடித்து "நான் உன்ன சந்தேக படுறேனாடி சொல்லு சந்தேக படுறேனா" என அழுத்தமாக கேட்டு உலுக்க தான் விட்ட வார்த்தையின் வீரியம் அறிந்து அவனின் கேள்வியில் குற்றம் உணர்ந்து அழுக, "உனக்கு தெரிஞ்சா வேதனை படுவ, கஷ்டப்படுவ, அதுமட்டுமில்லாம பயப்புடுவ அதான்டி நான் உன்கிட்ட சொல்லல" என கூற அவளோ அவனை அணைத்தபடி "என்னைய மன்னிச்சிருங்க மாமா ஏதோ ஒரு பயத்துலயும், நீ என்கிட்டே சொல்லாம இத்தன நாளா உள்ள கஷ்டப்பட்டிருப்பியே அந்த ஆற்றாமை தான்டா இப்படி இந்த மாதிரி வார்த்தையா வெளில வந்துருச்சு என்னைய அறியாமலே சொல்லிட்டேன் மாமா என்ன மன்னிச்சிரு மாமா" என அழுதபடியே சொன்னாள்.

"எனக்கு தெரியாதாடி உன்ன பத்தி, அழுகாத நீ என்ன தப்பு பண்ண சாரி கேக்குறதுக்கு, நான்தானே உன்கிட்ட மறச்சி தப்பு பண்ணிட்டேன் நீ தான் என்ன மன்னிக்கணும்" என கூறியவனின் மனதில் நிம்மதி பரவியது, இத்தனை நாள் இதனை ஆதிகாவிடம் மறைக்கிறோமே என உள்ளுக்குள் வேதனை அடைந்தான் இப்போது அது இல்லை. "நீ பத்திரமா இரு மாமா, உனக்கேதும் ஆக கூடாது அவன் ஒரு கொடிய விஷம் ஜாக்கிரதையா இரு மாமா" என அவனின் முகத்தை வருடி சொன்னாள். இதுபோல் ஒரு துணை இருக்கும் துணைவி அமைந்தால் வாழ்வில் இது போல் எத்தனை விஷம் வந்தாலும் முறிக்கலாம் என நம்பிக்கை பிறந்தது வர்ஷித்திற்கு ஆதிமாவின் காதல் மீது.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 26
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN