உன் விழியிரண்டும்
இமைக்க மறந்து
விரிந்து நிற்பது
நான் நிதம் காணும் அழகு
மென்மை தீண்டலை
கூட தாங்காது
சிவந்திருக்கும் உன் கன்னங்கள்
என்னை கட்டியிழுக்கும் அழகு
கவிதையை கூட
வார்த்தைகளின்றி
நளினமாய் வரித்தெடுக்கும்
உன் இருபுருவங்கள்
என்னை சிறைபிடிக்கும் அழகு
ஒட்டி உறவாடி
இணைந்து பிரியும்
உன் சிவந்த அதரங்கள்
என்னை போதையேற்றும் அழகு
உன் கோபத்தை
வியர்வைத்துளிகளை
ஏந்தி கோடிட்டு காட்டும்
உன் கூர் நாசி
என்னை வசமிழக்கச்செய்யும் அழகு
தினமொரு வண்ணத்தால்
ஆபரணப்படுத்தப்பட்டிருக்கும்
கார் மேக கூந்தலால் மறைந்திருக்கும்
உன் செவியிரண்டும்
என்னை கிறக்கமூட்டும் அழகு
பஞ்சுப்பாதம் நிலத்தில் பதிய
உன் கருங்கூந்தல் சந்தத்திற்கு
ஜதி வாசிக்க
உன் இடையசைவு
லாஸ்யத்தின் பாகமாய்
சித்தரிப்பதாகிட
ஒற்றையபடிப்பாதையில்
சிவப்பு நிற தாவணியில்
கையிரண்டிலும் வளையல்
கலகலக்க
கையில்
முளைவிடுத்தொடங்கியிருந்த புல்லினை
அங்குமிங்குமாய் நீ
ஆட்டிச்செல்லும்
நளினத்தினை விட
வேறு அழகு
என்னை
மண்டியிடச்செய்யுமா??
இமைக்க மறந்து
விரிந்து நிற்பது
நான் நிதம் காணும் அழகு
மென்மை தீண்டலை
கூட தாங்காது
சிவந்திருக்கும் உன் கன்னங்கள்
என்னை கட்டியிழுக்கும் அழகு
கவிதையை கூட
வார்த்தைகளின்றி
நளினமாய் வரித்தெடுக்கும்
உன் இருபுருவங்கள்
என்னை சிறைபிடிக்கும் அழகு
ஒட்டி உறவாடி
இணைந்து பிரியும்
உன் சிவந்த அதரங்கள்
என்னை போதையேற்றும் அழகு
உன் கோபத்தை
வியர்வைத்துளிகளை
ஏந்தி கோடிட்டு காட்டும்
உன் கூர் நாசி
என்னை வசமிழக்கச்செய்யும் அழகு
தினமொரு வண்ணத்தால்
ஆபரணப்படுத்தப்பட்டிருக்கும்
கார் மேக கூந்தலால் மறைந்திருக்கும்
உன் செவியிரண்டும்
என்னை கிறக்கமூட்டும் அழகு
பஞ்சுப்பாதம் நிலத்தில் பதிய
உன் கருங்கூந்தல் சந்தத்திற்கு
ஜதி வாசிக்க
உன் இடையசைவு
லாஸ்யத்தின் பாகமாய்
சித்தரிப்பதாகிட
ஒற்றையபடிப்பாதையில்
சிவப்பு நிற தாவணியில்
கையிரண்டிலும் வளையல்
கலகலக்க
கையில்
முளைவிடுத்தொடங்கியிருந்த புல்லினை
அங்குமிங்குமாய் நீ
ஆட்டிச்செல்லும்
நளினத்தினை விட
வேறு அழகு
என்னை
மண்டியிடச்செய்யுமா??