நீயே காதல் என்பேன் - 2

sizzling_saran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">அடுத்த நாள் சாதனாவின் பிறந்தநாளாக இருக்க அதற்கு முன் இரவு மாதவியும் அனுவும் சாதனா வீட்டிற்கு சென்றிருந்தனர்...<br /> <br /> சாதனா இன்னைக்கு என்ன புது சமையல்??எங்களைக் கொல்ல??என்று முனுமுனுத்தப்படி கேட்ட மாதவியை முறைத்த சாதனா....<br /> <br /> இன்று உனக்கு எதுவும் கிடையாது!!!!அனுவிற்கு மட்டுமே என்று கூற முகம் மலர்ந்தவளாய் நான் தப்பித்தேனே என்கின்ற மாதிரி அனுவிற்கு பழிப்பு காண்பித்துவிட்டு டைனிங் டேபிளில் உள்ள பிரட்டை புன்னகைத்தவாரே உண்ண ஆரம்பித்தாள் மாதவி...<br /> <br /> தான் மட்டும் இந்த சத்திய சோதனையில் மாட்டிக் கொண்டதை எண்ணி தன்னை தானே திட்டிக் கொண்டவளாய் சாதனா சமைத்த பருப்பு சட்னியை சுவைத்தால் அனு..<img class="smilie smilie--emoji" loading="lazy" alt="😧" title="Anguished face :anguished:" src="https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f627.png" data-shortname=":anguished:" /><br /> <br /> உப்பில் சட்னி குறைவாக இருப்பதை உணர்ந்த அனு மாதவி குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை அவசரமாக வாங்கி குடித்தால்...<br /> <br /> அவள் முக பாவனையை பார்த்த மாதவி சத்தமாக சிரிக்க....அதை கேட்டு சமையல் அறையைவிட்டு வெளியே வந்த சாதனா அனுவை கேள்வியுடன் பார்க்க அனு அவளை பரிதாபமாக பார்த்தால்...<br /> <br /> மாதவி சிரிப்பதை பார்த்து கடுப்பான அனுவும் சாதனாவும் அவனள அடிக்க விரைந்தனர்....மாதவி அவர்களிடம் இருந்து தப்பித்து சென்று குளியல் அறைக்குள் புகுந்தாள்<br /> <br /> சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மாதவியை மற்ற இருவரும் தண்ணீரால் குளிக்க வைத்தனர்...<br /> <br /> இவர்கள் கிண்டல் கேலியில் நேரம் வேகமாக செல்ல...நேரம் நல்இரவு 12ஐ எட்டியது<br /> <br /> அதற்காக காத்திருத்தவர்களாக மாதவியும் அனுவும் கேக் மற்றும் அவர்அவர்களின் பரிசு பொருளை எடுத்து வர....சாதனாவின் பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடி முடித்தனர்...கேக் பூசிய முகத்துடன் பல முக பாவனைகளோடு புகைப்படம் எடுத்தனர்...<br /> <br /> அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து மகிழ்ந்தனர்....<br /> <br /> அப்புகைப்படங்களை பார்த்த அவர்களின் நண்பர்கள் அனைவரும் சாதனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக குவித்தவண்ணம் இருந்தனர்...<br /> <br /> 1 மணி அளவில் மூவரும் கலைத்துப் போய் அமர்ந்தனர்...<br /> <br /> சாதனாவின் முகத்தில் சிரிப்பு இருந்தும்....அதில் மறைந்துள்ள அவளின் கவலை இருவருக்கும் விளங்க அவளிடமே அதற்கான காரணத்தை கேட்டனர்...<br /> <br /> சிறிது நேரம் அமைதிக்கு பின்னர் சாதனா...<br /> <br /> அந்த காலத்தில் கூட ஒரு பெண்ணிற்கு சுயம்வரம் நடக்கும்பொழுது வந்திருக்கும் ஆடவர்கள் மத்தியில் அவளுக்கு பிடித்தமானவனய் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது<br /> <br /> ஆனால் இன்றோ எவ்வளவு நூற்றாண்டு கடந்தும்...எத்தனை பேர் பெண்ணின் சுதந்திரத்திற்காக போராடியும் இன்றும் எல்லா பெண்களுக்கும் தன் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கிடைக்கவில்லையே!!!!<br /> <br /> இது என்ன பெண்களின் முன்னேற்றமோ??என்ன பெண்களின் சுதந்திரமோ???!!<br /> என்று சாதனா வெறுமையாக பேசி முடிக்க....மாதவியும் அனுவும் ஒருவரை ஒருவர் அர்த்தம் உணர்ந்தவர்களாக பார்த்துக் கொண்டனர்</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN