ரசமலாய் | rasmalai

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவையான பொருட்கள்

முழு கொழுப்பு பால் - 1 லிட்டர்
எலுமிச்சை - 2 பழம்
சோள மாவு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 4 கப்
சர்க்கரை - 1 க ப்
பால் -500 மில்லி
குங்குமப்பூ
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
பிஸ்தா
பாதாம்


செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்பு பாலை எடுத்து காய்ச்சவும்

2. பால் காய்ந்தவுடன் அதில் இரண்டு பழம் எலுமிச்சை சாறை அதில் ஊற்றி பாலை திரிய விடவும்

3. இரண்டு நிமிடம் கழித்து பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைக்கவும்

4. வடிகட்டிய திரிந்த பாலில் சோள மாவு சேர்த்து நன்கு பிசையவும் பிசைந்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி தட்டி வைத்துக்கொள்ளவும்

5. சர்க்கரை பாகு காய்ச்ச ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மாற்று சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்

6. சர்க்கரை கரைந்தவுடன் அதில் செய்து வைத்த சென்னா உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகில் சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்

7. பதிந்து நிமிடத்திற்கு பின்பு சென்னா உருண்டைகளை எடுத்து தண்ணீரில் சேர்த்து ஒரு பதினைந்து நிமிடத்திற்கு ஊற வைக்கவும்

8. அடுத்து ரசமலாயை பாலில் ஊற வைக்க ஒரு பாத்திரத்தில் பாலை சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் கெட்டியாகும் வரை காய்ச்சவும் பால் சிறிது கெட்டியானவுடன் சர்க்கரை ஏலக்காய் தூள், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்

9. பால் கொதித்தவுடன் தண்ணீரில் ஊறவைத்த ரசமலாய் உருண்டைகளை எடுத்து கொதித்த பாலில் சேர்த்து ஒரு ஆறுமணி நேரம் ஊறவைக்கவும்

10. இனிப்பான மற்றும் எளிமையான ரசமலாய் தயார்
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN