கண்டதும் காதல்

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
<div class="bbWrapper">செவிப்பறை அடைந்தும் <br /> தாகம் தீரவில்லைபோல் <br /> உடலெங்கும் சுழன்று <br /> குருதியென பாய்ந்து <br /> காட்சியிலும் இயைந்து <br /> விழிதனையும் விடமால் <br /> முடிவில்லா மோகத்தோடு <br /> காற்றோடு கொண்டாடி <br /> மூச்சோடு கலந்தோடி <br /> அறிவோடு உறவாடி <br /> உயிர்வரை தீண்டி <br /> மெய்சிலிர்க்கும் அமுதத்தமிழே !<br /> கருவகத்தில் உணர்வோடு <br /> உரையாடிய தாயின் <br /> முதல்மொழி கேட்ட முதல் <br /> மழலை கிறுக்கல்களால் <br /> தாளிடம் முத்தமிடும் <br /> என் தமிழை <br /> கண்டதும் காதல் <br /> கொண்டேனே...</div>
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN