<div class="bbWrapper">எங்கு காணினும் பச்சை நெல் வயல்கள் நாங்கள் தஞ்சாவூர் என்று சொல்லாமல் சொல்லி கொண்டிருந்தது... <br />
<br />
அந்த மண் பாதையில் இருபுறமும் நெற்கதிர்கள் காற்றின் தயவால் ஆனந்தக் கூத்தாடி அவர்களை வரவேற்றது.... <br />
<br />
நிகிலும் மதுவும் அங்கங்கு நின்று செல்ஃபீ எடுத்து தள்ளிக்கொண்டிருந்தனர்..<br />
நிலாவும் பாலாவும் ட்ரைனில் பேசிக்கொண்டதை தவிர வேற எதும் இப்பொது வரைக்கும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை.. <br />
<br />
நிகிலும் மதுவும் முன்னே செல்ல சற்று பின் தங்கினர் நிலாவும் பாலாவும்.... <br />
<br />
"சாரி நிலா... நான் ட்ரெயின்ல அப்படி பேசுனது தப்புதான்.. இனிமேல் அதை பத்தி பேசமாட்டேன்.. "<br />
<br />
"இட்ஸ் ஓகே பாலா... "<br />
<br />
" எங்க ஊரை புடிச்சிருக்கா... "<br />
<br />
"ரொம்ப பாலா.. எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு.... இந்த காத்துல கூட நெற்பயிரோட வாசம் கலந்து ஒரு மாதிரி ரெப்ரெஷிங்கா நல்லா இருக்கு...... எனக்கு இந்த மாதிரி இடம்னா ரொம்ப பிடிக்கும்... ஆமாம் திருவிழானு சொன்னா.. அதுக்கான எந்த அறிகுறியும் காணோம்.... "<br />
<br />
"நம்ம வீடு ஊருக்கு அவுட் சைடுல இருக்கு... நாம ஷார்ட் கட்ல வந்துட்டோம்.. அதனால் தான் எதையும் பார்க்கல... நாம வீட்டுக்கு போய்ட்டு நைட் போய்ட்டு வரலாம்... "<br />
<br />
"ம் சரி பாலா... "<br />
<br />
நால்வரும் பாலாவின் வீட்டிற்கு சென்றனர்.... வீடு மிக அழகாக அந்தக்கால ரசனையோடு இப்போதைய காலத்திற்கு ஏற்ப அழகாக இருந்தது.. வீட்டை சுற்றிலும் நிறைய செடிகளும் மரங்களும் இருந்தன.. <br />
<br />
வீட்டை ஒட்டினாற்போல் நிறைய ரோஜா மல்லிகை முல்லை சாமந்தி பாரிஜாதம் போன்ற பூச்செடிகள் ஒருபுறமும் துளசி தூதுவளை தின்னூற்று பச்சை கற்பூர வல்லி கற்றாழை மரிக்கொழுந்து போன்ற மூலிகை செடிகளும் இருந்தன... <br />
<br />
அதற்கு அடுத்தாற் போல் நிறைய கீரை மற்றும் காய் கறி செடிகள் இருந்தன.. வீட்டின் பின்புறமாக சுற்றுசுவரை ஒட்டி வாழை முருங்கை தென்னை மரங்களும் வீட்டின் வலது மற்றும் இடது பக்க வாட்டில் மா பலா கொய்யா மாதுளை எலுமிச்சை போன்ற மரங்களும் இருந்தன... <br />
<br />
வீட்டின் முன்புறமாக மனோரஞ்சிதம் பவளமல்லி செண்பகம் மகிழம்பூ வேம்பு புண்ணை போன்ற மரங்களும் இருந்தன.... <br />
<br />
சுற்று சுவருக்கு வெளியிலும் வரிசையாக வேப்ப மரங்கள் இருந்தன... <br />
<br />
இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே வந்த மூவரும் ஆவென்று திறந்த வாயை மூடவில்லை.... <br />
<br />
<br />
மது "ச்ச .... அப்படியே சொர்கத்துக்கு வந்த மாறி இருக்கு பாலா... எல்லாத்தையும் பார்த்து பார்த்து வளர்த்திருக்கீங்க " <br />
<br />
"இதெல்லாம் அப்பாவோட உழைப்புல கிடைச்ச பரிசு மது... ஒவ்வொரு மரமும் அப்பாக்கு குழந்தை மாதிரி "<br />
<br />
மது "கிரேட் பாலா "<br />
<br />
நிகில் "ஹேய் ஹேய் கைஸ் அங்க பாருங்க மாங்காய்... அச்சோ அங்க கொய்யா பழம் கூட இருக்கு.... ப்ளீஸ் ப்ளீஸ் நான் போய் பறிச்சுட்டு வரேண்டா.. "<br />
<br />
மது "ம்க்கும்... இதயாச்சும் கொஞ்சம் விட்டு வை நிகில்.....<br />
<br />
நிகில் " நோ நோ எனக்கு கண்டிப்பா வேணும்" என்று மாமரத்தில் ஏற போக ஏற முடியாமல் கீழே பொத்தென்று விழுந்தான்.. <br />
<br />
அவனை பார்த்து மற்ற மூவரும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தனர்... <br />
<br />
நிலா" எப்படி பாலா ஆண்ட்டி எல்லாத்தையும் தனியா சமாளிக்கறாங்க.."<br />
<br />
"எல்லாத்துக்கும் ஆளுங்க இருக்காங்க நிலா, அதுமட்டும் இல்லாம எல்லாத்துக்கும் இங்க சொட்டு நீர் பாசன முறையில தண்ணி பாச்சிருவோம்.. அப்பப்ப குப்பையை கூட்டி களை எடுத்து சுத்தமா வச்சிருப்போம்... <br />
<br />
இவங்க பேசும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் கோதை.. <br />
<br />
"வாங்கப்பா வாங்க.. பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா.... என்னப்பா பாலா வெளியவே நிக்க வச்சு பேசிட்டு இருக்க..."<br />
<br />
நிலா "அதெல்லாம் இல்லமா... நாங்க தான் அப்டியே வீட்டை சுத்தி பாத்துகிட்டு பேசிட்டு நின்னுட்டோம்... "<br />
<br />
"சரிடாமா வாங்க எல்லாரும் உள்ள போலாம் .... கோபி இங்க வாப்பா " <br />
<br />
"இதோ வந்துட்டேங்க பெரியம்மா " என்று ஓடிவந்தார் அங்கு வேலை செய்பவர்... வந்தவர் பாலாவை பார்த்து, <br />
<br />
"வாங்க தம்பி... நல்லாருக்கீங்களா .... இவங்க உங்க பிரண்டுங்களா... "<br />
<br />
"ஆமாங்க அண்ணா... " என்று எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான்.. <br />
<br />
பின்னர் எல்லோரும் உள்ளே வந்தனர்.. உள்ளே வந்ததும் நிலா பார்த்தது அந்த பெரிய ஊஞ்சலை தான்... ஹாலின் ஒரு பக்கமாக வரவேற்பறையை பார்த்தார் போல் இருந்தது... <br />
<br />
<br />
சிறு குழந்தை போல் ஓடிச்சென்று ஊஞ்சலில் அமர்ந்து சிறுபிள்ளை போல் ஆட தொடங்கினாள்.... ஆடிக்கொண்டே பாலாவிடம், <br />
<br />
"பாலா நான் கூட அப்பா கிட்ட எவ்ளோ தடவை கேட்டேன் ஊஞ்சல் ஒன்னு வேணும்னு... அப்பா வாங்கி தரேன்னு தான் சொன்னாங்க... இந்த அம்மா தான் புள்ள பெத்து அதை தொட்டில போட்டு ஆடற வயசு ஆச்சு... உனக்கு இந்த வயசுல ஊஞ்சல் கேக்குதான்னு திட்டிட்டாங்க.. அப்பாவையும் வாங்கி தர கூடாதுனு சொல்லிட்டாங்க... "<br />
<br />
என்று சோகம் போல் சொன்னவளின் பாவத்தில் தன்னை தொலைத்தான்... ஊஞ்சல் தானடி வேணும் என் செல்லக்குட்டி... நம்ம ரூம்லயே அழகான ஊஞ்சல் செட் பண்ணி உன்னைய டெய்லியும் உன் மாமா ஆட்டி தூங்க வைக்கிறேன் புஜிமா... அதுக்காக இப்படிலாம் மூஞ்சிய வச்சுக்காதடி.. என் பட்டுக்குட்டி அம்முக்குட்டி... என்று கனவிலேயே கொஞ்சி கொண்டிருந்தவனின் விலா எலும்பில் இடித்தான் நிகில்... <br />
<br />
"என்னடா பிசாசே ஒன்னு சொரண்டற இல்ல இடிக்கற... "<br />
<br />
"இல்ல மச்சான் நீ ஊத்துற நயாகரா ஜொள்ளுல நான் மூழ்கிற கூடாதுல அதான்"<br />
<br />
"ஹிஹிஹி.... நான் சிரிச்சுட்டேன் போதுமா... இனி டிஸ்டர்ப் பண்ண கொன்றுவேன் "என்று மீண்டும் நிலாவின் புறம் திரும்பியவனை நிகில் இழுத்து சென்றான் நிலாவிடம்... <br />
<br />
"என்னடா பண்ற " என்ற சன்ன குரலில் பாலா கேட்டதையெல்லாம் நிகில் காதிலேயே போட்டு கொள்ளவில்லை.. பாலாவை நிலாவின் அருகில் உட்கார வைத்து தானும் பாலாவின் அருகில் அமர்ந்தான்... <br />
<br />
நிகில் "மது அம்மாவையும் கூட்டிட்டு வா "<br />
<br />
மது கோதையை அழைக்க "எனக்கு இதுல ஆடுன தலை சுத்தும் கண்ணா... நீ போய் ஆடு " என்று மறுத்துவிட மது போய் நிலாவின் மறுபுறம் அமர்ந்தாள்... <br />
<br />
நிகில் வேகமாய் ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று பாட நிலாவும் மதுவும் லாலலா சொல்ல.... அந்த தருணம் பாலா நிலாவின் கையோடு தன் கையை கோர்த்து கொள்ள நிலாவும் மறுக்க தோன்றாமல் பாலாவின் கையை மேலும் இருக்கி கொண்டாள்... <br />
<br />
<br />
இந்த தருணம் இந்த நொடி இப்படியே நீண்டு போகத்தான் இருவரும் மனங்களும் யாசித்தது.... <br />
<br />
<br />
நிகிலும் மதுவும் பயண களைப்பாக இருக்கிறது என்றதால் கோவிலுக்கு நாளைக்கு காலையில் அனைவரும் செல்லலாம் என்று முடிவு எடுத்தனர். <br />
<br />
<br />
பின் மாடியில் நிகில் பாலாவின் அறையிலும் மது நிலா ஒரு அறையிலும் தங்கினர்... பின் அனைவரும் அலுப்பு தீர நன்கு குளித்து விட்டு கீழே வந்தனர்... <br />
<br />
சாப்பாட்டு மேஜையில் எல்லாம் தயாராக இருந்தது.... பரிமாற வந்த கோதையையும உட்கார வைத்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே உண்டு முடித்தனர்... <br />
<br />
அலைச்சல் காரணமாக அனைவரும் உறங்க சென்றிட பாலா கோதையின் அறைக்கு வந்தான்.. <br />
<br />
"வா சாமி ... தூக்கம் வரலயாப்பா "<br />
<br />
" நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்மா "<br />
<br />
"சொல்லு சாமி... என்கிட்ட என்ன தயக்கம் "<br />
<br />
பாலா கோதையின் மடியில் படுத்துகொண்டான்... பிறகு நிலாவை பார்த்தது முதல் இப்போதைய பிரச்சனை வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.... கோதை அவன் தலையை கோதியவாறே பேச ஆரம்பித்தார்... <br />
<br />
"நிலா ரொம்ப நல்ல பொண்ணு சாமி.. நீ சொல்றத வச்சு பாக்கும்போது அவங்க அப்பக்காக தான் எதோ மனசுல வச்சுக்குட்டு மறுகுது... அது மனசு தங்கம் சாமி.... அதால உன் மனசையும் சங்கட படுத்த முடில... அவங்கப்பாவை எதுத்தும் நிக்க முடில.. ஆனாலும் எனக்கு என்னமோ மனசுக்கு தோணுது உங்க ரெண்டு பேருக்கும் தான் கடவுள் முடிச்சு போட்டுருக்காருன்னு... நிலா என் மருமக சாமி.... நீ உங்க அப்பா கிட்ட வேண்டிக்கோ.. அப்பா கண்டிப்பா நிறைவேத்தி வெப்பாங்க... "<br />
<br />
பாலா எழுந்து தான் தாயை இறுக கட்டி கொண்டான்.. "என் செல்ல அம்மா "என்று இரு கன்னத்திலும் முத்தமிட்டான்.... <br />
<br />
"டேய் தம்பி நான் உங்க அம்மாடா நிலா இல்ல "<br />
<br />
"ச்சு போங்கம்மா "<br />
<br />
"அம்மாடி எம்புள்ள வெக்கம் கூட படுதே "<br />
<br />
"அம்மா ரொம்ப தான் ஓட்டாதீங்க "<br />
<br />
பின்னர் நான்கு துணி கவர்களை எடுத்து கோதையிடம் கொடுத்தான்... <br />
<br />
"அம்மா இதுஉங்களுக்கு... இது மது... இது நிகில் அப்புறம் இது உங்க மருமகளுக்கு.. நீங்க காலைல கொடுத்துருங்க... "<br />
<br />
"சரி சாமி நான் காலையில சாமி போட்டோ முன்னாடி வச்சு கும்பிட்டு எல்லாருக்கும் குடுத்தர்றேன்... நேரமாச்சு நீ போய் தூங்கு... " சரி என்று பாலாவும் தூங்க சென்று விட்டான் <br />
<br />
<br />
<img class="smilie smilie--emoji" loading="lazy" alt="💖" title="Sparkling heart :sparkling_heart:" src="https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f496.png" data-shortname=":sparkling_heart:" /><img class="smilie smilie--emoji" loading="lazy" alt="💖" title="Sparkling heart :sparkling_heart:" src="https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f496.png" data-shortname=":sparkling_heart:" /><img class="smilie smilie--emoji" loading="lazy" alt="💖" title="Sparkling heart :sparkling_heart:" src="https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.0/png/unicode/64/1f496.png" data-shortname=":sparkling_heart:" /><br />
<br />
கிராமத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் அதிகாலை நேரம் எவ்வளவு சுகமான நேரம் என்று... <br />
<br />
காலையில குருவிகளின் சத்தம் ஒரு சுகமான அலாரம்... <br />
<br />
பசேலென்ற பயிர்களின் மேல முத்து முத்தான பனித்துளிகள்... மாசு மருவற்ற சருமத்தில் வரும் ஒற்றை முகப்பரு போல வெள்ளி நச்சத்திரம் நீல வானில் மின்னிடும் அழகே தனி .. <br />
<br />
அந்த நேரத்தில் கூட சுறு சுறுப்பாக வெற்றுடம்பில் குளிரை பொருட்படுத்தாது அந்த குளிரையே தன் ஆடையாய் போர்த்தி கொண்டது போல் வயலில் இறங்கி வேலை செய்யும் ஆண்கள்... <br />
<br />
மூன்று மணிக்கே எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்து வைத்து விட்டு தனக்கு பழைய சோற்றயும் வெங்காயத்தையும் எடுத்து கொண்டு வயல் வேலைக்கு செல்லும் பெண்கள்... <br />
<br />
பனை மரத்தில் நேற்று கட்டிய சுண்ணாம்பு பூசிய பானையில் இறக்கிய பதனீரை கருப்பட்டி காய்ச்சுவதற்கு கொண்டு செல்லும் பனை மர விவசாயிகள்.... <br />
<br />
இவற்றை எல்லாம் தன் அறை பால்கனியில் இருந்து ரசித்து கொண்டிருந்தாள் நிலா... நேரம் மணி ஐந்து... சரி ஆன்ட்டியிடம் செல்லலாம் என்று கீழே சென்றாள்.. சமையல் அறையில் இருந்த கோதை நிலா வருவதை பார்த்து நிலாவிடம், <br />
<br />
"ஏன்டா மா சீக்கிரம் எழுந்துட்ட... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமில்ல.. "<br />
<br />
"இல்ல ஆன்ட்டி நேத்து சீக்கிரம் படுத்தனால சீக்கிரம் முழிப்பு வந்துருச்சு.. "<br />
<br />
"சரிம்மா... சமையல் ரூம்ல பிளாஸ்க்ல காபி இருக்கு குடிமா.. நான் போய் சீக்கிரம் கோலம் போட்டுட்டு வந்துறேன்.. "<br />
<br />
" ஆன்ட்டி நான் கோலம் போடறேன்...நீங்க கொஞ்சம் கலர்பொடி லா குடுங்க"<br />
<br />
கோதையும் நிலா கேட்ட எல்லா வற்றயும் எடுத்து கொடுத்தார்.. <br />
<br />
வாசலில் சாணம் மொழுகி தயாராக இருந்தது.... அறை மணி நேரத்தில் அழகான ரங்கோலி கோலம் போட்டு பிறகு கலர் கொடுக்கு ஆரம்பித்தாள்... <br />
<br />
"ஹேய் நிலா கோலமெல்லாம் போட தெரியுமா "<br />
<br />
திடீரென கேட்ட பாலாவின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் பாலாவின் மீது மோதி கலர் போடி அவர்கள் இருவர் மேலும் விழுந்தது.. மேலும் தடுமாறி கோலத்தின் மீது விழ போனவளை தாங்கி பிடித்தான்.. <br />
<br />
நேரமே எழுந்து ஒரு வேலையாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவனுக்கு கொண்டையை உயர்த்தி போட்டு கொண்டு முன்னுச்சி முடிகள் முகத்தில் புரள அதை லாவகமாய் ஒதுக்கி கொண்டு சுடிதாரின் துப்பட்டாவை கழுத்தோடு சுற்றிக்கொண்டு நிலா கோலம் போடும் அழகை கண்டவனின் நிலைமையை நாம் வார்த்தையில் விவரிக்க முடியாது... <br />
<br />
நிலாவின் அருகே சென்றவன் கோலத்தை கண்டவன் இயல்பாய் பாராட்ட அதற்கு கிடைத்த பரிசாய் அவன் கைகளில் அவனது உயிரவள் காலையில் மலர்ந்த ரோஜாவாய்.... <br />
<br />
சட்டென கலைந்தவன் நிலாவை நிறுத்தி அவனையும் நிலைப்படுத்தி நிலாவையும் நிலைப்படுத்தும் வேலையை செய்தான். <br />
<br />
" கோலம் ரொம்ப அழகா இருக்கு நிலா... நானும் கலர் போட ஹெல்ப் பண்றேன்" என்று அவன் கலர் கொடுக்க தொடங்க நிலா தன் படபடப்பை சரி செய்து தானும் வண்ண மிட தொடங்கினாள்... இருவரும் சீக்கிரம் வண்ணமிட்டு முடித்தனர்.. <br />
<br />
அப்போது வந்த கோதையும் கோலத்தை பார்த்துவிட்டு நிலாவை பாராட்டினார்... பின் நிலாவின் மீதும் பாலாவின் மீதும் வண்ணங்கள் இருப்பதை பார்த்து எதோ புரிந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. பின் பாலாவை பார்த்து <br />
<br />
"நீ எங்க பாலா போன நேரத்துலயே "<br />
<br />
" நம்ம ஆறுமுகம் அண்ணா கிட்ட பதனீர் வாங்கிட்டு வர போனேமா... "<br />
<br />
நிலா "ஓ அதை நான் கேள்வி தான் பட்டிருக்கேன் பாலா குடிச்சதில்ல.. நல்லார்க்குமா "<br />
<br />
"சூப்பரா இருக்கும் நிலா... உள்ள வா எல்லாரும் குடிக்கலாம் "<br />
<br />
மூவரும் ஆளுக்கொரு டம்ளர்களில் ஊற்றி குடித்தனர்.. நிலா ரசித்து ருசித்து குடித்து விட்டு... " இன்னும் கொஞ்சம் பாலா"என்று கண்ணை சுருக்கி கேட்க <br />
<br />
பாலாவும் சிரித்துக்கொண்டே " நிறைய இருக்கு நிலா நீ வேணுங்கற வரைக்கும் குடி " <br />
<br />
என்று மீண்டும் ஊற்றினான்.. "எப்படி இருக்கு நிலா "என்று பாலா கேட்க, <br />
<br />
"சூப்பரா ஜில்லுனு பிரிட்ஜ்ல வச்சி குடிக்கற மாதிரி செமயா இருக்கு பாலா "<br />
<br />
" தேங்க்ஸ் பாலா "<br />
<br />
" லூசு இதுக்கு போய் தேங்ஸ் சொல்லிட்டு" என்று நிலாவின் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு மாடிக்கு சென்றான்...</div>
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.