வசந்தம் -22

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖💖💖

"என்னடா மதுக்குட்டி கண்ணெல்லாம் செவந்து கிடக்குது "

"நீ என்ன எங்கடா தூங்க விட்ட அஞ்சு நிமிஷம் மதுக்குட்டி... பத்து நிமிஷம் மதுக்குட்டினு என்னய ரெண்டு மணி வரைக்கும் தூங்க விடாம உன் ஹோல் ஹிஸ்டரிய சொல்லி என் தூக்கத்தை கெடுத்துத்துப்புட்டு இப்ப வந்து கேக்கறா ஏன் கண்ணு செவப்பா இருக்கு காது கருப்பா இருக்குனு.... "

"ஈஈஈ சோ சாரி செல்லம்... சரி இப்ப ஏன் சீக்கிரமே எழுந்த... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே.... "

"அட அந்த கொடுமைய ஏன்டா கேக்கற...
இந்த நிலா இருக்காளே.... நைட் அப்படி அழுதுட்டு தூங்கிப்புட்டு காலங்காத்தால எந்த சாமி அடிச்சுதோ தெரில.... என்னய நாலுமணிக்கு எழுப்பி வாசல்ல கோலம் போட்டே தான் ஆகணும்னு நின்னுட்டா.... ஏண்டி நைட்டு அப்பிடி அழுதுட்டு இப்ப இப்படி இளிச்சுட்டு நிக்கறனு கேட்டதுக்கு அது நேத்து இது இன்னைக்குனு வசனம் பேசறாடா...

"அப்பறம்"

"அப்பறமென்ன போய் வாசலை பாரு... அம்மாடி அவ்ளோ பெரிய கோலத்த போட்டு என் முதுகை உடைச்சுட்டா... "

"ஓ சோ சேட் செல்லம்.. நான் வேணுன்னா உன் முதுகுக்கு சந்து பாம் போட்டு விடட்டுமா "

"நீ கேப்புல கெடா வெட்றதுலயே குறியா இரு.. "அப்போது அங்கு வந்த நிலா நிகிலிடம்,

"குட் மார்னிங் நிகில் அண்ணா "

" என்னது அண்ணாவா "

"ஆமா அண்ணா எங்க வூட்டுக்காரர் தங்கச்சி உங்க வைப்னா நீங்க எனக்கு அண்ணா தான... "

மது " என்னடி சொல்ற... "

"ஆமாங்க அண்ணி.... பாலா உனக்கு அண்ணா தான.. அப்ப நான் கரெக்டா தான் சொல்லிருக்கேன் "

இருவர் முகத்தில் ஈயாடவில்லை...

"சரி சரி வாங்க சாப்பிட போலாம்... நீங்க டைனிங் டேபிள்க்கு வாங்க... நா போய் எங்க அத்தைக்கு ஹெல்ப் பண்றேன் " என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்..

"நிக்கி இவளுக்கு என்னடா ஆச்சு... ஒரு நாள் நைட்ல இப்படி ஆகிட்டா "

"நமக்கே இப்படி இருக்கே இந்த பாலா நிலைமைய யோசிச்சு பாரு... வா மது சீக்கிரம் போலாம்... இப்ப செம சீன் ஓட போகுது மிஸ் பண்ணிற கூடாது.. " என்று மதுவையும் இழுத்து கொண்டு சாப்பிடும் அறைக்கு சென்றான்...

அவர்கள் இருவரும் அங்கு சென்று அமர்ந்த பின் பாலாவும் வந்து அமர்ந்தான்... நிலா எல்லாம் பொருட்களையும் கொண்டு வந்து வைத்துவிட்டு தானும் பாலாவின் பக்கத்தில் அமர்ந்தாள்...

கோதை வந்து அனைவர்க்கும் பரிமாறினார்.... நிலா கோதையிடம்

" அத்தை சட்னி கொஞ்சம் போடுங்க "

அவளின் அத்தை என்ற விளிப்பில் பாலாவிற்கு புரை ஏறியது.... கோதை தலையை தட்ட வருமுன் நிலா அவன் தலையை தட்டினாள்.... அவனுக்கு தண்ணீர் கொடுப்பது போல் அவன் அருகில் சென்ற நிலா

"என்ன..... அத்தைய மட்டும் முறை வச்சு கூப்பிடறேனு பொறாமையா இருக்கா... உங்களுயும் இனிமேல் முறை வச்சே கூப்பிடறேன் மாமா ... சரியா மாமா... "

அவளுடைய மாமா என்ற விளிப்பில் அவன் திறந்த வாய் மூடவே இல்லை.. நிலாவும் இந்த கேப்பை பயன் படுத்தி தன் தட்டில் இருந்த இட்லியை எடுத்து பாலாவிற்கு ஊட்டி விட்டு விட்டாள்... கோதை ஏதோ ஒரு வேலையாய் உள்ளே செல்ல மற்ற இருவருக்கும் இப்பொது ஆவென்று பார்த்தனர்...

"என்ன அண்ணா அண்ணி உங்களுக்கும் ஊட்டி விடணுமா "

" என்னது அண்ணா அண்ணியா.... " என்று பாலா நிகில் மதுவை பார்க்க...

"எங்களை எதுக்குடா பாக்குற... நிலா நீ உன் திருவாயல அந்த விளக்கத்தை சொல்லுமா "

நிலா வெட்கப்பட்டு கொண்டே " அது வந்து..... என் ஊட்டுக்காரருக்கு தங்கச்சி அப்றம் தங்கச்சி புருஷன் எனக்கு அண்ணா அண்ணி தான ஆவுது... அதாங்க மாமா அப்டி சொன்னேன்... "

" என்ன நிலா ஒளர்ற "

"ச்சு போங்க மாமா... ஒன்னும் தெரியாத பச்ச புள்ள மாதிரியே கேக்குறது... "என்று சிணுங்கி விட்டு அவன் கன்னத்தில் லேசாக இடித்து வீட்டு ஓடியே விட்டாள்.. "

"இவளுக்கு என்னடா ஆச்சு "

"என்னய கேட்டா.... ஒரு பச்ச புள்ளய உன்னை நம்பி நேத்து நைட்டு தனியா விட்டுட்டு போன..
நீ என்னத்த பேசி வச்சியோ....
விடிய விடிய அழுதுட்டு காலைல பாத்தா இப்படி இருக்கு..... "

"பாலா யோசனையுடன் எழுந்து சென்றான் "

மது நிலாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டாள்....


" இந்த காதல் வந்தாலே எல்லாரும் பைத்தியம் ஆகிடறாங்க... கூட இருக்கறவங்களையும் பைத்தியம் ஆக்கிடறாங்க... " என்று புலம்பி விட்டு எழுந்து சென்று விட்டான்...

" டேய் ப்ளீஸ் ப்ளீஸ்டா..... பம்ப் செட்ல குளிச்சு ரொம்ப நாள் ஆச்சுடா... கூட்டிட்டு போடா "

"வேணாண்டா... கோவிலுக்கு வேற போகணும்... லேட்டாகிரும்... "

" பாலா தம்பி தான் ஆசைபடுதுல்ல... போய்ட்டு தான் வாங்களேன்.. கோவிலுக்கு சாயங்காலம் தான் போவோம்.. இன்னும் நிறைய நேரமிருக்கு போய்ட்டு வாங்க "

"சரிம்மா "

"நாங்களும் போறோம்... " என்று நிலாவும் மதுவும் வந்து நின்றனர்...

பாலா "அதெல்லாம் வேண்டாம் "

"அத்தை அத்தை ப்ளீஸ்... நாளைக்கே ஊருக்கு போயிருவோம்... அப்புறம் இதெல்லாம் என்ஜாய் பண்ண முடியாது.. அதே சென்னை அதே கூட்டம் அதே பொலுஷன்.... அப்புறம் அதே..... " என்று கூறிக்கொண்டே சென்றவளை இடை மறித்து..

"சரி சரி....... போய் எக்ஸ்ட்ரா டிரஸ் கொண்டு வாங்க.... "

"இதோ வச்சிருக்கோமே" என்று கோரஸாக ஒரு கவரை தூக்கி கட்டினார்கள் .....

" சரி வாங்க போலாம்... "

நடந்து செல்லும் தூரம் தான்... அதனால் நடந்தே சென்றனர்...

சுற்றிலும் கம்பி வேலிகள் போடப்பட்டு இருந்த பெரிய தென்னந்தோப்பை அடைந்தனர்... வேலியை ஒட்டிலும் மாமரங்கள் அடர்த்தியாக இருந்தன... தோப்பின் நடுவில் பெரிய கிணறு ஒன்று சுற்றிலும் தடுப்பு சுவர் மற்றும் வேலிகள் போடப்பட்டு பாதுகாப்பாக இருந்தது..

அதற்கு சற்று அருகில் சிறிய வீடு மற்றும் குடோன் போல் ஒரு அறையும் இருந்தது.. அதில் தேங்காய்கள் மற்றும் சில சாமான்கள் இருந்தன..

ஓட்டு வீட்டில் ஒரு கட்டில் மற்றும் தண்ணீர்பனை மட்டும் இருந்தது..

வீட்டின் பின்புறம் பெரிய தொட்டி.... அதில் குழாயில் இருந்து தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.... தொட்டி வழிந்து மரங்களுக்கு வாய்க்கால் வழியாக பாய்ந்து கொண்டிருந்தது....

"வாவ் "

"செம "

"ஐயோ சூப்பரா இருக்கு மாமா "

பாலா நிலாவின் அருகில் சென்று "மாமான்னு கூப்பிடாத "

"ஏன் மாமான்னு கூப்பிட கூடாது மாமா "

"ப்ச் கூப்பிடாத அவ்ளோதான் "

"ஹ்ம்ம்... சரிங்க மாமா "

" உன்னை " என்று பாலா நிலாவை அடிப்பது போல் வர.. நிலா அவனுக்கு கண்ணடித்து பறக்கும் முத்தத்தை அனுப்பிவிட்டு தொட்டியின் மீது ஏறி தண்ணீரினுள் காலை தொங்க விட்டு அமர்ந்தாள்....

"சரி மது நீயும் நிலாவும் இதுல குளிங்க... கொஞ்சம் தள்ளி அங்க ஒரு தொட்டி இருக்கு... நாங்க அங்க போய் குளிக்கிறோம்... கொஞ்சம் பாசி இருக்கும். வழுக்கி விட்ர போவுது... பாத்து குளிங்க... ஏதாச்சும்னா ஒரு சத்தம் கொடு நாங்க வரோம்..."

போகும் போது நிலா அமர்ந்திருப்பதை பார்த்தவன் அவளை தொட்டிக்குள் தள்ளிவிட்டு சென்று விட்டான்....

"கோவமா இருக்கணும்னு நெனச்சா மாமா மாமா னு கூப்பிட்டு உருக விட்றா.. கூடாது பாலா ஸ்டெடியாவே இரு " என்று மனதிற்குள் கூறி கொண்டான்....

நிலாவும் மதுவும் தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட்டனர்... கோதை அரைத்து குடுத்த சீகக்காய் போட்டு குளித்தனர்...

மது போதுமென்று துணி மாற்றிக்கொள்ள சென்று விட்டாள்.... மது வெளியே வர நிகிலும் உள்ளே சென்று துணி மாற்றிவிட்டு தோப்பை சுற்றி பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றனர்..

நிலா ஏதோ சிந்தனையோடு குளித்து கொண்டிருந்தவள் தூரத்தில் பாலா வருவதை பார்த்தவள் தான் முகத்தை இயல்பாக வைத்து கொண்டு தண்ணீரில் விளையாடினாள்...

பாலா நிலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று துணி மாற்றிக்கொண்டு தொட்டியின் அருகில் வந்தான்.. நிலாவின் புறம் திரும்பாமலே

"நீ மட்டும் இருக்க மத்தவங்க எங்க "

"அது வந்து மாமா..... ரெண்டு பேரும் லவர்ஸ் மாமா... அதான் கொஞ்சம் தனியா பேசிட்டு வரலாம்னு போயிருக்காங்க மாமா.... "

"ப்ச் மாமான்னு கூப்பிடாத ப்ளீஸ்... "

"ஹ்ம்ம் சரி "

"சரி சீக்கிரம் துணி மாத்திட்டு வா... வீட்டுக்கு போலாம் "

"ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம்... "

"சரி நீ குளி.. நான் அப்புறம் வரேன்... "

"எனக்கு தனியா குளிக்க பயமா இருக்கு.. இப்படியே இந்த தொட்டி மேல உட்காருங்க.. இல்லனா நான் மாமானு தான் கூப்பிடுவேன் "என்று அடம் பிடிக்க வேறு வழியின்றி வெளியே காலை தொங்க போட்டவாறு அமர்ந்தான்..

" ஏய் என்ன பண்ற "

நிலா இந்த நேரத்திற்காக தான் காத்திருந்தவள் போல் அவனை தொட்டிக்குள் இழுத்து விட்டாள்...


உடல் முழுதும் தொப்பையாக நனைந்தவன் அப்போது தான் நிலாவை பார்த்தான்...

நனைந்த உடைகள் உடலோடு ஒட்டி உறவாட... தலைமுடி நனைந்து அதிலிருந்து நீர்த்துளிகள் சிதறின... ரோஜா இதழின் மேல உள்ள பணி துளிகள் போல அவள் முகம் முழுதும் முத்து முத்தாக நீர் துளிகள்...

அவன் நிலாவை நோக்கி முன்னேற,

அவன் கண்கள் கூறிய செய்தியில் மெல்லிய நடுக்கம் உடலில் பரவ,

"ப..... பாலா.... நான்..... நீ தள்ளி விட்டதால் தான் நானும் தண்ணிக்குள்ள இழுத்தேன்.... "

பின்னாடி நகர்ந்தவள் பாசி வழுக்கி கீழே விழ போனவளை தாங்கி பிடித்தான்...

அவள் முகத்தில் உள்ள நீர் திவலைகளை தான் ஒற்றை விரலால் துடைத்தவன் முகம் நோக்கி குனிய அந்த கிறக்கத்தில் கண் மூடியவளை தொப்பென்று நீரில் விட்டு விட்டு சென்று விட்டான்....

நீரில் இருந்து எழுந்தவள் முகத்தில் இருந்தது வெறும் நீரில்லை கண்ணீர் என்று அவள் மட்டுமே அறிவாள்......
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN