இங்கேயும் வலிகள் கொஞ்சம் நின்று பேசும்..

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">நான் இல்லாத <br /> உன் நாட்கள்<br /> அழகாய் விடிந்திருக்கும்...<br /> <br /> என் குரல் கேட்காத உன்<br /> செல்போன் உனக்கு<br /> பல முறை நன்றி உரைத்திருக்கும்...<br /> <br /> என் விரல் படாத உன் கேசம் கலையாமல் நின்றிருக்கும்..<br /> <br /> என் செல்ல திருகலில் தப்பித்துக் கொண்ட<br /> உன் செவிகளும்,<br /> <br /> தூக்கத்தை விற்று காதலை வாங்கிய <br /> உன் விழிகளும் இனி கொண்டாடும்<br /> இந்த சுதந்திர நாளை...<br /> <br /> விடியலே இல்லாமல் போன அத்தனை இரவுகளும்<br /> இனி உனக்கு அழகாய் விடிந்துவிடும்..<br /> <br /> தொல்லையாய் இருந்த லூசு பெண்ணிடம்<br /> இனி நேச வேசம் வேண்டாம்..<br /> <br /> இம்சையாய் உன் இதயத்தில் இரவல் அன்பில்<br /> ஒட்டிக்கொண்டவளிடம் இனி அன்பு பாராட்ட வேண்டாம்...<br /> <br /> நான் இல்லாத உன் இரவுகள் அழகாய் விடிந்திருக்கும்..<br /> <br /> ஆனால் நீ இல்லாத நான்?<br /> புன்னகைக்கும் உதடுகளில் <br /> பொத்தி பொத்தி <br /> வைக்கிறேன் உன் முத்தங்களை..<br /> <br /> உன் மடி சாய்ந்த தலைக்கு தலையணையோடு<br /> இணை சேர்க்கிறேன்..<br /> <br /> நீ வருடிய கன்னங்களில் உப்பு கண்ணீரில் கறை சேர்க்கிறேன்..<br /> <br /> இல்லாது போன உன் காதலில் கரைந்து போவது இந்த உயிரும் சேர்ந்துதான்..<br /> *கணி*</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN