பாகம் 16

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="font-family: 'courier new'"><i>&quot;நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க மித்திரன்?இப்படியா பயமுறுத்துவது?&quot;</i>மாயா கேட்க மித்திரன் புன்னகையித்தான்.</span></b><br /> <br /> <span style="font-family: 'courier new'"><b><i>&quot;ரிலாக்ஸ் மாயா,தனியா நமக்குத் தெரிஞ்ச பொண்ணு போகுதே,சரி துணையா வரலாம்னு வந்தா,அம்மணிக்கு எப்படி கோவம் வருது பாரு.&quot;</i> மித்திரன் வருகையின் நோக்கத்தை விளக்க மாயா கன்னம் சிவந்தாள்.<br /> <br /> <i>&quot;நான் சிறுமியல்ல மித்திரன்,என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும்&quot; </i>முகத்தை திருப்பியவள் வெளியே தெரிந்த பனிமலைகளில் பார்வையைப் பதித்தாள்.<br /> <br /> மித்திரனுக்கு மாயாவைப் பற்றி தெரியுமாதலால் எதுவும் பேசாமல் வந்தான்.அப்பொழுது மாயாவின் காலை எதுவோ பிராண்ட, மாயா திடுக்கிட்டுப் போனாள்.கீழே குனிந்து பார்த்தாள்.அழகான பஞ்சு பொமெரியன் குட்டி சினேகமாய் இவளைப் பார்த்தவாறு நின்றிருந்தது.<br /> கண்களில் பயம் பரவ ஒரே எட்டில் மித்திரனின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள். மித்திரன் தடுமாறினான்.மாயாவின் தளிர் கரங்கள் அவனை இறுக்கப் பற்றிக் கொண்டன.<br /> <br /> <i>&quot;மித்ரன் அந்த டாக் அ போக சொல்லுங்க,எனக்கு டாக்னா போபியா,&quot;</i> மாயாவின் குரல் நடுங்கியது. சற்று முன் வீராங்கனைப் போல பேசியவள் சின்ன பொமெரியன் குட்டிக்கு பயப்படுவது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அதை அடக்கிக் கொண்டு மாயாவை சமாதனப்படுத்தினான்.<br /> <br /> &quot;<i>ஒன்னும் இல்ல மாயா,இது சின்ன குட்டி உன்னை ஒண்ணும் பண்ணாது, இரு இந்த வாண்டோட ஓனர்கிட்ட இவனை கொடுத்திட்டு வர்ரேன். &quot;</i>மித்திரன் பொமெரியனை கையிலெடுக்க , இவர்களை நோக்கி ஒரு கனடிய பெண் வந்தாள்.<br /> மித்திரனை நோக்கி புன்னகையித்தவள், பொமெரியனை கையில் பெற்றுக் கொண்ட பொழுது,அவன் பின்னே ஒளிந்திருந்த மாயவைக் கண்டு விட்டாள்.<br /> <br /> உடனே <i>&quot;ஹேய் நீ மாயா இல்ல, என்ன மறந்திட்டியா நீ, நாந்தான் ஜாஸ்மின்!,&quot; </i>உற்சாகமாய் அவள் குரல் வெளிப்பட, மாயா ஜாஸ்மினை கட்டிக் கொண்டாள்.<br /> <br /> <i>&quot;உன்னைப் பார்த்து வருடங்கள் ஆச்சு,அந்த இரவுக்கு அப்புறம்..ஓ ஜாஸ்மின் ரொம்ப நன்றி&quot;</i> உணர்ச்சிப் பெருக்கில் மாயா கண்கலங்க, ஜாஸ்மின் மாயாவை அணைத்துக் கொண்டாள்.<br /> <br /> <i>&quot;ஹேய் மாயா, என்ன இது சின்னப்பிள்ளையாட்டம்?நான் உன்னைக் காப்பாத்தல, நீதான் உன்னை காப்பாத்திய ஹீரோ பக்கத்தில் இவ்வளவு நேரம் ஒண்டிக்கிட்டு இருந்திருக்க,&quot;</i>தெளிவான பதிலால் ஜாஸ்மின் மாயா மற்றும் மித்திரனையும் அதிர வைத்தாள்.<br /> <br /> <i>&quot;நீங்க மிஸ்டர் விஸ்வாமித்திரன் ராஜ் தானே? என்னை உங்களுக்கு நினைவு இல்லையா? சில வருடங்களுக்கு முன்பு, உங்க நண்பர் ஓட்டலில் கல்சுரல் ப்ரோகிராமில் தப்பா நடந்துக்கப் பார்த்த ஒரு ராஸ்கல் கிட்ட இருந்து ஒரு பொண்ணை காப்பாற்றினீர்களே நினைவிருக்கா?&quot;</i>ஜாஸ்மின் கேட்க, மித்திரனுக்குள் குழப்ப ரேகை படர்ந்தது.சிறிது யோசனைக்குப் பின் தலையாட்டியவனைப் பார்த்து ,<br /> <br /> &quot;<i>நீங்க காப்பாத்தின பொண்ணு என்னோட மாயாதான்&quot; </i>ஜாஸ்மின் முடிக்க, இருவரும் அதிர்ந்து விட்டனர். <br /> <i>&quot;அப்போ மதன் சொன்ன விஸ்வா ..மித்திரன்னா?&quot; </i>அதனால்தான் அன்று அவனை ஓட்டலில் கண்ட பொழுது மதன் தடுமாறினானோ?<br /> காத்தவன் அருகில் இருந்தும், அவனுக்கு நன்றி கூட சொல்ல வில்லையே, மாயாவின் கண் கலங்கிற்று. மித்திரனும் இதே நிலையில் இருந்தான்.<br /> <br /> என்றோ இவளைக் காத்த காரணத்தினால் தானோ, மனம் மாயாவை கண்ட நொடிப்பொழுதில் மயங்கி இவள் பக்கம் சாய்ந்ததோ?<br /> இவள் தனக்குரியவள் என்ற எண்ணம் அன்று ஏற்பட்டதால்தானோ, அவளை கண்ணின் மணிப் போல காக்கத் தோன்றியதோ?<br /> என் தேவதையை கசக்கி எறியப் பார்த்தவனை அப்பொழுதே அடையாளம் கண்டிருந்தால், ஹ்ம்ம்ம்ம் மித்திரன் மாயாவைப் பார்க்க,ஜாஸ்மின் குறுக்கிட்டாள்.<br /> <br /> <i>&quot;நீங்க அப்புறமாய் நன்றி சொல்லி சந்தோசப்பட்டுக்குங்க, நான் மாயாகூட கொஞ்சம் பேசணும்.&quot;</i><br /> மித்திரன் வழி விட, தோழிகளிருவரும் மலை முகடுகளை இரசிப்பதை விடுத்து, குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். கொண்டோலா பயணம் முடிவுறவும் மாயாவும் மித்திரனும் ஜாஸ்மினிடமிருந்த்து விடைப் பெற்றுக் கொண்டு தங்கள் குடிலுக்கு நடையைக் கட்டினர்.<br /> பிரமிப்பு விலகாமல் மாயா மித்திரனுடன் நடக்கையில்,மனதார தனக்கு உதவியவனை கண்ணில் காட்டிய ஜாஸ்மினுக்கும் அவளுடைய பொமெரியனுக்கும் நன்றி தெரிவித்தாள்.<br /> <br /> காட்டேஜில் மயக்கம் தெளிந்த சிம்மி, தன் உடைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டு திடுக்கிட்டாள்.மாலை மங்கிய ஒளியில் அறையில் பிரதான விளக்குகள் உயிர்ப்பிக்கப்படாமல் இருப்பது கண்டு புருவம் சுளித்தாள்.கண்கள் அனிஷை தேடவும்,அவளை அலைய விடாமல் அறைக்கு அவனும் வந்து சேர்ந்தான். கண்களில் குறும்பு மின்ன <i>&quot;என்னம்மா மகாராணி, இப்பத்தான் கண் விழித்தீர்களோ? மூச்சு பேச்சு இல்லாம இருந்தீயா, நான் பயந்திட்டேன்.உன் மந்திகள் கூட உதவிக்கு வரலை.அப்புறம் நான்தான் உனக்கு சிகிச்சை அளித்தேன்.&quot;</i>இல்லாத காலரை இழுத்து விட்டுக்கொண்டான்.சிம்மிக்கு பற்றிக் கொண்டு வந்தது.<br /> தோழிகள் சதித்திட்டத்தால்,<br /> <br /> தன்னந்தனியே அனிஷிடம் மாட்டிக் கொண்டு அவதிபட நேர்ந்ததை எண்ணி அவளுக்கு கோவம் வந்து விட்டது.எதுவும் பேசாமல் உம்மென்று அமர்ந்திருக்க,அனிஷிற்கு எதோ செய்தது.<br /> <i>&quot;சிம்மி நெஜமா நான் ஏதும் பண்ணல,உனக்கு டிரஸ் சேன்ச் பண்ணிவிட்டது சமையல்காரிதான்.<br /> பயண அலுப்பு,எதுவும் சாப்டாதனால வந்த மயக்கம்.அதான் மயங்கிட்ட.&quot; சரி வா,கொஞ்சம் காலார நடந்திட்டு வரலாம்.அதுக்குள்ள டின்னர் ரெடி ஆயிடும்&quot;. </i><br /> அனிஷ் சிம்மியின் ஸ்வட்டரை எடுத்துக் கொடுத்தான்.காட்டேஜ் வெளியே சிறிய </b></span><b>தோட்டம் போல அமைத்திருந்தனர்.</b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN