காதல்பனி 7
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
“அப்.. அப்போ நீங்க என்ன சீண்டிப் பார்க்கக் கேட்கலையா?!” என்று அவள் திக்கித் திணறிக் கேட்க
“இதுவரை இந்த விஷயத்தில் நான் எந்த ஒரு பெண் கிட்டையும் விளையாடினது இல்லை சாரா. இனியும் அப்படித் தான்! அதே மாதிரி என் கல்யாணத்தைப் பத்தி நான் பேசின முதலும் கடைசியுமான பொண்ணு நீ மட்டும் தான்!” என்று அவன் சொன்ன பதிலில் மனம் குளிர்ந்தவள்
“ஆனா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்களே!” என்று அவள் இழுக்க
“என் நிலைமை உனக்குப் புரியல சாரா. அதனால் தான் என் அவசரமும் உனக்குப் புரியல” என்று அவன் இயல்பாகச் சொல்ல.
‘தன் மேல் எவ்வளவு காதல் இருந்தா இப்படியெல்லாம் அவசரப்படுறதும் இல்லாமல் அதை அவரே வாய் விட்டும் சொல்லுவார்?!’ என்று நினைக்கும் போதே அவள் மனதில் மத்தாப்புகள் பூக்க சந்தோஷத்தில் அவள் தன் இமைகளை மூடிக் கொண்டாள்.
இதுவரை அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவனோ அவள் செயலில் கோபமுற்று “ஏய் ஏன் இப்போ கண்ண மூடற?” என்று அன்று போல் இன்றும் அவன் அதட்ட
‘இவ்வளவு நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தாருன்னு’ நினைத்தவளோ அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்து விழிக்க
அதில் கலைந்தவனோ இப்போது வரை தன் விரல் அவள் கன்னம் தாங்கியிருப்பதை உணர்ந்து பட்டென தன் கையை விலக்கிக் கொண்டவனோ.
“சரி வா நேரமாகுது, இங்கிருந்து போகலாம்” என்று அழைக்க
அவளோ கீழே இருந்தவனைத் தயக்கத்துடன் பார்க்கவும் “அவன் போதை தெளிஞ்சா தன்னால எழுந்து போய்டுவான்” என்று சொல்லிய படி
அவன் முன்னே நடக்க அப்போதும் அவள் அங்கேயே நிற்கவும் கதவுக் குழியில் கை வைத்தவனோ அவளைத் திரும்பியும் பார்க்காமல்
“இனிமே அவன் கிட்ட இருக்கிற வீடியோவுக்கு நான் பொறுப்பு. உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா இப்போ வா. இல்லனா உன் இஷ்டம்” என்றவன் தன் வேக நடையுடன் அங்கிருந்து விலகி விட
‘நம்பிக்கை இருந்தாவா? இவர் மேல வராம எனக்கு வேற யார் மேல வருமாம்?’ என்று நினைத்த படி ஒரு நொடி கூடத் தயங்காமல் ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொர்ந்து சென்றாள் சாரா.
பங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தவனோ அங்கிருந்த ஒரு சில பேரிடம் பேசி விடை பெற்று இறுதியாக சாராவிடம் வந்து
“என்ன கிளம்பலாமா?” என்று கேட்கவும் திணறித்தான் போனாள் அவள்.
‘ஏதோ கல்யாணம் வரை சொன்னான் தான். அதுக்காக இவ்வளவு பேர் முன்னாடி இப்படியா உரிமையாக வந்து நிற்பான்?!’ என்று அவள் திகைத்துப் போய் பார்க்கவும்
தன் பாக்கெட்டிலிருந்த கர்சிப்பை எடுத்து அவள் முகத்தைத் துடைத்துச் சரி செய்வது போல்
“என்ன இவ்வளவு பேர் முன்னாடி இப்படி முழிக்கிற? ஒழுங்கா முகத்தை வைச்சிட்டு என் கூட வா”
என்று அவன் கடித்த பற்களுக்கு இடையே உறுமவும் அவன் சொன்ன படியே கிளம்பி அவனுடன் சென்றாள் சாரா.
டிரைவர் கார் கதவைத் திறந்து விட அவனைப் போகச் சொல்லிவிட்டுத் தானே காரை ஓட்டிய படி சிறிது தூரம் வந்தவனோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு
“இப்போ சொல்லு உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை?” என்று பக்கத்தில் அமர்ந்து இருந்தவளிடம் கேட்க
“எனக்கும் அவனுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. அவன் எங்க கூட படிக்கிறான் என்றதை தவிர” என்றவள் மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
இவள் கூட படிக்கும் மாயாவும் இவளும் இந்தியாதான். இவள் தமிழ்நாடு அவள் வடநாடு. தங்கியிருப்பதும் ஒரே வீட்டில் தான். உடன் படிக்கும் ரோஹித் எனும் வடநாட்டு இளைஞனும் மாயாவும் காதலித்தனர்.
ஆனால் அவன் போதைக்கு அடிமையானதைக் கண்டுபிடித்து மாயாவிடம் சொல்லி அவனிடமிருந்து அவளை விலக்கினது சாரா தான்.
மாயாவை அடைவதற்கு முன்பே அவளைப் பிரிந்ததில் ஏமாற்றமடைந்த ரோஹித் அவளிடம் ஏதேதோ சொல்லி சமாளிக்க அது எதையும் மாயா ஏற்கவில்லை.
அதற்கு மாயா சொன்ன காரணம் ‘வேற யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனா உன்னைப் பற்றி சொன்னது சாரா என்னும்போது நிச்சயம் நான் இத நம்பறேன். இனி என் முகத்துலயே முழிக்காத’ என்று சொல்லி விலகி வந்து விட்டாள்.
அதிலிருந்து அவன் குறியும் கோபமும் சாரா என்றானது. சாராவிடம் பேசி எப்படியாவது சமாளித்துத் திரும்பவும் மாயாவிடம் உறவைப் புதுப்பிக்க நினைத்தான். ஆனால் சாராவோ அவன் தன்னிடம் பேசக் கூட இடம் கொடுக்கவில்லை.
அதில் வெறி ஏற சாராவை விடுத்து மறுபடியும் மாயாவிடம் மறைமுகமாக நெருங்கியவன் அவள் உடை மாற்றும் அறையில் அவளுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து அவளை மிரட்ட அதில் பயந்து அவன் சொல்வதற்கு எல்லாம் சம்மதிப்பது போல் நடித்தவள்
அவர்கள் இருவரும் தனிமையில் சந்திக்கும் நாளை மட்டும் கூடுமானவரை தள்ளிப் போட்டுக்கொண்டே வர முதலில் அவளை நம்பியவன் இன்று நடந்த விழாவில் தான் மாயா நடிக்கிறாள் என்பதும் அப்படி செய்யச் சொன்னதே சாரா தான் என்பதையும் அறிந்து கொண்டான் ரோஹித்.
“எல்லாம் அந்த மாயாவால் வந்தது. இன்னைக்கு பார்ட்டிக்கு வரும்போதே நான் அவகிட்ட சொன்னேன் உன் புது பாய் ஃபிரண்டை கூட்டிட்டு வராதடினு! கேட்டா தான? அவன் கெஞ்சரானு வரச் சொல்லிட்டா. அதப் பார்த்த ரோஹித் சும்மா விடுவானா?
அவகிட்ட போய் இவன் வம்பு பண்ண, ஏதோ நம்ப கேர்ள் ஃபிரண்டு கிட்ட எவனோ வம்பு பண்றான்னு நினைச்சிட்டு
‘அவ என் மனைவியா ஆகப் போறவ. இனிமே அவகிட்ட எதாவது தொந்தரவு வச்சிகிட்டா உன்னை சும்மா விட மாட்டேனு’ அவ புது பாய் பிரண்டு ரோஹித்தை மிரட்டி அனுப்பிட்டான்.
இந்த மாயாவாது சும்மா இருந்திருக்கலாம். இவ பங்குக்கு அவனை தனியா பார்த்து
ஆமா நான் அவரத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறன். உன்கிட்ட இப்போ நடந்து கிட்டது எல்லாம் வெறும் நடிப்பு தான். இப்படி என்ன நடிக்கச் சொன்னதே சாராதான்னு அந்த லூசு சொல்லியிருக்கு.
எல்லாம் புது பாய் ஃபிரண்டு இருக்குற தைரியம். ரூமுக்கு தானே அந்த கழுத வரணும்? அப்ப இருக்கு அதுக்கு!” என்று அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு கோபத்தில் இயல்பாக மாயாவை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் சாரா.
“இதுல நீ ஏன் அங்கே அவனை தேடிப் போனேனு வரலையே?” என்று இதுவரை அமைதியாக இருந்தவன் இப்போது கேட்க, அந்த குரலோ ‘இது எதுவுமே எனக்குத் தேவையில்லாதது. நீ ஏன் போன என்றதை மட்டும் சொல்லு’ என்று குறிப்பு காட்டியது.
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளோ அவன் குரலைப் போலவே அவன் முகமும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்க, அதைப் பார்த்தவளோ
‘நாம மட்டும் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படறோம்?’ என்று நினைத்தவள் சிறிது நேரம் தன்னைச் சமன் செய்தவள்
“மாயா கொஞ்சம் அளவுக்கு மீறி டிரிங்க்ஸ் சாப்பிட்டு நிதானம் இல்லாமல் இருப்பதால் பக்கத்து பில்டிங்ல ஒரு அறையில படுக்க வைத்து இருப்பதாகவும் நான் அங்கு அவ கூட துணைக்கு இருந்தா அவ பாய் ஃபிரண்டு போய் கார் எடுத்து வந்துவிடுவார் என்று அவர் சொல்லி அனுப்பினதா ஒரு பேரர் வந்து சொன்னான்.
நிஜமாவே மாயா அதிகம் குடிச்சிருந்தா. அதனால தான் அவளுக்கு உதவி செய்ய அங்க போனேன். ஆனா அங்கே அவ இல்லை ரோஹித் இருந்தான்”
அவனோ போதையில் மாயாவுக்கும் அவள் பாய் ஃபிரண்டுக்கும் இப்போது அவர்களுக்குள் நடந்தது எல்லாம் சொன்னவன் இறுதியாக இதற்கெல்லாம் காரணமான சாராவைப் பழிவாங்க பொய் சொல்லி இங்கு அவளை வர வைத்து டேட்டிங் கூப்பிட, அந்த நேரம் தான் கென்டிரிக் வந்தான்.
இவை அனைத்தையயும் சிறு குரலில் அவள் கூறி முடிக்கவும்.
“யார் வேணா எது வேணா சொன்னாலும் இப்படித் தான் எதைப் பற்றியும் யோசிக்காம முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் கிளம்பிப் போய்டுவியா?” என்று அவன் சிடுசிடுக்கவும்
“நான் ஒன்னும் உடனே கிளம்பிப் போகல. எனக்கும் ஏதோ சரியில்லாத மாதிரி தப்பா தான் பட்டுது. அதனால முதல்ல உண்மையாவே மாயா அங்கே இல்லையானு சுற்றித் தேடிப் பார்த்துட்டு அவ இல்லனு உறுதிப்படுத்திக்கிட்டேன்.
அப்பவும் உடனே போகாம என் ரூம் மேட் ஒருத்திக்குப் போன் பண்ணி இப்படி ஒரு பிரச்சினை, நானோ மாயாவோ வர லேட் ஆச்சுனா போலீஸை கூட்டிட்டு வந்து காப்பாத்தச் சொல்லலாம்னு பார்த்தா அவ போன் ரிங் போச்சே தவிர எடுக்கவே இல்ல.
அதனால அவளுக்கும் எங்க டீம் லீடருக்கும் பட்டும் படாம நான் வர லேட் ஆனா இங்கே வரச் சொல்லி மெசேஜ் அனுப்பினேன். இதோ நீங்க வேணா பாருங்க” என்று அவள் மொபைலில் இருந்து அனுப்பிய மெசேஜ்ஜை அவனிடம் காட்டியவள்
“நான் ஒன்னும் தத்தி இல்ல” என்று ரோஷத்தில் அவள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்ள.
அது அவன் காதில் தெளிவாகவே விழுந்திருக்க உடனே அவள் போனை வாங்கி அதில் உள்ள மெசேஜ்ஜைப் பார்த்தவன்
“எது நான் பத்து மணிக்குள்ள வரலனா போலீஸோட இங்க வந்து தேடவும்ணு ஏதோ இருக்கே! இதுவா? இந்த ஒரு மெசேஜ் போதுமா உன்னைக் காப்பாத்த?
அவன் குடிச்சிட்டு இருந்ததால தப்பிச்ச! அதே மாதிரி அவன் தனியா இருந்தான். இதே ஒரு ஐந்து ஆறு பேர் இருந்திருந்தா என்ன செய்வ?
அதுவும் இல்லாம நீ வந்த உடனே உன்னை வேற இடத்துக்குத் தூக்கிட்டுப் போயிருந்தா என்ன செய்திருப்ப? இதெல்லாம் விட நீ சொன்ன மாதிரி போலீஸ் வர்றதுக்குள்ள உனக்கு என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம்.
அதுக்குப் பிறகு அவங்க வந்திருந்தா உன் நிலைமை என்னாகியிருக்கும்னு யோசிச்சியா?
இப்படி எல்லாம் யோசிக்காம முட்டாள் மாதிரி செய்துட்டு இதுல நான் தத்தி இல்லைன்னு பெருமை வேற!” என்று அவன் கோபம் இல்லாமல் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப
அவன் சொன்ன அனைத்தையும் கேட்ட பிறகே தான் செய்த தவறையும் முட்டாள் தனத்தையும் உணர்ந்து தலை குனிந்தாள் சாரா.
தன் கையிலிருந்த அவள் போனில் அவன் சில நம்பர்களைத் தட்டி ரிங் கொடுக்கவும் அது அவன் போனுக்கு அழைத்தது. உடனே அதை கட் செய்தவன்
“இது என் பெர்சனல் நம்பர். இனி எதை செய்யறதா இருந்தாலும் எங்கே போறதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. மெசேஜ் பண்ணாத கால் பண்ணு நான் அட்டன் செய்யற வரை” என்றவன் போனை அவளிடம் கொடுத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தவன்
“வீடியோ உன் சம்பந்தப் பட்டதுன்னு தான் நான் பொறுப்பு ஏத்துக்கறனு சொன்னேன். அது மாயா சம்பந்தப் பட்டதுனா அப்போ அவ பாய் ஃபிரெண்டே பார்த்துப்பான் இல்ல? நான் ஒதுங்கிக்கவா?” என்று அவன் கேட்க அவன் குரலே இதில் துளியும் எனக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாகவே அவளுக்கு வெளிப்படுத்தியது.
அதைக் கேட்டுப் பதறியவள்
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
“அப்.. அப்போ நீங்க என்ன சீண்டிப் பார்க்கக் கேட்கலையா?!” என்று அவள் திக்கித் திணறிக் கேட்க
“இதுவரை இந்த விஷயத்தில் நான் எந்த ஒரு பெண் கிட்டையும் விளையாடினது இல்லை சாரா. இனியும் அப்படித் தான்! அதே மாதிரி என் கல்யாணத்தைப் பத்தி நான் பேசின முதலும் கடைசியுமான பொண்ணு நீ மட்டும் தான்!” என்று அவன் சொன்ன பதிலில் மனம் குளிர்ந்தவள்
“ஆனா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்களே!” என்று அவள் இழுக்க
“என் நிலைமை உனக்குப் புரியல சாரா. அதனால் தான் என் அவசரமும் உனக்குப் புரியல” என்று அவன் இயல்பாகச் சொல்ல.
‘தன் மேல் எவ்வளவு காதல் இருந்தா இப்படியெல்லாம் அவசரப்படுறதும் இல்லாமல் அதை அவரே வாய் விட்டும் சொல்லுவார்?!’ என்று நினைக்கும் போதே அவள் மனதில் மத்தாப்புகள் பூக்க சந்தோஷத்தில் அவள் தன் இமைகளை மூடிக் கொண்டாள்.
இதுவரை அவள் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவனோ அவள் செயலில் கோபமுற்று “ஏய் ஏன் இப்போ கண்ண மூடற?” என்று அன்று போல் இன்றும் அவன் அதட்ட
‘இவ்வளவு நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தாருன்னு’ நினைத்தவளோ அதிர்ந்து போய் அவன் முகம் பார்த்து விழிக்க
அதில் கலைந்தவனோ இப்போது வரை தன் விரல் அவள் கன்னம் தாங்கியிருப்பதை உணர்ந்து பட்டென தன் கையை விலக்கிக் கொண்டவனோ.
“சரி வா நேரமாகுது, இங்கிருந்து போகலாம்” என்று அழைக்க
அவளோ கீழே இருந்தவனைத் தயக்கத்துடன் பார்க்கவும் “அவன் போதை தெளிஞ்சா தன்னால எழுந்து போய்டுவான்” என்று சொல்லிய படி
அவன் முன்னே நடக்க அப்போதும் அவள் அங்கேயே நிற்கவும் கதவுக் குழியில் கை வைத்தவனோ அவளைத் திரும்பியும் பார்க்காமல்
“இனிமே அவன் கிட்ட இருக்கிற வீடியோவுக்கு நான் பொறுப்பு. உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா இப்போ வா. இல்லனா உன் இஷ்டம்” என்றவன் தன் வேக நடையுடன் அங்கிருந்து விலகி விட
‘நம்பிக்கை இருந்தாவா? இவர் மேல வராம எனக்கு வேற யார் மேல வருமாம்?’ என்று நினைத்த படி ஒரு நொடி கூடத் தயங்காமல் ஓட்டமும் நடையுமாக அவனைப் பின் தொர்ந்து சென்றாள் சாரா.
பங்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்தவனோ அங்கிருந்த ஒரு சில பேரிடம் பேசி விடை பெற்று இறுதியாக சாராவிடம் வந்து
“என்ன கிளம்பலாமா?” என்று கேட்கவும் திணறித்தான் போனாள் அவள்.
‘ஏதோ கல்யாணம் வரை சொன்னான் தான். அதுக்காக இவ்வளவு பேர் முன்னாடி இப்படியா உரிமையாக வந்து நிற்பான்?!’ என்று அவள் திகைத்துப் போய் பார்க்கவும்
தன் பாக்கெட்டிலிருந்த கர்சிப்பை எடுத்து அவள் முகத்தைத் துடைத்துச் சரி செய்வது போல்
“என்ன இவ்வளவு பேர் முன்னாடி இப்படி முழிக்கிற? ஒழுங்கா முகத்தை வைச்சிட்டு என் கூட வா”
என்று அவன் கடித்த பற்களுக்கு இடையே உறுமவும் அவன் சொன்ன படியே கிளம்பி அவனுடன் சென்றாள் சாரா.
டிரைவர் கார் கதவைத் திறந்து விட அவனைப் போகச் சொல்லிவிட்டுத் தானே காரை ஓட்டிய படி சிறிது தூரம் வந்தவனோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு
“இப்போ சொல்லு உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை?” என்று பக்கத்தில் அமர்ந்து இருந்தவளிடம் கேட்க
“எனக்கும் அவனுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. அவன் எங்க கூட படிக்கிறான் என்றதை தவிர” என்றவள் மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
இவள் கூட படிக்கும் மாயாவும் இவளும் இந்தியாதான். இவள் தமிழ்நாடு அவள் வடநாடு. தங்கியிருப்பதும் ஒரே வீட்டில் தான். உடன் படிக்கும் ரோஹித் எனும் வடநாட்டு இளைஞனும் மாயாவும் காதலித்தனர்.
ஆனால் அவன் போதைக்கு அடிமையானதைக் கண்டுபிடித்து மாயாவிடம் சொல்லி அவனிடமிருந்து அவளை விலக்கினது சாரா தான்.
மாயாவை அடைவதற்கு முன்பே அவளைப் பிரிந்ததில் ஏமாற்றமடைந்த ரோஹித் அவளிடம் ஏதேதோ சொல்லி சமாளிக்க அது எதையும் மாயா ஏற்கவில்லை.
அதற்கு மாயா சொன்ன காரணம் ‘வேற யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனா உன்னைப் பற்றி சொன்னது சாரா என்னும்போது நிச்சயம் நான் இத நம்பறேன். இனி என் முகத்துலயே முழிக்காத’ என்று சொல்லி விலகி வந்து விட்டாள்.
அதிலிருந்து அவன் குறியும் கோபமும் சாரா என்றானது. சாராவிடம் பேசி எப்படியாவது சமாளித்துத் திரும்பவும் மாயாவிடம் உறவைப் புதுப்பிக்க நினைத்தான். ஆனால் சாராவோ அவன் தன்னிடம் பேசக் கூட இடம் கொடுக்கவில்லை.
அதில் வெறி ஏற சாராவை விடுத்து மறுபடியும் மாயாவிடம் மறைமுகமாக நெருங்கியவன் அவள் உடை மாற்றும் அறையில் அவளுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து அவளை மிரட்ட அதில் பயந்து அவன் சொல்வதற்கு எல்லாம் சம்மதிப்பது போல் நடித்தவள்
அவர்கள் இருவரும் தனிமையில் சந்திக்கும் நாளை மட்டும் கூடுமானவரை தள்ளிப் போட்டுக்கொண்டே வர முதலில் அவளை நம்பியவன் இன்று நடந்த விழாவில் தான் மாயா நடிக்கிறாள் என்பதும் அப்படி செய்யச் சொன்னதே சாரா தான் என்பதையும் அறிந்து கொண்டான் ரோஹித்.
“எல்லாம் அந்த மாயாவால் வந்தது. இன்னைக்கு பார்ட்டிக்கு வரும்போதே நான் அவகிட்ட சொன்னேன் உன் புது பாய் ஃபிரண்டை கூட்டிட்டு வராதடினு! கேட்டா தான? அவன் கெஞ்சரானு வரச் சொல்லிட்டா. அதப் பார்த்த ரோஹித் சும்மா விடுவானா?
அவகிட்ட போய் இவன் வம்பு பண்ண, ஏதோ நம்ப கேர்ள் ஃபிரண்டு கிட்ட எவனோ வம்பு பண்றான்னு நினைச்சிட்டு
‘அவ என் மனைவியா ஆகப் போறவ. இனிமே அவகிட்ட எதாவது தொந்தரவு வச்சிகிட்டா உன்னை சும்மா விட மாட்டேனு’ அவ புது பாய் பிரண்டு ரோஹித்தை மிரட்டி அனுப்பிட்டான்.
இந்த மாயாவாது சும்மா இருந்திருக்கலாம். இவ பங்குக்கு அவனை தனியா பார்த்து
ஆமா நான் அவரத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறன். உன்கிட்ட இப்போ நடந்து கிட்டது எல்லாம் வெறும் நடிப்பு தான். இப்படி என்ன நடிக்கச் சொன்னதே சாராதான்னு அந்த லூசு சொல்லியிருக்கு.
எல்லாம் புது பாய் ஃபிரண்டு இருக்குற தைரியம். ரூமுக்கு தானே அந்த கழுத வரணும்? அப்ப இருக்கு அதுக்கு!” என்று அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு கோபத்தில் இயல்பாக மாயாவை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் சாரா.
“இதுல நீ ஏன் அங்கே அவனை தேடிப் போனேனு வரலையே?” என்று இதுவரை அமைதியாக இருந்தவன் இப்போது கேட்க, அந்த குரலோ ‘இது எதுவுமே எனக்குத் தேவையில்லாதது. நீ ஏன் போன என்றதை மட்டும் சொல்லு’ என்று குறிப்பு காட்டியது.
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளோ அவன் குரலைப் போலவே அவன் முகமும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்க, அதைப் பார்த்தவளோ
‘நாம மட்டும் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படறோம்?’ என்று நினைத்தவள் சிறிது நேரம் தன்னைச் சமன் செய்தவள்
“மாயா கொஞ்சம் அளவுக்கு மீறி டிரிங்க்ஸ் சாப்பிட்டு நிதானம் இல்லாமல் இருப்பதால் பக்கத்து பில்டிங்ல ஒரு அறையில படுக்க வைத்து இருப்பதாகவும் நான் அங்கு அவ கூட துணைக்கு இருந்தா அவ பாய் ஃபிரண்டு போய் கார் எடுத்து வந்துவிடுவார் என்று அவர் சொல்லி அனுப்பினதா ஒரு பேரர் வந்து சொன்னான்.
நிஜமாவே மாயா அதிகம் குடிச்சிருந்தா. அதனால தான் அவளுக்கு உதவி செய்ய அங்க போனேன். ஆனா அங்கே அவ இல்லை ரோஹித் இருந்தான்”
அவனோ போதையில் மாயாவுக்கும் அவள் பாய் ஃபிரண்டுக்கும் இப்போது அவர்களுக்குள் நடந்தது எல்லாம் சொன்னவன் இறுதியாக இதற்கெல்லாம் காரணமான சாராவைப் பழிவாங்க பொய் சொல்லி இங்கு அவளை வர வைத்து டேட்டிங் கூப்பிட, அந்த நேரம் தான் கென்டிரிக் வந்தான்.
இவை அனைத்தையயும் சிறு குரலில் அவள் கூறி முடிக்கவும்.
“யார் வேணா எது வேணா சொன்னாலும் இப்படித் தான் எதைப் பற்றியும் யோசிக்காம முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் கிளம்பிப் போய்டுவியா?” என்று அவன் சிடுசிடுக்கவும்
“நான் ஒன்னும் உடனே கிளம்பிப் போகல. எனக்கும் ஏதோ சரியில்லாத மாதிரி தப்பா தான் பட்டுது. அதனால முதல்ல உண்மையாவே மாயா அங்கே இல்லையானு சுற்றித் தேடிப் பார்த்துட்டு அவ இல்லனு உறுதிப்படுத்திக்கிட்டேன்.
அப்பவும் உடனே போகாம என் ரூம் மேட் ஒருத்திக்குப் போன் பண்ணி இப்படி ஒரு பிரச்சினை, நானோ மாயாவோ வர லேட் ஆச்சுனா போலீஸை கூட்டிட்டு வந்து காப்பாத்தச் சொல்லலாம்னு பார்த்தா அவ போன் ரிங் போச்சே தவிர எடுக்கவே இல்ல.
அதனால அவளுக்கும் எங்க டீம் லீடருக்கும் பட்டும் படாம நான் வர லேட் ஆனா இங்கே வரச் சொல்லி மெசேஜ் அனுப்பினேன். இதோ நீங்க வேணா பாருங்க” என்று அவள் மொபைலில் இருந்து அனுப்பிய மெசேஜ்ஜை அவனிடம் காட்டியவள்
“நான் ஒன்னும் தத்தி இல்ல” என்று ரோஷத்தில் அவள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்ள.
அது அவன் காதில் தெளிவாகவே விழுந்திருக்க உடனே அவள் போனை வாங்கி அதில் உள்ள மெசேஜ்ஜைப் பார்த்தவன்
“எது நான் பத்து மணிக்குள்ள வரலனா போலீஸோட இங்க வந்து தேடவும்ணு ஏதோ இருக்கே! இதுவா? இந்த ஒரு மெசேஜ் போதுமா உன்னைக் காப்பாத்த?
அவன் குடிச்சிட்டு இருந்ததால தப்பிச்ச! அதே மாதிரி அவன் தனியா இருந்தான். இதே ஒரு ஐந்து ஆறு பேர் இருந்திருந்தா என்ன செய்வ?
அதுவும் இல்லாம நீ வந்த உடனே உன்னை வேற இடத்துக்குத் தூக்கிட்டுப் போயிருந்தா என்ன செய்திருப்ப? இதெல்லாம் விட நீ சொன்ன மாதிரி போலீஸ் வர்றதுக்குள்ள உனக்கு என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம்.
அதுக்குப் பிறகு அவங்க வந்திருந்தா உன் நிலைமை என்னாகியிருக்கும்னு யோசிச்சியா?
இப்படி எல்லாம் யோசிக்காம முட்டாள் மாதிரி செய்துட்டு இதுல நான் தத்தி இல்லைன்னு பெருமை வேற!” என்று அவன் கோபம் இல்லாமல் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப
அவன் சொன்ன அனைத்தையும் கேட்ட பிறகே தான் செய்த தவறையும் முட்டாள் தனத்தையும் உணர்ந்து தலை குனிந்தாள் சாரா.
தன் கையிலிருந்த அவள் போனில் அவன் சில நம்பர்களைத் தட்டி ரிங் கொடுக்கவும் அது அவன் போனுக்கு அழைத்தது. உடனே அதை கட் செய்தவன்
“இது என் பெர்சனல் நம்பர். இனி எதை செய்யறதா இருந்தாலும் எங்கே போறதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. மெசேஜ் பண்ணாத கால் பண்ணு நான் அட்டன் செய்யற வரை” என்றவன் போனை அவளிடம் கொடுத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தவன்
“வீடியோ உன் சம்பந்தப் பட்டதுன்னு தான் நான் பொறுப்பு ஏத்துக்கறனு சொன்னேன். அது மாயா சம்பந்தப் பட்டதுனா அப்போ அவ பாய் ஃபிரெண்டே பார்த்துப்பான் இல்ல? நான் ஒதுங்கிக்கவா?” என்று அவன் கேட்க அவன் குரலே இதில் துளியும் எனக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாகவே அவளுக்கு வெளிப்படுத்தியது.
அதைக் கேட்டுப் பதறியவள்