ர ராஜ்ஜியத்தில் ஒரு காதல் கதை

Vijay Navin

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">என்று தான் என்னை மணந்து கொள்ள போகிறாய்! வீரசெழியா? சொல்.....<br /> <br /> உன்னை என் மனதில் மணந்து இத்தோடு, ஆயிரம் திங்கள் முடிய போகிறது,<br /> <br /> இளவரசன் என்ற கர்வம் தடுக்கிறதோ, இந்த அநாதை கன்னியை மணந்து கொள்ள, தயவுசெய்து சொல்..... அவள் கண்ணீர் தரையை தொடுகிறது.<br /> <br /> நீ தானே! காதலிக்கிறேன் என்றாய்!<br /> நீ தானே என் மனதை வென்றாய்!<br /> <br /> இதுவரை அமைதியாய் நின்றவன்.<br /> இந்த முறை,<br /> ஹா! ஹா! ஹா!<br /> ஆநாதை பெண்ணிற்கு இளவரசன் கேட்கிறானோ? குளத்து மீன் தரையில் நடக்க ஆசைப்படுகிறதோ!<br /> ஹா! ஹா! ஹா!<br /> மீண்டும் சிரித்தான்!<br /> <br /> இதுவரை அவள் கண்ணில் இருந்த சிறிய நம்பிக்கையும் மறைந்தது! தரையில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.<br /> <br /> இவன் காதல் வார்த்தைகளுக்கு, என் நம்பிக்கையோடு சேர்த்து என் கற்ப்பையும் இழந்து விட்டேனே என அவளுக்கவளே பிதற்றிக்கொண்டு அழுதாள்!<br /> <br /> வீர செழியன், அடியேய் மீனாட்சி என அவளை தழுவி தூக்கிட! ஒரு வித அறுவருப்பினால் அவனை தள்ளிவிட்டாள்.<br /> மீனாட்சி, என அவன் சீறினான், இத்தனை நாளாய் அடிபணிந்தவள். இந்த முறை எல்லாம் முடிந்ததே என்ற படி அவனை பார்த்தாள்.<br /> <br /> அடேய்! செழியா. செழியா. எழுந்திரு!<br /> எழுந்து பார்த்தவன், சுய நினைவை அடைந்தான்!<br /> போட்டி இன்னும் கால் நாழிகையில் தொடங்க போகிறது! போட்டி களத்திற்கு செல்லலாம் வா! என அவன் நண்பன், அவனை அழைத்து சென்றான்.<br /> போட்டி களத்தில், அடிமைகளுடன் அடிமையாய் இவனும் நின்றிருந்தான்.<br /> <br /> அனைவரின் கைகளிலும் வாள்கள் வழங்கப்பட்டன,<br /> மக்கள் வட்டமாய் அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொள்ள, அங்கு அமைந்த கூட்டத்தில் ஒருவன் இன்றைய போட்டி, உங்களில் இருவர் இருவராக குழுக்கள் அமைக்கப்படும்<br /> அந்த குழுக்களில் எந்த குழு யாணையை கொல்கிறதோ! அவர்களே வெல்பவர்கள்<br /> மற்றவர்கள் சிறுத்தைக்கு இறையாக்க படுவீர்கள் என்று அறிவித்தான்.<br /> <br /> மொத்தம் மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டன, வீர செழியன் தனது நண்பனுடனையே குழுவாக்கப்பட்டான்.<br /> <br /> போட்டி தளத்தில் யாணை திறந்து விடப்பட்டது, வீர செழியன் தன் நண்பனிடம் கண் காட்டி கடைசியில் நிற்கும் படி செய்தான், முதலில் மற்ற இரண்டு குழுக்கள் யாணையை நெருங்க, வீர செழியன் கொஞ்சம் காத்திரு என்றான் மீண்டும் நண்பனை பார்த்து,<br /> நண்பனும் சரி என தலை அசைக்க!<br /> <br /> முதலில் நெருங்கிய இருண்டு குழுவில் ஒரு குழுவை, யாணை மிதித்து கொன்றிருந்தது.<br /> <br /> மற்றோரு குழு யாணையின் முன் பக்கம் தாக்க பார்க்க! வீர செழியன் கை காண்பித்து, யாணையின் பின்னால் தாக்கலாம் என்ற படி முதலில் ஓடி யாணையின் பின்னங்காலை வேகமாக தாக்கினான்.<br /> <br /> சற்று பலத்த காயத்தை அது ஏற்படுத்திட, யாணை கோபத்தில் திரும்பியது, இவனது பக்கமாக!<br /> <br /> இவன் தற்போது தந்தத்திற்கு நேராக நிற்க, மற்றோரு குழு யாணையின் வலது புறம் இருந்தது.<br /> அவனது நண்பனை பின்னால் நிற்கும் படி சைகை செய்து யாணையின் வலது புறமாக இவன் ஓடினான்.<br /> கோபத்தில் தந்தத்தை சுழற்றிய யாணையின் பிடியில் மற்றொரு குழுவில் ஒருவன் அகப்பட்டான், அது அவனை சுழற்றி எறிய எடுக்கப்பட்ட காலத்தை பயண்படுத்தி அதன் மற்றொரு பின்னங்காலில் வாளால் தாக்கினான்<br /> யாணையால் வேகமாக நகர முடியவில்லை, சற்று மெதுவாகவே நகர்ந்த யாணையின் முன்னே, வீரச்செழியன் மிஞ்சி இருந்த ஒருத்தனை வேகமாக தள்ளிவிட்டு... யாணையின் மேல் இலாபகமாக ஏறினான்.<br /> யாணையின் தலையை வாளால் வெட்ட சென்றவனின் பார்வை கூட்டத்தை நொக்க! ஒரு சிறு குழந்தை ஆர்வமாக இவனையே பார்த்தது.<br /> <br /> வீரச்செழியா! என்னை கொன்று விடு... கொன்று விடு...<br /> காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் ஏதென்று அறியா பாதகி இவள்<br /> இளவரசே! கொன்றிடுங்கள் இந்த அநாதை பெண்ணை! எவரும் தேடபோவதில்லை, என இதுவரை கெஞ்சியவள்.<br /> இந்த முறை அவள் அவனது வளை உறையில் இருந்து எடுத்து தன்னை தானே வெட்ட போக! வீர செழியன் அவளது சேலையின் மாராப்பை அதன் முனையோடு வேகமாக இழுத்தான்.<br /> <br /> மொத்தமாக கிழிந்து அவன் கையில் வந்து விட, அவள் தனது கைகளால் அவளது அங்கங்களை மறைத்தாள்.<br /> மீண்டும் பயங்கரகாக சிரித்தான், ஏதும் புதிதாக பார்க்க போகிறேனா! என்ற படி கேட்டுவிட்டு,<br /> ஒவ்வொரு முறையும் உன் மாராப்பை கிழிக்கும் போது முரடன் என்பாய், அந்த முரடனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறாய்!<br /> வாளால் என்னை கொன்றிருக்க வேண்டாமா!<br /> இன்றைய தினத்தில் நான் நடந்தது போல எப்போதாவது உன்னிடம் நடந்தால் என்னை இந்த வாளால் கொன்று விடு, நீ காதலித்தது இமயம் வரை வென்ற சேர வம்சத்தின் இளவரசரை! அத்தகைய வீரம் வேண்டாமா உனக்கு என்றான்.<br /> <br /> புரியாமல் பார்த்த அவளை அணைக்கிறான்!<br /> கூட்டத்தையே பார்த்த வீரச்செழியனை யாணை தன் தந்தத்தால் சுழற்ற!!! அவனது தோழன் யாணையின் வயிற்றை அதன் அடியில் சென்றே குத்திகொண்டு நகர்ந்தான்.<br /> <br /> அடிவயிற்றில் குத்துப்பட்ட! யாணை கீழே விழுந்தது! சுய நினைவு வந்த வீர செழியன் அக்குழந்தையையே மீண்டும் தேடுகிறான்! காணவில்லை,<br /> <br /> அவனது நண்பன்! என்ன ஆயிற்று உனக்கு என மீண்டும் அவனை அடிமைகள் தங்கும் இடத்திற்கு கூட்டிச்செல்ல! வீரச்செழியன் &quot;நான் மீனாட்சி சாடையில் ஒரு குழந்தையைப்பார்தேன்,<br /> மீனாட்சியை பார்த்தது போலவே இருந்தது&quot; என்க, என்ன வீர செழிய!!! அன்றே சொன்னேன் அவளை நம்பாதே என்று.<br /> நீ அவளுக்காக இங்கே கடினப்படுகிறாய்! அவள் வேறொருவனை மணந்து கொண்டாளா! என இவனைப்பார்த்து கேள்வி கேட்க.....<br /> வீரச்செழியன் என் குழந்தை எத்தனை அழகாய் இருந்தாள் தெரியுமா என்றான்.<br /> இந்த பதிலை அவன் எதிர்பார்க்க வில்லை!<br /> <br /> மறுநாள் காலை!!!<br /> இன்று கடைசி போட்டி, அத்தோடு முடிவடைகிறது இந்த தண்டனை!!! தண்டனை முடிந்ததும், நியே என் படை தளபதி என நண்பனை பார்த்து சிரித்தான்.<br /> சிரித்தவன் நண்பனை கட்டி அணைத்தான்.<br /> <br /> தந்தையே! நான் ஒரு ஓடக்கார பெண்ணை காதலிக்கிறேன்! அவளையே மணக்கப்போகிறேன்.<br /> அடுத்து பேச அவன் தொடங்கும் முன்னே! <br /> <br /> அவனது அரசர்<br /> ஓடக்கார பெண்ணா! ஏற்கனவே ராஜ்ஜியத்தில் குழப்பம்! இதில் நீ சிற்றரசர்களின் மகளை மணக்காமல் தூர தேச அரசர்களின் மகளை காதலித்தாலே உள்நாட்டு போர் எழும், இதில் ஓடக்கார பெண்ணா!!!!! முடியாது என அரசர் அரசவையில் சற்றும் யோசிக்காமல் மறுக்க!<br /> வீர செழியன்! தன் அரியாசனத்தை விட்டு எழுந்து, தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறடி பாய்வான் என்பது போல! அரசரினின் பேச்சில் உடன்பாடில்லை மேல் முறையீடு செய்கிறேன் என்கிறான்.<br /> <br /> முறையீடு செய்ய அரசவையில் உனக்கு இன்னொருவரின் ஒப்புதல் தேவை என அரசர் மீண்டும் உரைக்க! தனது நண்பனை பார்கிறான்!<br /> தன் நண்பனின் பார்வையின் அர்த்தம் புரிந்து அவனும் எழுந்தான்.<br /> மேல் முறையீடு தொடங்கப்பட்டது!<br /> <br /> மந்திரி முறையீட்டை தொடங்கினார். இந்த அரசவையில் அரசரின் தீர்பே இறுதியானது! ஆனால் தீர்ப்பில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் மேல் முறையீடு செய்யலாம்.<br /> மேல் முறையீட்டிற்கு அரசவையில் இருவருக்கு அரசரின் தீர்ப்பில் உடன்பாடில்லாமல் இருக்க வேண்டும்!<br /> <br /> என மந்திரி சட்டத்தை ஒருமுறை வாசித்துவிட்டு முறையீடு நடைமுறை படுத்த படவேண்டும் என்றால் உங்களில் ஒருவன் அடிமை சிறையில் மூன்று வருடம் அடைக்கப்பட வேண்டும்! அங்கு நடக்கும் போட்டிகளில் இறுதியாய் அவன் வென்றாலே அவன் முறையீடு நிறைவேறும் என்றார்.<br /> வீரச்செழியன் நானே அடிமை சிறை செல்கிறேன் என மந்திரியை நெருங்க! அவனது நண்பன் எனது இளவரசரை காக்க நானும் சிறை வருகிறேன் என்கின்றான்.<br /> அரசவையில் அருகில் நின்ற நண்பன், வீரசெழியனின் அருகில் வந்து யார் அந்த பெண் எனக்கு சொல்ல கூடாதா? என்றான்.<br /> <br /> என் நண்பனின் மேல் நம்பிக்கை என்மீது எனக்கு உள்ள நம்பிக்கையைவிட அதிகம், ஆனால் அவன் அரச குடும்பத்தின் கர்வத்தின் மேல் துளியும் இல்லை என்றான்.<br /> <br /> நிஜ உலகத்தில் பயணித்த வீரசெழியன், நண்பனுடன்<br /> போட்டி நடக்கும் களத்திற்கு ஒன்றாக சென்றான், அங்கே அவர்களின் எதிரே மூவர் நின்றிருந்தனர்! அவர்கள் இவர்களை விட உயரம் அதிகம் ஆனவர்கள் பலசாலிகள் போல் தோன்றினர்.<br /> போட்டி தொடங்கிட! மூவரில் ஒருவன் வீரசெழியனை நோக்கி நகர்ந்தான்.<br /> வேகமாக வாளை இவனை நோக்கி வீச! வீர செழியன் குனிந்து அவனது வயிற்றில் விளால் கிழித்து விட்டு நண்பனை தேட! பின்னால் இருந்து ஒருவன் அவனை கத்தியால் கையில் திக்கினான்,<br /> திடுக்கிட்டு திரும்பியவனின் பின்னால் இருந்து இன்னொருவன் மிதித்து கிழே தள்ளினான்! அந்த போட்டி களத்தின் ஓரத்தில் அவன் விழுந்தான்.<br /> <br /> நண்பா உன் காதலை நான் மதிக்கிறேன்! எதற்கும் உன் காதலியிடம் இங்கு நடந்ததை சொல்லிவிடு! உனக்காக காத்திருப்பாளா? நாம் அடிமை சிறையில் இருந்து மீண்டு வர மூன்று வருடங்கள் ஆகும் அதுவரை காத்திருப்பாளா! என்ற தன் நண்பனின் பார்வைக்கு<br /> என் மீனாட்சி என்று என்று மட்டும் பதிலளித்தான்!<br /> <br /> பழைய நினைவுகள் அவனை ஆட்கொள்ள!!! எழுந்திரு, எழுந்திரு என்ற மழழையின் குரல்<br /> கண்விழித்து பார்த்தவனுக்கு மேல் மீனாட்சி சாடையில் அவன் பார்த்த அதே குழந்தைதான்,<br /> அதன் அருகில் அவள் அமர்ந்திருந்தாள்! அவள் ஆரவாரம் செய்ய வில்லை, கண்களில் கண்ணீருடன் சிரித்தாள்.<br /> <br /> தாக்க வந்தவனை பார்த்து வேகமாக சிரித்தவன்! மீனாட்சியை ஒருமுறை நன்றாக பார்த்துவிட்டு திரும்பி இதுவரை எவரையும் தாக்காத வேகத்தையும் பலத்தையும் கொண்டு வந்தவனை தாக்க! அவனது தலை துண்டானது. தனது பலத்தை காதலிடம் காண்பிக்க அவ்வாறு செய்திருக்கலாம்.<br /> <br /> மற்றொருவனை அவனது நண்பன் முன்பே கொன்றிருந்தான்.<br /> வீரசெழியன்! அரசவையில் மேல் முறையீட்டில் வெற்றி பெற்று மீனாட்சியை சேர இளவரசியாய் கூட்டி வந்தான்.<br /> அவனது தந்தை வீரச்செழியனை அந்த கணத்தில் தனிமையில் அழைத்து மகனே! அவள் உன்னை கண்டு மூன்று வருடம் ஆகிறது!!! கையில் ஒரு குழந்தையுடன் தனியாக இருக்கிறாள்<br /> குழந்தை மீதும் சந்தேகம் இல்லையா? அவள் மீதும் சந்தேகம் இல்லையா!<br /> உன்னை விட்டு மூன்று ஆண்டுகள் பிரிந்து இருந்தவள் அவள் என்ற தந்தையின் கேள்விக்கு,<br /> <br /> வீர செழியன் தந்தையே! இரண்டு காரணங்கள் உள்ளது அவள் மேல் எனக்கு சந்தேகம் வராமல் இருப்பதிற்கு<br /> ஒன்று அவள் என் மீனாட்சி,<br /> இரண்டு நானும் அவளை விட்டு மூன்று வருடம் பிரிந்து தானே இருந்தேன்! அவள் சந்தேகம் கொள்ள வில்லையே <br /> <br /> <br /> என்மீது!<br /> <br /> <br /> ஆணிற்கு ஒரு நியாயம் பெண்ணிற்கு ஒரு நியாயமா? என்று சிரித்தான்<br /> <br /> <br /> முற்றும்</div>
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN