<div class="bbWrapper">ஹாய் பிரண்ட்ஸ். இந்த கதை என்னோட புது முயற்சி. ஒரு அத்தியாயம் ஹீரோயின் அம்சா பார்வையிலும் அடுத்த அத்தியாயம் ஹீரோ விவேக் பார்வையிலும் இருக்கும். ஒரே நிகழ்ச்சி ரெண்டுபேரோட கோணத்தில் எப்படி இருக்கு. இந்த திருமணத்தில் அவங்களுடைய எண்ணங்களை அவரவர் பக்கமிருந்து தெரிஞ்சுக்கலாம்.<br />
<br />
<b>MM-2</b><br />
<br />
<br />
<i>மடி மீது நீயிருந்தால்<br />
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ ?<br />
நொடி நேரம் பிரிந்தாலும்<br />
காலங்களும் நின்று போகாதோ ?<br />
ஒரு மூச்சு இரு தேகம்<br />
வாழ்வது நாமன்றி வேராரோ ?<br />
நம் காதல் வெள்ளத்தில்<br />
நடுவே நாம் இருந்தாலும்<br />
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ஒ ...</i><br />
<br />
அலைபேசியில் இசையாய் உருகி கரைந்து கொண்டிருந்தார் இளையராஜா. எத்தனையோ முறை கேட்டிருப்பேன். என்னை கேட்கவும் வைத்திருப்பாள் தேவி.<br />
<br />
இமைகள் மூடி இறுக்கங்கள் தளர்ந்து நெகிழ்வாய் என் நெஞ்சினோரம் அவள் சாய்ந்திருக்கும் தருணங்களிள் நிச்சயமாய் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.<br />
<br />
அளவில்லாத மையலோடு இமைக்குடை திறந்து கருவிழி பாவைகளுக்குள் என் முகம் படும் வேலையில் மெலிதாய் முனுமுனுத்திடும் வரிகள் காதுக்குமன்றி கண்ணுக்கும் இனிமை குடுக்கும் வித்தையை கொண்டவள் என் தேவி மட்டுமே.<br />
<br />
சிப்பி இதழில் சிறு கவிதை நான் வரைய நுட்பமாய் அவள் நூதானமாய் திருடிக் கொள்வாள் என் அதரங்களை.<br />
<br />
இன்றோ சீண்டுபவள் அவளின்றி பாலைவனம் போல வறண்டு கிடக்கிறது. இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அவள் மீதான ஏக்கம் விட்டொழிவேனா என்று அடம் செய்கையில் இந்த இரண்டாம் திருமணம் எனக்கு எந்த விதத்திலும் நல்லது செய்யுமென்று தோன்றவில்லை.<br />
<br />
என் சிந்தனை சிங்காரங்கள் வான வீதி கடந்து வாசப்படி மறந்து அவள் அம்சவேணியிடம் அழகாய் மண்டியிட்டது. அந்தப் பெண் அழகி தான். இல்லையென சொல்லுவதற்கில்லை. ஆனாலும் தேவியை தாண்டி என் மனதில் அவள் நுழையவே இல்லையே.<br />
<br />
'பின்ன எதுக்கு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட 'மனசாட்சி என்ற பெயரில் மூளை அறிவாய் கேள்வி எழுப்பி வைத்தது.<br />
<br />
மெல்ல தலை சாய்த்து வெளியே பார்த்தேன். வாசலில் மலர் போனில் பேசிகொண்டிருந்தாள். சிறு புன்னகை என்னையறியாமல் என்னுதட்டில் வந்து சேர்ந்தது. எப்படித் தான் முதல் பார்வையிலேயே அந்த பெண்ணுடன் அத்தனையாய் ஒட்டிகொண்டதோ இந்தக் குழந்தை.<br />
<br />
பிறந்ததில் இருந்தே தாய் முகம் பார்க்காத மலர் அந்த பெண்ணிடம் பேசிய முதல் நாளிலேயே அம்மாவென அழைத்துவிட்டுருந்தாளே. மலரைப் போலவே என் மனதும் இருந்திருக்கலாம் என்று நினைக்க தோணியது.<br />
<br />
எனக்குள்ளேயே நான் திடுக்கிட்டேன். நேசம் எனக்குள்ளும் வேர் பிடித்து விட்டதா?<br />
<br />
வாயிற்படியில் இருந்து எழுந்த நான் வாசல் கேட் பக்கம் நடந்தேன். இடையில் நின்றிருந்த மலர்விழியின் சிகையை செல்லமாய் கலைத்து விட்டேன். அதில் குஷியாய் குதித்த மலர் அலைபேசி வழியாக அவள் வருங்கால அம்மாவிற்கு முத்தங்களை இட்டு நிரப்பும் சத்தம் கேட்டு நடையை நிறுத்தினேன்.<br />
<br />
திரும்பி மலரிடம் வந்து அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தேன்.<br />
<br />
"பட்டுமா அப்பாவுக்கு?"என்று கன்னத்தை காட்ட என் இரு கன்னத்திலும் பட்டிதழ் பட்டும் படாமல் பதித்து வைத்து 'அப்பா தாடி குத்துது 'என்று முகம் சுழித்த மலரின் இரு கன்னத்தை பற்றி முத்தமிட்டுவிட்டே எழுந்தேன்.என்னவோ ஒரு நிறைவு மனதில்.<br />
<br />
எப்பவாவது எங்களுக்குள் நிகழும் இந்த பாசம் காட்டும் நிகழ்வை என் அம்மாவும் அப்பாவும் ரசித்து நின்றது தெரிந்தது. இவ்வளவு நாள் அவர்கள் முகத்தில் இருந்த வாடல் குறைந்து இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சி நிறைந்த முகமே தென்பட்டது.<br />
<br />
'அம்சவேணிக்கு நன்றிகள் 'மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.<br />
<br />
"கொஞ்சம் வெளிய நடந்துட்டு வரேன்மா "என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு கேட்டை தாண்டி வந்தேன். எதிரில் இருந்த மண் சாலையை தாண்டி இருந்த மஞ்சள் காட்டில் இருந்து வந்த மனம் அந்த இரவு நேரத்தை மேலும் ரம்மியம் ஆக்கியது.<br />
<br />
அந்த மண் ரோட்டிலேயே நடக்க துவங்கினேன்.<br />
<br />
******<br />
<br />
கோவில் மணியை ஓரடி அடித்து விட்டு சாமி கும்பிட சென்றோம் அனைவரும். திருமணத்திற்கு தேவையான எல்லா ஏற்படும் தயாராக இருந்தது. அம்சவேணி மட்டும் இன்னும் வந்திருக்கவில்லை.<br />
<br />
"அப்பா போன் குடுங்க. அம்மா கிட்ட பேசணும்."ரொம்ப நேரமாக இப்படித் தான் அடம் பிடித்துக்கொண்டிருந்தாள் மலர்.<br />
<br />
"அவங்க ரெடி ஆகிட்டு இருப்பாங்க பட்டுமா. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க."என்றேன் நான்.<br />
<br />
"அப்பா ப்ளீஸ் ப்பா.."என்றும் இப்படித் தான். இந்த ப்ளீசில் எதை வேண்டுமென்றாலும் செய்து விடுவேன் நான்.<br />
<br />
அரிதாய் வரும் ப்ளீஸ்களை கூட ஏற்றுகொள்ளாத நான் என்ன அப்பன்! இந்த ப்ளீசில் தானே அம்சவேணியை திருமணமே செய்துகொள்ள போகிறேன். ஒரு போனை குடுக்க மாட்டேனா.<br />
<br />
அம்சவேணியின் நம்பருக்கு அழைத்தேன். மலரிடம் குடுக்கும் முன் அவள் அழைப்பை எடுக்கும் வரையிலும் காதில் வைத்திருந்தேன்.<br />
<br />
அவள் அழைப்பை ஏற்றதும் சட்டென போனை மலரிடம் குடுத்து விட்டேன். என்னவோ இன்று வரை ஓர் வார்த்தை பேசியதில்லை. அவளுமே என்னிடம் பேச முயன்றதுமில்லை. இப்படி இருக்கும் எங்களுக்கு நடுவில் மலர் மட்டுமே பிரதானமாக ஆகிப் போனாள்.<br />
<br />
நேரம் செல்லவும் வந்தாள் அவள். சோம்பலாய் விழுந்த சூரிய வெளிச்சத்தில் சூரியகாந்திப் பூவாய் மலர்ந்திருந்தாள் அவள்.<br />
<br />
"ரொம்ப சரியாத் தான் பேர் வச்சுருக்காங்க ப்பா இவளுக்கு."என்னையும் மீறி மனம் கட்டவிழ்ந்து கொண்டிருந்தது.<br />
<br />
என்னிடம் இருந்து கைகளை விடுவித்த மலர் ஓடிச் சென்றாள் அவளன்னை நோக்கி.<br />
<br />
தன்னை நோக்கி வந்த குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு முத்தம் ஈன்றதில் என் ஐம்புலன்களும் அணிவகுத்து நின்றது அந்த அம்சமானவளை நோக்கி.<br />
<br />
குழந்தையை கொஞ்சி முடித்தவள் நேராய் என்னைப் பார்த்தாள். விழியீர்ப்பு விசையில் நான் வில்லம்பின் வேகத்தில் வீழ்ந்து கொண்டிருந்தேன்.<br />
<br />
சட்டென ஒரு குரல் என் அருகில் "தேவிய விட இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்குல்ல" சுரீரென நெஞ்சம் துளைத்த அந்த வார்த்தையில் குற்றவுணர்ச்சி பொங்கியது எனதுள்.<br />
<br />
மாயத்திரை மெல்ல எனை நழுவி போனதை உணர்ந்தேன். மெல்ல இறுக்கம் கொண்டது என் உடல். இனிமையின் இலவச இணைப்பாய் வரும் புன்னகையும் நஷ்டம் கொண்டது.<br />
<br />
செயற்கை செய்கை என்னை ஆட்கொண்டதை உணர முடிந்தது . மாலையிட்டு தாலி கட்டும் நொடி வரையிலுமே கொண்ட இறுக்கம் மூன்று முடிச்சிட்டு நெற்றிப் பொட்டு வைக்கும் போது கொஞ்சமே கொஞ்சம் தளர்ந்து கொண்டிருந்தது.<br />
<br />
சப்த அடிகளுக்காக அவள் சுண்டுவிரலை பற்றும் போது மின்சார கடத்தியாய் அவள் நேசத்தை எனக்கு கடத்திக் கொண்டிருப்பாள் போல.<br />
<br />
சின்னஞ்சிரு பூக்கள் எனக்குள்ளே பூத்ததை உணர முடிந்தது.<br />
<br />
ஜில்லென இருந்த அவள் விரல் கொஞ்சம் இருக்கமாகவே என் கையை பற்றியிருப்பது போல் எனக்கு தோணுவது ஒரு வேளை பிரம்மையோ.<br />
<br />
அவள் முகம் பார்த்தேன். என் நெஞ்சிற்கு இணையாய் இருந்தாள்.<br />
<br />
'நா இவ்ளோ வளர்த்தியா, இல்ல இவ ரொம்ப குட்டையா ' வலம் வரும் நேரம் முழுதாய் அவளே நிறைந்திருந்தாள்.</div>
<div class="bbWrapper">Woooooow... Super Super maa.... Romba romba வித்தியாசமா na முயற்சி maa.... Semma ரொம்ப different ah இருக்கு Ennaku romba romba pidichi irukku இந்த முயற்சி..... Avanukum avala பிடிச்சி இருக்கு.... But...... Super Super maa</div>
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.