பூவே: 2 மஞ்சள் பூசி நலங்கு வைபவத்தின் பாதியில் வந்தவன் போல, தன் மீதுள்ள மஞ்சளை ஒளிக்கதிர்களாய் ஏவி புத்துணர்வுடன் புதிய ஆரம்பமாக ஞாயிறை ஆட்சி செய்ய ஆரம்பித்தான், ஞாயிறவன். உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ
வான்...
நிலாமகள் பொட்டென உருக்கொண்டு நடுவானில் அரங்கேறி கருமையவளை பொலிவேற்றி கொண்டிருக்க, நட்சத்திர கூட்டம் பூத்து குலுங்கியது முன்னிரவு முடியும் நேரத்தில். மக்களை காக்கும் காவல் நிலையத்தில் நண்பர்களின் ஜீவனை வற்ற விட்டிருந்தான் அவன். சற்று நேரத்திற்கு முன், நால்வரும் மதுபான...
வானும் நிலவும்
கடவுள் படைத்த
அற்புத இணை...
இவர்களின் பிரிவு
உலகையே வாட்டுகிறது
இருட்டாக...
இவர்களின் சங்கமம்
உலகுக்கு வெளிச்சம்
தருகிறது
பால் வெள்ளை ஒளியாக
இரவில் படர்ந்திருக்கும்
இருளும் நீயே!
பகலில் ஒளி பரப்பும்
சூரியனும் நீயே!
கண் மூடும் பொழுதில்
தோன்றிடும் கற்பனை நீயே!
என் எழுத்தில் உயிர் பெரும்
கவிதையும் நீயே!
உலகை இணைக்கும்
ஒற்றுமையும் நீயே!
உணர்வுகளில் கலந்திருக்கும்
அன்பும் நீயே!
இப்பூலோகத்தை படைத்த
இயற்கை தாயே!
அடர்ந்த பொழுதில்
சிசுவை காணும்
ஆவலில் மேகம்
பிரசவ வலியாக
இடி முழக்கம்
பதற்றமடையும்
மின்னல் வெட்டு
மகப்பேறும் முடிந்து
இரவும் கடந்து
புலர்ந்த காலையில்
மலர்ந்த இலை
நுனியில் பூத்த
மழை நீர் காட்டும்
மழை காலமும்
கவிதை தானே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register. By continuing to use this site, you are consenting to our use of cookies.