ஆதித்யா சக்கரவர்த்தி-5

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper"><b><span style="color: rgb(0, 0, 0)"><span style="font-size: 18px">அத்தியாயம் 5</span></span></b><br /> <span style="color: rgb(0, 0, 0)"><span style="font-size: 18px"><br /> மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் எழுந்த மலர்விழி... முகம் கழுவி விட்டு புத்துணர்ச்சியுடன்<br /> தன் தந்தை கற்றுக் கொடுத்திருந்த யோகா கலையை மறக்காமல் செய்து முடித்தாள்.<br /> <br /> அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே தலைக்கு குளித்துவிட்டு வந்தவளின் முடியிலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருக்க<br /> துண்டினால் அதை முடிந்து கட்டியவள்.<br /> பால்கனியில் நின்று நன்றாக துவட்ட ஆரம்பித்தாள்.<br /> <br /> ஆதித்யா அப்பொழுதுதான் தனது உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் தோட்டத்திற்கு உலாவ வந்தான்.<br /> <br /> மேலே ஏதோ அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவன்... அந்த அதிகாலை சூரிய ஒளியில் பளிச்சென்று தேவதைபோல் மின்னிக் கொண்டிருந்தவளை ஆச்சரியமாக பார்த்தான்.<br /> <br /> அவன் பார்த்த வரைக்கும் அவனது இரு தங்கைகளும் சூரிய உதயத்தை பார்க்கவே மாட்டார்கள். அதுவும் விடியற்காலையில் சுட்டு போட்டாலும் குளிக்கவே மாட்டார்கள். இவள் கொஞ்சம் வித்யாசமானவள் தான் போலும் என்று நினைத்தவன்... அவளிடமிருந்து தனது பார்வையை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.<br /> <br /> அன்று காலை உணவின்போது வானதிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த மலர் விழியை அப்பொழுதுதான் சௌமியா முதல் முறையாக சந்தித்தாள்.<br /> <br /> சௌமியா மாநிறம்தான்.. குழந்தை தனமான வட்ட முகம்... அளவான உதடுகள்... முதுகு வரை வெட்டி போட்டிருந்த முடி... ஒல்லியான உடல்வாகு பார்க்க லட்சணமாக தான் இருப்பாள்.<br /> ஆனால் மலரை பார்த்தபின் தான் அழகில் குறைவுதானோ... என்று யோசிக்க ஆரம்பித்தாள்.<br /> <br /> ஆனால் மலரோ, ஒருவருக்கொருவர் அறிமுகமாகிய ஒரு சில நொடிகளிலேயே...<br /> &quot;நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சௌமியா&quot; என்று பாராட்டினாள்.<br /> லேசாக வெட்கப்பட்ட சௌமியா தான் அவளைப் பார்த்ததும் மனதில் நினைத்ததை கூறி சிரித்தாள்...<br /> <br /> மலரும் அவளுடன் சேர்ந்து சிரித்துவிட்டு...<br /> &quot;எல்லாரும் ஒவ்வொரு விதத்துல அழகுதான் சௌமியா. சொல்லப்போனா உலகத்துல அழகு இல்லாதவங்க னு யாருமே இல்ல.<br /> உங்க குழந்தைத்தனமான முகம்,சிரிப்பு இதெல்லாமே உங்களோட பிளஸ் பாயிண்ட்ஸ்... அதேமாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிளஸ் பாயிண்ட்ஸ் ...கண்டிப்பா இருக்கும் சௌமியா&quot; என்று மலர் சொல்ல சொல்ல அவளை ஆச்சரியமாக பார்த்தாள் சௌமியா.<br /> <br /> &quot;நீங்க அழகா பேசுறீங்க... கரெக்டா பேசுறீங்க ...எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லைக் இட்... மலர்<br /> ம்ம்ம் எனக்கு ஒரு நல்ல பிரெண்ட் கிடைச்சாச்சு...&quot; என்றாள் சௌமியா.<br /> <br /> &quot;ஃபிரண்ட்ஸ்&quot; என்று சௌமியா கை கொடுக்க... புன்னகையுடனே அவளது கையைப் பற்றி குலுக்கி &quot;ஃபிரண்ட்ஸ்&quot; என்றாள் மலர்விழி.<br /> <br /> எப்பொழுதுமே காலை உணவை சீக்கிரம் முடித்துவிட்டு அலுவலகம் சென்று விடுவான் ஆதித்யா.<br /> அதனால் தான் என்னவோ சுமுகமாக பேசிக் கொண்டனர் இருவரும்...<br /> இருவரும் அவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது ...என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டனர்.<br /> <br /> சொந்த விஷயங்களை தவிர்த்து தங்களது பள்ளி,கல்லூரி வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பற்றி பேசினர்.<br /> <br /> மதிய உணவிற்குப்பின்,<br /> குழந்தை வானதியுடன் சேர்ந்து தோட்டத்தில் கண்ணாம்பூச்சி, நொண்டி ஆட்டம் விளையாடி குழந்தையோடு குழந்தையாக மாறி ஆட்டம் போட்டனர்.<br /> <br /> எப்பொழுதும் அறையிலேயே அடைந்து கிடந்து அழுதுகொண்டிருந்த சௌமியா எங்கே???என்று தேட வேண்டும் என்பதுபோல் நன்றாக சிரித்துக்கொண்டே இருந்தாள் அவள்.<br /> <br /> மலர்விழியும் இந்த வீட்டில் தனக்கு ஒரு துணை கிடைத்தது என்று மகிழ்ச்சியாக இருந்தாள்.<br /> <br /> இரவு உணவின்போது தங்கையின் முகத்தில் தெரிந்த தெளிவு ஆதித்யாவின் கண்களிலிருந்து தப்பவில்லை.<br /> குழந்தை வானதி இங்கு வந்ததும் தன் தங்கை தெளிவாகி விட்டாள்... என்று அவனே தனக்குள் காரணம் சொல்லிக் கொண்டான்.<br /> ஆனால் இதற்கு முன்பும் குழந்தை பலமுறை இங்கு வந்திருக்கிறாள் அப்பொழுதெல்லாம் சௌமியாவின் முகத்தில் சோகம் இருந்து கொண்டுதானே இருந்தது என்பதை மறந்து போனான்.<br /> <br /> ஆதித்யா பாசத்துடன் வானதியை பார்க்க... அவளோ ஒரு ஸ்பூன் வைத்து சாப்பிட திணறிக் கொண்டிருந்தாள்.<br /> <br /> மலர் தனது பிளேட்டில் இருந்து உணவை எடுத்து வானதிக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பொறுமையாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.<br /> <br /> அதைப்பார்த்த ஆதித்யாவிற்கு கோபம் வர மலரிடம் பாய்ந்தான்.<br /> &quot;ஏய் அறிவிருக்கா... சின்ன குழந்தைக்கு ஊட்டி விடுறத விட்டுட்டு... அவ கையில ஸ்பூனை கொடுத்து சாப்பிட சொல்லிட்டு இருக்க&quot; என்று ஆதித்யா மலரிடம் தாம் தூம் என்று குதிக்க....<br /> <br /> பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு சதி செய்ய...<br /> &quot;அது... அது வந்து அவ..ள அடுத்..த வரு...ஷம் ஸ்கூல்ல சேர்..க்கணும்னு அண்ணி சொன்..னாங்க அதான் இப்பவே கொஞ்..சம் கொஞ்சமா ட்ரெய்னிங் கொடு..த்தா அடுத்த வருஷம் உதவியா இருக்கு..ம்னு&quot; என்று மலர் சொல்லி முடிக்கவில்லை.<br /> <br /> அதற்குள் கோபத்தில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த கண்ணாடிக் குவளையை தூக்கி கீழே போட்டு உடைத்தான் ஆதித்யா.<br /> <br /> சௌமியா எப்பொழுதும் நடப்பது தானே... என்று சாதாரணம் போல் பார்க்க... பயத்தில் மலரின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.<br /> <br /> குழந்தை வானதியும் அவனை பயத்துடன் பார்ப்பதை உணர்ந்து,<br /> ப்ச்ச் என்று கோபத்தை அடக்க தலைகோதி கொண்டவன்<br /> மலரைப் பார்த்து,<br /> &quot;உங்க மிடில் கிளாஸ் புத்திய அடிக்கடி காமிக்கிற ....அப்படியே அடுத்த வருஷம் வானதி ஸ்கூலுக்கு போனாலும் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுறதுக்கு அந்த ஸ்கூல்ல கண்டிப்பா ஆள் இருப்பாங்க ...அப்படிப்பட்ட நல்ல ஹை கிளாஸ் ஸ்கூல் ல தா நான் வானதியை சேர்ப்பேன்... அதுக்கு முன்னாடி குழந்தையை கஷ்டப்படுத்தாத...<br /> ஊட்டி விடு&quot; என்று அதட்ட, மலரின் உடல் பயத்தில் நடுங்கியது<br /> சௌமியா,<br /> <br /> &quot;பாவம் அண்ணா... எதுக்கு மலர பிடிச்சு கத்துற&quot; என்று அவளுக்கு பரிந்து கொண்டு வர...<br /> தங்கையைப் பார்த்து முறைத்தான் ஆதித்யா.<br /> <br /> &quot;நீ உன் பிளேட்ல உள்ளத சாப்டு சௌமி... தேவையில்லாமல் என்ன நீயும் கோபப்படுத்தாத&quot; என்று அவளை அடக்கிவிட்டு...<br /> <br /> மலரின் புறம் திரும்பி,<br /> &quot;உன்ன ஊட்டி விடுனு சொன்னேன்...&quot; என்றான் அதிகாரமாக...<br /> <br /> மலர் பதற்றத்துடன் அவளது பிளேட்டை ஒதுக்கி வைத்துவிட்டு வானதிக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.<br /> சௌமியா மலரை பாவமாக பார்த்துவிட்டு....<br /> தன் அண்ணனை முறைத்துக்கொண்டே பிளேட்டில் உள்ளதை உள்ளே தள்ளினாள்.<br /> பின் அதற்கும் சேர்த்து வைத்து கத்துவான் எதற்கு வம்பு என்று தான்...!!<br /> <br /> அன்று இரவு தங்கையின் அறைக்கு குட்நைட் சொல்ல சென்ற ஆதித்யாவிற்கு மலரின் குரல் தெளிவாக கேட்டது.<br /> <br /> &quot;இவ இந்த நேரத்துக்குல இங்க என்ன பண்றா&quot; என்று யோசித்துக் கொண்டே அவன் வர...<br /> <br /> &quot;காட்ல உள்ள காட்டுமிராண்டி மாதிரி கத்தினா எனக்கு பயம் வராம இருக்குமா?? சௌமி...&quot; என்ற மலரின் மெல்லிய குரலை அடுத்து, அவனின் தங்கையின் குரல் கேட்டது.<br /> <br /> &quot;அடிப்பாவி என் அண்ணா உனக்கு காட்டுமிராண்டி யா?&quot;<br /> <br /> &quot;பின்ன அந்த மீசை, தாடி, முறைப்பு கத்தல்.... எல்லாத்தையும் பாத்தா காட்டுமிராண்டி மாதிரிதானே இருக்கு. இல்லனா புள்ள பிடிக்கிறவன்னு சொல்லலாமா???&quot; என்று மலர் சந்தேகத்துடன் கேட்க...<br /> சௌமியின் சிரிப்பு சத்தம் கூடவே கேட்டது.<br /> <br /> மலரின் கூற்றில் கோபம் வந்தாலும் தங்கையின் சிரிப்பு இதமாக இருக்க... வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான் ஆதித்யா.<br /> <br /> மறுநாள் காலையில் மலர் பால்கனியில் நின்று தோட்டத்தை பார்த்துக்கொண்டிருக்க... ஆதித்யா செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.<br /> <br /> மலர் இது என்ன அதிசயம்? <br /> என்பது போல் பார்க்க... பக்கத்தில் தோட்டக்காரன் கைகட்டி நின்று கொண்டிருந்தார்.<br /> <br /> ஓஓ...இப்படி தான் வேலை செய்யணும்னு சொல்லிக் கொடுக்கிறாங்க போல என்று நினைத்து மலர் உள்ளே சென்றுவிட்டாள்.<br /> <br /> &quot;ராமையா நீ வீட்டுக்குப் போ ன்னு சொன்னேன்... எதுக்கு இங்கே நிக்குற?&quot; என்று ஆதித்யா அதட்டலாக கேட்க...<br /> <br /> &quot;ஐயா இத நானே செய்றேன்... தாங்க&quot; என்றார் அவர்.<br /> <br /> &quot;உனக்கு உடம்பு சரியில்லைன்னு பார்த்தாலே தெரியுது... வீட்டுக்கு போ... நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்து தெம்பா பண்ணு... இப்ப நீ போகலாம்&quot;<br /> என்று ஆதித்யா அதிகாரத்துடன் சொல்ல மறுக்கமுடியாமல் சென்றுவிட்டார்.<br /> <br /> அன்றும் பகல் முழுவதும் மலர் சௌமியா, வானதி மூவரும் ஆட்டம் போட்டனர்.<br /> ஆதித்யா அலுவலகத்திலிருந்து வரும் பொழுது நல்ல பிள்ளையாக இருந்து கொண்டனர்.<br /> <br /> இதுவே தொடர...<br /> அன்று இரவு உணவிற்குப்பின், மலர் அவளது அறையில் ஒரு புத்தகத்தை வைத்து வானதிக்கு கதைசொல்லி கொண்டிருந்தாள்.<br /> குழந்தையும் ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.<br /> <br /> ஆங்கிலத்தில் உள்ள &quot;The selfish Giant&quot; என்ற கதையை வானதிக்கு சொல்லிவிட்டு...<br /> அதில் இருந்த அரக்கனை காட்டி, &quot;உன்னோட மாமா தான் இது...&quot;<br /> என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் மலர்.<br /> <br /> குழந்தை உடனே மறுத்துவிட்டு....<br /> &quot;மாமா எப்பவுமே பெஸ்ட் ...ரொம்ப ஸ்ட்ராங்&quot; என்றாள்.<br /> <br /> &quot;இந்த கதையில வர்ற அரக்கன் கூட ஸ்ட்ராங் தான்&quot; என்றாள் மலரும் விடாமல்...<br /> <br /> &quot;ஆனா மலர் அத்த இந்த ஸ்டோரில வர்ற அரக்கன் ரொம்ப பேர்ட்... ஆனா மாமா ரொம்ப ரொம்ப குட் ... எனக்கு சாக்லேட் வாங்கி தருவாங்க&quot; என்றாள் வானதி.<br /> <br /> &quot;உனக்கு சாக்லேட் வாங்கி தந்தா... எல்லாரும் ரொம்ப ரொம்ப குட் தான்...&quot; என்று குழந்தையிடம் வழக்காடினாள் மலர்.<br /> <br /> அவ்வளவு நேரம் கதவின் அருகில் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யா உள்ளே வந்தான்.<br /> <br /> மலர் கதவிற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால், அவள் அவனின் வரவை பார்க்கவில்லை ஆனால் வானதி பார்த்துவிட்டாள்.<br /> <br /> வானதி வாயைத் திறப்பதற்கு முன்... உஷ் என்று வாயை மூடி சைகை காட்டினான் ஆதித்யா.<br /> <br /> &quot;குட்டிமா சாக்லேட் வாங்கி தர்ற யாரையும் நம்ப கூடாது..அவங்க ஒரு வேல புள்ள புடிக்கிறவங்களா... இல்லனா பூச்சாண்டியா கூட இருக்கலாம்... கவனமா இருக்கணும் நீ&quot;<br /> என்று மலர் சொல்லிக் கொண்டிருக்கும்போது குழந்தை அவளின் பின்னாலேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.<br /> <br /> &quot;பின்னால என்ன இருக்குன்னு அங்கேயே பாக்குற...&quot;என்று மலர் எதேர்ச்சையாக திரும்ப ஆதித்யா முகத்தில் கொலைவெறியுடன் நின்றுகொண்டிருந்தான்.<br /> <br /> சர்வமும் அடங்கிப்போனது மலர்விழிக்கு....<br /> <br /> அறையில் இருந்ததால் துப்பட்டாவை கட்டிலில் போட்டிருந்தாள்.அதை எடுத்து மேலே போட்டுக்கொண்டு சட்டென்று எழுந்து நின்றாள்.<br /> அதுவுமே ஆதித்யாவை கோபப்படுத்த தான் செய்தது.<br /> <br /> ஆதித்யா ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்துக் கொண்டிருக்க...<br /> மலர் பயத்துடன் எச்சிலை விழுங்கி அது... அது.. என்றுவிட்டு அவனை சுற்றி அறையை விட்டு வெளியேற பார்க்க...<br /> ஆதித்யா அவளின் கையைப் பிடித்து நிறுத்தினான்.<br /> <br /> கண்களில் கனல் பறக்க,<br /> &quot;என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற... நீ இங்க கெஸ்ட் ...அத மனசுல வச்சுதான் உன்ன இப்ப விடுறேன் ... ஆனா எப்பவுமே இப்படியே விடமாட்டேன்&quot;என்று விட்டு வேகமாக வெளியேறி விட்டான்.<br /> என்ன செய்வதென்று தெரியாமல் மலர் விக்கித்து நின்றாள்.<br /> <br /> மறுநாளிலிருந்து மலர் அடக்கி தான் வாசித்தாள்.<br /> <br /> சௌமியா கூட &quot;என்னாச்சு ரொம்ப அமைதியா இருக்க&quot; என்று கேட்டாள்.<br /> அவளிடமும் ஏதேதோ கூறி சமாளித்து விட்டாள்.<br /> <br /> வானதியிடம் சௌமியா விசாரிக்க...<br /> அவளுக்கு விஷயம் புரிந்து போனது.<br /> &quot;என்னோட அண்ணனுக்கு திரும்பவும் பயந்துட்டியா??&quot; என்று சௌமியா நக்கலாக கேட்க...<br /> <br /> &quot;அப்டின்னா இல்ல...&quot; என்ற மலர் சற்றுப் பொறுத்து,<br /> &quot;லைட்டா பயந்துட்டேன்...&quot; என்று உதட்டை பிதுக்கினாள்.<br /> <br /> &quot;இதெல்லாம் நம்ம வீர வாழ்க்கைல சகஜம்&quot; என்று சௌமியா தேறுதலாக சொல்ல....மலர் சிரித்து வைத்தாள்.<br /> <br /> இப்படியே ஒரு வாரம் ஓடியது.<br /> அன்று வெயில் அதிகமாக இருக்க... மூவரும் தோட்டத்தின் மரநிழலில் ஒரு ஸ்பீக்கரை வைத்து அதில் குத்து பாடல்களை ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருந்தனர்.<br /> <br /> அப்பொழுது செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் நீண்ட குழாயினை எடுத்த சௌமியா... மலரின் மீது நீரை அடித்து நன்றாக குளிக்க வைத்தாள்.<br /> <br /> சித்தி நானும்... நானும்... என்று வானதி அடம்பிடிக்க... அவளையும் தண்ணீர் பாய்ச்சி குளிக்க வைத்தாள் .<br /> மலர் சௌமியாவின் கைகளில் இருந்து குழாயினை பிடுங்கி சௌமியாவை நனைத்துக் கொண்டிருக்கும் சமயம் ஏதோ பைலை எடுக்க வீட்டிற்கு வந்த ஆதித்யா... வீட்டில் யாரும் இல்லாததை கண்டு தோட்டத்திற்கு வந்தான்.<br /> <br /> அப்பொழுது தான் மலர் சௌமியாவின் மீது தண்ணீர் பாய்ச்சி அவளை நனைய வைத்து கொண்டிருந்தாள்.<br /> <br /> குழந்தையும் ஈரமாக இருப்பதை பார்த்தவுடன் ஆதித்யாவின் சினம் எல்லை மீற...<br /> <br /> மலரின் அருகில் வந்து அவளது முழங்கையை பற்றி அவனுக்கருகில் இழுத்து...<br /> &quot;ஹவ் டேர் யூ...?? அறிவு இருக்கா குழந்தையை நனைய வச்சு அப்படி என்ன விளையாட்டு உனக்கு... இடியட் இடியட்...சௌமி நீ கூட எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கியா... &quot;<br /> என்று தங்கைக்கும் அதட்டல் போட்ட ஆதித்யா தன் கைகளில் இருந்த மலரின் கை நழுவுவதை உணர்ந்து ...<br /> திடுக்கிட்டு அவளை பார்க்க... அவள் பயத்தில் மயங்கி இருந்தாள்.<br /> <br /> தொடரும்....</span></span></div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN