❤️உயிர் 9❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><span style="font-size: 22px"><b><span style="font-family: 'courier new'">வழி நெடுங்கிளும் நீண்ட தேயிலை தோட்டம்,நாசி தடவும் குளிர் காற்று,வண்ண வண்ண ரோஜாக்களின் அணிவகுப்பு, கேமரன் மலையரசி அஞ்சலியை அழகாய் வரவேற்றாள்.</span></b></span><br /> <br /> <span style="font-family: 'courier new'"><b><span style="font-size: 22px">&quot;வாவ் எவ்வளவு அழகு இந்த மலைப்பிரதேசம்.சின்ன வயசில் வந்தது இங்க.</span><br /> <span style="font-size: 22px">ரொம்ப பிடிச்ச இடம் இது யுகேன்&quot;சிறு பிள்ளைப் போல் குதூகலித்தவளை புன்னகையில் இரசித்தான்.</span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;அஞ்சு உனக்கு இந்த இடம் பிடிக்குமா?&#039;ஆர்வமாய் கேட்டவனை கன்னக்குழி சிரிப்பில் எதிர்க்கொண்டாள்.</span><br /> <br /> <span style="font-size: 22px">&#039;&#039;புடிக்குமாவா?ஆயுசுக்கும் இந்த பச்சை மலைக்காட்டில் இஸ்டம் போல திரியணும், படம் பிடிக்கணும்,</span><span style="font-size: 22px">மலைக்காற்றில் மழை வந்தால் ஆசை தீர நனைந்து கரையணும், இப்படி சின்ன சின்ன ஆசைகளுடன் கனவுகள் கட்டி நான் வெச்சிருந்த இடம் இது.&quot;</span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;வாழ்க்கையில் இது நடக்குமானு கூட தெரியாம ரொம்ம ஆசைப்பட்ட இடம் இது யுகேன்&quot;தன்னை மறந்த நிலையில் பேசியவளை, தன்னோடு இரசனைகளில் ஒன்றியவள் மீது தோழி என்ற எண்ணம் கடந்து துணைவி என்ற எண்ணம் அப்பொழுது யுகேன் மனதில் லேசாய் உராய்ந்தது.</span><br /> <br /> <span style="font-size: 22px">கடந்த காலம் கொஞ்சம் கண் முன் நிழலாடியது.ரீட்டாவை இங்கு அழைத்து வந்து அவன் நொந்துக்கொண்டது மனதில் தோன்றியது.</span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;இது என்ன காட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிங்க யுகேன்?ஜாலியா சுத்திப்பார்க்க எவ்வளவு இடங்கள் இருக்கு?இந்த பச்சை மலைய பார்க்க பார்க்க கடுப்பா இருக்கு,என்னால இங்கெல்லாம் ஆயுசுக்கும் இருக்க முடியாதுப்பா.</span><span style="font-size: 22px">&quot;சொர்கம் மாதிரி கே.ல் இருக்க இங்க யாரு வந்து அவஸ்த்தைபடுவா?&#039;&#039; </span><span style="font-size: 22px">அனல் கக்கிய ரீட்டாவின் வார்த்தைகளில் யுகேனுக்கு மலை குளிர் கூட உறைக்காமல் போய் விட்டது.அவன் கற்பனைக் கோட்டைகளும் அப்பொழுதே தவிடு பொடியாகிவிட்டது. </span><br /> <br /> <span style="font-size: 22px">நிழல் கலைந்து நிஜ உலகிற்கு வந்தவன், விழி அசைக்காமல் பச்சை மலையை ரசிக்கும் அஞ்சலியை அவள் அறியாமல் இரசித்தான்.</span><br /> <br /> <span style="font-size: 22px">&#039;&#039;ஏஞ்சல் வெல்கம் டு அவர் ஹெவன்,&#039;&#039;ஆங்கில பாணியில் அழகாய் உடல் வளைத்து அஞ்சலியை அவர்கள் வீட்டிற்கு வரவேற்றான்.</span><br /> <span style="font-size: 22px">சின்ன வீடு என்றானே, </span><br /> <span style="font-size: 22px">பழங்கால ஆங்கில பாணியில் ஓங்கி உயர்த்திருந்த அந்த பங்களா யுகேனுக்கு சின்ன வீடா?</span><br /> <span style="font-size: 22px">பிரமித்து நின்றாள்.</span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;மை ட்ரீம் அவுஸ் அஞ்சு.</span><span style="font-size: 22px">&#039;&#039;உனக்கு பிடிச்சிருக்கா? மெலிதாய் வினவியவனின் கண்களில் தெரிந்த ஆர்வம் அஞ்சலியை சிலிர்க்க வைத்தது.</span><br /> <br /> <span style="font-size: 22px">&#039;ஹை 5 சொல்லு மச்சி..என் கனவுகளை நீ நிஜம் ஆகிட்ட&#039;&#039;</span><br /> <span style="font-size: 22px">நீண்ட நாட்களுக்கு பின் பழைய அஞ்சலியை பார்த்து போல் இருந்தது அவனுக்கு.</span><br /> <br /> <span style="font-size: 22px">பெரிய கணப்பு அடுப்புகளும்,விசாலமான தரையும்,கருந்தேக்கில் கடைச்சல் பிடித்த மாடிப்படிகளும்,அஞ்சலியை எதோ பழைய அரண்மனைக்குள் விட்டது போல் இலயிக்கச் செய்தன.</span><br /> <br /> <span style="font-size: 22px">&#039;எனக்கு பழமை பிடிக்கும் அஞ்சு,ஒரு மாதிரியான இரசனை அது..இந்த பங்களா பிடிச்சு போய் என் சம்பாதியத்தில் வாங்கியது&#039;&#039;</span><span style="font-size: 22px">பெருமையாய் சொன்ன கணவனின் கைகளைப் பிடித்து உலுக்கினாள்.</span><br /> <br /> <span style="font-size: 22px">&#039;&#039;உன் இரசனைகள் அழகானவை,நன்றி யுகேன்&#039; விசாலமான வீடு,வெளியில் பச்சை புல்வெளியுடன் இணைந்த தோட்டம்.</span><span style="font-size: 22px">சாலையின் இரு மருங்கில் அரண் போல் வளர்ந்த பைன் மரங்கள், மழை மேகம் சுமந்து நிற்கும் தானா ராத்தா மலைத்தொடர்.</span><br /> <span style="font-size: 22px">யுகேந்திரனுக்கு சொந்தமான தொடர் தங்கும் விடுதிகள் கூட இங்கேயும் உண்டு. </span><br /> <br /> <span style="font-size: 22px">வருடத்தில் 12 மாதங்களும் </span><span style="font-size: 22px">வெயில் கொளுத்தும் மலேஷியாவின் குளிர்ச்சியான மலைப்பிரதேசம் கொண்ட இடங்களில் கேமரன் மலை மிகவும் பிரசித்தம். </span><br /> <span style="font-size: 22px">உள்ளூர் பயணிகளும் வெளியூர் பயணிகளும் நிரம்பி வழியும் இம்மலையில் விவசாயம் சுற்றுலாத்துறை, தேயிலை பயிர் முக்கிய வருமானம் ஈட்டும் துறைகளாக விளங்கின. </span><br /> <br /> <span style="font-size: 22px">அஞ்சலிக்கு அவ்விடம் சொர்கம் போல் இருந்தது. மனம் தளர்ந்து தன் வீட்டு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.</span><span style="font-size: 22px">தேக்கில் செதுக்கிய பெரிய பிள்ளையார் சிலை ,அருகில் செயற்கை நீரூற்று,தண்ணீர் நிரப்பிய அகன்ற மண்உருலியில் ரோஜாக்கள், மஞ்சள் கிரிஸ்டல் விளக்குகள் என்று அந்த பங்களாவை அவளுக்கு பிடித்த மாதிரி மாற்றி அமைத்தாள்.</span><span style="font-size: 22px">அவள் இரசனைகள் அவனுக்கும் பிடிக்குமே.வார இறுதியில் தொல்பொருள் காட்சியகத்தில் நூதன வடிவமைப்பு கொண்ட சிலைகளை வாங்கி வீட்டை மேலும் அழகு செய்தாள்.</span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;வாவ் அஞ்சலி, amazing </span><br /> <span style="font-size: 22px">வெள்ளக்காரன் வீட்டை அழகா நம்ம ஸ்டைலுக்கு மாத்திட்டியே&#039;இதுக்குத்தான் கலை தெரிஞ்சவங்ககிட்ட வேலையை கொடுக்கணும் சொல்றது&quot;, </span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;அம்மணி பிரீனா அடியேனுடைய ஆபிஸ்க்கும் தரிசனம் தரலாம்&#039;&#039;மனம் திறந்து பாராட்டியவனின் பேச்சையும் இரசித்தாள்.</span><br /> <br /> <span style="font-size: 22px">உதவிக்கு ஒரு ஆயாவையும் ,</span><span style="font-size: 22px">அவளுடைய விவாவையும் பீடியிலிருந்து வரவழைத்தான்.</span><br /> <span style="font-size: 22px">பெண்ணின் இடைப்போல் வளையும் மலைப்பாதைகளில் கவனமாய் கார் ஓட்டவும் கற்றுக்கொடுத்தான்.</span><span style="font-size: 22px">அந்த மலைவாசம் அஞ்சலிக்கு அலுக்கவே இல்லை.காலை பனி போர்வை விளக்கி எட்டிப் பார்க்கும் சூரியனை, கையில் காபியுடன் இரசிப்பது அவளுடைய தினசரி தேவைகளில் ஒன்றாயிற்று. </span><br /> <br /> <span style="font-size: 22px">உற்சாகமாய் அவன் தேவைகளையும் கவனிப்பாள்.அவன் உடைகளை அயர்ன் செய்து சமயத்தில் அவனுக்கு டை கூட கட்டி விடுவாள்.</span><span style="font-size: 22px">வலது கைப்பழக்கமுடைய அஞ்சலி டையை மட்டும் இடது கையால் வளைத்துக் கட்டிவிடுவாள்.</span><span style="font-size: 22px">இதை யுகேனும் கவனித்திருக்கிறான்.</span><br /> <span style="font-size: 22px">&quot;தெரியல யுகேன்,இது மட்டும் இடதுகை வாட்டம்&#039; என சிரிப்பாள்.அவள் சமையலும் அவனுக்கு பிடித்தம் ஆயிற்று.</span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;இப்பதான் தெரியுது இந்த உதய் பயல் ஏன் உப்பிப்போனானு&quot;</span><br /> <span style="font-size: 22px">&quot;இப்படி ருசியா சாப்பிட்டா நான் குண்டோதரன் ஆயிர்வேன் அஞ்சு&#039;&#039;இப்படி தினமும் அவளை கிண்டல் செய்து சிரிக்க வைப்பான்.</span><br /> <br /> <span style="font-size: 22px">அவளும் அவனுக்கு ஈடு தருவாள்.</span><span style="font-size: 22px">அவனும் அவளை வம்பிழுக்கமால் ஓய்வதில்லை. அஞ்சலிக்கு தவளை என்றால் மிகவும் பயம். ஒரு ஐந்தடி தூரம் தவளையை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுவாள். அவ்வளவு பயம். இது யுகேனுக்கும் தெரியும். </span><br /> <br /> <span style="font-size: 22px">ஒருநாள் அஞ்சலி ஏதோ ஒரு கதை புத்தகத்தில் ஆழ்ந்திருக்கையில், தொபுக்கென்று யுகேன் ஒரு தவளையை பிடித்து அவள் புத்தகத்தின் நடுவில் போடா, வீல் என்று கத்திக் கொண்டு அஞ்சலி தெறித்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியே ஓடினாள். </span><span style="font-size: 22px">யுகேந்திரன் எவ்வளவு அழைத்தும் வீட்டுக்கு அவள் வரவே இல்லை. </span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;போடா லூசு பயலே, என் உயிரே போய்ட்டு திரும்ப வந்திருக்கு.நா வர மாட்டேன் எருமை.. எருமை &quot; கோவத்துல கத்தினாள். </span><span style="font-size: 22px">இவள் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு மேஜர் அங்கிள் வந்து அவளை தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். </span><br /> <br /> <span style="font-size: 22px">&quot;கம் பேபி,அந்த தடி பயல் இங்க வரட்டும், அவனை குருவி சுடர மாதிரி சுடரேன், நீ வா, ஆண்டி டீ டைம்க்கு சுட சுட மசாலா டீ பஜ்ஜி செஞ்சிருக்கா.நாம சாப்பிட போகலாம் &quot;</span><br /> <span style="font-size: 22px">மேஜர் திவாகர்- நளினி தம்பதி இவர்களின் பக்கத்து வீடு. பிள்ளை இல்லாத அவர்களுக்கு யுகேந்திரன் தான் பிள்ளை மாதிரி. </span></b></span><span style="font-size: 22px"><b><span style="font-family: 'courier new'">இப்ப அந்த பாசவலைக்குள் அஞ்சலியும் ஒரு அங்கமாகி போனாள். அந்த உரிமையில் அவர் அழைக்க, அவளும் அவனுக்கு உவ்வ்வே காமிச்சிட்டு அவருடன் சென்றாள்.</span></b></span></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN