வசந்தம் -9

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">பாலாவின் அறைக்குள் நுழைந்த நிலாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது...<br /> &quot;ச்ச பாலா கலக்கிட்ட போ... என் ரூமை விட நீட்ட வச்சிருக்க... இத மட்டும் எங்க அம்மா பாத்துருக்கணுமே.... ஆம்பள பைய ரூமை எப்படி சுத்தமா வச்சிருக்கு.... பொட்டப்புள்ள நீயுந்தா வச்சிருக்கியே அலங்கோலமான்னு வறுத்து எடுத்துருப்பாங்க... &quot;<br /> &quot;நானும் சுசிம்மா உன் வளர்ப்பு சரி இல்லைனு சொல்லிருப்பேன்.... &quot;<br /> என்று தன் அன்னையை பற்றி நினைத்துக்கொண்டே பைலை எடுக்க போனவள் தடுமாறி விழுந்து விட கபோர்டில் இருந்த பொருட்களும் விழுந்து விட்டன..<br /> &quot;ஐயோ போச்சு!! போச்சு !! பாலா வந்து கத்த போறான் &quot; என்று புலம்பிக்கொண்டே எல்லாவற்றையும் எடுத்து வைக்க போனவள் அப்பொழுது தான் ஒரு டைரியில் இருந்து சிதறி இருந்த போட்டோக்களை பார்த்தாள்...<br /> நடுங்கும் விரல்களுடன் அந்த போட்டோக்களை எடுத்து திருப்பி பார்த்தவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது...<br /> பிறந்தநாளின் போது எடுத்த படம்.....<br /> யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு இருந்த பொது அவளை மட்டும் தனியாக எடுத்திருந்தான்...<br /> அருகில் கிடந்த டைரியை கையில் எடுத்தாள்... அடுத்தவரின் டைரியை படிப்பது நிலாவிற்கு பிடிக்காத ஒன்று... ஆனால் இன்று அதையெல்லாம் யோசிக்க முடியவில்லை....<br /> அந்த டைரியை படபடக்கும் இதயத்தோடு தன்னை பற்றி இருக்க கூடாது என்று வேண்டிகொண்டே தான் திறந்தாள்.... ஆனால் பாவம் அவளின் வேண்டுதல் தான் பலிக்கவில்லை.....<br /> அதன் முதல் பக்கத்தில்,<br /> உன் இடையை தொட்ட கார்குழலில்<br /> நான் முழ்கி தொலைத்தேனடி !!!<br /> உன் முகம் அது முழுமதியோ இல்லை<br /> செந்தாமரையோ என<br /> நான் குழம்பி தவித்தேனடி !!!!<br /> உன் குரலோ அது யாழோ அதில்<br /> நான் மயங்கி தொலைத்தேனடி !!!<br /> உன் பெயரோ தேன் நிலாவோ<br /> நான் என்னையே உன்னிடம்<br /> இழந்தேனடி கண்ணம்மா !!!!<br /> நீ என் காதிலியோ என்னில்<br /> சரிபாதியோ வாராயோ என் <br /> தேவதையே தேன்நிலவே!!!!<br /> அந்த ஒரு நிமிடத்தில் அவனிடத்தில் அவள் கரைந்து விடத்தான் நினைத்தாள்..<br /> ஆனால் நிலாவிற்கு தெரியும் தன்னால் இதை செய்ய முடியாது என்று...<br /> அவன் காதலில் திளைக்க துடித்த மனதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை....<br /> அதுவும் பாலாவின் முன்னாள் தன் கட்டுப்பாடு தோற்றுவிடும்.... அவனை கட்டிக்கொண்டு ஓவென்று கதறி விடுவாள்..<br /> சீக்கரம் இங்கு இருந்து சென்று விடவேண்டும் என்று அங்கு இருந்து கிளம்பி சென்றுவிட்டாள்....<br /> குளித்து விட்டு ரெடியாகி தன் அறைக்கு வந்த பாலாவிற்கு அங்கு நிலா இல்லாததும் விரிந்து கிடந்த டைரியும் சிதறிக்கிடந்த போட்டோக்களும் நடந்ததை சொல்லிவிட்டன.......</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN