❤️உயிர் 1❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="font-size: 18px">உனக்கு மட்டும் உயிராவேன்..</span></b><br /> <br /> <span style="font-size: 18px"><b>அப்பப்பா! என்ன வெயில் ..இப்படி என்றும் இல்லாத் திருநாளாய் இன்னிக்கு வெயில் மண்டையை பொளக்குதே!<br /> மனதிற்குள் உச்சி வெயிலை சபித்தவாறே அஞ்சலியின் மென் கரங்கள் மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அவசரமாக உருவின.<br /> <br /> உதட்டோரம் மெலிதாய் பொடித்திருந்த வியர்வையைத் துளிகளை துடைத்தாவாறே அஞ்சலி துணி சுமையை தன் அறைக்கு அள்ளிச்சென்றாள்.<br /> <br /> அங்கே அன்றலர்ந்த தாமரை பூவாய், அவளுடைய குட்டிச்செல்லம் மாயா உலகை மறந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள். <br /> <br /> மெல்ல அவள் அருகில் சென்றவள், அந்த பதுமை உறங்கும் அழகை தாய்மை நிறைந்த கண்களால் இரசித்துக்கொண்டிருந்தாள்.<br /> <br /> அப்படியே அப்பாவின் ஜாடை.அவனுடைய சுருள் கேசம்,அதே கூர் நாசி,<br /> சிரிக்கும் பெரிய கண்கள்.<br /> இவளை ஒத்தாற் போல் அமைந்தது என்னவோ மாயாவின் கீழ் உதடு மச்சமும் சுழிந்து நிற்கும் கன்னக்குழியும் தான்.<br /> <br /> கைகள் </b></span><b><span style="font-size: 18px">தன்னிச்சையாகவே மாயாவின் சுருள் கேசத்தை மெதுவாக தடவிடன.சின்னவள் தாயின் ஸ்பரிசம் உணர்ந்து மெலிதாய் சிணுங்கினாள்.</span></b><br /> <br /> <span style="font-size: 18px"><b>குழந்தையின் உறக்கம் கலைக்க மனமின்றி, அஞ்சலி படுக்கையில் இருந்த துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.<br /> <br /> தூரத்தில் எங்கோ விமானம் பறக்கும் ஓசை சன்னமாய் கேட்டு மறைந்தது.<br /> எப்பொழுதும் மெலிதாய் கசியும் இசையை கூட மாயாவிற்காக நிறுத்தி விட்டிருந்தாள்.நிசப்தம் மட்டுமே எங்கும் நிலவிய வேளையில் கண்கள் ஏனோ அறையின் கோடியில் ஆளுயர தங்க ப்ரேமிட்ட புகைப்படத்தில் பதிந்தது.<br /> <br /> அதில் அவளும் அவனும்.<br /> திருமணக்கோலத்தில்.<br /> அஞ்சலி யுகேந்திரன் ராஜ்.<br /> <br /> காட்சிகள் மெல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு விரிந்தன. புயல் போல தன் வாழ்வில் வந்து வசந்தங்களையும் அள்ளி கொடுத்தவனின் நினைவில் அஞ்சலி இதழ்களில் புன்னகை குடிக்கொண்டது. <br /> <br /> மெல்ல மெல்ல தன்னை மையம் கொண்டவனின் நினைவுகளும் அவளுள் எழுந்தன. <br /> <br /> ஏதோ ஒரு சனிக்கிழமை பொழுதில் அவளுடைய அருமை அத்தை மைதிலி போனில் அஞ்சலியுடன் போராடிக்கொண்டிருந்தாள்.<br /> <br /> &#039;அஞ்சும்மா நல்ல பொண்ணுதானே? அத்தையை பார்க்க வரமாட்டியா கண்ணு?&quot;<br /> <br /> &#039;போ அத்தை உன்னோடு ஒரே வம்பா போச்சு..<br /> எதையாச்சும் சமைக்கிறேன் பேர்வழினு என்ன கொன்னுர்வே.&quot;<br /> <br /> &quot;நான் மாட்டேன்ப்பா&quot;, அஞ்சலி பதிலுக்கு மல்லு கட்டினாள்.<br /> <br /> அப்பாவோடு பிறந்த இந்த கடைகுட்டி அத்தையிடம் அவளுக்கு பாசமும் உரிமையும் அதிகம்.<br /> <br /> &quot;நான் வரமாட்டேன்னா மாட்டேந்தான்&quot;<br /> <br /> &quot;நான் நல்ல சாப்பாடு சாப்டு தூங்கனும் மைதிலி அத்தே.<br /> நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்,சரியா &quot;<br /> <br /> &quot;ஏண்டீ..நீ என்னிக்குத்தான் தூங்காம இருந்த?உன் மாமா அவுட்ஸ்டேசன் முடிச்சிட்டு இன்னிகுத்தான் வந்தாரு.&quot;<br /> <br /> &quot;வந்ததும் என் வாலு பொண்ணு வந்தாளானு மனுசன் என்ன தொளச்சிட்டு இருக்காரு..சும்மா வருவியா.பெரிசா அலுத்துக்கிறா&quot;<br /> <br /> &quot;அய்யோ என் அருமை அத்தே!மாமா வந்திட்டாரா?இத மொதல்லே சொல்லிருந்தா இந்நேரம் அஞ்சும்மா அங்க ஆஜர் ஆயிர்ப்பாளே,நீ ரொம்ம மோசம் அத்த&quot; <br /> <br /> கைத்தொலைப்பேசியை அணைத்து விட்டு கைக்கு கிடைத்த ஜீன்சுக்குள் கச்சிதமாய் உடலை நுழைத்துக்கொண்டு, மேலுக்கு ஒரு டாப்சை அணிந்து ரெடியானாள்.<br /> <br /> மோகன் மாமாவிற்கு அஞ்சு என்றால் உயிர்.குழந்தை முதல் அவர்களிடம் வளர்ந்ததால் அவருடைய செல்ல பிள்ளையாகி<br /> போனவள் அஞ்சலி. <br /> <br /> அளவான உயரத்தில் அடர் நீண்ட கூந்தலில் அஞ்சலி பார்க்க அம்சமாய் இருப்பாள்.மஞ்சள் தேகமும் கன்னக்குழியும்,</b></span><br /> <br /> <b><span style="font-size: 18px">போனசாய் கீழ் உதட்டில் ஒட்டிக் கொண்ட மச்சமும் ,எளிமையான அலங்காரத்தில் அழகாகவே இருப்பாள்.<br /> <br /> அவளுடைய விவா காரில் பத்தே நிமிடத்தில் மாமா வீட்டை நெருங்கி விட்டாள்.</span></b></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN