Search results

  1. Bhagi

    பூ 37

     சில நாட்களாகவே தேவாவிற்கும் விசாகனிற்கும் வாழ்க்கை அழகாய் நகர்ந்துக் கொண்டிருந்தது போல இருந்தது. அன்று விசாகனிடம் சண்டையிட்டு எதிர்பாராமல் கிடைத்த முத்தத்திற்கு பிறகு, வந்த நாட்களில் இருவருக்கும் இடையே ஏற்படும் எதிர்பாராத சந்திப்புகளில் கூட கோவத்தை இழுத்து பிடித்து கொள்ள முடியாமல் அந்த...
  2. Bhagi

    பூ 36

     மூளைக்கும் மனதிற்கும் நடக்கும் போராட்டத்தில் அதிகம் தோற்பது மனம் மட்டும் தான் இப்போதும் மனது தோற்றுப்போய் ஒரு மூலையில் அடங்கிவிட்டது தேவாவிற்கு, அந்த சம்பவத்திற்கு பிறகு வந்த நாட்களும் எந்த ஒரு மாற்றமுமின்றி அவனுடன் காதல், மோதல் என்று நகர்ந்துக்கொண்டு தான் இருந்தது. விசாகனுக்கும் அரிசி...
  3. Bhagi

    பூ 35

     வானில் தோன்றும் முழு மதி நாளுக்கு நாள் வளர்ந்து தேய்வது போல நாட்களும் தொய்வின்றி கரைந்துக்கொண்டே தான் இருந்தது. காலையில் பரப்பரப்புடன் கல்லூரிக்கு கிளம்பி அவனுடன் பைக்கில் பயணத்தை மேற்கொள்பவள் அந்த ஒரு மணிநேரத்தில் அவனுடன் மனதிற்குள்ளயே பேசிக்கொள்வாள் இப்போது பேச்சிகள் உண்டு தேவைக்கு ஏற்ப...
  4. Bhagi

    பூ 34

     சகல ஜீவராசிகளும் நித்திரை கொள்ளும் இரவின் மடியில், இருளின் ஒலியாய் வெண்பூக்கள் போன்று சிதறிய நட்சத்திரங்களின் வானவீதியில் ராஜ பவனி வந்துக்கொண்டு இருந்தாள் நிலவு மங்கை, இரவோ மையை ஒத்த கருமையை பூசிக்கொண்டு வெள்ளி முளைக்கும் விடியலுக்கு காத்திருந்தது சூரிய அரசனின் ஒற்றை பார்வைக்கு...
  5. Bhagi

    பூ 33

     தன்னையும் மறந்து அவனது முகத்திலேயே நிலைத்திருந்தது அவளது விழிகள்... அவள் இருக்கும் நிலையை மூளை எடுத்துரைக்க விசாகன் எழுந்துக் கொள்வானோ என்ற அச்சத்துடனே அவனை தழுவிக்கொண்டு இருந்த கரங்களை சட்டென பிரித்து எடுத்தவள் அவன் அறியும் முன்பே கட்டிலை விட்டு இறங்கி படபடத்து கொண்டு இருக்கும் தன் மனதை...
  6. Bhagi

    பூ 32

     பொன்நிற சூரியபந்து கடல் நீரில் மூழ்கி தென்றலின் இதத்தையும் குளுமையையும் பரப்பிவிடும் அந்திசாயும்வேளையில் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த தேவா, மணியை பார்க்க கடிகார முள் 5.30 நெருங்கி இருந்தது. 'அய்யோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா!' என்று நினைத்தவள், தான் அமர்ந்து இருந்த இடத்தை...
  7. Bhagi

    பூ 31

     விசாகன் படுத்த சிறிது நேரத்திலேயே உறங்கி இருந்தான். எப்போதும் நள்ளிரவை தாண்டி உறங்கி பழக்கப்பட்டவனுக்கு இன்று அதிசயமாக படுத்த சிறிது நேரத்திலேயே உறக்கம் கண்களை தழுவி இருந்தது. தேவாவிற்கு தான் தூங்கா இரவாகி போனது அவனிடத்தில் என்னவோ தன் கண்ணீரை காட்டாது திடமாக பேசியவளின் விழிகள் அவள்...
  8. Bhagi

    பூ 30

     பூ 30 "என்ன தான் இருந்தாலும் அவ நம்ம பொண்ணு இல்லன்னு ஆகிடுமா… தனிப்பட்ட முறையில உங்களுக்கு பிடிச்ச பையன் தானே!! நீங்களே எத்தனையோ முறை அந்த தம்பிய பத்தி பெருமையா தானே பேசி இருக்கிங்க!!" என்று கணவரின் கோபத்தை குறைக்க முயன்றார் மரகதம். "நான் அந்த புள்ளைய ஒன்னும் சொல்லலியே... உன் பொண்ணை...
  9. Bhagi

    பூ 29

    பூ 29 மரகதம் தேவாவை அழைத்துக்கொண்டு இருக்கையில் அங்கு வந்த இளையாவும் "என்ன அக்கா? தேவா இன்னும் எந்திரிக்கலையா? என்றதும் "நானும் கால் மணி நேரமா தட்டுறேன் புள்ள... கதவு திறக்கமாட்டுறாளே" என்றபடி சற்று அழுத்தம் கொண்டு வேகமாக தள்ள அது தானாக திறந்து கொண்டது. கதவு திறந்துக்கொள்ளவும் சற்று ஆஸ்வாசம்...
  10. Bhagi

    பூ 28

     கூவிளம் பூ பூ.28 காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை தேவாவிற்காகவும் காத்திருக்கவில்லை காற்றில் அடித்து செல்லப்பட்ட காகிதம் போல் காலத்தால் அடித்து செல்லப்பட்டாள்... நிச்சயம் உறுதி செய்யப்பட்ட போதே பாதி உயிரை பறித்தது போன்றதொரு வலி இதயத்தில் பரவியது… ஏதோ ஒரு...
  11. Bhagi

    பூ 27

    The woman who thought she should never think of him every minute of every day was thinking only of him. Meanwhile the Chithirai month festival also started to weed out with the flag hoisting ... Durailingam's family had come earlier as they had been informed that Chandalakshmi would be...
  12. Bhagi

    பூ.26

    சுந்தரனிடம் இருந்து வந்த பதில் அவளை முற்றிலும் உடைய செய்து இருந்தது. 'அதனால தான் என்னை வெறுத்திங்களா ஹீரோ' என்று உள்ளுக்குள்ளே குமுறினாள் முயன்று தன் எண்ணத்தை திசைதிருப்ப முயன்றாலும் அவனிடத்திலேயே நிலைத்து நின்று அவளை வாட்டியது. இரவெல்லாம தலையணையை கண்ணீரால் நனைத்தவளின் மனதும் உடலும் சோர்ந்து...
  13. Bhagi

    பூ 25

    தோழியிடம் பேசியதில் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள் தேவசேனா, அவ்வப்போது மனதில் அவனை பற்றிய எண்ணங்கள் பாலாய் பொங்கினாலும் அவன் மேல் உள்ள கோவத்தை அதில் தண்ணீராய் ஊற்றி அடக்கிடுவாள். தன் கவனம் முழுவதையும் படிப்பில் திருப்பி இருக்க நாட்கள் அதன் போக்கில் அடித்து சென்றது. இப்போது எல்லாம்...
  14. Bhagi

    பூ 24

    உயிரோடு இருந்தவரை கஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே அனுபவித்த ஜீவன், ஒய்வின்றி மகளுக்காவே வாழ்ந்த ஒரு தாய், வாழ் நாள் முழுக்க செய்த தவறுக்காக சாகும் தருவாயில் கூட தாய் தந்தையிடம் மகளாக, மானசீகமாக மன்னிப்பை வேண்டிய அலமேலு, உயிரற்ற உடலாய் நடு வீட்டில் கிடத்தி இருக்க, வாய் விட்டு அழுதபடி அன்னையின்...
  15. Bhagi

    பூ 23

    வீசும் தென்றல் காற்றில் இருந்த ஈரம் உடலை துளைத்தாலும், மனதில் புழுக்கமாய் இருந்ததது போன்ற, உணர்வுடன் ஜன்னல் கம்பிகளில் கண்களை படறவிட்டு இருளை வெறித்து இருந்தாள். பிறை மதியாய் இருந்த வெண்நிலவும் முழுமதியாய் உருபெற்று உச்சியில் தன் எழிலை பறைசாற்றி கொண்டு இருக்க கண்களில் நிறைவு மனதை நிறைக்கவில்லை...
  16. Bhagi

    பூ போல் என்.இதயத்தை கொய்தவளே பகுதி.22

    .... வீட்டிற்குள் நுழைந்த விசாகனை "அய்யா ராசா" என்ற தில்லையின் அழைப்பில் அறைக்குச் செல்ல இருந்தவனின் கால்கள் தடைப்பட்டு நின்று இருந்தன. என்ன என்பது போல் பார்வையை அவர் புறம் திருப்பிட, "எம்புட்டு நேரமா உனக்கு ஃபோனை போடுறேன் எடுக்காம இந்தக் கிழவிய பதற வைச்சிட்டியே அய்யா" என்று ஆற்றாமையால்...
  17. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 21

    பூ 21 புழுதி மண்ணோடு வீட்டிற்கு வந்த ஜெயசந்திரனை பார்த்து பயந்து விட்ட மரகதம் அவனை ஆராய்ந்தபடி "எய்யா சாமி... என்னய்யா... என்னய்யா இது, சட்டையெல்லாம் மண்ணா இருக்கு" உதட்டு ஓரத்தில் இருந்த ரத்தத்தை சுட்டிகாட்டி "என்னய்யா ரத்தம் வருது, என்ன ஆச்சு" என பதட்டப்பட்டவர் "அடியே தேவா உன் அப்பார...
  18. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 20

    மனதில் இருக்கும் குழப்பங்களை முகம் பிரதிபலித்து கொண்டு தான் இருந்தது. மூளை என்னவோ செயல் திட்டங்களை அடிக்கொரு தரம் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தும், தங்கையிடம் எவ்வாறு பேசுவது என்ற யோசனையோடே இருந்தான் ஜெயசந்திரன். அன்னையிடம் தலை வலி என்று காபியை வாங்கியவன் மர ஊஞ்சலில் அமர்ந்தவாறே தங்கையின்...
  19. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 19

    பூ 19 பறவைகளின் கீரீச் சத்தம் இனிய ஸ்வரங்களாக இசையை எழுப்பிய அதிகாலை வேளை, இதமான குளிர் மேனியை தழுவிட, இளமஞ்சள் நிற ஆதவன் தன் ஆதிக்கத்தை மண்ணில் செலுத்தும் அழகில் மனம் ஏனோ லயிக்கவில்லை சிந்தனையின் ரேகைகளின் சுருக்கம் நெற்றியில் படர்ந்து கொண்டிருந்தது அவனுக்கு… இரவு முழுவதும் நித்திரையின்...
  20. Bhagi

    பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 18

    பூ 18 கையில் கட்டுடன் படுத்து இருந்தவளுக்கு முழிப்பு மெல்ல எட்டி பார்த்தது… மெதுவாக கண்களை திறந்தவளுக்கு முதலில் தெரிந்தது தாயும் தந்தையும் தான் பின் அவளின் விழிகள் வெளியே விசாகனின் உருவத்தை தேடி அலைந்து சுற்றி மறுபடியும் பெற்றவர்களின் மேல் நிலைத்தது. மகளின் அருகே இருந்த மரகதம் தேவாவின்...
Back
Top