நாம் - 2

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 2.
மதிய இடைவேளை வாகினியும் இளாவும் வகுப்பிற்குச் சென்றனர்.
சீக்கிரம் வாடி நேத்து என்ன நடத்தினார் டி சி.ஏ. என வாகினியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ம்ம்ம்ம்.......
Alkaloids chapter la nicotine synthesis நடத்துனார் டி. ஏ!!! சொல்லித்தாடி வாகு..
இரு இரு நோட் எடுத்துகிறேன். வாகினி இளாவிற்கு சொல்லிக்கொடுத்து ஓர் 5 நிமிட இடைவேளையில் வகுப்பிற்கு வந்தான் அமுதன்.
அமுதன் வகுப்பிற்கு எப்போது 5நிமிடத்தாமதமாகத் தான் வருவான். ஏன் என்றால் மாணவர்கள் முதல் நாள் நடத்தினப் பாடத்தை அந்த 5நிமிடத்தில் ரீகால் செய்துக்கொள்ள வேண்டும்.
கேள்விகள் யாரைவேண்டுமானாலும் கேட்கப்படும்.
அதிகபட்சமாக மாட்டுபவள் நம்ம இளா தான். அமுதனும் இளாவும் உறவுகள் என்று வாகினியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
குட் நூன் சார்..........
குட் நூன். பிலிஸ் சிட். Are you ready for the questions.
Yes sir.......
மிஸ்.இளவேனில் பிளிஸ் ஸ்டென்ட் அப்.
நினைத்தேன் இந்த மாடு என்ன தான் டார்கேட் வைக்கும் னு. எரும எரும.....
Will you please write the synthesis of morphine?
இது எப்ப என்று ஆனது இளாக்கு. எப்ப டி நடத்துனார் என்று வாகினியைப் பார்த்தாள்.
ஹான் போன வாரத்துக்கு முந்தைய வாரம் என்று எகத்தாளமாகப் பார்த்தான் அமுதன்.
மைண்ட் வாய்ஸ கேச் பண்ணிடான் பாவி. சரி சமாளிப்போம்.
நோ ஐடியா சார்.....
Then get-out of my class and the write this structure for about 500 times by tomorrow.
இளாக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது. சய் என்னடா வாழ்க்கை இது நின்னா குத்தம் உட்காந்தா குத்தம் -னு உயிர வாங்குறான். ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்படி நடக்குது படிப்பு ஒன்னு மட்டுமே போதுமா. மனிஷங்களின் உணர்வுகள் ரொம்ப முக்கியம் இல்லையா?????!!
இளாவின் வகுப்பு மாணவர்களுக்கு ஒருமாறி ஆகிவிட்டது. எப்போதும் எல்லாரிடம் தோழமையுடன் பழகும் சி.ஏ.சார், ஏன் இளாவிடம் மட்டும் கடுமையாக நடந்துக்கொள்கிறார் என்று?????

அதற்கான விடை உரியவனுக்கே தெரியாதப் போது எங்கே மற்றவர்களுக்குத் தெரியப் போகிறது.
காலம் விரைவில் பதில் சொல்லும்.
இளா அழுதுக்கொண்டே ஒன்றும் கூறாமல் வெளியே நிற்காமல் விடுதிக்குச் சென்றுவிட்டாள்.
அமுதனுக்கு கோபமாய் வந்தது . ஒரு சாரி கேட்டாளாப்பாறு எல்லாம் வெட்டித்திமிர்.
Students listen carefully. This is your final semester. There is only 40 days to complete your ug life. So read carefully it will desides your futurelife.என்று கூறிவிட்டு வகுப்பு எடுக்க ஆரம்பித்தான்.
வாகினிக்கு பாவமாய் இருந்தது இளாவை நினைத்து., அமுதன் மீது சற்று கோபம் கூட வந்தது.
குறிஞ்சி மாணவிகள் விடுதி
இளா அழுதுக்கொண்டே வந்துப்படுத்தவள் நன்றாய் உறங்கிவிட்டிருந்தாள்.

உறங்கி முடித்தவள், செல்போனில் மணிப்பார்க்க மணி 7.30 எனக் காட்டியது. 25 மிஸ்டு கால்கள்.
யாருடா இவ்வளவு மிஸ்டு கால்கள், என்று. பனிமலர் தான் கால் பண்ணியிருந்தாள்.
ஐயோ என்ன ஆச்சுனு தெரியலேயே. உடனே கால் பண்ணியவள்.'பனி என்ன ஆச்சுடி போன் பண்ணியிருக்க என்றாள்.
ஏ !!!! இளா எனக்கு வேலைக்கிடைச்சிருக்கு டி.

ஏ!! Congrats d chellam. Treat !!!!
சரி எங்க ?? எப்பப்போய் join ,பண்ணனும்.
Chennai la . G.J.k hospital டி. Monthly payment 30,000. May end ல ஜய்ன் பண்ணனும் டி
செம்ம பனி. நல்லா பண்ணு. அம்மா அப்பா என்ன சொன்னாங்க,
அவங்களுக்கு என்ன ரொம்ப சந்தோஷம் அப்புறம் என்ன அத்தைக்கு கிட்ட போன் பண்ணி எப்ப அக்கா கல்யாணத்த வச்சிக்கலாம் னு கேட்டு இருப்பாங்க....: என்றாள்.
இளாக்கு ஐய்யோ என்றானது வீட்டில் தனக்கு சிறு ஆறுதலாய் இருப்பது இவள் ஒன்று தான். இவளுக்கும் அடுத்த 2 மாதத்தில் திருமணம் புரிந்துக்கொள்வாள். பின்பு என்ன அந்த மாடு செல்லுறதுக்கு தான் தலையாட்ட வேண்டும்.
இளா வீட்டிலும் சரி ஊரிலும் சரி, பெண் பிள்ளைகளுக்கு உரிய படிப்பை தந்துவிட்டு மணம் புரிந்தால் போதுமானது. பின்பு அவள் வேலைக்கு போக வேண்டுமா வேண்டாமா என்று முடிவுச் செய்வது அவள் கணவன் வீட்டாரின் பொறுப்பு.
இவள் என்னதான் வீட்டில் ஜாலியாக இருந்தாலும் தன் பெற்றோர் emotional blackmail பண்ணியே தங்களை சாமாளித்துவிடுவர்.
இளா, முழுவதும் நம்பியிருப்பது தன் எதிர்காலத்தையே, வருகின்றவன் ஆவது தன் உணர்வுகளுக்கு மதிப்பு தருபவனாக இருக்கவேண்டும்,என்று.
திருமணத்திற்கு பின்பாவது தனக்கு பிடித்ததைப் படிக்க வேண்டும், என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.
எங்கே, நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சும்மாவாச் சொன்னார்கள்.
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. இடைப்பட்ட நாட்களில் பனிமலருக்கும் அமுதனுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது. பனிமலரை திருமணத்திற்குப் பின்பு வேலைக்கு செல்ல அனுமதித்திருந்தனர். எனவே, பனிமலருக்காக சென்னையில் உள்ள அரசு கல்லூரிக்கு மாற்றுதல் ஆகிப் போகிறேன் என்று அமுதன் கூறி அதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக இருந்தான்.
எவ்வளவு வற்புறுத்தியும் பானுமதி சென்னைக்கு மாற்றுதலாகி வர மறுத்து விட்டார். 'நானும் வந்துட்டா யார் இந்த காடுத்தோட்டத்தை எல்லாம் பாக்கறது ' என்று சொல்லிவிட்டார்.
அமுதனுக்கும் ஆசை தான் ஆனால் அவனின் மனம் கவர்ந்தவளுக்கு இதில் எல்லாம் நாட்டமில்லை. கொஞ்ச நாள் போனதும் சமாதானம் பண்ணிக்கூட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்று....... எண்ணினான்.
இளாக்கு அப்பாடா என்று இருந்தது.
தேர்வுகள் இன்றோடு முடிந்துவிட்டது. தேங் காட்.
ஒரு புறம் வாகினியைப் பிரியப்போகும் வருத்தம் வேறு. இந்த மூன்று ஆண்டுகளில் தன்னுடன் தன் சோகம் துக்கம் அனைத்திலும் பயணித்தவளாயிற்றே. என்னை எதற்காகவும் வற்புறுத்தாது என்னை எனக்காக மட்டும் ஏற்றுக் கொண்டவள்.
அடுத்து வாகினி சென்னையில் தான் படிக்க திட்டமிட்டு இருந்தாள். அவளின் பெற்றோர் இருவரும் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளனர்.
இனியாவது பெற்றோரிடம் செலவிட வேண்டும் என்ற எண்ணம் வாகினிக்கு.
இளா, என்ன யோசனை பேக் பண்ணிடியா...
ம்ம்ம்ம்..... என்று சொல்லும் போதே கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது இளாக்கு.
வாகினியும் கண்ணீரை தேக்கிக்கொண்டு எங்கடி போகப்போறேன். இன்னும் ஒன் வீக் உங்க வீட்ல தான இருக்கப் போறேன்.
ஆம்,அமுதன் பனிமலர் திருமணம் நடக்க இன்னும் ஒரு வாரமே இருந்தது.
அமுதனுக்கும் மாற்றுதல் கிடைத்துவிட்டிருந்தது.
எனக்கு என்னமோ நீயும் என் கூடத் தான் படிக்கப்போறனு என் மனசு சொல்லிட்டே இருக்கு என்றாள் வாகினி.
தோணும் தோணும் ......
எனக்கு தான் இங்க அட்மிஷன் போட்டாசு. எனக்கு இதுல மிகப்பெரிய சந்தோசமே அந்த மாடு சென்னைப் போகறது தான்.
ம்க்கு...... நீ ஒரு ஆளு தான் சந்தோஷப்படரதே, தெரியுமா???
நம்ம ஜூனியர்ஸ், அப்புறம் சீனியர்ஸ் எல்லார்க்கும் ரொம்ப வருத்தம். Organic chemistry யை நல்ல எடுத்தவரும் போறார்னு.
நீ என்னமோ சொல்லு அமுதன் சார் தான் என் இன்ஸ்பிரேஷனே. சென்னையிலும் அவர் போகின்ற காலேஜில தான் நான் ஜாயின் பண்ண போறேன் பா.
உன் அக்கா really so lucky தெரியுமா..
He is a gem of person.
நீயே மெச்சிகோ அவன, என்கிட்ட அவன பத்தி புகழாத....
சரி விடு... வா போய் பேக் பண்ணலாம். ஆன்ட்டி அப்பவே போன் பண்ணாங்க. இன்னும் முப்பது நிமிடத்துல வந்துடுவாங்களாம்.
ஆமா, வாகி. அக்காக்கு புடவை தாலி எல்லாம் திருச்சில தான் எடுக்கறதா சொன்னாங்க.
அத்தை ,சரண்,அந்த மாடு எல்லாம் அப்படியே அங்க வந்து விடுவார்களாம்.
ஏன்டி அக்கா வரலயா??????
அவ இரண்டு நாள் முன்னாடி தான் வருவேன் என்றாள். எதோ அவசர வேலையிருக்காம்.
நீங்கபாத்து எடுத்தா எனக்கு ஓ.கே என்று சொல்லிட்டா....
வாகினிக்கு ஏதோ சரியில்லாத மாறி உணர்வு, சரி நமக்கு என்ன என்று விட்டு விட்டாள்.
வாகினியும் இளாவும் தன் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் பிரியாவிடைக் கொடுத்து கிளம்பினர்.
அப்பா ,எங்க அப்பா பஸ்ட் போறோம் என்றாள் இளா.
துணிக்கடைக்கு......
திருச்சியின் மிகப்பெரிய ஜவுளிக்கடைக்கு கார் சென்று நின்றது.
இளாவின் , சித்தி,பெரியம்மா, தாய்மாமா,அத்தை,என சுமார் பதினைந்து பேர் அங்கு காத்திருந்தனர்.
இளா ,என்ன இவ்வளவு கூட்டம், என்றாள் வாகினி.
எங்க பக்கம் இப்படி தான் டி புடவை தாலி எல்லாம் எடுப்பாங்க.
வாகினி அங்கே அமுதனைக் கண்டவள் இளாவிடமிருந்து விலகி அமுதனிடம் பேச சென்றாள்.....
ஹாய் சார்.....
First of all congrats sir....
ஹாய் வாகினி.... நன்றிகள் பல.
என்ன உன் உயிர்தோழி உன்ன இழுத்துட்டு வந்துட்டாளா.....
பின்ன அமுதன் சார் திருமணம் ஆச்சே நான் இல்லாம எப்படி......
ம்ம்ம் நல்ல பேச கத்துக்கிட்ட...
சரி... வா போகலாம் என்று இளா வை சட்டைக்கூட பண்ணாமல் சென்றுவிட்டனர் இரண்டுபேரும்.
இவ யார் கூட வந்தா என் கூட வா இல்ல அந்த மாடு கூடவா... வரட்டும் அவளுக்கு இருக்கு கச்சேரி...
அடியேய் மங்கம்மா என்னடி யோசன....
என்றாள் சரண்யா.
யாருடா அது என்று திரும்பி பார்த்தாள்.
அங்கே சரண்யாவை கண்டவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி....
ஏஏஏஏ ரங்கம்மா எப்படி டி இருக்க ..... ஓர் போன் கால் கூட இல்ல ..
அங்க மட்டும் என்ன வாழுதாம்....
எங்க திருச்சியில இருந்துடே நம்ம வீட்டு பக்கம் வராதவ எப்படி தான் உன்கிட்ட பேசுவாளோ.... என்று பானுமதி கூற கண்ணில் கண்ணீரோடு நின்றிருந்தாள் இளா.
அவ்வளவு வைராக்கியம்... ஏன்டி சின்ன வயசுல எதோ தெரியாமா சொல்லிட்டான் அதுக்குனு இப்ப வரயுமா....
சண்டைக்கு காரணம் ஆனவ கிட்ட இவ்வளவு கிளோஸாப் பேசுற. ஆன வீட்டுக்கு மட்டும்வர மாட்ட...
பாத்துக்கலாம் எத்தனை நாளுக்குனு
என்று பானுமதி கூறிவிட்டு
சென்றுவிட்டார்
சாரி இளா என்றாள் சரண்யா. பரவாலை என் அத்தை தானா....
இளாவிற்கு பழைய நியாபகங்கள் சுழன்று கொண்டு வந்தது.
நான்காவது படிக்கும் போது வீடியோ கேம் யார் விளையாடுவது என்று சண்டை...
தோல்வி அடைந்தால் தரேன் என்று இளா சரண்யாவிடம் சொன்னாள்.
சரண்யா அழுது ஆர்பாட்டம் பண்ணி அவ எனக்கு தர மாட்டிகிற என்று கத்தி ஆர்பாட்டம் போட்டவள். அப்போது தான் இளா அதனை அவளிடம் இருந்து வாங்கினாள். அமுதன் உண்மைத் தெரிந்தும் தன் தங்கைக்கு சப்போர்ட் பேச ....
அமுதன் மதியம் வாங்கிக் கொடுத்த சாக்லேடை அவன் முகத்திலே எறிந்து விட்டு , நான் எந்த தப்பும் பண்ணல ஆன எல்லாம் அவளுக்கு தான சப்போர்ட் பண்ணுறீங்க, என்ன நம்பாதவங்க எனக்கு வேண்டாம்.. நா இனி இங்க வரவே மாட்டேன் என்று கூறிவிட்டு தன் பெற்றோர் போகும் போது சென்றவள் தான் இன்னும் அங்கு செல்லவில்லை.
அதன் பின்பு சரண்யா மன்னிப்புக் கேட்டு நட்பாகிக் கொண்டார்கள்.
ஆனால் இளா மட்டும் எவ்வளவு வற்புறுத்தியும் அங்கு செல்லவில்லை.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN